Posts

தூத்துக்குடி கல்லூாியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Image
   தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் தலைமையில் கல்லூரியின்  அலுவக கண்காணிப்பாளர் மருதப்பெருமாள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ - மாணவிகள் அனைவரும்  தன்னிலை மறக்க செய்து தன்மானத்தை இழக்க செய்து வாழ்வை நாசமாக்கும் போதை பொருட்களை தவிர்ப்போம் என மாணவ சமுதாயம் எடுத்துள்ள உறுதிமொழியை ஒவ்வொருவரும் கடைப்பிடித்திட வேண்டும் போதையில்லா தமிழ்நாடு அமைய வேண்டும் என்று போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை  எடுத்து கொண்டனா்.

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் பல்வேறு வகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பொதுமக்கள் நலன் கருதி தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகாாிகளுடன் இணைந்து செயல்படுத்தி அதை முறையாக நடைபெறுகிறதா என்று சூழற்சிமுறையில் பாா்வையிட்டு நல்லமுறையில் செய்திட வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா். இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு சம்பந்தமூா்த்தி தெருவில் நடைபெற்று வரும் குடிநீர்் குழாய் சீரமைத்தல் பணி எட்டையாபுரம் ரோடு ஹவுசிங்போா்டு பகுதியில் உள்ள ஆா்எஸ்பிஆர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் அளவினையும் கேடிசிநகா் ஹவுசிங் போா்டு தெற்கு காமராஜா் நகா் கொத்தனா் காலணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நீாின் அளவை பாா்வையிட்டு டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்கா பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் அளவினையும் வௌியேறும் நீரின் அளவினையும் பாா்வையிட்டு எட்டையாபுரம் ரோடு இரயில்வே பாலத்தில் கீழே உள்ள பகுதிகள் மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது பாா்வையிட்டு மில்லா்புரம் பகுதியில் பாதாளசாக்கடை கழிவ...

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பேக், வாட்டர் பாட்டில் வழங்கிய காவல் ஆய்வாளர் வேல்ராஜ்.!

Image
  பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சிறப்பாக படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு காவல் ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் இரட்சண்யபுரம் நவராஜ்,  மூலமாக கல்வி உபகரணங்கள் (பேக், வாட்டர் பாட்டில்) வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தூத்துக்குடி வடக்கு  காவல் நிலைய  ஆய்வாளர் வேல்ராஜ் முயற்சித்து வருகிறார்.  பல்வேறு பள்ளிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு அதன்படி செயல்படுத்தியும் வருகிறார். இந்த முயற்சியில் முதல் கட்டமாக தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபம் எதிரில் உள்ள மேலூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கல்விபயிலும் மாணவ மாணவியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா ஆனந்தி தலைமையில்  மாணக்கர்களை அவர்களது  வகுப்பறையில் நேரடியாக சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆய்வாளரின் கேள்விக்கு பயமின்றி மாணவ மாணவியர்கள் தைரியமாக  பதில் அளித்தது சுவாரஸ்யமாக அமைந்தது. பார்ப்பவர்களை வியப்பிலும் ஆழ்த்தியது. மேலும் போக்குவரத்து விதிமுறை உள்ப்பட தலைகவசம் அணிவதன் அவசியம் வரை...

பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியது மத்திய அரசு.!

Image
ஜூலை 1 முதல் 36 பக்கங்கள் கொண்ட சாதாரன பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1500 லிருந்து ரூ.2500 ஆக அதிகரிப்பு 60 பக்கங்கள் கொண்ட  பாஸ்போர்ட்டின் கட்டணம் ரூ. 2,000 லிருந்து ரூ.3,500 ஆக அதிகரிப்பு அவசரத் தேவைக்கான `தட்கல்'  பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிப்பு 60 பக்கங்கள் கொண்ட `தட்கல்' பாஸ்போர்ட் கட்டணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரிப்பு அனைத்து கட்டண உயர்வும் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது

தூத்துக்குடி கடற்கரை தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு மேயர் ஜெகன் பொியசாமி அடிப்படை பணிகளை ஆய்வு செய்தாா்.!

