Posts

Showing posts from March, 2022

தூத்துக்குடியில் ஆப்ரேஷன் 2.0 - 26 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை.!

Image
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 26 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது  - பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன்  அனைத்து  உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இன்று காலை தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் போலீசார் அய்யனார்புரம் சோதனைசாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது,  அங்கு வந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபம், நெடிய விலை பகுதியை சேர்ந்த ராஜாமணி மகன் 1) துளசி (40), கன்னியாகுமரி  இந்திராநகர், அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த ஜேசு ...

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை மற்றும் அங்கன்வாடி மையம் - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.!

Image
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தூத்துக்குடி மாநகராட்சி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 6வது வார்டு கோயில்பிள்ளை விளை தெருவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறப்பு விழா இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலை வகித்தனர்  நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் மேலும் அமைச்சர் கீதாஜீவன் பள்ளி மாணவ மாணவிகளிடம் பேசுகையில்  தமிழகத்தில் கலைஞர்  முதல்வராக இருந்தபோதுதான் அரசு பள்ளிகள் எல்லாம் தரம் உயர்த்தப்பட்டது. தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு தர தயாராக இருக்கிறது.  அதனடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி...

பட்டையைக் கிளப்பும் சூலூர் பேரூராட்சி

Image
சூலூர் பேரூராட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக 50 தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு 2வது வார்டில் தூய்மைப்பணி  ஜரூராகத் தொடங்கியது, சாக்கடைகளை சுத்தம் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல்,  அதன் ஓரத்தில் அள்ளிப்போட்ட கழிவுகளை உடனுக்குடனே அப்புறப்படுத்தி, சாக்கடையின் ஓரங்களில் வளர்ந்திருக்கும் தேவையற்ற செடிகளையும்  வேரோடு புடுங்கி சுத்தப்படுத்துவதால், கொசுத்தொல்லையிலிருந்தும், விஷப்பூச்சிகளிடமிருந்தும் பெருமளவில் பொதுமக்களின் சுகாதாரத்தை முழு அளவில் பேண முடியும் என பேரூராட்சியின் 2வது வார்டு கவுன்சிலர் சூ பெ கருணாநிதி தெரிவித்தார்  மேலும் சாக்கடையில் குப்பைகள், தேவையற்ற பாட்டில்கள், பாலிதீன் பைகளோடு மீந்த உணவுப்பண்டங்கள் மற்றும் அழுகிப்போன காய்கறிகளை தயவு செய்து சாக்கடையில் வீசாமல் அதன் அருகில் வைத்திருக்கும் குப்பைக் டேங்குகளில் கொட்டுங்கள் என்று பொதுமக்களிடமும் சில கோரிக்கைகளை பேரன்போடு முன் வைத்தார் சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவிமன்னவன் கூறுகையில் முக்கிய சாலைகளில் மட்டும்,சுத்தம் செய்யும் பணிகளைச் செய்யவில்லை விளம்பரங்களுக்காக, என்னைப் பின்தொடருங்கள் என்று ஒவ்வொரு சந்தாக, வி...

பெட்ரோல் - டீசல் ,எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

Image
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல் - டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  அதன்படி தூத்துக்குடி தனசேகர் நகரில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில அமைப்பு செயலாளர் பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் சமையல் எரிவாயு சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.  இதில் காங்கிரஸ் மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாவட்ட செயலாளர் இக்னேஷியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, வடக்கு மாவட்ட பொது செயலாளர் பெத்துராஜ், கிழக்கு மண்டல துணை தலைவர் நேரு, இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பி சங்கர், மற்றும் நிர்வாகிகள் வீரன், சுரேஷ் குமார், காஸ்தூரி, ஜெய மணி, வாசிராஜன், அந்தோணி குரூஸ், ரூஸ்வெல்ட், காசிராஜன், பாலமுருகன், கதிர்வேல் கார்த்திக், கன்னியம்மாள், தங்கம்,...

