Posts

Showing posts from June, 2023

ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது "சீகம் மதுரை பேந்தர்ஸ்"இந்த சீஸனில் 5வது தோல்வியை சந்தித்தது பால்சி திருச்சி

Image
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி அணியை விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சீகம் மதுரை பேந்தர்ஸ் தங்களின் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பால்சி திருச்சி அணி 18.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து,இந்த சீஸனில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. சீகம் மதுரை பேந்தர்ஸ் சார்பில் அதிகபட்சமாக பி சரவணன் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்த, அவருக்கு உறுதுணையாக குர்ஜப்நீத் சிங் மற்றும் அஜய் கே கிருஷ்ணா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.சீகம் மதுரை பேந்தர்ஸ் இந்த சீஸனில் தங்களின் 3வது வெற்றியைப் பதிவு செய்ய 20 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது. மதுரையின் ஒப்பனர்களான லோகேஷ்வர் மற்றும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது 50வது போட்டியில் களமிறங்கிய சீகம் மதுரை பேந்தர்ஸின் கேப்டன் ஹரி நிஷாந்த் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சேலம் மண்ணின் மைந்தரான தங்கராசு நடராஜன் தனது அற்புத...

சத்தியமங்கலம் செண்பகபுதூர் குந்தி பொம்மனூர் மாரியம்மன் கோவில் புதிய அம்மன் சிலை அமைக்க,தீர்த்த குடம் எடுத்து வழிபாடு..

Image
. ஈரோடு மாவட்டம், செண்பகபுதூர் ஊராட்சி, குந்தி பொம்மனூர் ஊற்றுக் கண் மாரியம்மன் கோவில் அறக்கட்டளையின் மூலம் புதிய மாரியம்மன் திருக்கோவில் கட்டப் பட்டு வருகின்றது. விரைவில் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. புதிய அம்மன் சிலை அமைக்க, வடிவமைத்து, புதிய அம்மன் சிலையுடன்,பவானி ஆற்றிலிருந்து, பெண்கள் தீர்த்த குடங்கள் எடுத்து வந்து வழிபாடு செய்து,கோவில் கட்டும் இடத்தில் தீர்த்த தொட்டியில் அம்மன் சிலை  வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊர் பெரியோர்கள் பொதுமக்கள் திரளாக  கலந்து கொண்டனர்.

மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நம்பியூர் பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம்

Image
மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நம்பியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு  போராட்டம் நம்பியூர் அடுத்த காமராஜர் காலனியில் 300க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய உள்ளன.  சுற்றுவட்டார பகுதிகளான ஆட்டையங்காட்டுபாளையம், சூரியபாளையம், கொன்னமடை, கண்ணாங்காட்டுபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன.தற்போது நம்பியூர் பேரூராட்சி சார்பாக காமராஜ் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே புதிதாக மின்மயானம் அமைக்க உள்ளது. இந்த மின்மயானம் அமைக்கும் இடத்தில் கழிவுநீர் ஓடை உள்ளதால் அதை ஆக்கிரமித்து மின்மயானம் கட்டப்பட உள்ளது அப்படி கட்டப்படும் பொழுது மழைகாலங்களில் ஓடையில் வரும் கழிவு நீர்  கிராமங்களில் புகும் அபாயம்  உள்ளது அரசுப்பள்ளி அருகில் அமைந்துள்ளதால் மின்மயானத்தில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்ககூடும் என்பதால் மின்மயானத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி நேற்று வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் ...

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக திருநெல்வேலி, தென்காசிக்கு சிறப்பு ரயில்... வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது.

