Posts

Showing posts from February, 2023

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது... பஞ்சவாத்தியம் முழங்க கோலாகலமாக நடந்த கொடியேற்றம்!

Image
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மன நோய் தீர்க்கும் புனிதத் தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. முருகப்பெருமான் வழிபட்ட தலமானதால் இந்த தளம் திருமுருகநாதசுவாமி திருக்கோவில் எனப்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்பு மிக்க திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதில், முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 10 மணிக்கு, விநாயகர் பிரார்த்தனை, மிருத்யங்க யாகம், அங்குரார்ப்பனம், ரிஷ்ப யாகம்  நடைபெற்றது. தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தெய்வானை, திருமுருகநாதர், பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. முன்னதாக திருமுருகநாதசுவாமி கோயிலில் உள்ள கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டு, கொடித்துணியில், அதிகாரநந்தி, சூரியன், சந்திரன், அஸ்திர தேவர் ஆகியவை வரையப்பட்டு பூமாலை அணிவித்து, திருக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.  திருக்கொடி கோயிலுக்குள் பிரகார உலாவந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க, கொடி ஏற்றப்பட்டது.  இ...

காங்கயம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி...30 பேர் படுகாயம்

Image
 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிழப்பு  -  முப்பதுக்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஓலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கொடுமுடி கோவிலுக்கு திதி கொடுக்க இன்று அதிகாலை சென்றுள்ளனர். திதி கொடுத்துவிட்டு மீண்டும் காங்கேயம் அருகே ஓலப்பாளையம் பகுதியிணை  நோக்கி வந்து கொண்டிருந்தபோது முத்தூர் செல்லும் வழியில் உள்ள வாலிபனங்காடு என்ற இடத்தில் திதி கொடுக்க சென்றவர்கள் வந்த சரக்கு வேன் மீது எதிரே வந்த லாரி மோதி உள்ளது.  இதில் சரக்குவேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சரக்கு வேனில் பயணித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிட்டுசாமி ,  பூங்கொடி , தமிழரசி , சரோஜா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர் மேலும் சரக்கு வேணி பயணித்துக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்டார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் . இந்த விபத்து குறித்து வெள்ளகோவில...

திருப்பூரில் அமமுக சார்பில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்... முன்னாள் மேயர் அ.விசாலாட்சி வழங்கினார்

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அமமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மா.பா.ரோகிணிகிருஷ்ணகுமார் ஆகி யோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். புல்லட் ரவி, இறை வெங்கடேஷ், கொங்குநகர் பகுதி கழக செயலாளர் சிவசக்தி ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.   இந்த விழாவில், பொதுமக்கள் 500 பேருக்கு பிரஷர் குக்கர், பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டுகள், சேலை, வேஷ்டி, அரிசிப்பைகள் ஆகியவை நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.  இந்த கூட்டத்தில், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது: மக்கள் செல்வர் பண்பாளர் அண்ணன் டிடிவி.தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவி தங்கத்தாரகை அம்மா அவர்களின் 75 வது பிறந்தநாள் விழா ப...

தூத்துக்குடி சிவன் கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - மேயர் ஜெகன் பெரியசாமி நடத்தி வைத்தார்.

Image
  தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறநிலைத் துறை திருக்கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு ரூ.20,000 வழங்கி வந்த நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பாக ரூ.50,000 ஆக உயர்த்தியுள்ளது.  4 கிராம் தங்கம், கட்டில், பீரோ, பாய், மிக்ஸி, மெத்தை, தலையனை, குத்துவிளக்கு, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கள் வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.  தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் (சிவன் கோவில்) உள் கலையரங்கில் வைத்து சரவணக்குமார் - சிவலெட்சுமி, கருப்பசாமி பாண்டியன்-நிரஞ்சனா ஆகிய இரு ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளின் ஹோமம் குண்டம் வளர்த்து கோவில் தலைமை அர்ச்சகர் கல்யாண சுந்தரம் என்ற செல்வம் பட்டர் தலைமையில் மந்திரங்கள் கூற மணமக்களுக்கு மாங்கல்யத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.  மங்கள வாத்தியம் மற்றும் கெட்டி மேளம் முழங்க இரு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.  விழாவில் கோவில் நிர்வாக செயல் அலுவலர் தமிழ்செல்வி, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி,...

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Image
  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.  ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் பொதுக்குழு முடிவை எதிர்த்து, ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு செல்லாது, இரட்டைத் தலைமையே தொடரும் என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு மூலம் எடப்பாடி தரப்பு அதிமுகவை கைப்பற்றியுள்ளது. இது ஒபிஎஸ் தரப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுனர்கள் பட்டியல் வெளியீடு - இந்தியா ஒஸ்ட், ஜப்பான் பெஸ்ட் !!

