Posts

Showing posts from April, 2024

பெற்றோர்களை தாக்குவது பெரும்பாவம் இனியாவது தாய் தந்தையை போற்றுகின்ற நிலையை உருவாக்குவோம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேதனை

Image
பெற்றோர்களை தாக்குவது பெரும்பாவம் இனியாவது தாய் தந்தையை போற்றுகின்ற நிலையை உருவாக்குவோம். இல்லையேல் முதுமையில் நாமும் படாதபாடு படுவோம் என்பது உறுதி சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேதனை       உலகிலேயே பெற்றோரையும் முதியோரையும் போற்றிப் பாதுகாத்த மனிதநேய பண்பின் புகலிடமாக விளங்கிய தமிழ்நாட்டில் தற்பொழுது அது முற்றிலும் சீர்குலைந்து நம்மை உலகிற்கு அறிமுகம் செய்த தாய் தந்தையரை சொத்துக்காகவும் பொருளுக்காகவும் தொடர்ந்து பலர் வீட்டை விட்டு துரத்துவதும், அடித்து உதைத்து தாக்கப்படுவதும் கொலை செய்வதுமான சம்பவங்கள்   அடிக்கடி இரக்கமற்ற முறையில் அரங்கேறி வருவது மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் சொத்துக்காக மகன் தனது தந்தையை அடித்து உதைக்கும் காட்சியும், தேனி மாவட்டத்தில் தனது சித்தப்பாவை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் சம்பவமும் மயிலாடுதுறை மணல்மேட்டில் தனது தாயை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவமும் மனதை மிகவும் உருக்குகிறது. நாகரிகமும் பண்பாடும் வளர்ந்த பிறகும் கூட மனிதத் தன்மையை இழந்து நாம் நிற்கின்றோம் என்பதையே இது காட்டுகின்றது....

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L.வெங்கட்டராமன் மே தின வாழ்த்து

Image
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L.வெங்கட்டராமன் மே தின வாழ்த்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி ஏற்படுவதற்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மே தினம் என்று கொண்டாடப்பட க்கூடிய இந்த தொழிலாளர்கள் தினத்திற்கும் , புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் ஒரு சிறப்பான தொடர்பு உண்டு. எங்கள் கட்சி பின்பற்றுகின்ற தலைவர்களில் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வெற்றிக்கண்ட மாவீரன் மரியாதைக்குரிய திரு. சிங்காரவேலன் அவர்கள் வழி நடப்பதை பெருமையாக கருதுகிறோம். அவர்தான் , உலகில் ரஷ்யா , சீனா ஆகிய நாடுகளில் கொண்டாடி வந்த மே தினத்தை ஆசிய கன்டத்திலும் கொண்டாட வலியுறுத்தி போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டவர் திரு சிங்காரவேலர் அவர்கள். அதனால் தான் இன்று தொழிலாளர்கள் அனைவரும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெற்று மே ஒன்று தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் மே ஒன்று தொழிலாளர் தினத்தில் புதுவைக்கு ஒரு தனி சிறப்பு உண...

பண்ணாரி அருகே,வெப்பம் தணிக்க. சாலையோரம் குடிநீரை தேடும் காட்டுயானைகள்.. ஆபத்தை உணரா, செல்போனில் படம்பிடிக்கும் வாகன ஓட்டிகள். வனப்பகுதிக்குள் நீரை சேமிக்க, அரசுக்கு கோரிக்கை.

Image
 ஈரோடுமாவட்டம்,சத்தியமங்கலம் புலி கள் காப்பக பகுதியில்,10 வனச் சரகங் கள் உள்ளன.இதில்ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை கரடி, புலி, புள்ளிமான் மற்றும் சிறுத்தை உள்ளி ட்ட வனவிலங்குகள் உள்ளன.காட்டு யானைகள் உணவுக்காகவும் குடி நீரு க்காகவும்வனத்தைவிட்டு,வெளியேறி விவசாய விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்வதும், குடிநீர் குழாய்களை உடைத்து, குடிநீர் பருகு வதும்  வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் இன்று மாலை 5 மணி அள வில்,சத்தியமங்கலம் மைசூர் தேசியநெடுஞ்சாலையில்,பண்ணாரிகோவில் அருகே,இரண்டு காட்டு யானை கள் உணவு மற்றும் குடிநீர் தேடி சாலை ஓரத்தில் உலா வந்த போது, ஆபத்து உணராத வாகன ஓட் டிகள்,காரில் மற்றும் இருசக்கர வாக னத்தில் இருந்து படியே, செல்போனி ல் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். மேலும் சாலையின் மறுபுறம் பாலத் தின் அருகே, கசிவுநீர் குட்டைக்கு குடிநீர் தேடி கூட்டமாய் வந்த புள்ளி மான்கள் கூட்டம் ஏமாற்றத்துடன் திரு ம்பின.தற்போது கோடை வெப்பம் அதிக ரித்து வரும் நிலையில் ,வனப் பகுதிக்குள் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் கசிவு நீர் குட்டைகளில், வன விலங்குகளுக்கு தேவையான, நீரை சேமித்து வ...