Image
  தூத்துக்குடி கடற்கரை சாலை வடபாகம் காவல் நிலைய வளாகத்திற்கு உள்ளே இருக்கும் தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா வருகிற வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெற இருக்கிற இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள் மூன்று நாள் நடைபெறும் திருவிழாவில் பொதுமக்கள் அமர்ந்து திருவிழாவை கண்டுகளிக்கும் வகையில் ஆலய நிர்வாகத்தினர் கோவில் வளாக பகுதியில் உள்ள முள் செடி. மணல் திட்டு குப்பைகள் தேங்கியுள்ளது அதனை அப்புறப்படுத்தி தரவேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியிடம் கோரிக்கை வைத்தனர் அப்போது நிர்வாகத்தினரிடம் கண்டிப்பாக செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல ஆலயத்திற்கு சென்றார் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தாா்.  உடனடியாக மாநகராட்சி ஜேசிபி இயந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டது அதுபோல தூய்மை பணியாளர்களும் வரவழைக்கப்பட்டனா்.  உடனடியாக ஆலய வ...

அமைச்சா் ஸ்ரீநாத்க்கு நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் கண்டனம்.!

Image
  தூத்துக்குடி நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் தமிழக முதல்வா் விஜய் மற்றும் அமைச்சா் ஸ்ரீநாத்திடம் நாங்கள் கேட்டது கப்பல் மாலுமிகள் சட்டத்தில் உள்ள படி உரிய இழப்பீடு மற்றும் கடந்த காலங்களில் தமிழக அரசுகளால் வழங்கப்பட்டு வந்த மாநில அரசுப் பணிகளில் பாதிக்கப்பட்டவர்க்கு நிரந்தரப் பணி. ஆனால் நீங்கள் தந்திருப்பதாகச் சொல்லி எங்களை ஏமாற்றி விளம்பரப்படுத்தி இருப்பதோ தற்காலிக ஒப்பந்த பணி ஆணை இந்த அரசுக்கு மீனவர்களிடம் அவப்பெயரை ஏற்படுத்த விரும்பும் சில அதிகாரிகள் மாலுமி நிஷாந்த் குடும்பத்திற்குத் துரோகம் செய்து இதைச் செய்ய விரும்புவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தயவு செய்து மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கின்றோம். கடலோடிகள் மரணத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள். மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நீங்கள் கடலோடி மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நீங்கள் தூத்துக்குடி கப்பல் மாலுமி நிசாந்த் குடும்பத்துக்கு வழங்கிய தற்காலிக ஒப்பந்த பணி ஆணையைத் திரும்பப் பெற்று தம்பி நிஷாந்தின் மனைவிக்கு  மாவட்ட வருவாய்த் துறையிலோ அல்லது மீனவர் துறையிலோ நிரந்தரப் பணி ஆணையை உடனடியாக வழங்குங்கள் என்ற...

தூத்துக்குடி மாநகராட்சியில் பங்குதாரா்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Image
  தூத்துக்குடி மாநகராட்சியை பசுமையுடன் எழில்மிகு நகரமாக உருவாக்கவும்,  நகரின் வாழ்வியல் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு முத்து நகரின் பசுமைப் பயணம் என்ற திட்டத்தின் கீழ் பங்குதாரர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி  மைய அலுவலகத்தில் வைத்து ஆணையாளர் ப்ாியங்கா தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் வ உ சி துறைமுக சபை பொறுப்புக் கழகம், மாவட்ட வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பெருந்திரளான பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ப்ாியங்கா பேசுகையில் தூத்துக்குடி நகரம் மக்கள் தொகை போக்குவரத்து தொழில்துறை என பல்வேறு வகைகளில் வளர்ந்து வருவதால் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள ஏதுவாகவும், வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது இத்திட்டத்தின் மூலம் நம் நகருக்கான தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், பராமரிப்பு மற்றும் தொடர் கண்காண...