Image
  உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது. சிறந்த ஓட்டுனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அண்மையில் compare the market என்ற காப்பீடு நிறுவனம் ஒன்று உலகளாவிய பொது போக்குவரத்து பற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் பாதுகாப்பில் 2.17 புள்ளிகளுடன் தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. 2.28 புள்ளிகளுடன் பெரு 2ம் இடத்திலும் 2.28 புள்ளிகளுடன் லெபனான் 3ம் இடத்திலும் 2.34 புள்ளிகளுடன் இந்தியா 4ம் இடத்திலும் 2.36 புள்ளிகளுடன் மலேசியா 5ம் இடத்திலும் உள்ளன. அதே போல சிறந்த ஓட்டுனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 4.57 புள்ளிகளுடன் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. 4.02 புள்ளிகளுடன் நெதர்லாந்து 2ம் இடத்திலும் 3.99 புள்ளிகளுடன் நார்வே 3ம் இடத்திலும் 3.91 புள்ளிகளுடன் எஸ்டோனியா 4ம் இடத்திலும் 3.90 புள்ளிகளுடன் சுவீடன் 5ம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் சாலை பாதுகாப்பில் அதிகமான விபத்துகள் ஏற்படும் நகரமாக இந்திய தலைநகர் புதுடெல்லி உள்ளது. மேலும் இந்தியாவின் மு...

அதிமுக பொதுக்குழு விவகாரம் - ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.!

Image
  அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.  சென்னை உயர்நீதிமன்றம் பெஞ்ச் பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார் ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் பொதுக்குழு முடிவை எதிர்த்து, ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு செல்லாது, இரட்டைத் தலைமையே தொடரும்- தனி நீதிபதி தீர்ப்பு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் ...

தூத்துக்குடி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பயங்கரம் - வழக்கறிஞர் வெட்டிக் கொலை!!!

Image
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சோரீஸ்புரம் பகுதியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை! தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2.15 மணியளவில் அவர் கடையில் இருந்தபோது 3 பைக்குகளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.  பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதனால் கடையில் இருந்த 2 பெண் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலை குறித்து தகவல் அறிந்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் ந...

இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோர பள்ளத்தில் விழுந்த குழந்தை பலி

Image
   கரூர் புகளூர் வட்டம் நொய்யல் கொங்குநகர் அருகில் மூன்று பேர் குடம்பத்துடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி சாலைஓரம் பள்ளத்தில் விழுந்து விட்டார்கள் இதில் கணவன் மனைவி சிறு காயத்துடன் உயிர் தப்பினர்கள் 4 மாத கைகுழந்தை சிகிக்சை பலன் இன்றி உயிர் இழந்தது வேலாயுதம்பளையம் காவல் துறை அதிகாரிகள் சம்பவம் பற்றி விசாரணை செய்ததில்       நொய்யல் குறுக்கு சாலை பங்களா நகரைச் சார்ந்த ஹரி தர்ஷன், நித்தியா அவர்களின் இளைய மகன் நான்கு மாதமே ஆன மகிழன் என்பது தெரியவந்தது , விபத்தில் மரணம் அடைந்த குழந்தையின் உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.4 மாத குழந்தை விபத்தில் இறந்ததை அறிந்து அந்த கிராமமே சோகத்தில்  மூழ்கியுள்ளது..

ரூ 7 கோடி மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகள்... கோபி நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் தொடங்கி வைத்தார்

Image
  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிகுட்பட்ட மின் நகர், காமாட்சி அம்மன் கோயில் வீதி,கிழக்கு பார்க் வீதி, ஜெயராமன் வீதி, சதா சிவம் வீதி, ஜி சி ஆர் நகர், அனுமன் கோயில் வீதி,எஸ் டி என் காலனி, முத்துசா வீதி,கிழக்கு மற்றும் மேற்கு தேர் வீதி, செங்கோட்டையன் காலனி, அன்பு நகர் உள்ளிட்ட 13இடங்களில் ரூ 7கோடி மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு கோபி நகர் மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் கலந்து கொண்டு பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த்,துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில் குமார், கார்த்திக்,10வது வார்டு செயலாளர் கே. டி. செந்தில் குமார் உட்பட நகராட்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் அ. ஆ. அகத்தியன் பிறந்தநாள் விழாவில் 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