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் புகார் மனு

Image
கோவையில் தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை விரைந்து கண்டுபிடிக்க கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் மனு வழங்கினார்.. கோவை செல்வபுரம் அருள் கார்டனைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் அதே பகுதியில் தங்க நகை தொழில் செய்து வருகின்றனர்.. இருவரும் கோவையிலிருந்து விழுப்புரத்திற்கு தங்க நகைகளை எடுத்து சென்று அங்கு உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் தங்க நகைகளோடு செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் சென்று கொண்டுள்ள போது, பொழுது மர்ம நபர்கள் அரிவாளால் இருவரையும் தாக்கி, 470 கிராம் தங்க நகைகளை பறித்து சென்றனர்..சுமார் 25 இலட்சம் மதிப்புடைய தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற இச் சம்பவம் தங்க நகை தொழிலாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடிபட்ட குற்றாவளிகளை விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பாக மாநகர காவல் ஆணையரிடத்த...

கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை

Image
கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை  கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குளிக்க செல்லும் பொழுது நீர்சூழல் (அ) சேறுகளின் புதைக்குழிகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 10 அடி ஆழத்திற்கு மேல் உள்ள குளம் மற்றும் குட்டைகளில் எச்சரிக்கை பலகை அமைத்திட பொதுப்பணித்துறை/நீர்வள ஆதாரத்துறை/கிராம பஞ்சாயத்துக்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் குளிக்கவோ. மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்குக்காகவோ செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் குமார் பாடி தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாட்டம்

Image
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக   தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 24/04/2024 புதன் கிழமை அன்று புதுச்சேரி வெங்கட்டா நகரில் அமைந்துள்ள தமிழ் சங்கத்தில்  கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துக் கொண்ட அனைவரையும்  புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட்டராமன் வரவேற்றுப் பேசினார். கழகத்தின் மாநில தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். விழாவில் கலைமாமணி முனைவர் V.முத்து அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் எ. மு.ராஜன் அவர்கள் மாணவர்களுக்கான கட்டுரை போட்டியும் , பேச்சுப்போட்டியும் சிறப்பாக நடத்தி அதற்கு  ஆண்டாள் , கோமதி, ராதாகிருஷ்ணன், சப்தன், தீபா ஆகியோரை பேச்சு போட்டி , மற்றும் கட்டுரை  போட்டியில் கலந்து கொண்டவர்களின் நீதிபதிகளாக முன்னிறுத்தி வெற்றிப் பெற்றவர்களை தேர்ந்தெடுத்து வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் கோ . அ. ஜெகநாதன் அவர்கள் , மாநில செயலாளர் பரந்தாமன், இணை செயலாளர் ஆண்டாள், மீனவர் அ...

கிராமப்புற மாணவர்களுக்கும் ராணுவப்பயிற்சி அவசியம்... விமானப்படையில் முன்னாள் குரூப் கேப்டன் ஜி எஸ் வொக்ரா பேட்டி

Image
 கிராமப்புற ஊரகப்பகுதியில் உள்ள மாணவர்களும்  ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சிகளை பெற்றுக் கொள்வதும் , கல்வி தரத்தை உலக அளவில் உயர்த்துவது முதல் பணி என விமானப்படையில் இருந்து வந்த குரூப் கேப்டன் ஜி எஸ் வொக்ரா திருப்பூரில் தனியார் பள்ளி இயக்குனராக பொறுப்பேற்றக் கொண்ட பின் பேட்டி அளித்தார். திருப்பூர் ஊத்துக்குளி பகுதியில் உள்ள வேதந்தா அகாடமி சிபிஎஸ்சி பள்ளியின் புதிய இயக்குனராக விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்று வந்த குரூப் கேப்டன் ஜி எஸ் வொக்ரா  பொறுப்பேற்றுக் கொண்டார். விமானப்படையில் குரூப் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்று வந்த இவர் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  பள்ளிகளின் தரத்தை பன்மடங்கு உயரத்திற்கு கொண்டு செல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் இராணுவத்தின் கீழ் உள்ள பள்ளிகளின் ஆலோசகராகவும் , கனடா மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கல்வி தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.  மேலும் ஊத்துக்குளி பகுதியில் உள்ள இந்த பள்ளியை தேர்ந்தெடுத்து பொறுப்பேற்றுக் க...

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொது செயலாளர் வழக்குரைஞர் விஜயகுமார் அறிக்கை

Image
விஜயகுமார் வழக்கறிஞர் மாநில இணை பொதுச் செயலாளர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் விடுக்கும் அறிக்கை.  இன்று தூர்தர்ஷன் அரசு தொலைக்காட்சி லோகோ கலர் காவி கலர் ஆகமத்தியரசு மாற்றியது பாராட்டுக்குரியது இதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ்நாடு விஸ்வஹிந்து பரிசத் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது. இச்செயலைஎதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்ற எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலின் பிஜேபி அரசு வந்ததிலிருந்து திருவள்ளுவரை காவி ஆக்கியது என்று சொன்னது அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு தொலைக்காட்சி லோகோவை காவி கலர் மாற்றியதற்குகண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் ஏனென்றால் மத்திய அரசாங்கம் அரசு சார்பாக தொலைக்காட்சி ஆரம்பிக்கும்போதே 1982ல் இருந்து காவி கலர்களில் தான் சின்னம் இருந்தது அதையை அரசுகள் மாற்றிவிட்டது நமது நாட்டின் பாரம்பரிய நிறம் மன்னர் கால முதல் காவி தான் அந்த காலத்தில் அனைத்து அரசு கட்டிடமும் காவல்துறை கட்டிடமும் மன்னர் கட்டிடமும் நீதிமன்றமும் காவி நிறம் தான் அடித்துள்ளது மக்கள் வீடுகளிலேயே பெரும்பாலும் காவி நிறம்தான் அட...

சூலூரில் ஓட்டு இயந்திரங்களை மாற்றி வைத்து மக்களை குழப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிழக்கு மண்டல பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

Image
கோவை பாராளுமன்ற தேர்தலில் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் பேரூராட்சி உள்ள பூத்துகளில் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை அவர்களின் வெற்றியை தடுப்பதற்காக வாக்கு செலுத்தும் இயந்திரத்தை வரிசைப்படி வைக்காமல் அதாவது 1,2,3 என்ற அகர வரிசைப்படி இல்லாமல் 3,2,1 என்ற வரிசைப்படி வைத்து மக்களை குழப்பி வெற்றியை தடுப்பதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செயல் பட்டு இருந்தனர் இதனை கண்டித்தும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட தொழில் பிரிவு ரவிச்சந்திரன், துணைத் தலைவர் வெள்ளியங்கிரி, பொதுச்செயலாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், பூங்கொடி, ராக்கியப்பன், மகளிர் அணி தலைவி நந்தினி, விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாசிலாமணி, ராஜேந்திரன் , வீராசாமி, இளங்கோவன், மதன்குமார்,மற்றும் 50க்கும் மேற்பட்ட நகர கிளை நிர்வாகிகள் திராளாக கலந்து கொண்டனர்.

பச்சைமலை முருகன் கோயிலில் பெளர்ணமி கிரிவலம்

Image
  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவில் உள்ளது இக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது வழக்கம்.கொரோனா காலத்தில்  தமிழக அரசு பல்வேறு நோய் தொற்று காரணங்களால் பொது மக்கள் ஒன்று கூட தடைகள் விதிக்கப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் தடைகள் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.கொரோனாவிற்கு பிறகு ஐந்தாண்டு காலமாக மலைக்கோவிலின் மேலே மட்டும் பௌர்ணமி கிரிவலம் சுவாமி திருவீதி உலா சென்று கொண்டிருந்தது. தற்பொழுது சித்ரா பௌர்ணமி தினமான இன்று வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கிரிவலப் பாதையில் திருவீதி உலா வந்தது அதை தொடர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பச்சைமலையை சுற்றி பௌர்ணமி கிரிவலம் தொடர்ந்து நடைபெறும்

அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் சான்றோர் மக்கள் கழகத்திலிருந்து விலகல் கமல் நாடார் அறிக்கை

Image
  அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் சான்றோர் மக்கள் கழகத்திலிருந்து விலகல்  கமல் நாடார் அறிக்கை அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் சான்றோர் மக்கள் கழகத்தின்  ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கொங்கு மண்டல பொறுப்பாளராக கமல் நாடார் செயல்பட்டு வந்தார்..சில தவிர்க்க முடியாத காரணங்களால் சுய விருப்பத்தின் படி சங்கம் மற்றும் கழகத்தின் பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்...இதுவரை எனக்கு உறுதுணையாகவும் விசுவாசத்துடனும் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கம்,நிர்வாகிகளுக்கும் சிரம் தாழ்ந்த  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

ஓட்டுக்கு பணம் கொடுக்காததே ஜனநாயகத்தின் முதல் வெற்றி என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு

Image
*ஓட்டுக்கு பணம் கொடுக்காததே ஜனநாயகத்தின் முதல் வெற்றி!*என்று *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!*                       இந்திய திருநாட்டில் பதினெட்டாவது பாராளுமன்றத் தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது என்பது அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பல தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. இதனால் உண்மையான ஜனநாயகம் விற்கப்பட்டு பணநாயகம் மேலோங்கி விட்டதே என்னும் பெருங்கவலை அனேக மக்களிடம் ஆழ்மனதில் பதிந்து எப்பொழுது தான் இதற்கு விடிவுகாலம் பிறக்கும், எப்படி பணம் கொடுப்பதை தடுக்க முடியும், அதிலிருந்து மக்களை மீட்டெடுத்து மீள்வது எப்பொழுது என்று அடுக்கடுக்கான கேள்விகள் இருந்து வந்தன. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில்  99 சதவீதம் பகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இருந்த இனிய நற்செய்தி நம்முடைய காதுகளில் எட்டிய ப...

பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் "வருங்கால ஆசிரியர்கள் ஆசிரியர் மதிப்புகளை வளர்ப்பது" என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

Image
கோவை சரவணம்பட்டியிலுள்ள பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் "வருங்கால ஆசிரியர்கள் ஆசிரியர் மதிப்புகளை வளர்ப்பது" என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைப்பெற்றது. பி.பி.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு, கருத்தரங்கினை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது ஆசிரியர்கள் வகுப்பில் மாணவர்களுக்குத் தேவையான மதிப்புகளை கூறி மதிப்பு கல்வியின் அவசியத்தையும் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லூரி மேனாள் முதல்வர் மற்றும் தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துரையில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICSSR)-ன் முதுநிலை ஆய்வாளராக உள்ள முனைவர்.எஸ்.ராஜகுரு. சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது அவர்கள் வாழ்க்கையில் குறிக்கோள்களை தெளிவாக முடிவெடுத்தல் தன் சுயமரியாதை, மற்றும் உறுதி தன்மையை கைவிடாமல் தனித்தன்மையுடன் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பி.பி.ஜி கல்வி நிறுவனங்களின் துணை...

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி 16வது ஆண்டு விழா

Image
கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி 16வது ஆண்டு  விழா  கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது ஆண்டு பிபிஜி தொழிட்நுட்பக் கல்லூரி அரங்கத்தில் இனிதே நடைபெற்றது.  பி பி ஜி கல்வி குழுமத்தின் தலைவர் மரியாதைக்குரிய மருத்துவர் L.P. தங்கவேலு அவர்கள் ,  பி பி ஜி கல்வி குழுமத்தின் தாளாளர் திருமதி சாந்தி தங்கவேலு  அவர்கள் மற்றும் பி பி ஜி கல்வி குழுமத்தின் துணை தலைவர் திரு அக்ஷய் தங்கவேல்  ஆகியோர்  முன்னிலை வகித்தனர். காலை 10 மணியளவில் தமிழ் தாய் வாழ்த்து பாடி இனிதே விழா துவங்கியது . கல்லூரி முதல்வர் முனைவர் நந்தகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் பின்பு ஆண்டு அறிக்கை வாசித்தார். மரியாதைக்குரிய சிறப்பு விருந்தினர் பி பி ஜி கல்வி குழுமத்தின் தலைவர் மருத்துவர் L.P. தங்கவேலு அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பி பி ஜி கல்வி குழுமத்தின் துணை தலைவர் திரு அக்ஷய் தங்கவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு போட்டியில் வெற்றி அடைந்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பெற்றன. மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர்  சு...

நீலகிரி எம்.பி. தொகுதிகுட்பட்ட, பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில், அதிகப்படியான வாக்குப்பதிவு. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்ததால் வாக்குபதிவு சதவீதம் உயர்வு..

Image
இந்திய நாட்டின் 18 வது மக்களவைக் கான முதற் கட்ட வாக்குப்பதிவு, தமிழ கம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதி உள்ளடக்கி,,102மக்களவைத் தொகுதி களுக்கான, வாக்கு பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் பவானிசாகர் (தனி) மேட்டுப்பாளை யம்,உதகமண்டலம்,  குன்னூர், கூட லூர் (தனி), மேட்டுப்பாளையம்,அவி நாசி(தனி)6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய,நீலகிரி நாடாளு மன்ற தொகுதியில், 6,87,552 ஆண் வாக்கா ளர்களும்,7,40,742 பெண் வாக்காளர் களும்,மற்றவர்கள் 93 பேரும் என மொத்தமாக 14,28,387 வாக்காளர்கள் உள்ளனர்.இதில், நேற்று நடந்த வாக் குப் பதிவில், 6 சட்டமன்ற தொகுதியி லும், 4.90,186ஆண் வாக்காளர்களும், 5,08,113பெண்வாக்காளர்களும்,மற்றவர்கள் 35 பேரும் என மொத்தமாக, 9,98,334 வாக்காளர்கள் வாக்களித்த தில்,நீலகிரி நாடாளுமன்ற தொகுதி யின் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 69.89 சதவீத மானது. . நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட,ஆறு சட்டமன்ற தொகுதிகளில், அதிகப்படியான வாக்காளர் களை கொண்ட 3-வது பெரிய சட்டமன்ற தொகுதியான, பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில், 1,26,180 ஆண் வாக்காளர்களும், 1, 34.183 பெண் ...

வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கம் - தூத்துக்குடி - சென்ட்ரல் இடையே முன்பதிவற்ற ரயில் : இன்று (ஏப்.20) இயக்கப்படுகிறது!

Image
 வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக  சிறப்பு ரயில் இயக்கம் - தூத்துக்குடி - சென்ட்ரல் இடையே முன்பதிவற்ற ரயில் : இன்று (ஏப்.20) இயக்கப்படுகிறது! வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக  தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் இடையே சாதாரண பொதுப் பெட்டிகளுடன் இன்று (ஏப்.20) சனிக்கிழமை மாலை 04:30 மணிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படுகிறது.  தூத்துக்குடி மாநகர பொதுமக்கள் இந்தச் சிறப்பு ரயிலை அதிக அளவில் பயன்படுத்த வேண்டுகிறோம் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

நீலகிரி தொகுதி, பவானிசாகர் சட்ட மன்ற தொகுதியில், 3 மணி நிலவரப்படி, 58% வாக்குப்பதிவு. புதியஇளம் வாக்காளர்கள் மற்றும் மூத்தகுடிமக்கள் வாக்களிப்பதில் ஆர்வம்.

Image
 இந்திய நாட்டின் பதினெட்டாவது மக் களவைக்கான,பொதுத்தேர்தல்,இன்று முதற் கட்டமாக,தமிழகம், புதுச்சேரி உட்பட, 21 மாநிலங்களில் 102 மக்கள வைத் தொகுதிக்கான,பொதுத்  தேர் தல்இன்றுகாலை முதல்துவங்கி நடை பெற்று வருகிறது.இதன் ஒரு பகுதி யாக, நீலகிரி நாடாளுமன்ற தொகுதி க்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில்,மாலை 3 மணி நிலவரப் படி 58 சதவீத வாக்குகள் பதிவாகியுள் ளன.இன்று நடைபெற்ற பொதுத் தேர் தலில்,குறிப்பாக,சத்தியமங்கலம்பவா னிசாகர்பகுதிகளில்,புதிய இளம்வாக் காளர் மற்றும் மூத்த குடிமக்கள்வாக்க ளிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.  மேலும் வெயிலின் தாக்கம் மிக அதிக மாக உள்ள சூழலில் கூட, வாக்காளர் கள், தங்கள் ஜனநாயக கடமையாற்ற, நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து, தங்கள் வாக்குகளை செலுத்தினர். மேலும் புதிய வாக்காளர்கள்தங்கள் வயதுடையஅனைவரும் வாக்களித்து 100% இலக்கை அடைய ஒத்துழைக்க கேட்டுக் கொண்டனர். ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு இய ந்திரத்தில்ஏற்பட்ட பழுது காரணமாக சிறிது நேரம் வாக்குப்பதிவு தடை பட் டாலும்தொடர்ந்துவாக்குப்பதிவுசீராக நடைபெற்று வருகிறது இதனை பவா னிசாகர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல்...

பூத் சிலிப்பை மட்டும் வைத்துவாக்களிக்க முடியாது" - தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தகவல்

Image
 "பூத் சிலிப்பை மட்டும் வைத்துவாக்களிக்க முடியாது" - தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தகவல் வாக்காளர்கள் பூத் சிலிப்பினை மட்டும் வைத்து வாக்களிக்க இயலாது, வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 மாற்று ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் /  மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 நாளன்று பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு 19.04.2024 அன்று காலை 7 மணிக்கு தொடங்கு மாலை 6 மணி வரை நடைபெறும்.  தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளில், 2,10,578 வாக்காளர்களும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளில் 2,82,026 வாக்காளர்களும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளில் 2,41,620 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 265...

நீலகிரி நாடாளு மன்றதொகுதி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டும் செல்லும் பணி துவங்கியது. தமிழக,கர்நாடக, ஆந்திரா, குஜராத்.கேரள மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Image
 இந்திய  திருநாட்டின் 18- வது மக்களவை க்கான,தேர்தல் ஏப்ரல்19 ம் தேதி (நாளை)   முதற் கட்டமாக துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டமாக, இந்திய நாடு முழுவ தும் நடைபெற உள்ளது.முதற்கட்டமாக துவங்கும் தமிழக நாடாளுமன்றத் தேர்த லுக்கான பிரச்சாரங்கள் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்து, நாளை 19ஆம் தேதி வாக்குப்பதிவு துவங்க உள்ளது.நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பவானி சாகர் சட்டமன்ற தொகுதியில், 295 வாக்கு சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை சத்தியமங் கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில், 24 மணி நேரமும்,ஆயுதம் தாங்கிய  போலீஸ் கண்காணிப்பில், சீல் வைக்கப்பட்ட அறை யில் இருந்து (Strong room) எடுக்கப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரங்கள், பவானி சாகர் சட்டமன்ற தொகுதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் தலைமை யில்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வட்டாட்சியர் மாரிமுத்து மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் ,அரசியல் கட்சி பிரமு கர்கள் முன்னிலையில்,மண்டல வாரி யாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக் குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது. பவான...

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து, இறுதிக்கட்ட பிரச்சாரம். சத்தியில், அதிமுகவினர், பேரணியாக சென்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு.

Image
 தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதற் கட்டமாக, நாடாளு மன்ற பொதுத் தேர்தல் நடை பெறுவதை யொட்டி, இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிற நிலையில், நீலகிரி  நாடாளு மன்ற தொகுதி, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரிக்க, சத்தியமங்கலம் எஸ் .ஆர். டி. கார்னர் பகுதியில் இருந்து ஏராளமான அதிமுகவினர்,பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அ . பண்ணாரி பி.ஏ. எம்.எல்.ஏ. தலைமையில், ஆயிரத் திற்கும்மேற்பட்டோர்,பேரணியாக,சத்திய மங்கலம் நகரின் முக்கிய வீதிகள் வழி யாக கோட்டுவீராம்பாளையம் வரை சென்று, இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த பேரணியில், அதிமுக மாவட்ட, ஒன் றிய, ,நகர, கிளைக் கழக நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள், அதிமுக சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி யினர்,இளைஞர்,இளம்பெண்கள்பாசறை னர் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி யினர் அதிமுக தொண்டர்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டு, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தனர்.

மத நல்லிணக்கம், சகோதரத்துவம் நிலவ,மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை. பல் சமயநல்லுறவு இயக்க மாநில தலைவர்முஹம்மது ரஃபிக் பேச்சு.

Image
 ஈரோடு மாவட்டம், பல்சமயநல்லுறவஇய க்கத்தின் சார்பில்,சத்திய மங்கலத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து இறுதிக் கட்ட தீவிர தேர்தல் பிரச்சார கூட்டம், மாவ ட்ட ஒருங்கிணைப்பாளர் ஜமேஷ் தலை மையில்,மாவட்டத் தலைவர் ஆசிப், கௌ ரவத் தலைவர் ஐயா கவிமணி மற்றும் மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் சேவியர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத் தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பல் சமய நல்லுறவு இயக்கத் தின் மாநில தலைவர் முகம்மதுரஃபிக் பேசுகையில்,  இயக்கத்தின் சார்பில், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், மாநில முழுவதும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து, தீவிர பிரச்சாரம் செய்து வருகிறோம்.செல்லும் இடங்களில் எல் லாம்,மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தவறான திட்டங்கள் குறித்து விளக்கி பரப்புரை மேற்க் கொள்கையில், மக்கள் மிகுந்த ஆதரவு தெரிவிக்கிறார் கள்.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி 40 இடங் களிலும்வெற்றி பெறும் எனவும்,பாரதிய ஜனதா கட்சியின் பொது சிவில் சட்டம் குறித்து பேசும்போது,பாரதிய ஜனதா கட்சி இதற்கு முன்னர் முத்தலாக் போன்ற பல்வேறு சட்ட...

தூத்துக்குடி : ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் - ஒருவர் கைது.!

Image
 தூத்துக்குடி : ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் - ஒருவர் கைது.! தூத்துக்குடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் தாளமுத்து நகர் பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ய்பபட்டுள்ளது. இதனை சட்ட விரோதமாக லாரி மூலம் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து தூத்துக்குடியில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.  இதையடுத்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாளமுத்து நகர் கிழக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த முத்து மகன் சங்கர் (28) என்பவரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் டிஎம்பி காலனியைச் சேர்ந்த செல்வம் என்பவரை தேடி வருகின்றனர். 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார். தூத்துக்குடியில் 16 கிலோ க...

திருப்பூர் ஆசிரியை மகள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி...தேசிய அளவில் 250 வது ரேங்க் பெற்றார்

Image
திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த தாரணி என்ற பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் 250 வது ரேங்க் பெற்று இருக்கிறார்.  திருப்பூர் லிட்டில் பிளவர் பள்ளியில் பள்ளிப்படிப்பும், மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் பல் மருத்துவம் படித்து இருக்கிறார். இவரது தந்தை முருகானந்தம்  திருப்பூரில் துணிக்கடை வைத்து இருக்கிறார். தாயார் சோழன்மாதேவி திருப்பூர் இடுவம்பாளையம் பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார். பல் மருத்துவம் முடித்த தாரணி 4 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். 4 முறை தேர்வு எழுதிய நிலையில் இரண்டு முறை முதல் நிலைத்தேர்விலும், மூன்றாவது முறை நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற்ற நிலையில், நான்காவது முறையாக முயன்று ஐ.ஏ.எஸ்.,ஐ தன் வசமாக்கியுள்ளார். இதுகுறித்து ஐ.ஏ.எஸ்., வென்ற தாரணி கூறுகையில்,’ கோச்சிங் எதுவும் செல்லவில்லை. வழிகாட்டுதல்கள் மட்டும் பெற்றேன். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. அர்ப்பணிப்புடன் உழைத்தால் ஐ.ஏ.எஸ்., வெற்றி சாத்தியம் என்றார். 

தூத்துக்குடி : பாஜகவினர் 100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.!-

Image
 தூத்துக்குடி : பாஜகவினர் 100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.!-  பாஜகவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவினர் சுமார்  100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் நேற்று திமுகவில் இனைந்தனர் .! தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி செயலாளர் பானுப்பிரியா, விவசாய அணி மண்டலத் தலைவர் சரவணகுமார் தலைமையில் சுமார் 100 பேர் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் INDIA கூட்டணி தலைமை தேர்தல் காரியாலயத்தில் அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து திமுகவில் இணைந்தனர்.  இது குறித்து அவர்கள் கூறுகையில்:- சமீப காலமாக கட்சியின் செயல்பாடு திருப்தி அளிக்காததால் அதிலிருந்து விலகி திமுகவில் இணைந்ததாக தெரிவித்தனர். திமுகவில் இணைந்த இவர்கள் இன்னும் சில முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திமுகவில் இணைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக வடக்கு மாவட்ட தலைமை அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தன்டணை : ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை

Image
 தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தன்டணை : ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை! தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தலை நியாயமான/ அமைதியான முறையில் நடத்திடும் வகையில் தேர்தல் தொடர்பான கட்டுப்பாடுகளை அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் /  மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 7.00 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய 48 மணி நேரமான 17.04.2024 புதன்கிழமை அன்று மாலை 6.00 மணிமுதல் 19.04.2024 வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடியும்வரை  வேட்பாளர்கள் / அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பதற்காக தேர்தல் பிரச்சாரம்/ ஊர்வலம் / பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், சினிமா / தொலைக்காட்சி அல்லது வேறு மின்னணு கருவிகள் வாயிலாக தேர்தல் தொடர்பான காட்சிகள் வெளியிடுவதற்கும், தேர்தல் பரப்புரை செய்வதற்காக இசை கச்சேரிகள்  /  நாடகங்கள் நடத்...

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.36 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!!

Image
 ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.36 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!! தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.36கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.36கோடியே 13 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஆறுமுகநேரி பாரதிநகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமாரேசன்(46) என்பவரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி பாலகுமாரேசனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்  ஆய்வாளர் அந்தோணியம்மாள் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைத்தார்

முதல்வர் ரங்கசாமிக்கு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கேள்வி ?