11-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

Image
ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவு

தூத்துக்குடியில் திருநங்கைகள் விழிப்புணர்வு தின விழா - திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அடையாள அட்டையை அமைச்சர்கள் வழங்கினர்.!*

Image
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் விழிப்புணர்வு தின விழாவில்  சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும், நலத்திட்ட உதவிகளையும் இன்று வழங்கினார்கள்.  மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தொடர்ந்து விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கலைஞர் மூன்றாம் பாலினத்தவர்களை சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை திருநங்கைகள் என்று அழைத்ததோடு திருநங்கைகள் நல வாரியத்தினை ஏற்படுத்தி ஏப்ரல் 15ம் தேதி அன்று திருநங்கைகள் தினம் என அறிவித்ததோடு செயல்படுத்தி வந்தார்கள்.  இதன் மூலம் இந்தியா முழுவதும் திருநங்கைகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு மற்ற மாநிலங்களும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு முன்னோடியாக தமிழ்நாடு விளங்கியது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில்  தமிழ்நாடு முதலமைச்சர்  திருநங்க...

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துக் கொள்ளவும் அழைப்பு

Image
தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில்  இந்தியப் பிரதமர்நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். மேலும் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார். அவர் அளித்துள்ள கோரிக்கை விவரங்கள் வருமாறு: *காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான  பிரச்சனை      * பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்   * கச்சத்தீவு மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது      * தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான இரயில் தொடர்கள் ஒதுக்கீடு செய்யக் கோருதல்   *ரெய்கார் - புகழூர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவித்தல் * மாநிலங்களுடன் மேல் வரிகள் மற...

வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் - கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு

Image
வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறையின் மூலம் ரூ.8.54 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத்   செய்தியாளர் பயனத்தின் போது ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.வினீத்   திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறையின் மூலம்  விவசாய நிலங்களில் ரூ.8.54 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து செய்தியாளர் பயனத்தின் போது ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர் பாசன திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மாணியத்திலும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மாணியத்திலும் செயல் பயுடுத்தப்பட்டு வருகிறது. கண்ணமநாயக்கனூர்  கிராமத்தில்    வேளாண்மை ப...

வேப்பூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 3300 லஞ்சம் வாங்கிய பில் கிளர்க் மற்றும் லோடுமேன் கைது

Image
 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே   சிறுபாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் இயங்கி வருகிறது இங்கு சிறுபாக்கம், சுற்றுவட்டார  கிராம மக்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்தனர்.  அங்கு பணியாற்றும் பில்கிளர்க் ராமசந்திரன் மற்றும் லோடுமேன் கிருஷ்ணசாமி இருவரும்  விவசாயிகளிடம் மூட்டைக்கு 50 ரூபாய் பணம் வசூல் செய்வதாக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புதூர் கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்ற விவசாயிடம்  200 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம்   புகார் அளித்தார்.   அதன்பேரில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்   மறைந்திருந்து   விவசாயி அழகுவேலிடம் 3,300 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பில் கிளார்க் ராமச்சந்திரன் மற்றும் லோடுமேன் கிருஷ்ணசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். Attachments area

தேனி மாவட்டத்தில் சீமை கருவேல் மரங்களை அகற்றுவது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை

Image
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரியகுளம் , சப் கலெக்டர் ரிஷப், உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலைப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 262 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

Image
ராமநாதபுரம் மாவட்டம் விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 262 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நுழைவாயில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் இ.ஆ.ப.மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வாணிபம் செய்வதற்காக இந்திய தேசம் வந்த ஆங்கிலேயர்கள் பின்னாலில் இந்திய தேசத்தை அடக்கி ஆட்சி செய்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடி இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்களில்  மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களது பங்கு முக்கியமானது சிப்பாய்க்கலகம் நடைபெறுவதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் குறிப்பாக அன்றைய காலத்தில் இராமநாதபுரம் சீமையில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டவர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி ஆவார்.குழந்தைப் பருவத்திலேயே இராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கொண்டு எண்ணிலடங்காத பணிகள...

பவானிசாகரில் அட்டை லோடு ஏற்றி வந்த லாரி மின் கம்பத்தில் மோதி, மின் கம்பம் சேதம்

Image
பவானிசாகர் அருகே, டி.என். 40 எல். 8905 என்ற லாரியின் ஓட்டுனர் வினோத் என்பவர் கோவையில் இருந்து புறப்பட்டு, பவானி சாகர்  பேப்பர் மில்லில் பேப்பர் லோடு இறக்க வேண்டி, தொட்டம் பாளையம் தேவாங்கபுரம் என்ற இடத்திற்கு வந்த போது எதிரே பள்ளி வாகனம் வந்ததாகவும் ,அதனால் லாரியை இடது புறமாக ஓரங்கட்டிய போது, இடது புறம் உள்ள மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் உடைந்து விட்டது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மின்கம்பம் மட்டும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் தகவல் அறிந்து உடைந்த மின்கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Attachments area