Image
 ஆன்மீக மக்கள் தொண்டு  இயக்கம் சார்பில் வழக்கறிஞர் அ. ஆ. அகத்தியன்  பிறந்தநாள் விழாவில் 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர். மேல்மருவத்தூர்  ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் பேரனும், ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகனின்  ஆஷா அன்பழகன் ஆகியோரின் மகன் வழக்கறிஞர் அ.ஆ.அகத்தியன் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் காலை ஆதிபராசக்தி சித்தர் இடத்தில் கோலாகலமாக நடந்தது.இந்த நிகழ்ச்சி ஒட்டி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.   வழக்கறிஞர்  அ. ஆ. அகத்தின் கலந்து கொண்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்தார். இதனைத் தொடர்ந்து தாத்தா பாட்டியான ஆன்மீக குரு பங்காரு அடிகளார், ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோரிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் சித்தர் பீட வளாகத்தில்  செவ்வாடை பக்தர்களுடன் தனது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பெரும்பேர் கண்டிகை முதியோர் இல்லம், பொலம்பாக்கம் தொழு நோயாளி...

திருப்பூர் தடகள சங்க செயற்குழுக்கூட்டம் -புதிய நிர்வாகிகள் தேர்வு

Image
 திருப்பூர் தடகள சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நிகழ்வானது காங்கேயம் சாலையிலுள்ள, காயத்ரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவரும், திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவருமான ஆர்.பி.ஆர்.ஏ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். முத்துக்குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் தடகள சங்கத்தின் நிர்வாக வசதிக்காக புதிதாக உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி சங்கத்தின் மூத்த துணைத்தலைவராக திருப்பூர், கிட்ஸ் கிளப் பள்ளிக்குழுமங்களின் சேர்மன்  மோகன் கே.கார்த்திக், துணைத்தலைவர்களாக சந்தீப் குமார், வெங்கடேசன், ஜெயப்பிரகாஷ், மதிவாணன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் பொருளாளராக  மணிவேல், இணைச் செயலாளர்களாக ஜெ.அழகேசன், நிரஞ்சன் மற்றும் ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் சங்கத்தின் கடந்தாண்டு செயல்பாடுகள் அறிக்கையாக வாசிக்கப்பட்டது. மேலும், சங்கத்தின் எதிர்கால திட்டங்கள், மற்றும் செயற்குழுக்கூட்டத்தின் முடிவுகள் அறிவிக்கப...

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தர மறுக்கும் பி.டி.ஓ., ஜெயக்குமார்!... ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

Image
திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சியில் உள்ள அரண்மனை காட்டுப்புதூர் ஆதி திராவிடர் காலணி பெண்கள் உள்பட சுமார் 30 பேர், வெள்ளகோவில் நகராட்சி கவுன்சிலர் விஸ்வெஸ்வரன் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார்கள். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திட்குட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சியில் அரண்மனைக்காட்டுபுதூர்  ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் எங்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லாததால் MGNREGS திட்டத்தின் கீழ் திறந்த வெளிக்கிணறு அமைக்கப்பட்டு அதில் போதிய அளவு தண்ணீர் நிரம்பி உள்ளது. பொதுமக்கள் ஆகிய நாங்கள் நமக்கு நாமே திட்டத்தில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய நிர்வாக அனுமதி பெற்று தர வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரிடம் கடந்த 15.12.2022 அன்று பொதுமக்களின் மனு மற்றும் வங்கி வரைவோலை கிராம நிர்வாக அலுவலர் சான்று, ஊராட்சி மன்றத் தலைவரின் தீர்மானம் இவைகள் அனைத்தும் வழங்கியும் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்மொழிவு அனுப்ப மறுத்து வந்தார்.  அதனால் 02.01.2023 திங்கள...

ஆறு அடி நீள புலியை அடிச்சு அசால்ட்டா விற்பனைக்கு கொண்டு வந்த வட மாநிலத்தவர்கள்... எந்த காட்டுல அடிச்சாங்கனு விசாரிக்குது சத்தியமங்கலம் வனத்துறை!

Image
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில், பத்து வனச்சரகங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை வனத்துறையினருக்கு, கிடைத்த  தகவலின் அடிப்படையில், சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூரில், வட நாட்டைச் சேர்ந்த சிலர், டென்ட் அமைத்து தங்கி இருந்ததாக தெரிய வந்தது.  வனத்துறையினர் அவர்களது டென்ட்டை அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது, அங்கு இரண்டு பேக்குகளில், சுமார் ஆறடிக்கும் மேலான நீளமுள்ள, புலித்தோல் மற்றும் புலி உடம்பின் பல்வேறு பாகங்கள் இருந்தது.  உடனே அங்கிருந்த நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்து, வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புலித்தோலையும் , அதன் உடலின் பல்வேறு பாகங்களையும் விற்பனைக்காக கொண்டு வந்தது ராஜஸ்தானைச் சார்ந்த ராம் சங்கர் வயது 50, பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் வயது 59,மங்கள் வயது 28, ரத்தனா வயது 40 என்பதும் தெரியவந்தது.  மேற்படி நபர்களிடம் வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு, வருகின்றனர்.  பின்னர்இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த, சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி கூறுகையில், மேற்பட...