Image
புதுவையில் செல்வாக்கு மிக்க ரங்கசாமி மோடியிடம் மண்டியிடுவது ஏன்? பெஸ்ட் புதுச்சேரி வாக்குறுதி என்னாச்சி? புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கேள்வி ? புதுச்சேரியில் மக்கள் செல்வாக்கு உள்ளவர் நண்பர் ரங்கசாமி அவர்கள். புதுவையில் NR காங்கிரஸ் ஒரு வலிமையான கட்சி. அதனால் தான் பிரதமர் மோடி அவர்கள் ரங்கசாமியின்  மூலம் புதுவையில் பிஜேபி கால் பதிக்க நினைத்து NR  உடன் கூட்டணியை ஏற்படுத்தினார். ரங்கசாமியும் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி  ஆட்சி செய்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கும் , பெஸ்ட் புதுச்சேரி யாக மாற்றுவதற்காகத்தான் பிஜேபி யுடன் கூட்டணி அமைத்துள்ளேன் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். இதுவரைக்கும் நடந்தது சரி. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் NR காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர்களும் ,தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் மத்திய அரசு NR  என்கிற புலியை முதல்வர் என்கிற புலி கூண்டில் அடைத்து விட்டு , மத்திய அரசு, ரங்கசாமியை தலையாட்டி பொ...

சீர்காழியில் நகர திமுகவினருடன் மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணியினர் வாக்கு சேகரிப்பு

Image
*சீர்காழியில் நகர திமுகவினருடன் மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணியினர் வாக்கு சேகரிப்பு!*   மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர். சுதா அவர்களுக்கு கைச்சின்னத்தில் வாக்குகள் கோரி சீர்காழி நகரத்தில் 15 ஆவது வார்டு பகுதிகளில் உள்ள கீழத்தெரு, அய்யனார்கோவில் தெரு மற்றும் பல்வேறு தெருக்களில் நகரக் கழக செயலாளர் சுப்புராயன் தலைமையில் வார்டு கழக செயலாளர் பந்தல்முத்து, பிரதிநிதி கண்ணன், குமார், திருச்செல்வம், நகர்மன்ற உறுப்பினர் வள்ளிமுத்து ஆகியோர் முன்னிலையில் விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளரும் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரருமான ஜெகவீரபாண்டியன், மயிலாடுதுறை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் குத்தாலம் இரா. மனோகரன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செல்வ முத்துக்குமார், திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, சீர்காழி நகர திமுக பொருளாளர் கோடங்குடி சி. சங்கர் உள்ளிட்டோர் மற்றும் கழக முன்னணியினர் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் மகளிர் அணியைச் சார்ந்தவர்கள் பெருந்திரளாக பங்கேற்று வீடு வீடாக தமிழ்நாடு முதலமைச்சரின் நலத்திட்டங்க...

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Image
 பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சார்ந்த நான்கு பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பருத்திக்கொட்டை, புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இவரது சகோதரர் மோகன்ராஜ் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க. கிளை தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி இரவு மோகன்ராஜ் படுகொலை செய்யப்பட்டார்.  நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சோனை முத்தையா ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார் மற்றும் மோகன்ராஜை வெட்டி கொலை செய்தனர்.  மேலும், அதனை தடுக்க முயன்ற மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி மற்றும் சகோதரி ரத்தினாம்பாள் ஆகியோரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். ஒரே குடும...

"தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்" நூல் வெளியீட்டு விழா... சைவ சித்தாந்தக் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர் முருகானந்தம் பங்கேற்பு

Image
 மக்களிடம் எதிர்மறை எண்ணத்தைக் களைந்து, சிந்தித்து செயல்படும் நேர்மறை எண்ணத்தை வளர்த்தவர்கள் நம் முன்னோர்கள்" என்று சைவ சித்தாந்தக் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர் முருகானந்தம் பேசினார்.  திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை சார்பாக "தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்" எனும் நூல் வெளியீட்டு விழா, இன்று அலகுமலை, அருள்மிகு முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பணிக் குழுத் தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் பொருளாளர் சரவண சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். தொழிலதிபர் கந்தசாமி, அறக்கட்டளையின் அமைப்பாளர் கொங்கு ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூலவர் முன்பு வைத்து பூஜிக்கப்பட்ட புத்தகங்களை சின்னுக்கவுண்டர் வெளியிட, வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் ஆடிட்டர் விட்டல்ராஜன், மென்பொருள் உற்பத்தி நிறுவன உரிமையாளர் சரவணபிரசாத், வளம் ரவி, ராதிகா முரளி, சக்தீஸ்வரன், சுப்பிரமணியன், லட்சுமிபிரியா, திலீப்குமார், விக்னேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.   விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சைவ சித்தாந்தக் கழகத்தின...

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார்*

Image
 ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐய்யனாரை தரிசித்துச் சென்றனர் அதைத்தொடர்ந்து ஸ்ரீ ஐய்யனாருக்கு அபிஷேகம் செய்த பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை கோயில் தர்மகர்த்தா லோகு அவர்கள் செய்திருந்தார்.

அதிமுக ஆட்சியில் நமது அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டனா்,தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Image
 அதிமுக ஆட்சியில் நமது அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டனா்,தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு அதிமுக ஆட்சியில் நமது மொழி உரிமை, நிதி உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டனா். அதனால்தான் இந்த பிரசாரத்துக்கு மாநில உரிமை மீட்பு பிரசாரம் என தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.  தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது : இந்திய ஒன்றியத்தில் ஆதிக்கவாதிகளை அகற்றுவதற்கான பிரச்சாரத்தை கடந்த 23- ஆம் தேதி தொடங்கிய நிலையில், நூறாவது பிரச்சாரக் கூட்டமாக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக துணை பொதுச் செயலாளர் அத்தை கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன்.  தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த மு...