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்- தமிழ்மணி சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் ஜெயந்தி செல்லூர் வழங்கினார்

Image
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இப்பள்ளியில் பயிலும் சுமார் 425 குழந்தைகளுக்கு சிலேடு, ஸ்கெட்ச், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தமிழ்மணி சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் ஜெயந்தி செல்லூர் கே.ராஜூ வழங்கி குழந்தைகளை ஊக்கப்படுத்தினார்.  அதனைத் தொடர்ந்து விளாங்குடி அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், கவுன்சிலர் நாகஜோதி சித்தன் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவித்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

Image
 அகில இந்திய  புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்க கூடிய  ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ராமநாதசுவாமியை  வழிபட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது.  இந்த நிலையில் இன்று பங்குனி மாதத்தில் வரக்கூடிய அம்மாவாசை தினம் என்பதால் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் செய்தால் முன்பு செய்த பாவங்கள் போக்கி மோட்சம் கிட்டும் என்று ஒரு ஐதீகம்.  இதையடுத்து வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே  அக்னி தீர்த்த கடற்கரையில் புனித  நீராடிவிட்டு தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.  அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமி  திருக்கோயிக்குள் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி விட்டு  சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். Attachments area

திட்டக்குடியில் அமைச்சர் கணேசன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

Image
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் கலந்து கொண்டு தையல்இயந்திரம்,கல்விஉதவித்தொகை ,வேளாண்உபகரணங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.  அப்போது அவர்பேசியதாவது தமிழகத்தில் திமுக ஆட்சிபொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டுவருகிறது இல்லம்தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தி மருத்துவமனைக்கு செல்லமுடியாது முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அரசுபேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணம் மூலம் மகளிர் பயணடைந்துவருகிறார்கள் என்றும் கூறினார்.   இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ராம்குமார்,ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், திட்டை நகரமன்றதலைவர் வெண்ணிலா கோதண்டம்,துணைதலைர் விபிபி பரமகுரு,நகர இளைஞரணி செயலாளர் சேதுராமன்,மங்களூர் ஒன்றிய சேர்மன் கேஎன்டி சுகுணாசங்கர்,வட்டாட்சி...

அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி- டிஎஸ்பி சிவா பங்கேற்பு

Image
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி நடைபெற்றது.  இளநிலை இரண்டாமாண்டு மாணவி பூங்குழலி வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக  காவல் துணை கண்காணிப்பாளர் சிவா,திட்டக்குடி ஆய்வாளர் அன்னக்கொடி கலந்து கொண்டனர்.  கணிதத்துறை தலைவர், முனைவர் முத்துசாமி,   முனைவர் இளவரசி ,கல்லூரி மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர்.      Attachments area

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை : ஏப்.5ல் சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்.!

Image
தூத்துக்குடியில் வருகிற 5ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.  இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுமைக்கும், உடல் இயக்க குறைபாடுடையோர்,  காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மற்றும் மனவளாச்சி குன்றியோர்களுக்கு கல்விக்காக, பணிபுரிவதற்காக, பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்காக வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று வர இலவச பேருந்து பயண சலுகை பெற்று பயனடையும் விதமாக சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் புதிய மற்றும் புதுப்பித்து வழங்கும் இலவச பயண அட்டைகள் வழங்கப்படவுள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 05.04...

சொத்து வரி கட்டாததால் சென்னை ஆல்பர்ட் திரையரங்கு ஜப்தி -மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

Image
சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத சென்னையின் பிரபல ஆல்பர்ட் திரையரங்கை சென்னை மாநகராட்சி சீல் வைத்து ஜப்தி செய்தது. 2021 - 22ம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் கட்ட தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் பல ஆண்டுகளாக சொத்து வரியையும் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததாகவும் சென்னை பெருநகர மாநகராட்சி தரப்பில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத காரணத்தினால், திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி செய்து இருக்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம். அதன்படி 51 லட்சத்து 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியும், 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்ததால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன் படி ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - கோவை ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே துறை அமைச்சருக்கு மனு.!