திருப்பூர் ரயில் நிலையத்தில் கத்தியுடன் மிரட்டல்... 2 மணி நேரம் போலீசாரை பாடாய் படுத்திய வாலிபர்

Image
 திருப்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் கத்தியுடன் நின்று கொண்டு மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளுக்கு ரயில் டிக்கெட் வழங்குவது 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று உள்ளே நுழைந்தார். முதல் பிளாட்பாரம் டிக்கெட் கவுண்டரில் பயணிகள் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு கத்திக் கொண்டே ஓடி வந்த அந்த நபர் கையில் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தார்.  ஒரு கையால் கத்தியை வைத்து தனது கையை கீறி கொண்டு கூச்சலிட ஆரம்பித்தார். எம்எல்ஏ இங்கு வரவேண்டும் தனது பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்பது போல அவர் சத்தம் போட்டார். இதை பார்த்து டிக்கெட் எடுக்க வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிக்கெட் கவுண்டரில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.  உடனடியாக அங்கு இருந்த ரயில்வே போலீஸ் இன்ஸ்பெகடர் ராஜா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அன்னம்,  போலீஸ்காரர் கோபி உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேடிக்கை பார்க்க திரண்ட பொதுமக்களை அவர...

4 மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் - தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

Image
கவனக்குறைவாகச் செயல்பட்ட தலைமையாசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசகாயு இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.!

அவசரகதியில் தொடங்கப்பட்ட வாறுகால் பணிகள் - கிடப்பில் போடப்பட்டதால் வீட்டிற்குள் செல்லவே அவதிப்படும் மக்கள்..

Image
  அந்தரத்தில் நடக்க வைத்த அவல நிலை - கேட் இல்லை என்பதால் இரவு பகலாக வீட்டில் காவல் காக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்... கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி விஸ்வநாத  நகர். இந்த நகரில் கடந்த மாதம் 4ந்தேதி வாறுகால் அமைக்கும் பணி  ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அந்த நகரில் முகப்பின் ஒரு பகுதியில் அதிகமான மின்கம்பங்கள் அடுத்தடுத்து இருக்கும் இடத்தில் அதனை அகற்றி மாற்று ஏற்பாடு செய்யமால் அப்படியே வாறுகால் பணிகளை தொடங்கியுள்ளனர்.  இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் எதையும் காதில் வாங்கி கொள்ளமால் பணிகளை தொடங்கி தற்பொழுது அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.  வளைந்து நெளிந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வாறுகாலில் மேலும் பணிகள் மேற்கொள்ள அப்பகுதியில் உள்ள சில வீடுகளில் ஒன்றை அடி இடம் வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் கேட்டுள்ளனர். எவ்வித முன் அறிவிப்பு, திட்டமிட்டு செய்யமால் தற்பொழுது எங்கள் இடத்தினை கேட்டால் நாங்கள் எப்படி தரமுடியும் என்று கூற மேற்கொண்ட பணிகள் எதுவும் நடைபெறமால் ...

ஆற்றில் குளிக்க சென்ற 4 மாணவிகள் பரிதாப பலி... மேலும் 3 மாணவிகளை துணிச்சலாக காப்பாற்றிய சக மாணவி கீர்த்தனா!

Image
 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சார்ந்த பிலிப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் 15 பேர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க திருச்சி மாவட்டம் தொட்டியம் வந்திருக்கிறார்கள். அவர்கள் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விட்டு, கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள கதவனைக்கு வந்தனர். மாயனூர் கதவணை அருகே செல்லாண்டியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, கதவணையை சுற்றிப் பார்த்தனர். அங்குள்ள காவிரி ஆற்றில் மாணவிகள் ஆனந்தமாய் குளித்து விளையாடி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவி மூழ்கி உள்ளார். அதை பார்த்து காப்பாற்ற சென்று 7 மாணவிகள் நீரில் சிக்கி தத்தளித்தனர். எட்டாம் வகுப்பு மாணவி தமிழரசி, ஏழாம் வகுப்பு மாணவி சோபியா, ஆறாம் வகுப்பு மாணவிகளான இனியா மற்றும் லாவண்யா ஆகிய நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள். அவர்களுடன் வந்த கீர்த்தனா என்கிற கிருத்திகா என்ற மாணவி தண்ணீரில் மூழ்கிய மூன்று பேரை துணிச்சலாக காப்பாற்றி கரை ஏற்றி இருக்கிறார். இதனால் அவர்கள் மூன்று பேரும் தப்பித்தனர். மாணவிகள் நீரில் மூழ்கி பலியானதை அடுத்து செய்வதறியாத திகைத்த ஆசிரியர்களும் மற்ற மாணவர...