சூலூர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

Image
சூலூர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்  மாவட்ட இணைச் செயலாளர் கணேஷ் தலைமையிலும் வரவேற்புரை  முருகானந்தம் நகர அமைப்பாளர் சிறப்புரை  வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணைப் பொதுச் செயலாளர் இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் கிருஷ்ணன் இணைச் செயலாளர் பிரகாஷ் ஒன்றிய துணைத் தலைவர் கருப்புசாமி தங்கவேல் சூலூர் பூசாரி பேவை பொறுப்பாளர் கார்த்தி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு நடக்க கைபேசி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதென முடிவு செய்யப்பட்டது அனைத்து மக்களும் நேர்மையான முறையில் நல்லவர்களை தேர்ந்தெடுக்க அவசியம் ஓட்டளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது அரசியல் கட்சியினர் மசூதி சர்ச் போன்று பகுதிகளில் உள்ளே சென்று ஓட்டு சேகரிப்பதை வன்மையாக கண்டிப்பதோடு அப்படி ஓட்டு சேகரித்தவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது. என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது

ஆர்எல்வி பேரவைக்கு மாநில மகளிர் அணி அமைப்பாளராக மீனாட்சி கணேஷ் நியமனம் ஆர்எல்வி வெங்கட்டராமன் அறிவிப்பு

Image
ஆர்எல்வி பேரவைக்கு மாநில மகளிர் அணி அமைப்பாளராக மீனாட்சி கணேஷ் நியமனம் சிவகுமாரன் பரிந்துரையின் பேரில்  ஆர்எல்வி வெங்கட்டராமன் அறிவிப்பு புதுச்சேரி ஆர்எல்வி ஜனநாயக பேரவையில் சமீபத்தில் பழைய மாநில  நிர்வாகிகள் கமிட்டியை கலைத்து விட்டு புதிய மாநில அமைப்பாளராக சிவகுமரன் நியமிக்கப்பட்டார். அப்பொழுது தொகுதி வாரியாக தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அணி அமைப்பாளர்கள் விரைவில்   நியமிக்க படுவார்கள் என்று பேரவையின் நிறுவனத்தலைவர் ஆர். எல் வெங்கட்டராமன் தெரிவித்து இருந்தார் அதன் படி  முதலியார் பேட்டை , உப்பளம், உருளையன்பேட்டை ஏம்பலம் ஆகிய நான்கு தொகுதி களுக்கு தொகுதி அமைப்பாளர்கள் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்கள் தற்போது புதுச்சேரி ஆர்எல்வி பேரவைக்கு புதிய மாநில மகளிரணி அமைப்பாளராக மீனாட்சி கணேஷ் அவர்களை நியமிக்க, பேரவையின் மாநில அமைப்பாளர் சிவகுமாரன் பரிந்துரை செய்து இருந்தார். அதன் பேரில் இந்திரா நகர் தொகுதியை சேர்ந்த திருமதி. மீனாட்சிகணேஷ் என்பவரை புதுச்சேரி ஆர்எல்வி பேரவையின் மாநில மகளிரணி அமைப்பாளராக, நிறுவனத் தலைவர் ஆர். எல் வெங்கட்டராமன் அறிவித்தார். மாநில மகளிர் அணி த...

எம்பி ஆன பிறகாவது அனைத்து கிராமத்துக்கும் வாங்க என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேட்பாளர்களுக்கு வேண்டுகோள்

Image
எம்பி ஆன பிறகாவது அனைத்து கிராமத்துக்கும் வாங்க என்று சமூக ஆர்வலர்  அ.அப்பர்சுந்தரம் வேட்பாளர்களுக்கு வேண்டுகோள்  பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகாவது அனைத்து கிராமங்களுக்கும் வாருங்கள் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுவதால் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அனைத்து கிராம பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். குறுகிய கால இடைவெளியில் தேர்தல் நடைபெறுவதால் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் குறைந்தது 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சுமார் 2000 பூத் வாக்குச்சாவடி மையங்களைச் சார்ந்த  குறைந்தது சுமார் 15 லட்சம் வாக்காளர்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நேரமின்மை காரணமாக வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திக்க கிராம ஊராட்சிகளில் உள்ள தெருத் தெருவாக கூட செல்ல முடியாத    நிலை ஏற்பட்டு வேகவேகமாக அவசர அவசரமாக மக்களிடம்  பிரச்சாரம் செய்து கொண்டே பேசுவதற்கு கூட     முடியாமல் கும்பிட...

தூத்துக்குடி : நாளை முதல் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம்: நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம்

Image
 தூத்துக்குடி : நாளை முதல் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம்: நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் ஏப்.22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தீப்பெட்டி பண்டல்கள் கையிருப்பு அதிகமாக உள்ளதால் மூலப் பொருள் வாங்கியோருக்கு பணம் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொழில் மிகவும் நலிவுற்று தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். தற்காலிக தீர்வு காணும் பொருட்டு உற்பத்தி நிறுத்தம் செய்வதென்று உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.