Image
 தென் மாவட்ட மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாக திருநெல்வேலி மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்க இருக்கிறது.  ஏற்கனவே கோவை, உடுமலை வழியாக தென்காசிக்கு வெள்ளிக்கிழமை தோறும் வாராந்தர ரயில் இருந்தது.தற்போது திங்கள் கிழமை தோறும் புதிதாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பவதாது:  வண்டி எண் 06030 என்ற எண்ணுடைய சிறப்பு ரயில் ஞாயிறு தோறும் இரவு 07.00 மணிக்கு திருநெல்வேலி, 07.25க்கு சேரன்மகா தேவி, 07.40 அம்பா சமுத்திரம், 08.00கீழக்கடையம், 08.12க்கு பாவூர் சத்திரம், 08.40க்கு தென்காசி, 08.56க்கு கடையநல்லூர், 09.15க்கு சங்கரன்கோவில், 09.45க்கு ராஜபாளையம், 10.00மணிக்கு ஸ்ரீவில்லிப்புதூர், 10.15க்கு சிவகாசி, 11.15க்கு விருதுநகர், 00.55க்கு மதுரை, அதிகாலை 2.00 மணிக்கு திண்டுக்கல், 02.42க்கு ஒட்டன்சத்திரம், 03.10க்கு பழனி, 03.50க்கு உடுமலை, 04.47 பொள்ளாச்சி, 06.05க்கு போத்தனூர், 06.30 கோவை, 07.30க்கு மேட்டுப்பாளையத்தை அடைகிறது.  வண்டி எண் 06029 என்ற எண்ணுடன் மேட்டுப்பாளையத்தில் திங்கள்...

கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Image
கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் சிறப்பு அழைப்பாளராக வானதி சீனிவாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் மாநில துணைத் தலைவர் கோவை மாவட்ட பார்வையாளர் பேராசிரியர் கனகசபாபதி  மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்  ஜி.கே செல்வகுமார் அவர்கள் விவசாய அணி மாநில தலைவர்  ஜி.கே நாகராஜ்  மற்றும் மாநில மாவட்ட மண்டல் வார்டு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் காப்பாற்றிய ராணுவ வீரர் பொதுமக்கள் பாராட்டு

Image
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தொடர் மழை காரணமாக அத்திக்குன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகின்றது இந்நிலையில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் சாபிக்  (7) தகப்பன் பெயர் முகமதுசாபிக் இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் தற்சமயம் அத்திக்குன்னா பாரி ஆக்ரோ தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் சிறுவன்  ஆற்றில் குளிக்க சென்ற பொழுது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் அந்த சிறுவனை அந்தப் பகுதியை சேர்ந்த J.ஜேம்ஸ் மத்திய துணை ராணுவ படை வீரர் ஆற்றில் குதித்து அச்சிறுவனை காப்பாற்றினார் பொதுமக்கள் ராணுவ வீரருக்கு பாராட்டுகள் தெரிவித்தனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது

சத்தியமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது.

Image
 ஈரோடு மாவட்டம்.சத்தியமங்கலம் பகுதியில், இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக, சத்திய மங்கலம் உதவி காவல் ஆய்வாளர் பரமேஸ்வரனுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, உதவி காவல் ஆய்வாளர் தலைமையில், சத்தி போலீசார், சத்தியமங்கலம் அத் தாணிசாலை,வடக்குப்பேட்டை சந்தை கடை கார்னர் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சத்தி திப்பு சுல்தான் சாலையில் இருந்து மொபட் வாக னத்தில் வந்த இருவர், போலீசாரை கண்டதும், வாகனத்தை திருப்பிக் கொண்டு, தப்பி ஓடி முயன்றனர். இதை கண்ட போலீசார் அவர்கள் இருவரையும் துரத்தி பிடித்து, விசாரணை மேற்கொண்டு, அவர் கள் வைத்திருந்த பையை சோத னையிட்ட போது, அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததும், கஞ்சாவை விற்பனை செய்ய, கொ ண்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள், சத்திய மங்கலம் வடக்குப்பேட்டை, தண்டு மாரியம்மன் கோவில் வீதி யைச் சேர்ந்த பிரகாஷ் (27), மற்றும் வடக்குப்பேட்டை பிரிட்டோ காலனி யை சேர்ந்த புவனேஸ்வரன் (39) என்பதும் தெரியவந்தது. இதை யடுத்து, போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் மொபட் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் அவர்களிடமிருந்து ரூபாய் 1200 / - கை...

சூலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுகாதார கட்டிடம் வேண்டி மனு

Image
கோவை சூலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரகு (எ) துரைராஜ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அதில் " நான் சார்ந்துள்ள  பட்டணம் ஊராட்சியில் தற்போது பயன்பாட்டிலுள்ள சுகாதார கட்டிடம் மிகவும் பழைய கட்டிடம் மேலும் சிதிலமடைந்துள்ளது  தற்பொழுது இவ்வூரில் முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை மக்கள் வசிக்கின்றனர் எனவே புதிய சுகாதார மையம் ஒன்றை பட்டணம் ஊராட்சியில்  கட்டித் தரவேண்டும் என பொதுமக்கள் சார்பாக தங்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் மனுவைப் பெற்றுக் கொண்ட  அமைச்சர் மா. சுப்பிரமணியம்  சுகாதார கட்டிடம் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து தருவதாக தெரிவித்தார்

திண்டுக்கல் டிராகன்ஸின் வெற்றிக்கு வித்திட்ட "ஷிவம் சிங் மற்றும் ஆதித்யா கணேஷ்"

Image
திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி. ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் 4வது வெற்றியைப் பதிவு செய்தது.முன்னதாக, டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சாய் கிஷோர் 35 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க அவருக்கு உறுதுணையாக விஜய் ஷங்கர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் டிராகன்ஸின் பௌலிங்கில் சரவணகுமார் மற்றும் ஆஷிக் ஸ்ரீனிவாஸ் மட்டுமே தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. ஓப்பனர் விமல் குமார் பொறுமையாக ஆட்டத்தை ஆரம்பித்தாலும் பவர்ப்ளேவில் பந்துவீசிய சாய் கிஷோரின் பந்தை அடிக்க முற்பட்டு 14 ரன்களில் தனது விக்கெட்டை ...

சத்தியமங்கலத்தில், ஈகை (பக்ரீத்) திருநாள் சிறப்பு தொழுகை-2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

Image
 நாடு முழுவதும் இன்று,ஈகை திரு நாள் எனப்படும் இஸ்லாமியர் களின் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக,ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் மணிக் கூண்டில் இருந்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கள், கடைவீதி வழியாக, ஊர்வல மாக ஈத்கா மைதானம் சென்றனர். கோட்டு வீராம்பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில், அஹாலே தக்னி சுன்னத் ஜமாஅத் தலைவர் நதிமுல்லாகான் தலை மையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது .அதனை தொடர்ந்து மைதானத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து, அனைவரும் இறை வழிபாடு மேற்க் கொண்டனர்.பின்னர் இஸ்லாமியர் கள், சகோதரத்துவம்,அன்பு,அமைதி நிலவ.ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி , பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.இதில் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த  2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர், தாளவாடி ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, பக்ரீத் பண்டிகையை ஒட்டி,ஏழை, எளிய மக்களுக்கு, குர்பானி அளித்து, சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.  

ஆளுநர் விழாவில் செய்தியார்களைப் புறக்கணித்த சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

Image
சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் 28.06.23 புதன்கிழமையன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்கிறார் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து செய்தியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க அடையாள அட்டை வழங்க பெரியார் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது அதனைத் தொடர்த்து செய்தியாளர்கள் பெரியார் பல்கலைக்கழத்தில் அமைந்துள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு சென்று இரண்டு புகைப்படம் மற்றும் தாங்கள் பணிப்புரியும் பத்திரிக்கைச் செய்தியாளர் அடையாள அட்டை நகலையும் மக்கள் தொடர்பு அலுவலகரிடம் கொடுத்துவிட்டு தங்களுக்கான நிகழ்ச்சி நுழைவு அடையாள அட்டையை உறுதி செய்துவிட்டு வந்துவிட்டார்.ஆனால் நிகழ்ச்சியன்று ஒரு குறிப்பிட்ட ஊடகவியாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சி செய்தி சேகரிப்பதற்கான நுழைவு அடையாள அட்டை கொடுத்து மற்ற செய்தியாளர்களை அவமானப்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கதக்கது. பெரியார் பல்கலைக்கழகத்தின் ஒருதலைப்பட்சமான இந்த முடிவால் செய்தியாளர்கள் அவமானப்பட்டு நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்      பெரியார் பல்கலைக்கழகம் பத்திரிகையாளர்களிட...

கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மாதாந்திர கூட்டம்

Image
கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் தவித்திரு சாந்தலிங்க அடிகளார் பேரூர் கல்லூரியில்  தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் பின்வரும் முக்கியமான முடிவுகள் குறித்து ஒருமித்த கருத்து பெறப்பட்டது உறுப்பினர்களின் உறுப்பினர் அட்டை காலாவதியாகிவிட்டது அதை புதுப்பிக்க வேண்டிய படிவங்கள் கொடுக்கப்பட்டு 3 வருடத்திற்கு செல்லத்தக்க புதிய உறுப்பினர் அட்டை கொடுக்கப்படும் நமது கவுன்சிலின் 37 வது ஆண்டு விழாவையொட்டி  வருகின்ற டிசம்பர் மாதம் 21ஆம் நாள் விழா மலர் வெளியிடுவது எனவும் அதற்காக அடிகளார் தலைமையில் முக்கிய துறைகளில் தலைவர்களை அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது ஒவ்வொரு கூட்டத்திற்கும் உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவரவர் பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதை தலைமைக்கு தெரியப்படுத்தினால் அந்தக் குறையை  துறை சார்ந்த அதிகாரிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நிவர்த்தி செய்து தரப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்தில் மாவட்ட செயல் தலைவர் அய்யாசாமி மாவட்ட செயலாளர் துரைசாமி மாவட்டத் துணைத் தலைவர...

சேலம் மண்ணில் லைகா கோவை கிங்ஸ் "பிரம்மாண்ட வெற்றி

Image
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் 79 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழத்தி இந்த சீஸனில் தங்களின் 5வது வெற்றியைப் பதிவு செய்தது. முன்னதாக, டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அற்புதமாக விளையாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் ராம் அர்விந்த் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தன் முதல் அரைசதத்தைப் பதிவு செய்ததோடு இந்த சீஸனில் அதிவேக அரைசதத்தை இந்தப் போட்டியில் அடித்தார். சேலம் ஸ்பார்ட்டன்ஸைப் பொறுத்தவரை சன்னி சந்து சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.இன்றைய ஆட்டத்தை வெல்ல 20 ஓவர்களில் 200 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆரம்பம் முதலே விக்கெட்களை பறிகொடுக்கத் தொடங்கியது. அந்த அணியின் ஒப்பனர்கள் அமித் சாத்விக்(0) ரன் எதுவும் எடுக்காமலும் மற்றொரு ஓப்பனர் மோகித் ஹரிஹரன் 7 ரன்களிலும் கௌதம் தாமரை கண்ணனி...

எனது பூத் வலிமையான பூத் பிரதமர் மோடியின் நேரலை

Image
கோவை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் "எனது பூத் வலிமையான பூத்" பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நேரலை நிகழ்வில் மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி  கோவை தெற்கு தொகுதி MLAவும் தேசிய மகளிரணி தலைவருமான வானதிசீனிவாசன் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர்  மாநில துணை தலைவர்  கனகசபாபதி புதுச்சேரி மாநில உ‌ள்துறை அமைச்சர் நமசிவாயம்  மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ்  மாவட்ட தலைவர்  பாலாஜி உத்தமராமசாமி  அவர்களுடன் ஏனைய மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

ஈரோடு காளை மாட்டு சிலை நீலகிரிஸ் எதிரில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

