Posts

Showing posts from August, 2021

தூத்துக்குடியில் திருமண வீட்டில் தகராறு! தூங்கிக் கொண்டிருந்தவரை கொலை செய்த 6 பேர் கைது - தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.!

Image
தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப் I பெருமாள்நகரைச் சேர்ந்த சங்கர் மகன் ராமநாதன் (எ) ரமேஷ் (20) என்பவர் கடந்த 28.08.2021 அன்று இரவு தனது நண்பரான சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தை துரை மகன் டேவிட் (23) என்பவரது வீட்டு மொட்டை மாடியில் தனியாக தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.  இந்நிலையில் 29.08.2021 அன்று அதிகாலையில் மொட்டை மாடியில் ராமநாதன் (எ) ரமேஷ் மர்ம நபர்களால் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமநாதன் (எ) ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சிசிடிவி கேமரா பத...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு.!

Image
தூத்துக்குடி மாவட்டம்   திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.29.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிட கட்டுமான பணிகளை இன்று மீன் வளம் - மீனவர் நலன் மற்றும்  கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா. ஆர் ராதாகிருஷ்ணன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,உதவி காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் ஹர்ஷ் சிங்,செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தேவி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்  உதவி ஆணையர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ரூ.1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு I.F.S. அதிகாரி ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கு.!

Image
உரிய தகுதிகள் இருந்தும் தனக்கு பதவி உயர்வு வழங்காததால் அரசிடம் ரூ.1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு விருப்ப ஓய்வு பெற்ற I.F.S. அதிகாரி  ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் காவலர் குடியிருப்பு - காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 5.64 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர் குடியிருப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  இன்று காவலர் குடியிருப்பை ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தமிழக அரசு உத்தரவின்பேரில் திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூபாய் 5.64 கோடி செலவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர்களுக்கு,  தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 35 காவலர் குடியிருப்புகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார். அதன்படி புதிதாக கட்டப்பட்ட 3 ஆய்வாளர் குடியிருப்புகள், 9 உதவி ஆய்வாளர் குடியிருப்புகள் மற்றும் 23 காவலர் குடியிருப்புகள் என மொத்தம் 35 காவல்துறை குடியிருப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு காவலர் குடியிருப்பில் ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி ...

ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரில் கேட்டுகளை திருடிய 3 பேர் கைது - 2 வேன் பறிமுதல்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூரில் உள்ள மத்திய அரசு தொல்லியல் துறைக்கு சொந்தமான 12 கிரில் கேட்டுகள் கடந்த 16.08.2021 மற்றும் 18.08.2021 ஆகிய நாட்களில் மர்ம நபர்களால் திருடப்பட்டது.  இது குறித்து தொல்லியல் துறையினர் கொடுத்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேற்படி திருட்டு வழக்கை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, திருடப்பட்ட கிரில் கேட்டுகளை விரைந்து மீட்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,  ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் செய்துங்நல்லூர் உதவி ஆய்வாளர் கருத்தையா  தலைமையில் காவலர்  நயினார் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் டாட்டா ஏஸ் வாகனத்தில் திருடப்பட்ட கிரில் கேட்டுகள் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.  ஆனால் வாகன எண்ணோ, வாகனத்தை கண்டறியக்கூடிய அடையாளங்கள் எதுவும்...

கள்ளக்குறிச்சி அருகே அரசுப்பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு; பேருந்தில் பயணித்த 35 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Image
சென்னை தாம்பரம் பகுதியை வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் PY01CV3123 என்ற எண்ணுள்ள Xuv500 மகிழுந்தில் சுற்றுலாவுக்காக ஊட்டிக்கு சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து வீட்டிற்கு அனைவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இன்று இரவு 7.30  மணியளவில் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்களம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த TN30N2045 என்ற எண்ணுள்ள அரசு பேருந்து - மகிழுந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மகிழுந்தில் பயணித்த அனைவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, தியாகதுருகம் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, காரில் பயணித்த மகிழுந்து ஓட்டுநர் உட்பட 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சில மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. அரசு பேருந்தில் பயணி...

