ரிசர்வ் வங்கியின் பங்கு தொகையை தான் காங்கிரஸ் வாங்கியது- தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதில்
ரிசர்வ் வங்கியின் பங்கு தொகையை தான் காங்கிரஸ் வாங்கியது முதன்முறையாக உபரி நிதியை பா.ஜ.க. தான் வாங்கி உள்ளது தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:- சிதம்பரம் வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் சிதம்பரம் அதிபுத்திசாலி. அவரை விசாரிக்க காலம் தேவை. அதிகமான கோப்புகளை பார்க்க வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார். இதை கேட்கும் போது சிறப்பாக இருந்தது. சிதம்பரத்தை அதிபுத்திசாலி என்று கூறும் இவர்கள் தங்களை அதிபுத்திசாலியாக்கி கொண்டு கைது செய்திருந்தால் நன்றாக இருக்கும். ஒரு தலைவரை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வது நியாயமா. புத்திசாலித்தனமாக இல்லாமல் ஏன் அவரை கைது செய்தீர்கள். புத்திசாலித்தனத்தை தயாரித்து அல்லவா கைது செய்திருக்க வேண்டும். இதற்கு சி.பி.ஐ. பதில் சொல்ல வேண்டும். பணவீக்கத்திற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். பொருளாதாரத்தில் பணவீக்கம் ஒரு அசைவு. இந்தியாவின் வளர்ச்சியை 9 சதவீதம் கொண்டு சென்றது காங்கிரஸ். ஆசியாவில் சீனாவை அடுத்த இந்தியா வளர்ந்துள்ளதற்கு காரணம் காங்கிர...