Image
  கிருஷ்ணகிரி மாவட்டம் புலியாண்டி பட்டி ( ஊத்தங்கரை)பகுதியைச் சார்ந்த 9- நபர்கள்( 5-பெண்கள்3-ஆண்கள் -7 -வயது குழந்தை ஆண் ) உட்பட குறவன் பட்டியலினம் சார்ந்த நபர்களை பொய் வழக்கில் ஆந்திரா மாநிலம் சித்தூர் நகர காவல்துறை சட்ட விரோதமாக பிடித்து சென்று சித்தூர் காவல் நிலைய எல்லையில் வைத்து பெண்களை வன்புணர்வு செய்தும் , சித்திரவதை செய்தும், பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவியும், இரும்பு கம்பியால் குத்தியும், மிகவும் கொடூரமாக தாக்கிய  ஆந்திரா மாநில காவல்துறையை கண்டித்து   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு குறவன் மலைக்குறவன் மற்றும் கொறவர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுஒருங்கிணைப்பாளர் சேலம் கொ. செல்வராஜ் அய்யா  தலைமையில்  ஈரோடு காளை மாட்டு சிலை நீலகிரிஸ் எதிரில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.                          குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு தலைவர்  குறிஞ்சிப. சந்திரசேகரன்வரவேற்பு உரையாற்றினார்.                  கண்டன ஆர்ப்பாட்ட...

கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர்

Image
மருத்துவ முகாம் துவங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூடுதுறை ஊராட்சி சின்னகுமாரபாளையத்தில் கால்நடை மருத்துவ முகாமை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் அவர்கள் துவங்கி வைத்தார். உடன் மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பெருமாள்சாமி, துணை இயக்குநர் மருத்துவர் குமார ரத்தினம், கழக நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

மேட்டுப்பாளையம் அருகே முன்னாள் அமைச்சர் தலைமையில் வட்டாச்சியரிடம் கோரிக்கை மனு..

Image
கோவை மாவட்டம், மேட்டுப் பாளை யம் அடுத்த காரமடை மங்களகரை புதூர் பொதுமக்களுக்கு பட்டா வேண்டி, முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினருமான.ஏ.கே.செல்வராஜ எம்.எல்.ர தலைமையில்,  மங்கள கரை புதூர் பொதுமக்கள் மேட்டுப் பாளையம் வட்டாட்சியர் .சந்திரனி டம் கோரிக்கை மனு அளித்தனர்.

பட்டா வேண்டி பொதுமக்களுடன் எம்.எல்.ஏ மனு

Image
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை மங்களகரைபுதூர் பொதுமக்களுக்கு பட்டா வேண்டி மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.K.செல்வராஜ் MLA மற்றும் மங்களகரைபுதூர் பொதுமக்கள் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் திரு.சந்திரன் அவர்களிடம் மனு அளித்தனர்.

கே வி குப்பம் பிடிஓ அலுவலகத்தில் கிராம குடிநீர் சுகாதார குழுவிற்கு களநீர் பரிசோதனை பயிற்சி

Image
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சார்பில் , ஜல் ஜீவன் மிஷன் 2023-24 திட்டத்தின் கீழ் கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சியின்‌ முன்னதாக கே.வி.குப்பம் ஒன்றியத்திலுள்ள 39 ஊராட்சிகளிலூம்,  ஒவ்வொரு ஊராட்சிக்கு பாணிசமதி, ஆஷா பணியாளர், மகளீர் சுய உதவி குழு உறுப்பினர், அங்கன்வாடி பணியாளர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் என 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு என்ற பெயரிட்டப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கண்ட இந்த குழுவில் உள்ள மொத்தம் 195 பேருக்கு 26 ஆம் தேதியான நேற்று தொடங்கி, வருகின்ற 30 ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் நாள் ஒன்றுக்கு பத்து ஊராட்சிகள் என தேர்வு செய்து  பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பயிற்சியின் தொடக்க நாளான நேற்று முதல் பத்து ஊராட்சிகளை சேர்ந்த  கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களை அழைத்து பயிற்சி முகாம் நடத்தபட்டது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாள...

நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி சீகம் மதுரை பேந்தர்ஸ் பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

Image
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனில் இன்று நடைபெற்ற போட்டியில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸை 12 ரன்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.முன்னதாக, டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த சீகம் மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. இக்கட்டான தருணத்தில் அந்த அணியை சரிவிலிருந்து மீட்ட ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வெறும் 30 பந்துகளில் 56*ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸின் பௌலிங்கில் சிறப்பாக பந்துவீசி பாபா அபரஜித் மற்றும் சிலம்பரசன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இந்த சீஸனில் தங்களின் 3வது வெற்றியைப் பதிவு செய்ய 20 ஓவர்களில் 142 ரன்கள் அந்த அணிக்கு தேவைப்பட்டது. ஓப்பனர்கள் சந்தோஷ் சிவ் மற்றும் அவர்களின் கேப்டன் நாராயண் ஜெகதீசன் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். முதல் விக்கெட்டிற்கு இவ்விருவரும் இணைந்து 59 ரன்க...

பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

Image
திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் திருப்பூர் பகுதி பள்ளிகளில் முதல் மதிப்பெண்களைப் பெற்ற மாணாக்கர்களுக்கு  28-ஆம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது  திருப்பூர் பகுதி பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் சிறப்பாக நடத்தி வருகிறது. மேலும், ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கையுந்து பந்து போட்டியையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022-23-ஆம் கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சிறுபூலுவபட்டி, அமர்ஜோதி கார்டனில் உள்ள டிசெட் அலுவலக அரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளையின் (டிசெட்) செயலாளர் துரைசாமி வரவேற்புரையாற்றினார். டிசெட் தலைவர் நிக்கான்ஸ் வேலுச்சாமி  தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமண...

திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள்... 400 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

Image
 திருப்பூர், ராக்கியாபாளையம் அருகில் உள்ள, ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கத்தில் சாவித்திரி அம்மாள் நினைவாக மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. திருப்பூர் மாநகர காவல்துறை, நல்லூர் சரக உதவி ஆணையாளர் நந்தினி மற்றும் 58-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் காந்திமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் அழகேசன் தலைமை வகித்தார்.  பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட முத்தணம்பாளையம் பாசன தலைவர் மணி, காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார், தொழிலதிபர்கள் சந்தீப்குமார், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், நிரஞ்சன்  ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.  மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணாக்கர்கள் கலந்துகொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு பசிபிக் யோகா அசோசியேசன் செயலாளர் ஸ்ரீதர், திருப்பூர் மாவட்ட யோகா அசோசியேசன் செயலாளர் நந்தகுமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட நடுவர்கள் போட்டிகளை நடத்தினர். தொழிலதிபர் பிரகாஷ், வாஸ்து நிபுணர் மோகன கிருஷ்ணா மற்றும் ...

பக்ரித் பண்டிகையொட்டி கே. வி. குப்பதில்ஆட்டுசந்தை அமோகம் வியாபாரிகள் மகிழ்ச்சி

Image
 கே.வி.குப்பதில் சந்தைமேடு பகுதியில்  திங்கட்கிழமை  தோறும்  ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல்  காலை சந்தை கூடியது. வருகின்ற 29 ஆம் தேதி பக்ரித் பண்டிகை என்பதால் ஆடுகள் வரத்து காலை 4 மணியிலிருந்தே தொடங்கியது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்தும் ஆயிரத்திற்கம் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது.  மார்ஷ்லா ரக ஆடுகள், நெல்லூர் ஜீடிப்பி ரக ஆடுகள், செம்மறி ரக ஆடுகள், கசாயம் ஆடுகள், குட்டி ஆடுகள் ,  மயிலைம்பாடி ரக ஆடுகள்,  சீனிகிடாய் ரக ஆடுகள்,  வெள்ளாடுகள்,  பெங்களூர் ஜமுனாபாரி ரக ஆடுகள் என பல ரகங்கள் கொண்ட ஆடுகள் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் கொண்டுவந்தனர். ஆடுகள் மந்தையாக மந்தையாக லோடு வேன் மூலம் கொண்டுவரப்பட்டது. ஆட்டுசந்தை நடைபெறும் கே.வி.குப்பம் சந்தைமேடு ,  காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை ஓட்டி உள்ளதால்,  வழி நெடுக நீண்ட வரிசையில் லோடு வேன்கள் நின்று கொண்டிர...

