சேலம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அணு சக்தி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று முதல் நாளை 01.08.2023 இரண்டு நாட்கள் அணுசக்தி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற உள்ள நிலையில் ஏ.வி.எஸ் கல்லூரியும் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்துகின்றனர்.நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று தொடக்க விழாவுடன் நிகழ்ச்சி தொடங்கியது.கல்லூரியின் தலைவர் க. கைலாசம், செயலாளர் கை. ராஜ விநாயகம், தாளாளர் கை. செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.கல்லூரி முதல்வர் முனைவர்.கார்மல் மெர்சி பிரியா தலைமையுரை நிகழ்தினார்.துனை முதல்வர் ஆர்.மேகவண்ணன் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு விருந்தினர்களாக இந்திராகாந்தி ஆய்வு மையத்தை சார்ந்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் விழிப்புணர்வு தலைவர் ஜலஜா மதன் மோகன், தமிழ்நாடு அறிவியல் சங்கம் மனோகர், முதன்மை விஞ்ஞானி மண்டல இயக்குனர் முனைவர்.லட்சுமி நரசிம்மன், தலைவாசல் ஸ்ரீ கைலாஷ் மகளிர் கல்லூரி கே.பி.ஸ்ரீதேவி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணுசக்தி பற்றிய கருத்துக்களை மாணவர்களுக்கிடையே கலந்துரையாடி சிறப்புரையாற்றினார்கள்.முதல் நாள் நிகழ்வுகளாக கல்லூரியின் வ.உ.சி...