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாம்.!

Image
தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கவாத்து  மற்றும் உடற்பயிற்சி முகாம்.! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி நகரம், ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திக்குளம், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி ஆகிய உட்கோட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்கள்  முதல் காவல் ஆய்வாளர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் உட்கோட்ட தலைமையிடங்கள் மற்றும் காவல் நிலையங்களில் கவாத்து மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் இன்று காவல்துறையினருக்கு அந்தந்த உட்கோட்ட தலைமையிடங்களில் கவாத்து மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது.  அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  ஆய்வு செய்து காவல் துறையி...

நடிகை மீரா மிதுன் அவரது நண்பர் சாம் அபிஷேக்குக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல்

Image
மீரா மிதுனுக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல் வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன், அவரது நண்பருக்கு காவல் நீட்டிப்பு இருவருக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு - ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்.!

Image
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு. நாளை  முதல் செப்.5 வரை 10 நாட்கள் தரிசனத்திற்கு தடை . கொரோனா  கட்டுப்பாடுகள் காரணமாக  திருவிழா நாட்களில் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 108ஆக அதிகரித்திருக்கிறது.

Image
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்தை ஆப்கானியர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர்.  இந்நிலையில், விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள ஹோட்டலிலும் மற்றொரு குண்டும் வெடித்தது.  இந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. தற்போது பலி எண்ணிக்கை 108 ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வெடிகுண்டு தாக்குதல் நடந்ததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது விமானநிலையத்தில் இருந்து மீண்டும் விமானம் மூலம் மீட்புப்பணி தொடங்கப்பட்டுள்ளன.  விமான நிலையம் அருகே நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில், அந்த அமைப்பும் அதனை உறுதி செய்துள்ளது.  நிலைமை மோசமடைந்தாலும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணிகளை நிறுத்தப் போவதில்லை என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம்.!

Image
தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,  திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாளையும், நாளை மறுதினமும், தேனி, நீலகிரி, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.  திருவண்ணாமலை கலசப்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், காஞ்சிபுரம், வேம்பாக்கம் மற்றும் ஆரணியில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை அகதிகளின் நலனுக்காக சிறப்பு அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் - நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள கனிமொழி கருணாநிதி எம்.பி.!

Image
இலங்கை அகதிகளின் நலனுக்காக சிறப்பு அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் - நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள கனிமொழி கருணாநிதி எம்.பி.! இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் புதிதாகக் கட்டித் தரப்படும் இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் இலங்கை தமிழர்களுக்கு இவ்வாண்டில் 108 கோடி மதிப்பில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாமில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கான முழுச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு; தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்!

Image
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி,  9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை   பள்ளிகள் திறக்க முதல்வர்  அனுமதி அளித்துள்ளார்.  இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், தெரிவித்ததாவது: "தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட பள்ளிகள் திறப்பு குறித்த அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  மாணவர்கள்/ஆசிரியர்கள்/பணியாளர்களின் உடல் நிலையினை அவ்வப்போது கண்காணித்து ஆலோசனைகள் வழங்கிட மற்றும் ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்களை சுகாதாரத்துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி துறையினர் மாவட்டத்தில் உள்ள 88 அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு கிருமி நாசினி தெளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்க...