பேரூர் தெய்வதமிழ் ஆகம வேத பாடசாலையில் சேர விண்ணப்பிக்கலாம்

Image
கோவை பேரூர் ஆதீனம் சார்பில் தொடங்கப்பட உள்ள தெய்வத் தமிழ் ஆகம பாடசாலையில் சேர விரும்புபவர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் தமிழ் கல்லூரி 1953இல் தொடங்கப்பட்டது அப்போதைய பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என விரும்பினார் தற்போது ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் இந்து சமய உயர்மட்ட குழு உறுப்பினராக இருப்பதுடன் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்ட குழு பொறுப்பாளராகவும் உள்ளார் அந்த வகையில் முந்தைய ஆதீனத்தின் எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்கள் பேரூர் ஆதீனத்தில் தெய்வத்தமிழ் ஆகம பாடசாலை தொடங்கப்பட உள்ளது இது ஓராண்டு சான்றிதழ் படிப்பாகும் திருமுறை சாஸ்சாத்திரங்கள், தமிழ்நெறி வழிபாடு, கோயில் கலை, ஜோதிடம் ஆகியவை கற்று கொடுக்கப்படும் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 12 வயதிற்கு மேற்பட்ட 16 வயதிற்கு உட்பட்ட இருபாலரும் இதில் சேரலாம் உணவு சீருடை தங்கும் விடுதி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் பாடசாலையில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1250 ஊக்கத்தொ...

சேலம் கிழக்கு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்

Image
சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் உள்ள மாணவர்களை பாராட்டியும், ஊக்குவிக்கும் விதத்திலும் சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வீரபாண்டி ரமேஷ் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணகுமார், கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் லட்சுமண பெருமாள்,பி.டி.ஏ தலைவர் கஞ்சி முருகேசன்,துவக்கப்பள்ளி பி.டி.ஏ தலைவர் ராமச்சந்திரன், உயர்நிலைப்பள்ளி கிளைச் செயலாளர் சுந்தர்,சங்கரன், சரவணன்,கிருஷ்ணராஜ், முருகேசன்,மாதேஸ்வரன்,வேலு,சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் சித்ரா,கௌரி,உமாராணி,சாந்தி, மேகலா மற்றும் பலர் பங்கேற்றனர். சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

சத்தியமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு, மேஜை, டெஸ்க் வழங்க எம்.எல்.ஏ. பண்ணாரியிடம் கோரிக்கை மனு.

Image
. ஈரோடு மாவட்டம், பவானி சாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கொமாரபாளையம் ஊராட்சி பகுதியில் செயல் பட்டு வரும் ,அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயி ன்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய டெஸ்க் பெஞ்ச் இல்லாத நிலையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சகாயராஜ் தலைமையில், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் எம் சரவணன் பி.காம் முன்னிலையில்,,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சதீஷ், சுரேஷ் ,  வெற்றிவேல், ஜெயக்குமார், சாவித்திரி, பேபி, நதியா, முருகன், ஸ்ரீராம் உள்ளிட்டோர் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் பள்ளி நேரங்களில் முறையாக போக்குவரத்து வருவதில்லை என புகார் தெரிவித்தனர்.மனுவை பெற் றுக்கொண்ட, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண் ணாரி எம் ,.எல். ஏ. இந்த நிதியாண்டில் பள்ளிக்கு தேவையான டெஸ்க், பெஞ்ச் வாங்கி தருவதாக  வும்,போக்குவரத்து மேலாளரை தொடர்பு கொண்டு பள்ளி நேரத்தில், முறை யாக பேருந்து விட, நடவடிக் கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.சட்டமன்ற உறுப்பினரின் உடனடி...

