Posts

Showing posts from January, 2020

ஊழலை வெளிக்கொண்டு வந்த பெண் அதிகாரி பணியிட மாற்றம்: கேரளத்தில் தான் இந்த கொடுமை

ஊழலை வெளிகொண்டு வந்த பழங்குடி பெண் அதிகாரி, பணியிட மாற்றம் செய்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியைச் சேர்ந்தவர் சாந்தாமணி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த சாந்தாமணி, கேரள மாநில அரசின் பால்வளத்துறையில் டி.ஓ (Directory officer)-ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அட்டப்பாடியில் உள்ள ஓர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.ஏழு கோடிக்கு ஊழல் நடந்துள்ளதை சாந்தாமணி கண்டுபிடித்துள்ளார். இதனால், கூட்டுறவு சங்கத்தில் உள்ள அதிகாரிகளும், ஆளும் சி.பி.எம் பிரமுகர்களும், சாந்தாமணிக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். சாந்தாமணிக்கு எதிராக பல்வேறு பொய் புகார்களை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து, ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சாந்தாமணியை ஆலத்தூர் பகுதிக்கு பணி இடமாற்றம் செய்துள்ளது கேரள அரசு. இது பழங்குடி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாந்தாமணியை மீண்டும் அட்டப்பாடிக்கே மாற்ற வேண்டும் என்று நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவந்த நிலையில், பழங்குடி மக்கள், தாய்குல சங்கம், கேரள அ.தி.முக. உள்...

மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு அனுமதி வழங்காது. அமைச்சர் ஓ.ஏ.ஸ் மணியன் தகவல்!!

Image
மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு அனுமதி வழங்காது. அமைச்சர் ஓ.ஏ.ஸ் மணியன் தகவல். மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு ஒப்புதல் வழங்காது என்று அமைச்சர் ஓ.ஏஸ்.மணியன் தெரிவித்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் சீனிவாசாசுப்பராயா அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவர்களுக்கு மடிகணிணி வழங்கும் விழா  நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை வகித்தார் மயிலாடுதுறை உதவி ஆட்சியர் மகாராணி, சீர்காழி எம்.எல்.ஏ பாரதி ஆகியோர் முன்னிலை  வகித்தனர். கல்லூரி முதல்வர் தமிழரசி வரவேற்றார். துணி நூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஓ.ஏஸ்.மணியன் கலந்து கொண்டு 555 மாணவர்களுக்கு மடிக்கணிணி மற்றும் 20 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கி துவக்கி வைத்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தஞ்சை கோயிலில் தமிழில் அர்ச்சனை என்பது வரவேற்கக் கூடியதுதான் அதனால் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடிய அளவுக்கு இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே நாம் நடைமுறைப்படுத்த இருக்கிறோம் இதனை அரசியலாக்கத் தேவையில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் ...

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்!!!

Image
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள முருகன் புதூர் பெண்கள் மேல்நிலை பள்ளி , நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி, மொடச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி,பழனியம்மாள் மேல்நிலை பள்ளி, வைரவிழா மேல்நிலை பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியானது கலெக்டர்  கதிரவன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி, கோட்டாட்சியர் ஜெயராமன், ஆவின் தலைவர் காளியப்பன், முன்னாள் சேர்மன் கந்தவேல்முருகன்,சொசைட்டி தலைவர் காளியப்பன், பிரினியோகணேஸ், செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் குறை தீர்க்க ' நம் எம்.எல்.ஏ '  செல்போன் செயலி அறிமுகம்!!!

Image
திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் குறை தீர்க்க ' நம் எம்.எல்.ஏ '  செல்போன் செயலி எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்.     திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள சேம்பர்ஸ் ஹாலில் தெற்கு எம்.எல் ஏ., வின் மக்கள் குறைதீர்க்கும் செல்போன் செயலி துவக்க விழா நடைபெற்றது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் நம் எம்.எல்.ஏ., என்கிற மக்கள் குறைதீர்க்கும் செயலியை அறிமுகம் செய்தார். அதை சோழா அப்புக்குட்டி பெற்றுக் கொண்டார். முன்னதாக திருப்பூரில் செய்தியாளராக பணயாற்றி வந்த மறைந்த ராஜசேகர், அவரது தாயாருக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு எம்.எல். ஏ., சு.குணசேகரன் பேசும்போது கூறியதாவது:அம்மா அவர்களின் அருளாசியுடன் எம்.எல்.ஏவாக இருக்கிறேன். எங்களால் முடிந்த திட்டங்களை எல்லாம் திருப்பூர் நகரில்  செய்து கொண்டிருக்கிறோம்.     என்னை பார்க்க வரும் பொதுமக்கள் என்னை எளிதில் அணுகி பிரச்சினைகளை சொல்ல நம்.எம்.எல்.ஏ., செயலி உருவாக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். பொதுமக்கள் சொல்லும் குறைகள் அன்றைய ...

கருமண்டம் பாளையம் கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் பொங்கல் திருவிழா!!

Image
கருமண்டம் பாளையம் கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள மிகவும் சக்திவாய்ந்த பொட்டு சாமிக்கு பொங்கல் திருவிழா தை மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பொட்டு சாமிக்கு அன்று மதியம் ஒரு மணி அளவில் காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து பொங்கல் வைத்து திருவிழா கொண்டாடுகிறார்கள். இக்கோயில் திருவிழா வருடம் ஒரு முறைமிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அது சமயம் ஊர் பொது மக்கள் அனைவரும் பொங்கல்  வைத்தும், மாவிளக்கு எடுத்தும்,  சாமி அருள் பெற்றுவருகின்றனர் என்று  கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஈரோடு கொடுமுடி தாலுக்கா சிவகிரியில் கலசம் வைத்து தேர் வெள்ளோட்டம்!!