பாஜகவிலிருந்து சிபி ராதாகிருஷ்ணன் விலகல் - அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதம்.!

Image
ஜார்கண்ட் மாநில கவர்னராக பாஜகவின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். இவர் வரும் பிப்.,18 ம் தேதி ஜார்கண்ட் மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், அவர் பாஜகவில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இன்று(பிப்.,15) வழங்கினார்.

படியில் தொங்கிய மாணவனை தட்டி கேட்ட ஓட்டுனருக்கு அடி உதை!

Image
 தாம்பரம் அருகே பேருந்து படிகட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவனை தட்டி கேட்ட ஓட்டுனரை தாக்கிவிட்டு தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது சென்னை தாம்பரத்தில் இருந்து அகரம்தென் நோக்கி தடம் எண் 31A மாநகர பேருந்து வந்து கொண்டிருந்தது பேருந்தை ஓட்டுனர் பிரதீப் குமார் இயக்கி வந்தார், கேம்ப்ரோடு பேருந்து நிலையத்தில் ஏறிய கல்லூரி மாணவர் ஒருவர் படிக்கட்டில் தொங்கியவாறு சாலையில் கால்களை தேய்த்து கொண்டு வந்துள்ளார், இதனன ஓட்டுனர் இரண்டு முறை கண்டித்தும் அதே செயலில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த ஓட்டுனர் நடு வழியிலேயே பேருந்தை நிறுத்திவிட்டு கல்லூரி மாணவிடம் வாக்குவாத்த்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஓட்டுனர் பிரதீப் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். தினமும் பேருந்தில் பயணிக்கும் மாணவன் என்பதால் திருவஞ்சேரி தனியார் கல்லூரிக்கு பேருந்துடன் சென்ற ஓட்டுனர் பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்ப் வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரை பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை - மதுபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4052 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து.!

Image
  நெல்லை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4052 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து மேலும் 1665 பேரின் உரிமத்தை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.க்கு மாநகர போலீசார் பரிந்துரை 

மங்களூர் குக்கர் குண்டு விசாரணைக்காக திருப்பூரில் இரண்டு பேரை அழைத்து சென்ற என்.ஐ.ஏ., அதிகாரிகள்...

Image
திருப்பூர் மாநகரில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை - இருவரை விசாரணைக்காக பெங்களூர் அழைத்துச் சென்றுள்ளனர் கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   ‘ அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாநகருக்குட்பட்ட ராம் காலனி  மற்றும் நல்லூர் மண்டலத்திற்குட்பட்ட திருநகர் உள்ளிட்ட இருவேறு இடங்களில் என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டனர் .  ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் இருவர் வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ முகமை அதிகாரிகள், சோதனை முடிவில் ராம் காலனியில் உள்ள முகமது ரிஸ்வான் மற்றும் நல்லூர் சிறுநகரைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா ஆகிய இருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.  கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்காக இருவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாந...

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு.!

Image
  தூத்துக்குடியின் மையப்பகுதியில் புகழ்பெற்ற பழமையான சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் உடனுறை சிவன் கோவில் அமைந்துள்ளது. வரும் சனிக்கிழமை 18-ம் தேதி சனி பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இரு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.  சனிபிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஒரே நாளில் வருவதையொட்டி பக்தர்களின் நலன்கருதி அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து, சிவன் கோவில் உள் அரங்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற பின், கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் கல்யாணசுந்தரம் (எ) செல்வம் பட்டர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில்... ..சனிபிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஆகிய இரு நிகழ்வுகள் ஒரே நாளில் வருவது மிகவும் சிறப்பானதாகும். இதனையொட்டி வழக்கம் போல் நடைபெறும் பிரதோஷ வழிபாடு மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, 5 மணிக்குள் நிறைவு பெறும். அதன் பின் சிவராத்திரி நிகழ்வையொட்டி கோவிலுக்கு ஓம் நமச்சிவாய எழுத வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கட்டமைப்பு பணிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும். அன்று இரவு 10, 12, 2, 5 என நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து அபிஷ...

மறுபடியும் தள்ளிப்போனது திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு! மார்ச் மாதத்திலாவது நடக்குமா?