Image
கொரோனாவால்  நிறுத்தப்பட்ட தூத்துக்குடி - கோவை ரயிலை உடனடியாக  இயக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு தென்னக ரயில்வே முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஷா  மனு அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர்  அஸ்வினி வைஸ்னவ்க்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை-நாகர்கோவில் விரைவு  ரயிலுடன் கோவை-தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் இணைத்து இயக்கப்பட்டது.  கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை, மணியாச்சி வழியாக தூத்துக்குடி  சென்றது. கொரோனாவால் 2 ஆண்டாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்த  ரயிலில் 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு அடுக்கு  குளிர்சாதன பெட்டிகள், மூன்று அடுக்கு குளிர் சாதன பெட்டி ஒன்று, முன்  பதிவு இல்லா பெட்டி முன்புறம் இரண்டு, பின்புறம் ஒன்று என  இணைக்கப்பட்டிருந்தது. நிறுத்தப்பட்ட இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.   ஈரோட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு மேட்டூர் வரை செல்லும்  பயணிகள் ரயில், காலை 6.30 மணிக்கு ஈரோடு ஜோலார்பேட்டை பயணிகள் ரயில்,  மா...

தூத்துக்குடி வஉசி துறைமுகம் 34 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை.!

Image
தூத்துக்குடி வஉசி துறைமுகம் நேற்று, 30.03.2022 , 34.01 மில்லியன் டன்களைக் கையாண்டதன் மூலம், 2021-22 நிதியாண்டில் நிர்ணயித்த 34 மில்லியன் டன் சரக்கு கையாளுதல் இலக்கை துறைமுகம் அடைந்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. தூத்துக்குடி வஉசி துறைமுகம் நேற்று, 30.03.2022 , 34.01 மில்லியன் டன்களைக் கையாண்டதன் மூலம், 2021-22 நிதியாண்டில் நிர்ணயித்த 34 மில்லியன் டன் சரக்கு கையாளுதல் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது, இந்த சாதனைக்கு அனைத்து துறைமுக பயனர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் துறைமுகம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது, என தெரிவித்துள்ளது  

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Image
10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது செல்லும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய ரூ. 21 கோடியே 42 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் டெண்டர்

Image
2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம்ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட  வல்லநாடு நான்குவழிப் பாலம் அடிக்கடி சேதமடைந்து வந்தது. பாலம் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலத்தின் ஒரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) நடுவே பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் சுமார் 6 மாத காலம் இந்த பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ரூ.3.14 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது. மீண்டும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி பாலத்தின் மற்றொரு பகுதியில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) 2 பெரிய ஓட்டைகள் விழுந்து சேதம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  அனைத்து வாகனங்களும் ஒருவழிப் பாதை (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) வழியாக திருப்பி விடப்பட்டன. பாலம் சேதமடைந்து இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும், இன்னும் சீரமைக்கப்படாததால் வாகனங்கள் அனைத்தும் தற்போது வரை ஒருவழிப் பாதை வழியாகவே சென்று வருகின்றன.

லாரி மீது கார் மோதியதில் திருப்பூரை சார்ந்த இருவர் பலி...

Image
 வாளையார் ஆர்டிஓ., சோதனைச் சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இன்னோவா கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.    திருப்பூர் கூத்தம்பாளையம் அண்ணாநகர் வடக்கு பகுதியை சேர்ந்த பாலாஜி (49), முருகேசன் (47) இவர்களது நண்பர் பத்ருதீன் (40), டிரைவர் மைனுதீன் (38) ஆகியோர்  திருப்பூரில் பனியன் வியாபாரம் செய்து வருகின்றனர்.  வணிக நிமித்தமாக திருப்பூர் வந்த வெளிநாட்டினரை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு  இன்று அதிகாலை அவர்கள் திருப்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.  அப்போது விபத்து ஏற்பட்டது. கோவை பாலக்காடு எல்லையான வாளையாறு செக்போஸ்ட் அருகில் வந்த போது அதிகாலை 5.45 மணிக்கு எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த இன்னோவா கார் நின்று கொண்டுவிருந்த லாரி மீது மோதியது. இதில் பாலாஜி (49), முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.பத்ருதீன் (40), டிரைவர் மைனுதீன் (38) ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.  அவர்கள் கோவை மற்றும் வாளையார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  இறந்தவர்களின் உடல்கள் பாலக்காடு மாவட்ட மருத்துவமனை பிணவறையில் வைக்கப...

நகைக்காக மூதாட்டி கொலை செய்த வழக்கில் இருவர் கைது- தனிப்படையினருக்கு எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டு.!

Image
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் நடந்த பவானி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரிகள் இருவர் கைது - தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பாலாஜி சரவணன்  பாராட்டு. தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்த ராஜூ என்பவரது மனைவி பவானி (62) என்பவர் 24.03.2022 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து துணியால் கழுத்தை இறுக்கி, கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த ரூபாய் 15,000/- மதிப்புடைய 4 கிராம் எடையுள்ள தங்க கம்மலை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார்   சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்...

"அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் " - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

Image
10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் ராஜ்யசபாவில் புதன்கிழமை 2022-23 பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உக்ரைன் போர் மற்றும் எண்ணெய் பத்திரங்கள் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக உலக எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட இடையூறுகள் எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறினார்.  மேலும் எண்ணெய் பத்திரங்களின் செயல்பாட்டை விளக்கிய சீதாராமன், முந்தைய யுபிஏ (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) ஆட்சியின் தொடர்ச்சியான எண்ணெய் பத்திரங்களை வெளியிடும் கொள்கையால் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான எண்ணெய் பத்திரங்களை வெளியிட வழிவகுத்தது, அவை இன்னும் திருப்பிச் செலுத்தப்படுகின்றன. "இன்றைய வரி செலுத்துவோர் எண்ணெய் பத்திரங்கள் என்ற பெயரில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நுகர்வோருக்கு வழங்கப்பட்ட மானியங்களை செலுத்துகிறார்கள். மேலும் அவர்கள் இன்னும் ஐந்து ஆண்டுக...

ஜூலை 17ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு - ஏப்ரல் 2 முதல் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.!

Image
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவானது நாளை மறுநாள் தொடங்கி, மே 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வானது நடைபெறவுள்ளது. என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  

இந்து முன்னணி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது.!

Image
கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி மீது, குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவிநாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னூரை சேர்ந்தவர் குட்டி என்கிற ராஜேந்திரன், 40. இவர், இந்து முன்னணியின், கோவை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த மாதம் அன்னூர் அருகே பைனான்ஸ் அதிபரை கொலை செய்த வழக்கில் ராஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் குட்டி என்கிற ராஜேந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய,  கோவை ரூரல் எஸ்பி பத்ரிநாராயணன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையேற்று, அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவு பொள்ளாச்சி சிறையில் உள்ள குட்டி என்கிற ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது.

லேப் டெக்னிசியன் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது.! -மருத்துவமனைக்கு சீல்...!

Image
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி அருகே சந்தைபேட்டை எதிரில் கே.எஸ். கிளினிக் என்ற பெயரில் இரண்டு வருடங்களாக செயல்பட்டுவருகிறது. இங்குள்ள நபர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருத்துவ அலுவலர்களுக்கு புகார் வந்துள்ளது.  புகாரின் பேரில் அவிநாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி தங்கராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், பரமன் உள்ளிட்டோர், மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த போலி மருத்துவர், ஜெயக்குமார் (வயது 42) சான்றிதழ்  மற்றும் பதிவு எண் உள்ளிட்ட ஆவணங்களை தராமல் தான் ஜலந்தரில் உள்ள பல்கலையில், சித்த மருத்துவம் படித்ததாக முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் மருத்துவ அதிகாரிகளுக்கு சந்தேகம் அதிகரித்ததால், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயக்குமார் (வயது 42) மருத்துவம் படிக்காமல், ஒரு வருட லேப் டெக்னிசியன் படிப்பு மட்டுமே படித்து கடந்த இரண்டாண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. மேலும் மருத்துவமனையில் உள்ள டாக்டரின் மருந்து பரிந்துரை சீட்டில், ஆங...

நாளை தீர்ப்பு - வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில்,

Image
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்..

திருச்செந்தூரில் கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருடியவர் 24 மணி நேரத்தில் கைது - 9 செல்போன், 2 கைக்கணிணிகள் பறிமுதல்.!

Image
திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் சரவணன் (31) என்பவர் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் தெற்குரத வீதியில் சொந்தமாக செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 29.03.2022 அன்று காலை கடையை திறக்க வந்தபோது,  அங்கு மர்மநபர்கள் கடையின் பித்தளை பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்து கடையில் இருந்த செல்போன்களை திருடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலாஜி சரவணன்  திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில்  சரவணனின் செல்போன் பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து செல்போன்களை திருடியது திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் திலீப் ...

காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து விமர்சனம் - கெஜ்ரிவால் வீட்டில் நுழைந்து கொல்ல முயற்சி ? அடித்து நொறுக்கப்பட்ட சிசிடிவி யால் டெல்லியில் பரபரப்பு.!!

Image
காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், கெஜ்ரிவாலின் வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது அத்துமீறிய அவர்கள் கெஜ்ரிவால் வீட்டில் நுழைந்து அவரை கொல்ல முயற்சி செய்ததாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் ஜம்மு காஷ்மீரில் இருந்து காஷ்மீர் இந்துக்கள் வெளியேறியதன் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் டெல்லியில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை வைத்தனர்.  https://twitter.com/aartic02/status/1509120589268672517?t=qguD2woAJluZaQS9f-WxfA&s=19 அதற்கு பதில் பதில் அளித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ”இந்த படத்திற்கு டெல்லியில் வரிவிலக்கு கோரி இருக்கிறார்கள் பாஜகவினர். ஏன் அப்படி கேட்கிறீர்கள்? நீங்கள் படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதில் மிக...

சிவகளையில் மூன்றாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணி - மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தொடங்கி வைத்தார்.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் பொருநை ஆற்றங்கரை நாகரிக பகுதியான சிவகளையில் மூன்றாம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இன்று (30.03.2022) தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தாமிரபரணி ஆற்றங்கரையில் பொருநை நாகரிகம் வளர்ந்தது பற்றியும், அதனைச்சார்ந்து தமிழ் சமூகம் எவ்வாறு வளர்ந்தது என்பது பற்றியும் இன்று அனைவராலும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தின் பழமையை பறைசாற்றும் விதமாக தொல்லியல் இடங்களில் கிடைக்கும் அகழாய்வு பொருட்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக திருநெல்வேலியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. பொருநை நாகரித்தின் முக்கிய இடமாக கருதப்படும் ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே இந்திய தொல்லியல் துறையினர் அகழாய்வுகள் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கொற்கை, சிவகளை பகுதிகளில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. சிவகளை பகுதியில் 3ம் கட்ட தொல்லியல் அகழாய்வு பணிகள...

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 21.25 லட்சம் மதிப்பில் சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்பு பாதிப்பு அறியும் கருவி - அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

Image
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோய் பாதவியாதிகள் சிகிச்சை சிறப்பு பிரிவில், கால் நரம்பு பாதிப்பு அறியும் கருவி, கால் இரத்த ஓட்டத்தை அறியும் கருவி, இருதயவியல் பிரிவில் புதிய எக்கோ கருவி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். பின்னர் இது குறித்து அமைச்சர் கூறியதாவது "தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் துவங்கப்பட்டு, படிப்படியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட் வருகிறது. அதன்படி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோய் பாத வியாதிகள் சிகிச்சை சிறப்பு பிரிவில் ரூ.60,000 மதிப்பில் கால் நரம்பு பாதிப்பு அறியும் கருவியினையும், ரூ.70,000 மதிப்பில் கால் இரத்த ஓட்டத்தை  அறியும் கருவ...

ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து நினைவு நாள் தமிழக மீனவ மக்கள் கட்சி மரியாதை

Image
பரதவ குலத்தின் மூத்தோனும், தூத்துக்குடி மாநகரை உருவாக்கியவரும்,தன் சொத்துக்கள் எல்லாம் அனைத்து மக்களுக்கும் தானமாக வழங்கிய கொடை வள்ளல் ஐயா இராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து அவர்களின் 92 வது நினைவு நாளில் தமிழக மீனவ மக்கள் கட்சியின் சார்பில்  நிறுவன தலைவர் கோல்டன் பரதர் தலைமையில் தூத்துக்குடியில் அமைந்துள்ள குரூஸ் பர்னாந்து நினைவிடம் சென்று மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் மாநில தலைவர் ராஜசேகர் பர்ணாந்து , தூத்துக்குடி மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொலை கொள்ளைகள் அதிகரித்து உள்ளது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.!*

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் பசுவந்தனை ரோடு, அண்ணா பேருந்து நிலையம், மந்தித்தோப்பு ரோடு, லாயல் மில் காலனி, உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.  விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி பழம் உள்ளிட்டவைகளை வழங்கினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தமிழகத்தில்  எதிர்க்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் இருக்கும் போதும் நம்பர் ஒன் கட்சியாக திகழ்வது அதிமுக தான். திமுகவே அசந்து போகும் அளவுக்கு கடந்த 4 நாட்களாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருந்தது. வரும் சட்டமன்ற கூட்டத்தில் தொடரில் திமுக அரசின்  அவலங்களை நாங்கள் எடுத்துரைப்போம். இந்த அரசு செயல்படாத திட்டங்களை முன்வைப்போம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படு...