Image
ஈரோடு கொடுமுடி தாலுக்கா சிவகிரியில் கலசம் வைத்து தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. சிவகிரி அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவிலில் 30- 1- 2020 தை மாதம் 16ஆம் நாள் காலை 9.30 மணிக்கு சிவகிரி அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவில் சக்கர மாற்றப்பட்டு நிலை வைத்து பக்தர்கள் வெள்ளத்தில் சிறப்பான முறையில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது நிகழ்வில் சிவகிரி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சப் கலெக்டர்  பிரவீன்குமார் திடீர் ஆய்வு!!

Image
 விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சப் கலெக்டர்  பிரவீன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.     கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டுவருகிறது இதில் கம்மாபுரம் பெண்ணாடம் ஆலடி வேப்பூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையக் கூடிய நெல், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம்  கொள்ளு, பச்சைப்பயறு, உளுந்து போன்ற பயிர்களை விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு தினசரி கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதில் தாமதம் ஏற்பட்டு இரண்டு நாட்களாக விவசாயிகள் காத்திருப்பதாக தகவல் வந்ததன் அடிப்படையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.    அப்போது விவசாயிகள் தங்கள் கொண்டு வரும் விளைபொருட்களை வாங்குவதில் அதிகாரிகள் காலம் தாழ்த்துவது ஆக குற்றம் சாட்டினார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட சார் ஆட்சியர் விவசாயிகளின் விளைபொருட்களை உடனடியாக வாங்க வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட  கண்காணிப்பாளரிடம் உத...

சிம்கார்டு முறைகேடுகளை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் !!

Image
ஈரோடு மாவட்டத்தில் சிம்கார்டு முறைகேடுகளை தடுக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஸ் அவர்களின் உத்தரவின்படி, விழிப்புணர்வு கூட்டங்கள் ஈரோடு நகரம், பவானி,கோபி, சத்தி மற்றும் ஈரோடு ஊரக கோட்டங்களில் காவல் துனை கண்காணிப்பாளர் களின் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் கூட்டத்தில் உள்ள செல்போன் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அதில் கடை உரிமையாளர்களுக்கு சிம்கார்டு முறைகேடுகள் தடுப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.மேலும் சாலை ஓரங்களில் கடை அமைத்து செல்போன்கள் விற்பனை செய்வதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, வெளிமாநில நபர்கள் இம்மாவட்டத்தில் பணிபுரிந்து கொண்டு புதியதாக சிம் கார்டுகள் வாங்க முயற்சித்தால் அவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவன அடையாள அட்டை மற்றும் நிறுவன உரிமையாளர்களின் அனுமதி கடிதம் ஆகியவற்றுடன் புதிய சிம் கார்டுகள் வழங்க வழங்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி சட்டவிரோதமாக சிம்கார்டுகள் வாங்குவோர் மீதும் சிம்கார்டு விற்பவர்கள் மீதும் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட காவல்துறை ச...

நம்பியூர்  தீயணைப்பு மீட்பு நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பு!!

Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்அருகே உள்ள  நம்பியூர்  தீயணைப்பு மீட்பு நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார். அதனையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் குத்து விளக்கேற்றி பின்னர்  நிலையத்தின்  வாகனத்தை கொடியசைத்து இயக்கச் செய்தார். அருகில்  மாவட்ட அலுவலர் காங்கேயம் பூபதி , உதவி அலுவலர் வெங்கடாச்சலம், ஆவின் தலைவர் காளியப்பன்,ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,  நிலைய அலுவலர்கள் ஆறுமுகம், வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

நித்யானந்தாவின் சீடர் கொலை: பரபரப்பு

  புதுச்சேரி அருகே உள்ள ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல் (வயது45). இவர் நித்யானந்தாவின் தீவிர சீடர், வஜ்ரவேலு நித்யானந்தா பேக்கரி என்ற பெயரில் ஏம்பலம் மற்றும் வில்லியனூர் பகுதிகளில் பேக்கரி நடத்தி வந்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் நித்யானந்தவின் ஆசிரமம் அமைப்பதற்கு இவரும் ஒரு காரணம். பல்வேறு விதங்களில் நிதியுதவியும் மற்ற வகைகளில் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 2 லட்சம் பணத்துடன் காரில் சென்ற வஜ்ரவேல், இரவு வீடு திரும்பவில்லை. அவர் பாகூர் பகுதியில் காரில் கிடந்துள்ளார்.  இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நித்யானந்தா சீடர்ன் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்தியாளர் ராஜசேகர் மறைவு: தமிழ் அஞ்சல் இரங்கல்

Image
திருப்பூர் :- திருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் செய்தியாளர் ராஜசேகரும் அவரது தாயாரும் காரில் சென்று கொண்டிருந்த போது அவிநாசியை அடுத்த கள்ளிப்பட்டி  பகுதியில் அரசு பேருந்து கார் மீது மோதிய விபத்தில் ராஜசேகர் மற்றும் அவரது தாயாரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்  உயிரிழந்தனர். செய்தியாளர் ராஜசேகர் மற்றும் இவரதுு தாயார் மறைவுக்கு தமிழ் அஞ்சல் ஆழ்ந்த இரங்கலைை தெரிவித்துக்கொள்கிறது.

பஸ் ரயிலில் இலவசமாக பயணிக்க குழந்தையை கடத்திய பெண்: அலேக்காக தூக்கிய திருப்பூர் போலீஸ்

Image
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசங்காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சுடலை ராஜன் என்ற மகன் உள்ள நிலையில் சுடலை ராஜனின் மனைவி குழந்தை பிறந்த பின்பு சுடலை ராஜனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அதனால் சுடலைராஜன் தனது இரண்டரை வயது குழந்தையை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் கடந்த 24 ஆம் தேதி காப்பகத்தில் இருந்த குழந்தையை பழனி கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கோவிலில் இருந்து திரும்பி வரும்போது மாரியப்பன் குழந்தையோடு சேர்த்து அறிமுகமில்லாத 23 வயது பெண்ணை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். வீட்டு வேலைகள் மற்றும் குழந்தையை கவனிப்பதற்காக அழைத்து வந்ததாக மாரியப்பன் சுடலை ராஜனிடம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் 24-ஆம் தேதி மாலை வீட்டில் இருந்த குழந்தை மற்றும் அந்த பெண் இருவரும் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து சுடலை ராஜன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.குழந்தை கடத்தப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைத்து திருப்பூர் கோவை ஈரோடு மற்றும் திண்டு...

சுங்கச்சாவடி சூறை -ரூ.18 லட்சம் ஆட்டையப்போட்டது யாரு..

 கடந்த ஞாயிறு குடியரசு தினத்தன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை அடைந்த போது, சுங்கக் கட்டணம் கேட்ட ஊழியரிடம் பேருந்து ஓட்டுநர் நாராயணன் ஃபாஸ்டேக்கில் கட்டணம் செலுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.ஆனாலும், கட்டணம் செலுத்தும்படி சுங்கச்சாவடியில் இருந்த வடமாநில ஊழியர்கள் தகராறு செய்ததோடு ஓட்டுநரிடம் எல்லை மீறி பேசியதால் அங்கு மோதல் வெடித்துள்ளது. பேருந்தில் இருந்த பயணிகளும் ஓட்டுநருக்கு ஆதரவாக பேசி ஊழியர்களை கண்டித்துள்ளனர். இதற்கு பிறகு வாக்குவாதம் கைகலப்பாக முற்றியதால் பரனூர் சுங்கச்சாவடி அதகளமாகி சூறையாடப்பட்டது.  இதில், சிசிடிவிக்கள், ஊழியர்களின் பைக்குகள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் விகாஸ் குப்தா, குல்தீப் சிங் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் நாராயணன், நடத்துநர் பசும்பொன் ஆகியோரை கைது செய்தனர். சுங்கச்சாவடி முழுவதும் சேதமாகி இயல்பு நிலை திரும்பாததால் பரனூரில் கடந்த இரண்டு நாட்களாக வாகன ஓட்...

தாலியை கையில் பிடித்து கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்!

Image
உயர்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து பெண்கள் தாலியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மிபாளையம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து  பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படட்து. கடந்த வாரம் உயர் மின் கோபுரம் அமைக்க அளவிடும் பணிகள் மேற்கொண்டதை கண்டி த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற பேரணியாக சென்று கிராம் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும்  எந்த வித அறிவிப்புமின்றி அளவிடும் பணிகள் மேற்கொள்வதை கண்டித்தும் கோவை மாவட்டத்தை போல உயர்ந்த பட்ச இழப்பீடு வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சள்  கட்டிய தாலியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா

சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 2020-ம் ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா 31-1-2020 தை மாதம் 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 1-2-2020 (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மண்டப கட்டளை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது. 2-2-2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி, காலை 10 மணி மற்றும் பகல் 2 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மயில் வாகனக்காட்சியு-ம் நடைபெறுகிறது. 3-2-2020 (திங்கட்கிழமை) காலை 9 மணி, பகல் 11 மணி, பகல் 1 மணி மற்றும் இரவு 8 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 4-2-2020 (செவ்வாய்கிழமை) காலை 9 மணி மற்றும் பகல் 11 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு - வெள்ளிமயில் வாகனக்காட்சி நடைபெறுகிறது 5-2-2020 (புதன்கிழமை) காலை 9 மணி, பகல் 1 மணி மற்றும் பகல் 2 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு யானை வாகனக்காட்சியும் நடைபெறுகிறது. 6-2-2020 (வியாழக்கிழமை) பகல் 11 மணிக்கு மேல் மண்டபக்கட்டளை நிகழ்ச்ச...

3 பேரை கத்தியால் குத்தி ரணகளம்: ஒருவர் பலி!

Image
  தூத்துக்குடி தாளமுத்துநகர், மாதா நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய வீட்டில் நேற்று திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. அப்போது அவரது வீட்டருகே பார் ரவியின் (திமுக 12வது வார்டு கிளைச் செயலாளர்) உதவியாளரான பார்த்தசாரதியின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை செல்வம் படமெடுத்து டிக்டாக்கில் பதிவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று நிச்சயதார்த்த விழா முடிந்த பின்னர் இரவு 1 மணியளவில் செல்வம் அவரது உறவினர் முத்துக்குமார், முத்துச்செல்வம் ஆகியோர் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்வத்தையும் முத்துக்குமார் மற்றும் முத்துச்செல்வம் ஆகிய மூவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸ் இன்...

கரோனா வைரஸ்: தமிழக மாணவர்கள் கதி என்ன?

   சீனாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று சீனாவில் இருக்கும் இந்திய தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது.  மாணவர்களுக்கு தேவையான உணவு, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசுக்கு பெய்ஜிங் துணை தூதர் கடிதம் அனுப்பியுள்ளார்.  கடந்த சில நாட்களாகவே சீனாவின் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அங்கு தமிழக மாணவர்கள் பலர் சிக்கி தவிப்பதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தது. ஆதலால் சீனாவில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை இந்தியா அழைத்து வருவதற்கு தமிழக அரசு, மத்திய அரசின் உதவியை நாடி இருந்தது.  இது தொடர்பாக சீனாவில் இருக்கக்கூடிய இந்திய தூதரகத்திற்கு கடந்த 24ம் தேதி தமிழக அரசு சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டிருந்து. இந்நிலையில் அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.  இதன் அடிப்படையில் அங்கு இருக்கக்கூடிய தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.  சீனாவில் வைரஸ் தாக்கம் அரிகரித்துள்ள நிலையில் அவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவர வ...

டிக் டாக் விபரீதம் - தூத்துக்குடியில் இளைஞர் கொலை, இருவருக்கு கத்திகுத்து

Image
டிக் டாக் விபரீதம் - தூத்துக்குடியில் இளைஞர் கொலை, இருவருக்கு கத்திகுத்து: திமுக பிரமுகர் உட்பட நான்கு பேர் கைது தூத்துக்குடி தாளமுத்துநகர், மாதா நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய வீட்டில் நேற்று திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. அப்போது அவரது வீட்டருகே பார் ரவியின் (திமுக 12வது வார்டு கிளைச் செயலாளர்) உதவியாளரான பார்த்த சாரதியின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை செல்வம் படமெடுத்து டிக்டாக்கில் பதிவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிரு ந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று நிச்சயதார்த்த விழா முடிந்த பின்னர் இரவு 1 மணியளவில் செல்வம் அவரது உறவினர் முத்துக்குமார், முத்துச்செல்வம் ஆகியோர் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்வத்தையும் முத்துக்குமார் மற்றும் முத்துச்செல்வம் ஆகிய மூவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்...

ஸ்டாலின் பேச்சு நாகரிகமற்றது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Image
மேடையில் அடிக்க வேண்டும், உதைக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவது நாகரிகமற்றது  என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார் தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட நலக்குழு நிதி ரூ.52.30 லட்சம் மதிப்பில் 2 செயற்கை இழை மைதானத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு இன்று திறந்து வைத்தார். மேலும், மாநில அளவிலான டேக்வான்டோ விளையாட்டு போட்டியையும் அவர் துவக்கி வைத்தார். தூத்துக்குடி தருவை மைதானத்தில் புதிய செயற்கை இழை டென்னிஸ் மைதானங்கள் திறப்பு விழா மற்றும் மாநில அளவிலான புதிய விளையாட்டு டேக்வான்டோ போட்டி துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட நலக்குழு நிதி ரூ.52.30 லட்சம் மதிப்பிலான செயற்கை இழை மைதானத்தை திறந்து வைத்து, மாநில அளவிலான புதிய விளையாட்டு டேக்வான்டோ போட்டியையும் துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில்: தூத்துக்குடி தருவை மைதானத்தில் தலா ரூ.26....

தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளினை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!!

Image
தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளினை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளினை முன்னிட்டு நந்தா, எக்ஸ்சல் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிகள் மற்றும் லோட்டஸ் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவமுகாம் ஈரோடு நந்தா சென்டரல் சிடடி பள்ளியில் இனிதே நடைபெற்றது. இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாம் புனேயில் செயல்பட்டு வரும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் மற்றும் ஆயுஸ் அமைச்சகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இம்முகாமினை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி என்.உமா மஹேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விள்க்கேற்றி துவக்கி வைத்தர்  ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர்  வி. சண்முகன் தலைமை தாங்கி, முகாமினை ஏற்பாடு செய்திருந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டி பேசினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக  ஈரோடு கலெக்டர் சி. கதிரவன் மற்றும மற்றும் வருவாய் கோட்டாசியர்  முருகேஷ் ஆகியோர்  கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் கள்....

காதலுக்கு தூது போன தங்கையை கர்ப்பிணியாக்கிய அண்ணன் கைது!

தாராபுரம் அருகே காதலுக்கு தூது போன தங்கையை கர்ப்பிணியாக்கிய அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது     திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் காவல் சரகம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் 26 கூலி தொழிலாளி இவர் குடியிருக்கும் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீதேவி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சந்திரசேகரன் ஸ்ரீதேவியை காதலித்து வந்துள்ளார் இவர்களது காதலுக்கு சந்திரசேகரனின் பெரியப்பா மகளும் தங்கை முறையிலான பிரியா16 (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) காதலர்களுக்கிடையே தூதுவராக செயல்பட்டு வந்த நிலையில் காதலர்கள் சந்திரசேகரன் தேவி சந்திப்புக்காக தனது பெரியப்பாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சந்திரசேகரன் தங்களது காதலுக்கு துணை சென்ற தங்கை பிரியாவை அடிக்கடி மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டுள்ளார், இதனால் 6 மாத கர்ப்பிணியான பிரியாவின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட அவரது தாயார் இதற்கான காரணம் குறித்து கேட்ட போது நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் மைனர் பெண்ணான பிரியா கூறியுள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த பிரியாவின் பெற்றோர் குண்டடம் போலீசில் புகார் செய்தனர் வழக்கை பதிவு செய்த தாராபுரம் அனைத்து...

எந்த ரேசன்கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கலாம்! நம்ம தமிழ்நாட்டுல தான் இப்படி ஒரு விஷயம் சொல்றாங்க..

Image
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் “உள்மாநில பெயர்வு திறன் திட்டம்” தூத்துக்குடி மாவட்டத்தில் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்துவது தொடர்பாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்கேற்ப தற்காலிகமாக செல்லும் பகுதிகளிலும் எந்த பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் முகவாp மாற்றாமலேயே உணவு பொருட்கள் வாங்கும் திட்டத்தினை செயல்படுத்த முன்னோடியாக “உள்மாநில பெயர்வு திறன் திட்டம்” தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் 2 மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒரே வருவாய் வட்ட பகுதியிலும், ஒரே வார்டு பகுதியிலும் உள்ள கடைகளில் தவிர மற்ற எந்த தேவையான ரேசன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாவட்டத்தவர்  மற்றும் வெளிமாநிலத்தவர்  தற்காலிக அடிப்படையில் பணியாற்றக்கூடிய இடங்களை கண்டறிந்து கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கட்டுமான தொழில் நட...

31-ஆவது சாலை பாதுகாப்பு வார விழா !!

Image
31-ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கலெக்டர் கொ.வீர ராகவ ராவ், தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர்  விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் தமிழ்நாடு விபத்தில்லாத மாநிலமாக உருவாகி வருகிறது அதன்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டு மக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 20.01.2020 அன்று தொடங்கப்பட்டு மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்திட  பேரணிகள் , பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் , கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்  நடத்தப்பட்டன. இதுபோன்று வருங்காலங்களில் சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆண்டிற்கு ஒரு கோடி மக்கள் வருகை புரிந்து செல்கின்றனர். இதனால் அதிக போக்குவரத்து நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. இக்காரணத்தினால் விபத்தில்லா மாவட...

தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழில் கும்பாபிஷேகம் நடப்பது உறுதியாகிறது!!

Image
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் என்றும் பெருவுடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த கோவிலின் கட்டுமானம் காண்போரை வியக்க வைக்க கூடியது. தமிழர் வாழ்வியலுக்கு சான்றாக இன்றும் இந்த கோவில் கம்பீரமாக நிற்கின்றது.  உலக பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது  தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, இந்த விசாரணையில் தமிழக அரசு தரப்பில், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் குடமுழுக்கு மற்றும் முக்கிய பூஜைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டன. இதை அபிடவிட் ஆக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நாளை (29.1.2020) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.  தமிழக அரசு அபிடவிட்  தாக்கல் செய்ய தயார் ஆகி உள்ள நிலையில் தஞ்சை பெருவுடையார் க...

7ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: ரூ.1.50 கோடி புத்தகம் விற்பனையாகும் என எதிர்பார்ப்பு

Image
  திருப்பூர், ஜன. 28 - திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா – 2020 ஜனவரி 30ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த கண்காட்சியில் மொத்தம் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவதுடன், ரூ.1.50 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டர் புத்தகத் திருவிழா அலுவலகத்தில் செவ்வாயன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுத் தலைவர் மோகன் கே.கார்த்திக், செயலாளர் ஆர்.ஈஸ்வரன், துணைத் தலைவர் அ.நிசார் அகமது ஆகியோர் 17ஆவது புத்தகத் திருவிழா தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மக்களின் பேராதரவுடன் இந்நகரின் பண்பாட்டுத் திருவிழாவாக முத்திரை பதித்துள்ள புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ஜன. 30 முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை 11 நாட்கள் கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் நடைபெறுகிறது. இம்முறை 102 அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 42 புத்தகப் பதிப்பகங்கள், 60 புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர். புத்தக நிறுவனங்கள் தமிழகத்தின் ...

பிரேக் அப் செய்த 'காதலியின்' சகோதரிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபர் கைது!

கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ராஜாவின் மகன் ரூபன். பட்டதாரியான ராஜா கான்ஸ்டரக்சன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கோவை,சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த  இளம் பெண்ணுக்கும் ரூபனும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ரூபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும், ரூபனுடைய நடவடிக்கைகள் ஒழுக்கத்துக்கு மாறாக இருந்ததால் அந்த பெண் ரூபனுடன் பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் காதலித்து வந்தபோது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்திலும்,பேஸ்புக்கிலும் பகிர்வதாக மிரட்டியுள்ளார், மேலும் காதலித்த பெண்ணின் சகோதரியின் கைப்பேசிக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சிங்காநல்லூர்  போலீசார் ரூபனை கைது செய்தனர். 

திருப்பூரில் இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்கள் நினைவு பொதுக்கூட்டம்!!

Image
திருப்பூரில் இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்கள் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.     பாஜக அரசு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டுவரும் சட்டங்களை தட்டிக்கேட்க தமிழக ஆட்சியாளர்களுக்கு துணிச்சல் இல்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சாடினார். திருப்பூரில் மஸ்ஜித் ஹஜ்ரத் பிலால் அஹ்லுஸ் சுன்னத் ஜமாத் சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்கள் நினைவு பொதுக் கூட்டம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நடைபெற்றது. திருப்பூர் பிலால் மஸ்ஜித் தலைமை இமாம் ஜபருல்லா பாகவி, பிலால் மஸ்ஜித் தலைவர் ஜாக்கீர் அஹமத் ஆகியோர்  தாங்கினார்கள். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கோவை குனியமுத்தூர் தலைமை இமாம் அப்துல் மாலிக் சிராஜி, மேலப்பாளையம் முகம்மது உசைன், ஆயக்குடி பாரூக் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.   மோதினார் நவ்சாத் கிராஅத் வாசித்தார். துணிவும் முஹம்மது ஷரிப் தொகுப்புரை ஆற்றினார். பிலால் மஸ்ஜித் செயலாளர் உதுமான் முன்னிலை வகித்தார்.  இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்  பேசுகையில்...

சீர்காழி அருகே திட்டை கிராம சபை கூட்டம்!!

Image
சீர்காழி அருகே திட்டை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திட்டை ஊராட்சியில் 71-வது குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திட்டை ஊராட்சி மன்ற தலைவர்  பெரியசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. திட்டை கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையின் பகுதி நேர கடையை குளங்கரையில் புதிதாக அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் சீர்காழி ஊராட்சி ஒன்றிய உதவியாளர்  சுதா, திட்டை ஊராட்சி எழுத்தர்  பொன்.அன்பரசன், திட்டை ஒன்றிய கவுன்சிலர்  விஜயகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயராணி, மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அங்காடி விற்பனையாளர்  முனுசாமி, கிராம மக்கள் கலந்து கொண்டார்கள். திட்டை கிராம நிர்வாக அலுவலருக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்  வராமல் புறக்கணித்தார்.

கோவையில் மேக்ஸ் சூப்பர் குடும்பம் 2020 -நடுவராக பிரபல கோலிவுட் நடிகை அதுல்யா ரவி!! 

Image
கோவையில் மேக்ஸ் சூப்பர் குடும்பம் 2020. நிகழ்ச்சியில் நடுவராக பிரபல கோலிவுட் நடிகை அதுல்யா ரவி கலந்துகொண்டார். இறுதி போட்டியில் 25 குடும்பங்கள் போட்டியில் தகுதி பெற்று ‘மேக்ஸ் சூப்பர் குடும்பம்’ தலைப்பை வென்றது. இந்தியாவின் முன்னணி பிராண்ட் மேக்ஸ் பேஷன், கோவையில் வியப்பூட்டும் ‘மேக்ஸ் சூப்பர் குடும்பம் 2020’ நடத்தியது. பிரபல கோலிவுட் நடிகை அதுல்யா ரவி மற்றும் முன்னணி தமிழ் மாத பத்திரிக்கையாளர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். மேக்ஸ் சூப்பர் குடும்ப நிகழ்ச்சியை மேக்ஸ் பேஷன் ஏற்பாடு  செய்திருந்தது. குடும்பத்தினர் தங்களுக்குள் பயனுள்ள முறையில் நேரத்தை செலவிட  இது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இறுதி போட்டியில் 25 குடும்பங்கள் போட்டியில் தகுதி பெற்று ‘மேக்ஸ் சூப்பர் குடும்பம்’ தலைப்பை வென்றது. சூப்பர் குடும்பம் பற்றி, மேக்ஸ் பேஷன் தமிழ்நாடு மண்டல மேலாளர் திரு. ஹரிஷ் குமார் கூறுகையில், ‘‘ இது முதலாவது பதிப்பு. இனி தொடர்ந்து  வாடிக்கையாளர்களை இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க செய்து, பொழுதுபோக்காகவும், புதுமையாகவும் அவர்களது திறனை வெளிப்படுத்துவோம். சூப்பர் குடும்பம், தங்களது ...

சீர்மரபினர்  நலவாரியத்தில் பதிவு செய்ய கலெக்டர் பிரசாந்த்  வேண்டுகோள்!

Image
சீர்மரபினர்  நலவாரியத்தில் பதிவு செய்ய கலெக்டர் பிரசாந்த்  வேண்டுகோள்.  அரசாணை (நிலை) எண்.13, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்   நலத்துறை, நாள்: 20.04.2007 - ன்படி சீர்மரபினர்  சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென சீர்மரபினர்  நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.  சீர்மரபினர்  நலவாரியத்தில் பதிவு செய்ய தமிழ்நாட்டைச் சார்ந்த 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழில் மற்றும் விவசாயக்கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ள சீர்மரபினர்    இனத்தைச் சார்ந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இந்நலவாரியத்தில் பதிவுக்கான விண்ணப்பத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலகத்திலிருந்து பெற்று, சீர்மரபினர்  இனத்தைச் சார்ந்தவர்  என்பதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விண்ணப்பத்துடன...

இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ச.ஜெயச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!

Image
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர்  ச.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இராணிப்பேட்டைகலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்  ச.ஜெயச்சந்திரன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல் வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டா முதியோர்  உதவித் தொகை காவல்துறை பாதுகாப்பு மற்றும் மின் இணைப்பு என 421 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர்   சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் ஈமசடங்கு திட்டத்தின் கீழ் ரூ.17,000 வீதம் 08 நபருக்கு ரூ.1,36,000-த்தை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர்  ச.ஜெயச்சந்திரன் வழங்கினார்கள்.  இக்கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலா;கள்...

நத்தத்தில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து விழிப்புணர்வு கூட்டம்!!

Image
நத்தத்தில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.     திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேலம்பட்டியில் யூனியன் அலுவலகம் முன்பு உள்ள சமுதாயக் கூடத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதற்கான விளக்க பொதுக்கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் நத்தம் ஒருங்கிணைப்பாளர் சொக்கர் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர்  ஶ்ரீநிவாசன் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பல்வேறு வினாக்கள் கேட்டு அதற்கு குறித்து முழுமையான தகவலை பெற்று கலந்துரையாடினர்.இதில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கூட்டத்தில் விளக்கங்களை  அளித்துப் ஶ்ரீநிவாசன்  பேசினர்.   இந்த நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளராக போஸ், மாவட்ட நிர்வாகிகளான முத்துராமலிங்கம்,ராஜா, சுரேஷ் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்வராஜ், வீரராகவன், சுத...

நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம்!!

Image
நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சி சத்திரப்பட்டி பொதுகளம் அருகில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொடுமுடி வட்டாட்சி வளர்ச்சி அலுவலர் சக்திவேல்,  கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சோமசுந்தரம், கொடுமுடி ஒன்றிய பெருந்தலைவர் லட்சுமி ராஜேந்திரன், கொளாநல்லி ஊராட்சி மன்ற தலைவர் பேபி செந்தில்குமார்,  துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் (எ) சின்ன நவநீதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயல் அலுவலர் சுதா மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கிராமசபா கூட்டம் முடிவில் மகாத்மா காந்தியின் கனவு நிறைவேறிட தொழுநோய் இல்லாத உலகத்தை படைப்போம் என கொடுமுடி சுகாதார ஆய்வாளர் பி.டி. தங்கவேல் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  

கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை மனு!!

Image
மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி வெள்ளாங்கோயில் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் மய்யத்தினர் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர் இதில் கோபி நகர செயலாளர் ஜி சி சிவக்குமார் மாவட்ட நற்பணி இயக்க செயலாளர் ஜி பி கார்த்திகேயன் மாவட்ட மகளிர் அணி சுதா செல்வராஜ் நகர ஒருங்கிணைப்பு என் கே சக்தி இளைஞர் அணி முத்துக்குமார் தொழிலாளர் நல அணி பிரதீப்குமார், ஜோதிஸ்வரன் மகளிர் அணி சாந்தாமணி, ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்  பாரியூர் ஊராட்சியில் கோபி ஒன்றிய செயலாளர் என் கே பிரகாஷ், கே ஜி சரவணன், கிருஷ்ணன், சரவணன், மூர்த்தி, பூபதி, சுந்தரம், கனகராஜ், ஈஸ்வரி, செல்வி, குப்புசாமி, வீரன், பாண்டியன், மைனாவதியும்  வெள்ளாளபாளையம் மோகன்குமார், சிவபாலன், பிரபுக்குமார், லோககிருஷ்ணன்,கோகுல்ராஜ், வெற்றிச்செல்வன்,குணசேகரனும் மொடச்சூர் ஊராட்சியில் வீ ஆர் பழனிச்சாமி, அன்பே சிவம் ராஜா, கலைவாணியும்  கோட்டுப்புள்ளாம்பாளையம் ஊராட்சியில் ஏ டி பிரகாஷ், அருண்பிரசாத், பாலமுருகன், சரவணக்குமார், செல்வம்,ரஞ்சித்குமார...

குடியரசு தினத்தையொட்டி வேலூரில் நேதாஜி விளையாட்டரங்கில் கலெக்டர் அ.சண்முகசுந்தரம், தேசிய கொடியை ஏற்றி மரியாதை !

Image
குடியரசு தினத்தையொட்டி வேலூரில் நேதாஜி விளையாட்டரங்கில் கலெக்டர் அ.சண்முகசுந்தரம், தேசிய கொடியை ஏற்றி வைத்தார்! இந்திய நாட்டின் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர்  கோட்டையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்னர்  கோட்டை கொத்தளத்தில் கலெக்டர் அ.சண்முகசுந்தரம், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர்  நேதாஜி விளையாட்டரங்கில் குடியரசு தினத்தையொட்டி கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பின்னர்  வெண் புறாக்களை பறக்க விட்டார்கள். அதனைத்தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர்   காவலர்  நற்பணி பதக்கம் 13 காவலர்களுக்கு பதக்கத்தையும், சிறப்பாக பணியாற்றிய 48 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மேலும் பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த 195 அலுவலர்களுக்கு சிறப்பாக பணியாற்றிதற்காக பாராட்டுச் சான்றிகளையும் கலெக்டர்  வழங்கினார். பின்னர்  அரசு நலத்திட்ட உதவிகள் ஆதிதி...

கொடுமுடி தாலுக்கா தனியார் மின் பணியாளர்கள் சங்க கூட்டம்

Image
கொடுமுடி தாலுக்கா தனியார் மின் பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது .     நமது இந்திய தேசத்தின் 71 வது குடியரசு தின விழாவை சிறப்பிக்க  கொடுமுடி தாலுக்கா தனியார் மின் பணியாளர்கள் நல சங்க கூட்டம் ஒத்தக்கடை குமரன் மினி மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் தாமரைப் பாளையத்தில் அமைந்துள்ள நலச்சங்க அலுவலகத்தில் கொடி ஏற்றினர். இவ்விழாவில் தலைவர் தங்கராஜ்,  செயலாளர் ஸ்டீபன் பொருளாளர் நித்தியானந்தம்,  துணைத் தலைவர் டி.சேகர் துணைச் செயலாளர் எம். பெரியசாமி ஆகியோரும் தனியார் மின் பணியாளர்களும் கலந்து கொண்டு இவ் விழாவை மிக சிறப்பாக நடத்தினர்.      

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழா!!

Image
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி  தேசிய கொடியினை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி 61 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு தேசிய கொடியினை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வண்ண பலூன்கள் மற்றும் சமதானத்தினை வலியுறுத்தும் விதமாக புறாவினை பறக்கவிட்டார்.பின்னர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை கலெக்டர் சந்தீப் நந்தூரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிறப்பாக பணியாற்றிய 38 காவல் துறையினருக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பின்னர்   முன்னாள் படைவீரர்  நலன், வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரத்துறை, ஆதிதிராவி...

அவிநாசியில் கௌசிகா நதி புணரமைக்கும் திட்டத்தினை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

Image
அவிநாசி  ஊராட்சி ஒன்றியம்  தெக்கலூரில் கௌசிகா நதி புணரமைக்கும் திட்டத்தினை  கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார். திருப்பூர்  மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் நொய்யல் ஆற்றின் துணை நதியான கௌசிகா நதியானது தெக்கலூர், கணியாம்பூண்டி, புதுப்பாளையம் மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய 4 ஊராட்சிகளை கடந்து செல்கிறது.  இந்த கௌசிகா நதிக்கு பல்வேறு இடங்களிலிருந்து சிற்றோடைகள் மூலமாக மழை நீரானது செல்கிறது.  மழைக்காலங்களில் அதிக அளவிலான மழை நீரானது கௌசிகா நதியில் சென்று நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்த கௌசிகா நதி மற்றும் அதன் சிற்றோடைகளில் செல்லும் நீரினை தடுத்து நிலத்தடி நீரினை உயர்த்திட பல்வேறு இடங்களில் கடந்த காலங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. இவ்விடங்களை திருப்பூர்  மாவட்ட கலெக்டர்  கடந்த 5.11.2019 ஆம் நாள் நேரில் ஆய்வு செய்து இப்பொருள் குறித்து ஆலோசனைகள் வழங்கியதை தொடர்ந்து திருப்பூர்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் திட்ட இயக்குநர்  அவர்களின் தொடர்  கண்காணிப்பில் தற்போது தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி வாழும் கலை அமைப்பி...

டிக் டாக்கை தடைபண்ணுங்க.. கணவன் டிக் டாக் தோழியுடன் ஓடியதால் பெண் ஆவேசம்!!

மனைவி, குழந்தையை தவிக்க விட்டு டிக்டாக் தோழியுடன் கணவர் ஓட்டம்...!   கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர்.கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யாவை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ராஜசேகருக்கு பெண் குழந்தை உள்ளத ராஜசேகர் மது அருந்திவிட்டு, மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்; விவகாரம் போலீஸ் வரை சென்று சமாதானமாகினர். டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்ட ராஜசேகர், அதில் வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டு வந்துள்ளார். நாளடைவில், பல பெண்களுடன் டிக்டாக் வீடியோ வெளியிட்ட தனது கணவரின் போக்கு முற்றிலும் மாறியதாக மனைவி சுகன்யா புகார் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராஜசேகர் வீடு திரும்பவில்லை.  இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கவிநயா என்ற பெண்ணை காணவில்லை என அவரது உறவினர்கள் புதுக்கோட்டை அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.கவிநயாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி ராஜசேகருடன் பேசியது தெரியவந்தது.காணாமல் போன கவிநயா மற்றும் ர...

திருப்பூரில் இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்கள் நினைவு பொதுக்கூட்டம்!

Image
திருப்பூரில் இந்திய தேசம் காத்த இஸ்லாமிய நினைவு பொதுக்கூட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்பு பாஜக அரசு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டுவரும் சட்டங்களை தட்டிக்கேட்க தமிழக ஆட்சியாளர்களுக்கு துணிச்சல் இல்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சாடினார். திருப்பூரில் மஸ்ஜித் ஹஜ்ரத் பிலால் அஹ்லுஸ் சுன்னத் ஜமாத் சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்கள் நினைவு பொதுக் கூட்டம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நடைபெற்றது. திருப்பூர் பிலால் மஸ்ஜித் தலைமை இமாம் ஜபருல்லா பாகவி, பிலால் மஸ்ஜித் தலைவர் ஜாக்கீர் அஹமத் ஆகியோர்  தாங்கினார்கள். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கோவை குனியமுத்தூர் தலைமை இமாம் அப்துல் மாலிக் சிராஜி, மேலப்பாளையம் முகம்மது உசைன், ஆயக்குடி பாரூக் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  மோதினார் நவ்சாத் கிராஅத் வாசித்தார். துணிவும் முஹம்மது ஷரிப் தொகுப்புரை ஆற்றினார். பிலால் மஸ்ஜித் செயலாளர் உதுமான் முன்னிலை வகித்தார்.  இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முரு...

திருப்பூரில் கடும் பனி: திணறிய வாகனங்கள் - குளிரில் நடுங்கிய மக்கள் !!

Image
திருப்பூர் மாநகரப்பகுதியில் இன்று காலை நிலவிய கடும் பனி மூட்டத்தால், பொதுமக்களும் வாகனஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா்..   திருப்பூர் மாநகரப்பகுதிகளான அவிநாசி சாலை,  பல்லடம்சாலை, மங்கலம், தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 8.30 வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அதன்பிறகு, வெயில் வர வர பனிப்பொழிவு விலகியது. கடும் பனிப்பொழிவால், பிரதான ரோடுகள் முழுவதும் பனி சூழ்ந்தும், சாலைகளில் படா்ந்தும் காணப்பட்டது. சாலையில் 100 மீட்டர் தொலைவுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில் சிரமம் இருந்ததால், வாகனப் போக்குவரத்தும் குறைந்தது. சாலையில் சென்ற வாகனங்களும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டுச் சென்றன.  இதனால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.   தற்போது நிலவிவரும் பனிப்பொழிவால் வாகனஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டும், குறைந்த வேகத்தில் சென்றனா்.   கடுமையான பனி மூட்டம் காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் குளிரால் பாதிப்பிற்குள்ளாகினர்,  காலை 8.30 மணி வரை ரோடுகளில் பனிமூட்டம் சூழ்ந்திருந்ததால் பொதுமக்கள் குள...