Image
சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. அதற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.  (அலகுமலை வாடிவாசல் - பைல் படம்) ---------------------------------------------------------------------------------------- திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலை காளைகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.  அலகுமலை ஜல்லிக்கட்டில் வழக்கமாக 600க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள். பரிசுகளும் ஏராளமாக வழங்கப்படும்.  இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திருப்பூர் அலகுமலை மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஜனவரி 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஜல்லிக்கட்டு வாடிவாசல், கேலரி அமைப்பதற்கான பூமி பூஜையும் நடபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடம் குறித்து அலகுமலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் தூயமணி தலைமையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு த...

கார் குண்டு வெடிப்பு பின்னனியில் யார்.. யார்?...சென்னை, கோவை, நெல்லையில் இன்று என்.ஐ.ஏ., சோதனை!

Image
 கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட பயங்கர வெடி குண்டு மூலப் பொருட்கள் வெடித்து விபத்துக்குள்ளானது. பலரும் கார் சிலிண்டர் வெடிப்பு என்று கூறி வந்த நிலையில், அது சதித்திட்டத்தின் பின்னணி என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.   இந்த குண்டு வெடிப்பில் ஜமீசா முபின் என்ற வாலிபர் பலியானார். ஜமேசா முபீன் பின்னணி மற்றும் அவர்களின் சகாக்கள் உள்ளிட்டவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் முகமது தல்கா , முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்டோடர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.   இந்த வழக்கை கையில் எடுத்த என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணையின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே கோவை வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் ஜமீஷா முபீனின் மனைவி மற்றும் முன்னாள் கைதான நபர்களிடம் வாக்குமூலம் பெற்று ஆவணப்படுத்தி இருந்தனர்.  அதன் அடிப்படையில் இன்று காலை சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட 60 இட...

ஆசிய அளவிலான உள்ளரங்க தடகளம் சென்று வந்த வீரர்களுக்கு வரவேற்பு

Image
ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கஜகஸ்தான் நாட்டில் 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவெல், ஜெஸ்வின் ஆல்ட்ரின்,ரோசி மீனா பால்ராஜ், பவிதார் ஆகியோர் சென்னை திரும்பினார்.அவருடன் தடகள சங்க செயலாளர் லதா, திமுக எம்.பி. அப்துல்லா ஆகியோர் வநதனர். சென்னை விமான நிலையத்தில் வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தடகள சங்கத்தினர் சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா கூறுகையில், ஆசிய உள்ளரங்க இந்தியா சார்பில் 25 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 7 பேர் கலந்து கொண்டனர்.இந்தியா 1 தங்கம், 6 வெள்ளி, 1 வென்கலம் என 8 பதக்கங்களை பெற்றது. இதில் 3 வெள்ளி, 1 வென்கலம் என 4 பதக்கங்களை தமிழ்நாடு வீரர்கள் பெற்று உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு துறையில் மேம்படுத்தி வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த...

பஸ் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

Image
 மாநகர பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலி, பேருந்து ஓட்டுநர் கைது.  செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கத்தை சேர்ந்தவர் ரவி(48), பெயிண்டிங் ஒப்பந்த பணி எடுத்து செய்து வருகிறார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலை அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்து நிலையம் அருகே மாநகர பேருந்து நின்று கொண்டிருந்தது. அதற்கு பின்னால் தடம் எண் 515 மாமல்லபுரத்திலிருந்து, தாம்பரம் வந்துள்ளது, முன்னால் பேருந்து நின்றிருந்ததால் வலது பக்கம் பேருந்தை திரும்பி சாலையில் சென்ற போது சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மோதியதில் ரவி பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் தணிகைவேல்(44), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் 1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நெக்லஸை திருடியவர் கைது.!

Image
தூத்துக்குடியில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நெக்லஸை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த புலமாடன் மகன் சின்னதுரை (40) என்பவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நெக்லஸ் கடந்த 17.01.2023 அன்று காணாமல் போயுள்ளது. இதுகுறித்து சின்னத்துரை இன்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் சின்னத்துரையின் உறவினரான கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மகன் சின்னதுரை (21) என்பவர் தங்க நெக்லஸை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் சின்னத்துரையை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூ.1லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் நெக்லஸையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தூத்துக்குடி பேருந்து நிலைய பகுதியில் புதிய கழிப்பறை கட்டும் பணி - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு .

Image
  தூத்துக்குடி மாநகராட்சியில் பிரையன்ட் நகர், மாசிலா மணிபுரம், செல்சினி காலனி, ஸ்டேட் பேங்க் காலனியில் நடை பெற்று வரும் புதிய சாலைப் பணிகளையும், புதுபிக்கப்படும் பணிகள் நடைபெற்று வரும் பழைய பஸ் நிலையத்தையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு விரைவாக பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து புதிய பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்று வரும் புதிய கழிப்பறை மற்றும் அதன் அருகே உள்ள கலைஞர் மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியில் நடைபெற்று வரும் சுத்தப்படுத்தும் பணிகளையும் ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வின் போது மேயருடன் துறை சார்ந்த அதி காரிகள் அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய குடற்புழு நீக்க முகாம்: தூத்துக்குடியில் ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்!

Image
  தூத்துக்குடியில் பொது சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  வழங்கினார்.  தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்கும் திட்டம் மூலம் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க நாள் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை  மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், போதையில்லா தமிழகம் என்ற நிலையை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஒரு சிகரெட்டில் 7000க்கும் மேற்பட்ட இரசாயணப் பொருட்கள் உள்ளன. இதில் 93 பொருட்கள் புற்றுநோயினை உண்டாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பழக்கத்தினால் 90 சதவீதம் நுரையீரல் புற்றுநோய் வருகிறது. புகைப்பழக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உலகம் ...

ரயில்ல திருட்டு கேள்விப்பட்ருக்கோம்.. ஒரு ரயிலையே திருடிட்டாங்க பாஸ் கேள்விப்பட்ருக்கீங்களா!? - அதுவும் 90 கண்டெய்னர்களுடன் மாயமான சரக்கு ரயில்.. திணறும் அதிகாரிகள்!

Image
நாக்பூரில் இருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சமீபத்தில் பீகாரில் 2 கி.மீ நீளமுள்ள தண்டவாளம் காணாமல் போனது ஷாக் கொடுத்த நிலையில், தற்போது ஒரு ரயிலே காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 1 அன்று நாக்பூரில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், அடுத்த நான்கைந்து நாட்களுக்குள் மும்பையை அடைந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது 14 நாட்களாகியும் அந்த சரக்கு ரயில் மும்பைக்குச் சென்று சேரவில்லையாம். PJT1040201 என்ற எண் கொண்ட சரக்கு ரயில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் MIHAN இன்லேண்ட் கண்டெய்னர் டிப்போவில் இருந்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மும்பைக்கு புறப்பட்டது. இந்த ரயில் 90 கண்டெய்னர்களுடன் கிளம்பியுள்ளது. அந்த ரயில் 4 அல்லது 5 நாட்களில் மும்பையைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த சரக்கு ரயில் கண்டெய்னர்களுடன் மும்பை வந்து சேரவில்லை. ஆனால் 14 நாட்களாகியும் ரயில் எங்கிருக்கிறது என்று எந்த இடத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை.  ஆதாரங்களின்பட...

தேன்கனிக்கோட்டை அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் உள்பட 3 பேர் பரிதாப பலி

Image
 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். 45 வயதான இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இவருடைய மகள்கள் தமிழரசி (வயது 19), தமிழ் பிரியா (வயது 17).  இதில் தமிழரசி தருமபுரியில் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கார்டியாடிக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  இரண்டாவது மகள் தமிழ்பிரியா  சேலம் தனியார் கல்லூரியில் பிசியோதரபி படித்து வந்திருக்கிறார்.  இந்தநிலையில்  தமிழ்அரசியும், தமிழ்பிரியாவும் அதே ஊரைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் 10 வயது மகன் அம்பேத்வளவன்  என்ற சிறுவன் உடன்  இருசக்கர வாகனத்தில் தேன்கனிக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.  அப்போது சாப்பராணப்பள்ளி அருகே உள்ள வளைவில்,  இவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது  கோழி தீவனம் ஏற்றி சென்ற டெம்போ லாரி மோதியுள்ளது.  லாரி சக்கரம் ஏறியதில் 3 பேரும்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.  தேன்கனிகனிக்கோட்டை போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவ...

தூத்துக்குடியில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை - அகற்ற வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்!

Image
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவில் டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. அருகில் பள்ளிக் கூடம் செயல்பட்டு வருகிறது. போதையில் வரும் நபர்களால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும், பெண்களும் மிகவும் சிரமத்தில் ஆளாகி வருகிறார்கள். இதைப் பற்றி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த காசிலிங்கம், ராஜவேல், மான்சிங் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். 

ரூ.42 ஆயிரம் லஞ்சம்: தாசில்தார், துணை தாசில்தார் கைது - லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி.!

Image
  ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் இயங்கி வரும் மழலையர் பள்ளிக்கு பொது கட்டட அனுமதி சான்றிதழ் கொடுக்க 42 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் துணை தாசில்தார் மங்கையர்கரசி ஆகியோரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரே நாளில் ரூ.53,000 கோடி இழப்பு - உலக கோடீஸ்வரர் பட்டியலில் 24வது இடத்திற்கு சரிந்த கவுதம் அதானி.!!

Image
  அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரே நாளில் ரூ.53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில்  உலக கோடீஸ்வரர் பட்டியலில் 24வது இடத்திற்கு தொழில் அதிபர் கவுதம் அதானி சரிந்துள்ளார்.  ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன அறிக்கை வெளியானதை தொடர்ந்து பங்குச் சந்தையில் அதானி குழும பங்கு விலைகள் சரிந்து வருகின்றன.கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்து விட்டது. கடந்த டிசம்பரில் ரூ.12,40,353 கோடியாக இருந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.4,33, 297 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.அதானி சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்த அதானி 24வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதானி குழும பங்கு விலைகள் நேற்று ஒரே நாளில் 5% சரிந்ததால் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.51,525 கோடி வீழ்ச்சியடைந்தது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் இன்றும் 5% சரிந்ததால் சந்தை மதிப்பு மேலும் ரூ.50,000 கோடிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது. ஜனவரி 24ம் தேதி ரூ.19.2 லட...

சென்னை ஐஐடி வளாகத்தில் 2 மாணவர்கள் தற்கொலை முயற்சி - 1 மாணவர் உயிரிழப்பு , மாணவர்கள் போராட்டம்..!

Image
  சென்னை ஐஐடியில் இரு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதில், மகாராஷ்டிராவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவன் ஸ்ரீவன் சன்னி உயிரிழப்பு. அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற மற்றொரு மாணவன், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் விடுதிக்கு திரும்பினார். மாணவரின் தற்கொலையை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி மாணவர், வளாகத்தில் உள்ள விடுதி அறையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தற்கொலை செய்துகொண்டார். நம்பகமான ஆதாரங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை வளாகத்தில் இரண்டாவது, தொடர்பில்லாத தற்கொலை முயற்சியும் பதிவாகியுள்ளது. மாணவி மீட்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல் மாணவியின் மரணத்தை நிர்வாகம் மெத்தனமாக கையாண்டது மாணவர்களிடையே போராட்டத்தை தூண்டியது  இது குறித்து அடையாளம் வெளிப்படுத்த  விரும்பாத ஒரு மாணவர் பிரதிநிதி  கூறியதாவது  , நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகளுக்கு மரணம் குறித்து தெரிவிக்கவில்லை, மேலும் அவர்கள் மா...

குஜராத் கலவர BBC ஆவணப்படம் - பிபிசி அலுவலகத்தில் திடீர் வருமான வரித்துறை சோதனை.!

Image
  டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்தின் (பிபிசி) அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஊழியர்களின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களும் அலுவலகத்தை விட்டு சீக்கிரம் வீட்டிற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  குஜராத் கலவரங்கள் சார்ந்த BBC ஆவணப்படம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பிய நிலையில் இந்த வருமானவரிச் சோதனை நடைபெறுவது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது மும்பையின் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் (பிகேசி) பகுதியில் உள்ள பிபிசி வளாகத்தையும் வருமான வரித்துறையின் டெல்லி குழு கண்காணித்து வருகிறது. சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பணப்பரிவர்த்தனை விலை நிர்ணயம் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி பிபிசி வளாகம் முழுவதும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பிபிசி வளாகத்தில் நடந்த ஐடி ரெய்டுகளுக்கு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்தது.  “முதலில் பிபிசி ஆவணப்படம் வந்தது, அது தடைசெய்யப்பட்டது. இப்போது பிபிசியை ஐடி ரெய்டு செய்துள்ளது. அறிவிக்கப்படாத அவசரநிலை” என தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பற்றி...

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் 4,000 செவிலியர்கள் நியமனம் - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.!

Image
  தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் 4,000 செவிலியர்கள் நியமிக்கப்படுவர் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுப்பிரமணியன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 4,308 மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதாக கூறினார். 

ஹிண்டன்பர்க் அறிக்கை - அதானி குழுமம் எல்ஐசி மற்றும் எஸ்பிஐக்கு எதிராக விசாரணை கோரி உச்ச நீதி மன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல்.!

Image
  ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதான் குழும ஊழல் குறித்து அதானி குழுமத்திற்கு எதிராக விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மனு தாக்கல் செய்தார். சந்தையில் பங்குகளின் விலை ரூ. 1800 ஆக இருந்தபோது, ​​அதானி குழும பங்குகளில் ரூ 3200 முதலீடு செய்ததாகக் கூறப்படும் எல்ஐசி மற்றும் எஸ்பிஐக்கு எதிராகவும் விசாரணை கோரி மனு தாக்கல்.