அரசுப்பள்ளி மாணவர்கள் பொருளாதார சூழலால் பின் தங்கி விடக்கூடாது என உழைத்து வரும் தலைமை ஆசிரியர் தாட்சாயினி.....

Image
 ஈரோடு மாவட்டம் சிவகிரியில்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இப் பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியின் தலைமை ஆசிரியை யாக  தாட்சாயினி  பணியாற்றி வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற உடனே  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காகவும் அவர்களின் கல்வி தரம் உயர்வதற்காகவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் செலவு செய்வது என முடிவெடுத்துள்ளார். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து அதற்கான பணிகளை செய்து வருகிறார்.        இவர் சிவகிரி பள்ளியில் முதல் பணியினை சத்துணவு கூடத்தில் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட சத்துணவு கூடத்தை ரூ 50,000 மதிப்பீட்டில்புனரமைத்து உள்ளார்.  பள்ளியின் கட்டடத்திற்கு வர்ணம் பூச  ரூ 60,000 தனது சொந்த செலவில் நிதியாக அழைத்துள்ளார்.  பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும்   பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுத்திட  தண்ணீர் பாட்டில்களுக்கு மாற்றாக  எவர்சில்வர் தண்ணீர் பாட்டில்களை  ரூ 88,000 சொந்த நிதியிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி உள்ளார்..  மேலும் இவர் கூற...

பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பாமக மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர்.இரா.விஜயராசா தலைமையில் கோரிக்கை மனு

Image
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தல் பேரில் இன்று பாட்டாளி  மாணவர்  சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட மாணவர் சங்க அமைப்பு செயலாளர் அருண்குமார் முன்னிலையில்,மாவட்ட மாணவர் சங்க செயலாளர்கள் குமார்,இரஞ்சித்குமார், மாவட்ட மாணவர் சங்க தலைவர்கள் மோகன்ராஜ்,தர்மராஜ், குப்புசாமி,விஜயன்,மாவட்ட மாணவர் சங்க துணை தலைவர்கள் கண்ணன்,சூர்யா,இளம் சமூக நீதி பேரவை செயலாளர் மகேஷ்வரன்,சட்டகல்லூரி அமைப்பாளர் பவித்ரன் ஆகியோருடன் இணைந்து   பள்ளி,கல்லூரி அருகில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் ஆரம்பகல்வி அடிப்படை உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்ததுகளை இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்ற கோரிமனு அளித்தனர். சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

கொடிவேரியில் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Image
 கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள  கொடிவேரி அணைக்கு அருகில் பவானி ஆற்றங்கரையில் சாய பட்டறை தொழிற்சாலை அமைவதை கண்டித்து   பாசன விவவாயிகள் சங்கங்கள் சார்பில் தலைவர் சுபி தளபதி தலைமையில் கொடிவேரி அணை பிரிவு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்க கூடிய கொடிவேரி அணையிலிருந்து  வடக்குப் பகுதியில் அரக்கன்கோட்டை மற்றும் தெற்கு பகுதியில் தடப்பள்ளி என இரண்டு கால்வாய்கள் மூலம் 24,504 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன,  அதுமட்டுமின்றி பவானி ஆற்று நீரானது, கோபி, நம்பியூர், பெருந்துறை, பவானி, அந்தியூர் பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, சிற்றூராட்சி பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது, இந்த நிலையில் இந்த கொடிவேரி அணைக்கு அருகாமையில்  ஏற்கனவே இயங்கி வந்து மூடப்பட்ட தொழிற்சாலை இருந்த இடத்தில் தற்போது தனியார் நிறுவனம் ஒன்று சாய பட்டறை தொழிற்சாலையயை அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட...