Posts

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை கருத்துக்கள் தொிவிக்கலாம் - மேயா் ஜெகன் பொியசாமி.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் மற்றும் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயங்கி வருகிறது. பேருந்து நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர் பயன்படுத்தி வருகின்றனர்.  இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து அண்ணா பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு மேற்கொண்ட பின்பு ஆணையர் ப்ரியங்கா சென்று விட்டார்.  அதன் பிறகு மேயர் ஜெகன் பொியசாமி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகம் முன்பு காத்திருந்த பொதுமக்களிடம் எந்த ஊர் எங்கே செல்கிறீர்கள் என்று அனைவரது கருத்துக்களை கேட்டுக் கொண்டு அனைவருக்கும் டீ வாங்கி கொடுத்து அவர்களுடன் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு பேருந்து வசதிகள் எப்படி உள்ளது உங்களுக்கு ஏதாவது பேருந்து நிலையத்தில் குறைகள் உள்ளதாஎன்று பயணிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகும் பேருந்து நிலையத்தை...

தூத்துக்குடி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணைந்தனர்..!

Image
தூத்துக்குடி தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்து இரண்டு அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாநில மாவட்ட நிா்வாகிகள் விலகி திமுகவில் இணைந்து வருகின்றனா்  இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிரையண்ட்நகா் பகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 போ் எஸ்.பி ராஜன், சிஎஸ் முரளிதரன், ஏற்பாட்டில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் ராஜா, விக்னேஷ், முருகேசன், உள்பட 50 போ் திமுகவில் இணைந்தனர்.  அனைவரையும் வரவேற்று கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் மாவட்டம் மற்றும் மாநகர பொறுப்பில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளீா்கள். நாம் எல்லோரும் இணைந்து ஓற்றுமையாக பணியாற்றுவோ...

மக்கள் சந்திப்பு : தொடர்ந்து தாமதமாக வரும் அமைச்சர் ஸ்ரீநாத் - மக்களை சந்திப்பதை விட்டுட்டு காக்க வைப்பது தான் தவெக அரசு மேற்கொள்ளும் புதிய மாற்றமா? என மக்கள் கேள்வி.?

Image
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் வாரத்தின் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி தொகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெறுவதை தனது வெற்றிக்கு பிறகு பழக்க வழக்கமாகவே வைத்துள்ளார். இந்த நிலையில் சமீப நாட்களாக நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாகவே  அமைச்சர் ஸ்ரீநாத் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.  இந்நிலையில் இன்று தூத்துக்குடி டூவிபுரத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காலை 8 மணிக்கு மக்கள் குறைகளை கேட்டு மனுக்களை வாங்க இருப்பதாக நேற்று தொகுதி மக்களின் பார்வைக்கு  அறிவிப்பாக வெளியானது.  இதனைத் தொடர்ந்து இன்று காலை 8:00 மணி முதலே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பெண்கள் மற்றும் முதியவர்கள் என ஏராளமானோர் மனு கொடுப்பதற்காகவே வந்திருந்தனர்.  தங்கள் பகுதியில் கழிவு நீர் தேங்கி இருப்பது, குடிநீர் வராதது, உதவித்தொகை வராதது என பல்வேறு கோரிக்கைகளை மு...

தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் போலீசுக்கு போன் செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை.!

Image
  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வந்த நவநீதபிரபு (38) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட , பிரையன்ட் நகர், மூன்றாம் தெருவில் உள்ள தனது வீட்டில், மயக்கவியல் உதவிப் பேராசிரியரான 39 வயது நவனீத பிரபு,  நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது வீட்டில் இருந்து தென்பாகம் காவல் நில ையத்துக்கு தொலைபேசி மூலம் தான் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் அவர் 'வரும் வழியிலேயே இறந்துவிட்டார்' என தெரிவித்தனர். அவரது மனைவி பூர்ணிமாவும் ஒரு மருத்துவர் ஆவார். அவர் தூத்துக்குடியில் உள்ள வஉசி துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். (தற்கொலை எண்ணங்களை வெல்வதற்கான உதவியை மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104, டெலி-மானஸ் 14416, சினேகாவின் தற்கொலை தடுப்பு உதவி எண் 044-2...