சாதாரணப் பெண்கள் பாஜக தலைவர்களின் காம இச்சைக்குப் பலியாகவேண்டியவர்கள்! அப்படித்தானே? - ஜோதிமணி MP ஆவேசம்

Image
இன்னும் ஒரு படி மேலே போய் கட்சியில் இல்லாத சாதாரண பெண்களிடம் பாஜக தலைவர்கள் முறைகேடாக நடந்துகொண்டிருந்தால் கையில்,காலில் விழுந்தாவது பாஜக  தலைவர்களை காப்பாற்ற இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்பேன்  என்கிறார். அண்ணாமலையைப் பொறுத்தவரை சாதாரணப் பெண்கள் பாஜக தலைவர்களின் காம இச்சைக்குப் பலியாகவேண்டியவர்கள்! அப்படித்தானே?அவர்களைப் பற்றி திரு.அண்ணாமலைக்கு எந்த அக்கறையும் கிடையாது. இதைக் கேட்கும்போது ஒரு பெண்ணாக ரத்தம் கொதிக்கிறது.

ஓடும் பேருந்தில் 30 பவுன் நகையை திருடிய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது - நகையை மீட்டு காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி சுதா (35) என்பவர் கடந்த 23.08.2021 அன்று திருநெல்வேலியிருந்து கோவில்பட்டிக்கு அரசு பேருந்தில் பயணித்த போது கயத்தாறு பேருந்து நிலையத்தில்  பேருந்து வந்தபோது தனது கைப்பயில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் திருடு போயுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் , கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன்  மேற்பார்வையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து  தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், காவலர்கள் பாலகிருஷ்ணன்,  பாலமுருகன், சத்திரியன், பெண் காவலர்கள் முனீஸ்வரி, முத்துலதா மற்றும் செல்வி. முருகேஷ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து விரைந்து கைது செய்து திருடிய நகைகளை மீட்குமாறு உத்தரவிட்டார். தனிப்படையினர் நேற்று கயத்தாறு புதிய பேருந்து நிலையத்தில் வாகன தனிக்கை மேற்கொண்...

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 68 லட்சம் பனைமரங்கள் நடப்பட்டுள்ளன - ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரை பகுதியில் தோட்டக்கலைத்துறை மூலம் 10000 பனை விதைகள் நடும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், பனை விதைகள் நடும் பணிகளை  தொடங்கி வைத்தார். மேலும் மல்லிகை மகளிர் சுய உதவிக்குழுவினர்  பனை ஓலை மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளமாக பனைமரம் உள்ளது. தமிழகத்தில் சுமார் 5 கோடி பனைமரங்கள் இருந்தாலும் அதிகப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில்தான் சுமார் 2 கோடி பனைமரங்கள் உள்ளன.  சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் இணைந்து 10,000 பனை விதைகள் நடும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மதர் சமூக சேவை நிறுவனம் ஏற்பாட்டில் நமது மாவட்டத்தில் 1 கோடி பனை மரங்கள் நடவேண்டும் என இலக்கு நிர்ணயித்து இதுவரை 68 லட்சம் பனைமரங்கள் நடப்பட்டுள்ளன.  இந்த ஆண்டு பனை மரங்களில் ...

தூத்துக்குடியில் கைதி தப்பியோடிய விவகாரம் - 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட எஸ்.பி.!

Image
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய திருட்டு வழக்கில்  கைது செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி போலீஸ் காவலில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம் - தப்பி ஓடிய கைதி மீது தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு - தப்பவிட்ட 4 காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை  எடுத்து தற்காலிக பணி நீக்கம் (Suspend) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 16.08.2021 அன்று புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியான தென்காசி மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் (37) என்பவர் புளியம்பட்டி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைக்கப்பட்டார்.  சிறையிலிருந்த மேற்படி சிறைக் கைதி பாலமுருகன் 23.08.2021 அன்று உடல் நலமின்மை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இவருக்கு தூத்துக்குடி ஆயுதப்படையைச் சேர்ந்த முதல் நிலைக் க...

இரண்டரை வயதில் சூப்பர் ஐ.க்யூ! ’இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் பக்கத்தில் இடம் பெற்ற சுட்டி!

