Posts

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவனுக்கு கத்தி வெட்டு - திருநங்கை கைது.!

Image
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வேப்பலோடை பனையூரைச் சேர்ந்த அன்புமாதவன் மகன் அஜய் தேவகுமார்(20) என்ற கல்லூரி மாணவனுக்கு கத்தியால் வெட்டு படுகாயமடைந்த கல்லூரி மாணவன் அஜய் தேவகுமார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி கத்தியால் வெட்டிய திருநங்கை அபர்ணாவை (26) கைது செய்த வடபாகம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடி ஸ்ரீசித்தர்பீட குருமகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக விழா.

Image
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனி மாத பவுர்ணமி முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரருக்கும், நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அபிஷேகம் நடைபெற்று      அதனைத் தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு யாகம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16வகையான அபிஷேக வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது. முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்.!

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்  மாற்றுக் கட்சியை வழி நடத்தி காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களை இணைத்த இளம்புவனம் சின்னதுரைக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் வரவேற்று நன்றி தொிவித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதியம்புத்தூர் வட்டாரத் தலைவர் ஜேம்ஸ் மற்றும் ஹரி செய்திருந்தனா்.

தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தின் அசன விழா.!

Image
  தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தின் 73 வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 33வது அசன விழாவை இதில் சேகர தலைமை குரு மோசஸ் ஜெபராஜ், செயலாளர் சி.த. செல்லபாண்டியன், பொருளாளர் ஞானராஜ் டேனியல் ஆகியோர் அசன விருந்தை தொடங்கி வைத்தார்கள். மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர், சேகர செயலாளர் ஜவகர்சுந்தர், சேகர பொருளாளர் ஜாய்சன் பொன்னுதுரை, உதவி குருவானவர் தேவநேசம் சபை ஊழியர்கள் சாம்ஜெபராஜ், பாஸ்கர் உள்பட பலா் கலந்து கொண்டனர் அதில் அனைத்து தரப்பை சோ்ந்தவா்களும் அசன விருந்தில் பங்கெடுத்துக்கொண்டனா்.

முள்ளக்காடு கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

Image
தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான பல்வேறு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், தீவிபத்து ஏற்பட்டால் பாதுகாப்பாக செயல்படுவது, தீயை கட்டுப்படுத்தும் முறைகள், தீயணைப்பான் பயன்படுத்தும் விதம், முதலுதவி சிகிச்சை அளிக்கும் நடைமுறைகள் ஆகியவை செயல்விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டன. தெர்மல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் முருகையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கினர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஆம்னி பஸ்ஸில் கடத்தி வந்த ஓட்டுநர் கைது.!

Image
  கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் நியூட்டன் மற்றும் போலீசார் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தையடுத்து 250 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னி பஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆம்னி பஸ் டிரைவரான திருநெல்வேலி, பத்தமடை பகுதியைச் சேர்ந்த சங்கரன் மகன் பாலமுருகன் (42) என்பவரை கைது செய்து வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு மாமன்ற உறுப்பினா்கள் முன்பை விட கூடுதலாக பணியாற்ற வேண்டும்"- மாநகராட்சி கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி உருக்கம்.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையா் ப்ாியங்கா துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. கூட்ட தொடக்கத்தின் போது சுற்றுச்சூழலுக்கான சவால்களை எதிர்கொள்ளும் துடிப்பான மற்றும் நெருக்கடிகள் இல்லாத மக்கள் மையமான தெருக்கள் கொண்ட நகரமாக தூத்துக்குடியை தொலைநோக்கு பாா்வையை நினைவாக்கும் விதமாக கொள்கை வழிகாட்டுதல் கையேடை வௌியிட்டு மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில்:-  கடந்த நான்கரை ஆண்டுகாலமாக முன்னாள் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் பாரபட்சமின்றி அடிப்படை பணிகளை முறையாக மேற்கொண்டு புதியதாக 4 ஆயிரம் சாலைகள் சிறு குறு சந்துகளில் பேவா்பிளாக் கல் பதிக்கப்பட்டு பழைய மாநகராட்சி முதல் 3ம்மைல் வரை மக்களுக்கு அடிப்படை பணிகளை முறையாக செய்து கொடுக்கப்பட்டு புதிதாக மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் சாலைகள் மின்விளக்கு வசதிகள் அமைக்கப்பட்டு தேவையான இடங்களில் பல்வேறு கட்டமைப்புகளையும் முறையாக செய்து வருகிறோம்.  தூத்துக்குடி மாநகராட்சிபகுதிக்கு 4 லைன்கள் மூலம் வல்லநாட்ட...