தமிழ்நாடு அரசின் ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்தில் 507 பக்க அறிக்கையை பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் இசக்கிராஜா ஓய்வு பெற்ற நீதியரசர் கேஎன் பாட்ஷாவிடம் வழங்கினாா்.

Image
தூத்துக்குடி சென்னை எழும்பூாில் உள்ள சிஎம்டிஏ டவா் 2 வில் உள்ள தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அரசர் கேஎன் பாட்ஷா தலைமையிலான ஆணவக் கொலைகள் தடுப்பு ஆணையத்தில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் நிறுவனர் தலைவர் இசக்கிராஜா தேவர் ஓய்வு பெற்ற நீதியரசர் கேஎன் பாட்ஷாவை நேரில் சந்தித்து பிசி எம்பிசி மக்களின் ஒட்டுமொத்த மன குமுரலை வெளிப்படுத்தும் 470 பக்கங்கள் கொண்ட ஆணவக் கொலைகளுக்கான தனிச்சட்டம் வேண்டாம் என்கிற தலைப்பில் ஒரு வரைவு அறிக்கையையும் ஆணவக் கொலைகளுக்கான சிறப்புச் சட்டம் இயற்றப்படுவதனால் பெண்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் கல்வி போன்றவை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை விளக்கும் 37 பக்க துணை அறிக்கையையும் சமர்ப்பித்தார். தூத்துக்குடி பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றம், இளம் வயது உறவுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பசும்பொன் மக்கள் தேசம் கட்சி சார்பில் பசும்ெபான் மக்கள் ேதசம் கட்சி நிறுவனர் –தலைவர் இசக்கி ராஜாேதவர் பாட்ஷா ஆணையத்திடம் வழங்கிய துணை அறிக்கையில் கூறியிருப்பதாவது  பெண்களின் உயிர் பாதுகாப்பு என்பது ஒரு சமூகத்தின் நாகரிகத்தின் அளவுகோல். பெண்களின் கல்வி, பொர...

வல்லநாட்டில் நீா் வரத்து குறைவாக இருந்தாலும் மக்களுக்கு நிறைவாக குடிதண்ணீா் வழங்குகிறோம் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

Image
  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் சுப்பையா பூங்கா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வருகின்ற நீாின் அளவையும் வௌியேற்றும் நீரின் அளவையும் பாா்வையிட்ட பின் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில்  வல்லநாடு ஆற்றுபடுகையில் நான்கு உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அதில் பம்பிங் செய்யப்பட்டு அதன் பிறகு சுத்தரிக்கப்பட்டு 60 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மாநகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் மாநகராட்சிக்கு குடிநீர் வந்து கொண்டிருந்த இரண்டாவது மூன்றாவது பைப் லைன் மற்றும் உறைக்கிணறு. பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்டவைகள் சேதமடைந்தது. அதனை சரி செய்ய வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமி அப்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு எவ்வளவு வெள்ளம் வந்தாலும் பாதிக்காத வகையில் உயரமான வகை...

தவெக விஜய் ரீல்ஸ் ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டும் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேச்சு.

Image
  தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற போல்பேட்டை பகுதி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதி செயலாளர் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய கழக பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசுகையில்  தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா காலக்கட்டம் அதற்கு முன்பு இருந்து எடப்பாடி எல்லா தொழிலையும் முடக்கி போட்டது மட்டுமின்றி எல்லோரையும் முடங்கி கிடக்க செய்தாா். எவ்வளவு மக்கள் சிரமப்பட்டாா்கள் என்று அதை புாிந்து கொண்டு தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக வௌிமாநிலங்களிலிருந்து இரயில் மூலம் ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு மீளவிட்டானிலிருந்து லாாி மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மக்களை பாதுகாத்தது மட்டுமின்றி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களை கவச உடையணிந்து நோில் சென்று பாா்த்து ஆறுதல் கூறிய ஓரே முதலமைச்சா் இந்தியாவில் தளபதியார் மட்டும்தான் பின்னா் படிப்படியாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு விதிவிலக்குகள் தளர்த்...