Image
திருப்பூர் விகாசினி மெட்ரிக் பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவரான ஆனந்தபாபுவின் மகன் விவேகானந்தன். இரண்டரை வயதாகும் இந்தச் சுட்டி, பழங்கள், காய்கறிகள், விலங்குகள், பறவைகள், வடிவங்கள், நிறங்கள், பறவைகள் மற்றும் வனவாழ் உயிரினங்களின் சப்தங்கள், தமிழ் மற்றும் ஆங்கில மாதங்களின் பெயர்கள்,  வார நாட்களின் கிழமைப் பெயர்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), தேசத்தலைவர்களின் பெயர்கள், 10 தமிழ் பாடல்கள், 10  ஆங்கில பாடல்கள் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்து சட்டென கூறுவாராம். அவரது இச்சாதனை ‘இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ்’ சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதுடன், அவரின் இந்த ஐ.க்யூ திறனைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.   இந்தச் சுட்டியின் திறனைக் கண்டு பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அட்டை: பத்திரிகையாளர் அசதுல்லா தொடர்ந்த வழக்கில் நான்கு வாரங்களில் 'Accreditation committe' அமைக்கப்படும் என அரசு உறுதி.!

Image
பத்திரிகையாளர்களுக்கு accreditation card committe அமைக்காமல் அரசு அங்கீகார அட்டை ( accreditation card) வழங்கப்படுவதை எதிர்த்து  பத்திரிகையாளர் அசதுல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, D.I.P.R இயக்குனர் சார்பில் நிலை அறிக்கை( status report) தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட'The Tamilnadu Media Representative accreditation rules 2002'ன் படியே இது வரை பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அரசு அங்கீகார அட்டை தவறான நபர்களுக்கு வழங்கப்படுவதை தடுக்கும் வகையில், அங்கீகார அட்டை பெறும் பத்திரிகையாளர் அதற்கு தகுதியானவர் தானா என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகளில் மாற்றும் செய்யப்பட்டு தற்போது 'Tamilnadu State News Media Representative Accreditation Rules 2021' கொண்டு வரப்படுகிறது. இந்த புதிய வி...

தூத்துக்குடி காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளர் 42 பேருக்கு பணி நியமன ஆணை - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் வழங்கினார்.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் அவர்கள் உதவி ஆய்வாளர் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து கூறினார்.  2019 ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் மாரிமுத்து, பரமசிவன் ஆகிய 2 பேரும், ஊரக உட்கோட்டத்தில் வெங்கடாசலபெருமாள், தரண்யா மற்றும் மேகலா ஆகிய 3 பேரும், மணியாச்சி உட்கோட்டத்தில் சுப்புராஜ், சுந்தர், சந்தனமாரி, சுகந்தி மற்றும் பிரம்மநாயகம் ஆகிய 5 பேரும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் ரத்னவேல்பாண்டியன், முகில் அரசன், சுப்பிரமணியன், ராகவி மற்றும் ஜெபா ஆகிய 5 பேரும்,  விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சண்முகராஜ், ரவிக்குமார், கோவிந்தராஜ், சண்முகம், முத்துகுமார், பாமா, அனுசியா மற்றும்; செல்வராஜ் ஆகிய 8 பேரும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் விக்னேஷ், பரமசிவன், மஞ்சு, செல்வக்குமார், அஜித், மாரியப்பன், மாரியம்மாள், ஜூடித் கிருபா, ஜெயஜோதி, வெங்கடேஷ், குரு கிருத்தகா, மாடசாமி மற்றும் ராமசந்திரன் ஆகிய 13 பேரும்,...

பாஜக மீதான பாலியல் புகார்கள் - காவல்துறை நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்.!

Image
பாஜக மீதான பாலியல் புகார்கள் குறித்து காவல்துறை நடவடிக்கை தேவை எனவும், பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கை நடந்துள்ள பாலியல் குற்றங்களை உறுதி செய்வது போல் இருக்கிறது, ஆகவே குற்றம் சாட்டப்பட்டவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... "தமிழக பாஜக தலைமையின் மீது எழுந்துள்ள பாலியல் புகார்களும், அடுத்தடுத்து வரும் செய்திகளும் அதிர்ச்சி தருகிறது. மனித மாண்புகளையே கேள்விக்குள்ளாக்குகிறது. பாஜகவின் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், ஏதோ பெருந்தன்மையானவர் போல ராஜினாமா செய்திருக்கிறார். இவ்விசயத்தில் ராஜினாமா மட்டும் தீர்வாகாது, அவர் சட்டத்திற்கு முன் பதில் சொல்லியாக வேண்டும். இதுபற்றி, பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கை நடந்துள்ள குற்றங்களை உறுதி செய்வது போல் இருப்பதுடன், மேலும் பல புகார்கள் விசாரிக்கப்படாமல் இருப்பதாக காட்டுகின்றன. இது குறித்து தனக்கு தெரியும் என்றபோதிலும் நடவடிக்கையை தாமதப்படு...

நடிகர் ஆர்யா போல் சமூக வலைதளத்தில் நடித்து சுமார் 70 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது.!

Image
நடிகர் ஆர்யா போல் சமூக வலைதளத்தில் நடித்து சுமார் 70 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது.* புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அர்மான் மற்றும் உடந்தையாக இருந்த உசைனி பையாக் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.*

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. !

Image
 சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் வரும் 28, 29ல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கைதி தப்பியோட்டம்.!

Image
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (37). இவர் மீது தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக கடந்த 16ம் தேதி பாலமுருகனை, தனிப்படை போலீசார் கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனர். விசாரணை கைதியாக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 23ம் தேதி பாலமுருகனுக்கு திடீர் உடல்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாலமுருகன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் கழிவறைக்கு சென்று வருவது போல் நடித்து மருத்துவமனையிலிருந்து பாலமுருகன்  தப்பியோடிவிட்டார்.  இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் காவலில் இருந்த கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏறு்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு - மும்பையில் மத்திய அமைச்சர் கைது!

Image
மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிர முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக மும்பையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் அனைவரும் சொந்த மாநில மக்களிடம் ஆசி பெறுவதற்காக மக்கள் ஆசி யாத்திரையை கட்சித் தலைமை அறிவுரையின் கீழ் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே, நேற்று மக்கள் ஆசி யாத்திரையில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதை முதல்வர் உத்தவ் தாக்கரே மறந்துவிட்டார். பக்கத்தில் இருப்பவரிடம் அந்த விவரத்தை கேட்டுப்பெறுகிறார், நான் மட்டும் அங்கிருந்தால் அவரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என்று பேசினார். இந்த கருத்து மகாராஷ்டிரா முழுவதும் சிவ சேனா தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை கண்டித்து அக்கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கே போராடி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே மீது மாநிலம் முழுதும் பல காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புனே மற்றும் நாசிக்கில் உள்ள கா...

visa-on-arrival -இந்தியர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க யுஏஇ முடிவு.!

Image
இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் இரண்டு வாரங்கள்  தங்கிவிட்டு வருபவர்களுக்கு, வருகையின் போது வழங்கும் visa-on-arrival வசதி கிடையாது என யுஏஇ அறிவித்துள்ளது.  இந்த வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க யுஏஇ அரசு முடிவு செய்துள்ளது என அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான எத்திஹாட் தெரிவித்துள்ளது.இலங்கை , பாகிஸ்தான் உள்ளிட்ட வேறு பல நாட்டவருக்கும் இந்த வசதி தற்போது கிடைக்காது.  அமெரிக்க-பிரிட்டன் விசாக்கள், கிரீன் கார்ட், ஐரோப்பிய ஒன்றிய ரெசிடன்ட் பெர்மிட் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு வருகையின் போது விசா வழங்கும் வசதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 60 சதவீதம் மானியத்துடன் சோலார் பம்ப் அமைப்பதற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சியர் தகவல்.!

Image
சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசால் 60மூ மானியத்துடன் சோலார் பம்ப் அமைப்பதற்கு விருப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மின்வாரியத்தால் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு இருக்க வேண்டும். இத்திட்டத்தில் இலவச மின்சாரத்தை பயன்படுத்துவதோடு சூரிய ஒளி மின்சாரத்தையும் பயன்படுத்துவதால் மின்சாரம் சிக்கனம் ஆகிறது. மின் இணைப்பு எந்த வகையிலும் துண்டிக்கப்படமாட்டாது. மேலும், இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படமாட்டாது.  இத்திட்டத்தின்கீழ் 7.5 HP வரை திறன் கொண்ட விவசாய பம்ப்களுக்கு நாளொன்றுக்கு 55 யூனிட் வரை உற்பத்தி செய்யலாம். இத்திட்டத்தில் விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரம் உபயோகப்படுத்தியது போக மீதமுள்ள சூரியஒளி மின்சாரமானது தமிழ்நாடு மின்சார வாரிய மின் கட்டமைப்புக்கு விற்பனை செய்யவும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அதன்மூலம் ஆண்டிற்கு ரூ.40,000/- வரை வருமானம் பெறலாம். மேலும், விவசாயிகள் தங்கள் நிலத்தில் 1100 சதுர அடி நிலத்தினை ஒதுக்கீடு செய்து, அந்த இடத்தில் சூரியஒளி தகடுகளை அமைக்கவேண்டும். ஆதற்கான மொத்த திட்ட செலவினம...

கொரோனா அறிகுறி காரணமாக பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் என அறிவிப்பு.!

Image
கொரோனா அறிகுறி காரணமாக பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் என அறிவிப்பு.! கொரோனா அறிகுறி காரணமாக தமிழக வீரர் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டார்.  பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார்.  ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.

பாலியல் வீடியோ விவகாரம் -தமிழக பா.ஜ., பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து கே.டி.ராகவன் விலகல்.!

Image
தமிழக பா.ஜ., பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ., பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கே.டி ராகவன் அறிவித்துள்ளார். தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கே.டி.ராகவன் பெண் ஒருவருடன் தனது வீட்டு பூஜை அறையில் பாலியல் சாட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர் சட்டப்படி சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களுக்குள் காணாமல் போன 353 செல்போன்கள் மீட்பு - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தகவல்.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 70 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஒப்படைத்தார் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  இளங்கோவன் தலைமையில்  தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  சிவசங்கரன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார். அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (E.M.E.I) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து  ஏற்கனவே கடந்த 15.10.2020 அன்று 102 செல்போன்களும், 09.12.2020 அன்று 60 செல்போன்களும், 12.02.2021 அன்று 61 செல்போன்களும், 02....

தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா.!

Image
சமூக வலைதளத்தில் கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சை வீடியோ வெளியான நிலையில் ராஜினாமா* தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்  என்னையும், என் கட்சியையும் களங்கப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது  குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்; சட்டப்படி சந்திப்பேன்

பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி வாழ்த்து!

Image
டோக்கியோவில் நடக்கவிருக்கும், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து இந்திய வீரர்களுக்கும் திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  கடந்த 2016 ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் குறிப்பிட்டுளார்.

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு. மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கின் விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

Image

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் வரும் 31ஆம் தேதிக்குள் வெளியேறாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் - தலிபான் எச்சரிக்கை.!

Image
அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறியுள்ளார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களது படைகளை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் அவகாசம் கோரினால் அது தங்களிடையே அவநம்பிக்கையையே ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதே நேரம் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அனைத்து அமெரிக்கர்களையும் 31ஆம் தேதிக்குள் வெளியேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை என அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேல் சல்லிவன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்ஸன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க ஜி-7 நாடுகளின் மாநாட்டை பிரிட்டன் இன்று நடத்துகிறது.

Image

தமிழகத்தில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

Image
தமிழகத்தில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. செப். 4-ம் தேதி மாணவர்களுக்கான தரவரிவைப் பட்டியல் வெளியாகிறது.

தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கல்லூரி கல்வி இயக்க‌கம்.

Image
மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம். தடுப்பூசி போடாதோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் - கல்லூரிக் கல்வி இயக்ககம். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை. செப்.1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம்.!

Image
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி‌ செலவில் நினைவிடம் அமைக்கபடும் தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் சஸ்பெண்ட் - தூத்துக்குடி எஸ்பி அதிரடி நடவடிக்கை.!

Image
தூத்துக்குடி அருகே கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து எஸ்பி ஜெயக்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் முத்துசெல்வன் (33) என்பவர் காடல்குடியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் காடல்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் கடந்த 16.08.2021 அன்று இரவு கோழிக்கறி வேண்டும் என்று போனில் கேட்டுள்ளார், முத்துச்செல்வன் மறுநாள் காலையில்தான் தரமுடியும் என்று கூறியதால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், நேற்று (19.08.2021) தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் (41) மற்றும் காவலர் சதீஷ்குமார் (28) ஆகிய 2 பேரும் கறிக்கடைக்குச் சென்று, அங்கிருந்த முத்துச்செல்வனை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர்.  தகவலறிந்து அங்கு வந்த தலைமைக் காவலர் பாலமுருகன் என்பவரின் காரில் ஏறி அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பா...

கோவில்பட்டியில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி யிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழிற்பேட்டையில் செயல்படும் தீக்குச்சி தயாரிக்கும் ஆலைக்கு  திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி வருகை தந்தார். அங்கு தீக்குச்சிகள் தயாரிக்கும் முறைகளை பார்வையிட்டு, மரத்தடிகள் எங்கிருந்து வருகிறது உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் தீப்பெட்டி ஆலைக்கு சென்று தீப்பெட்டி தயாரிக்கும் முறையை பார்வையிட்டார். அங்கு பணியாற்றும் பெண் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையின் நுழைவாயில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  தொடர்ந்து நகராட்சி அலுவலக கூட்டரங்கில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கருத்தரங்கில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டனர். கூட்டத்தில், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கனிமொழி எம்.பி.யிடம் வழங்கிய மனுவில்,  கோவில்பட்டியில் தொழில் பூங்கா அமைக்க பூர்வாங்க பணிகள் நடந்தன. அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. எனவே, கோவில்பட்டியில் புதிதாக தொழில் பூங்கா அமைக்க வேண்டும்.  மாவட்டத்தில் தொழில் தொடங்குவதில் உள்ள பிரச்சினைக...

தூத்துக்குடியில் சிக்கிய 23 கிலோ அரியவகை அம்பர்கிரீஸ் - சர்வதேச மதிப்பு ரூ.23 கோடியாம்.!

Image
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரை பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.  காருக்குள் திமிங்கலத்தின் வாயில் இருந்து வெளியேறும் உமிழ்நீரான 'அம்பர்கிரிஸ்' இருப்பது தெரிய வந்தது. காரில் இருந்த   3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த ஆம்பர்கிரீஸ் திமிங்கலம் குடலில்  சுரக்கக்கூடிய மெழுகு போன்ற திரவம் ஆகும். இந்த ஆம்பர்கிரீஸ் 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. உயர்தரமான நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தி வருகின்றனர்.  குறிப்பாக துபாய் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆம்பர்கிரீஸ் அதிக அளவில் நறுமண பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.  எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்து பொருட்களாகவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இத்தகைய அரிய வகை ஆம்பர்கிரீஸ் இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட  23...

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன இதுதொடர்பாக நகர் கோட்ட செயற்பொறியாளர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது  தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பெறும் உயரழுத்த மின் மின் தொடரில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் புதிய பேருந்து நிலையம்,கேடிசி நகர்,ஜெயராஜ் ரோடு, டூவிபுரம் 1,2, 3வது தெரு,பழைய பேருந்து நிலையம்,மீனாட்சிபுரம் ரோடு,பால விநாயகர் கோவில் தெரு,பங்களா தெரு மற்றும் ஜெய்லானி தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை.!

Image
தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார்.  தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது.

தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ததுதான் திமுகவின் நூறு நாள் சாதனை - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!

Image
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். ஆளுநரை சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் என்ற அடிப்படையில் திமுக அரசு நடந்து கொள்கிறது. திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது.  ஊரக வேலை உறுதித் திட்டத்தை அரசு முடக்கி வைத்துள்ளது. அதிமுகவினரை பழிவாங்கும் நோக்கில் திமுக அரசு வழக்குகளை தொடுக்கிறது. அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது திமுக பொய் வழக்கு போடுகிறது.  கடந்த கால ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை கிடப்பில் போட்டு முடக்கி வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ததுதான் திமுகவின் நூறு நாள் சாதனை. தேர்தல் அறிக்கைக்கும் கோடநாடு வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு கூடம் - கனிமொழி கருணாநிதி எம்.பி திறந்து வைத்தார்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஏகம் பவுண்டேஷன் சமூக பொறுப்பு நிதியிலிருந்து 40 லட்சம் மதிப்பிலான 22 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு  ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறைகளை திறந்து வைத்து பார்வையிட்டார் மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன்,இணை இயக்குநர் நலப்பணிகள் மருத்துவர் முருகவேல்,வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, சித்த மருத்துவர் தமிழ்அமுதன்,  குழந்தைகள் நல மருத்துவர் திவ்யா, பல் மருத்துவர் முத்துவள்ளி,செவிலியர் கண்காணிப்பாளர் வேலம்மாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் செவிலியர்கள் அனைத்து பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் தேர்வு

Image
தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய விருது* நாடு முழுவதும் 44 சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் திருச்சி பிராட்டியூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு ஈரோடு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லலிதாவும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு குறித்து ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.!

Image
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் திருநெல்வேலி சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் தாமரைக்கண்ணன்,  தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி ஆகிய பகுதிகளில் ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  மேலும் வருகிற விநாயகர் சதுர்த்தி, இம்மானுவேல்சேகரன் குருபூஜை மற்றும் ஒண்டிவீரன் ஜெயந்தி ஆகிய நிகழ்ச்சிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு, திருநெல்வேலி மாநகர ஆணையர் செந்தாமரைக்கண்ணன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மணிவண்ணன், தென்காசி மாவட்ட காவல் கண...

ஆகாய தாமரை மூலமாக கைவினைப் பொருட்கள் தயாரித்து முடித்தவர்களுக்கு சான்றிதழை வழங்கினார் - கனிமொழி கருணாநிதி எம்.பி.!

Image
தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் ஊராட்சி மன்ற மண்டபத்தில் கடந்த 15 நாட்களாக ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  கலந்து கொண்டு 30 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது: ஆகாய தாமரை பொதுவாக ஆறு மற்றும் நீர் நிலைகளை  அழிக்கக்கூடியவை. அதனை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றிய சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்கள், குடும்ப தலைவிகள், வேலையில் இருக்கும் பெண்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள்.  கடந்த கொரோனா காலத்தில் நிறைய நபர்களுக்கு வேலையிழப்பு நேர்ந்தது. வேலை இல்லாத நபர்கள் என்ன செய்வதென்று அறியாமல் இருந்தனர். தற்பொழுது நம் தண்ணீர் மற்றும் நீர்நிலைகளை நாசமாக்கி கொண்டிருந்த ஆகாய தாமரையின் மூலம் பயன்பெறும் வகையில்  மக்களுக்...

ஆளுநருடன் ஓபிஎஸ்,இபிஎஸ் நாளை சந்திப்பு.!

Image
ஆளுநர் பன்வாரிலாலை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி துணைத்தலைவர் ஓ.பன்னிர்செல்வம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 11:30 மணிக்கு சந்திக்கின்றனர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை- சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Image
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை நீதிமன்ற அனுமதியுடன் தான் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது தமிழ் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்   பேச்சு