Posts

Showing posts from June, 2024

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சியில், சிறப்பு கிராம சபை கூட்டம். ஈரோடு மாவட்ட, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பங்கேற்பு.

Image
கிராமங்களே,  நாட்டின் முதுகெலும்பு. கிராம வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை மையமாகக் கொண்டு,அடித் தட்டு மக்களின் ஜனநாயக உரிமை களை எதிரொலிக்கும், கிராமசபை கூட்டங்கள் ஆண்டு தோறும் ஆறு முறை நடைபெறுவது வழக்கம், மேலும் கிராம வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசு திட்டங்களை செயல் படுத்திட சிறப்பு கிராமசபை கூட்டங் களும் நடைபெறும்.அதே போல், அரசின் அறிவிப்பு மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி,சிறப்பு கிராம சபை கூட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமார பாளை யம்  ஊராட்சியில். ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் தலைமையில்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ். ரமேஷ், முன்னிலையில் நடைபெற்றது.  கூட்டத்தில்,ஈரோடு மாவட்ட ஊராட்சி களின் உதவி இயக்குனர் உமாசங்கர் சிறப்பு பார்வையாளராக, பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தைப் பற்றியும், அரசின் வளர்ச்சி திட்டங்கள் பற்றியும், விரிவாக எடுத்துக் கூறியும், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற,பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் பேசினார்.  கூட்டத்தில்,சத்தியமங்க...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், மாக்கினாங் கோம்பை ஊராட்சியில், சிறப்பு கிராம சபை கூட்டம்.

Image
அடித்தட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை எதிரொலிக்கும் கிராமசபை கூட்டங்கள் ஆண்டு தோறும் ஆறு முறை நடைபெறுவது வழக்கம், மேலும் அரசால், அவ்வப் போது அறிவிக்கப்படும்  கிராம வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்திட சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெறும். அதேபோல், அரசின் அறிவிப்பின்படி,  கலைஞரின் கனவு இல்ல திட்டம் தொடர்பான, சிறப்பு கிராம சபை கூட்டம்,  மாக்கினாங்கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு.கே. ஈஸ்வரன்தலைமையில்.நடைபெற்றது கூட்டத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சாமி கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்தும்,பழுதடைந்த அரசு வீடுகள் பராமரிப்பு குறித்தும், அரசு மேற்க் கொண்டுள்ள  நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.கடத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல் ஊராட்சி பகுதியில், போதை ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் அதன் தீங்கு பற்றிய விழிப்புணர்வு குறித்து, பொதுமக்களிடம் பேசினார்.  கூட்டத்தில்,ஊராட்சி மன்ற உறுப் பினர்கள் பண்ணாரி , சுக்கான் மற்றும் ஏராளமான பொதுமக்கள...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி பகுதி ஊராட்சிகளில், நாளை சிறப்பு கிராமசபை கூட்டம்..

Image
 அடித்தட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை எதிரொலிக்கும் கிராமசபை கூட்டங்கள் ஆண்டு தோறும் ஆறு முறை நடைபெறுவது வழக்கம், மேலும் கிராம வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்திட சிறப்பு கிராமசபை கூட்டங்களும்நடைபெறும்.அதேபோல், கலைஞரின் கனவு இல்ல திட்டம் 2024-25 மற்றும் அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்டு, பழுதடைந்த குடியிருப்புகள் பராமரிப்பு செய்தல் 2024 - 25 திட்டத்தின் கீழ், கிராம அளவிலான குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலை, கிராம சபையில் பொதுமக்களின் பார்வையில் வைத்து, ஒப்புதல் பெறுவதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சி கள் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சி கள் மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கோரிக்கை நிறைவேறியது மயிலாடுதுறை தீப்பாய்ந்தம்மன் எரிவாயு தகன சுடுகாட்டில் 220 அடியில் போர்வெல் அமைப்பு தண்ணீர் பற்றாக்குறை நீக்கம் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நன்றி

Image
கோரிக்கை நிறைவேறியது! *மயிலாடுதுறை தீப்பாய்ந்தம்மன் எரிவாயு தகன சுடுகாட்டில் 220 அடியில் போர்வெல் அமைப்பு! தண்ணீர் பற்றாக்குறை நீக்கம்! சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் நன்றி!**   மயிலாடுதுறை தீப்பாய்ந்தம்மன் தகன எரிவாயு சுடுகாட்டில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் இன்றி துக்க காரியத்திற்கு வருகின்றவர்கள் பெரும் அவதி உற்றார்கள். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்மோட்டாரை மீண்டும் இயக்கிடவோ அல்லது புதிய போர்வெல் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை வைத்திருந்தார். அக்கோரிக்கை செய்தி கடந்த தினத்தந்தி 10-6-2024 மற்றும் தினகரன் நாளேட்டில் 11-6-2024 ல் மயிலாடுதுறை எரிவாயு சுடுகாட்டில் தண்ணீர் பற்றாக்குறை! இறுதி சடங்கு செய்ய முடியாமல் அவதி என்னும் தலைப்பில் செய்தி வெளியானதை அடுத்து உடனடியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 220 அடி ஆழத்தில் போர்வெல் புதிதாக அமைக்கப்பட்டு தற்பொழுது முழுமையாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பிரேதங்களை இறுதிச் சடங்குகளை செய்து எரியூட்டும் துக்க நிகழ்ச்சிகளுக்கு வருகின்றவர்களும் உறவினர்களும...

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள பள்ளங்களை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெரும் முயற்சியில் நகர் மன்ற உறுப்பினர் மணிவண்ணன், என்ஜிஎஸ். குருசங்கர் மற்றும் ஜிகே ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டது

Image
*மயிலாடுதுறை அரசு மருத்துவமனை ஜிஎச் சாலையில் உள்ள பள்ளங்களை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெரும் முயற்சியில் நகர் மன்ற உறுப்பினர் மணிவண்ணன், என்ஜிஎஸ். குருசங்கர் மற்றும் ஜிகே ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் JCP எந்திரம் மற்றும் 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பேருதவியுடன் சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டது!* *மக்கள் பெரும் மகிழ்ச்சி!*   மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தினசரி வருகை தரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அச்சாலையைக் கடக்கும் அனைத்து வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றன என்பதாலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுவதாலும் மயிலாடுதுறை தொகுதியின் வடக்கு பகுதியை முழுமையாக இணைக்க கூடிய இச்சாலை பள்ளங்கள் இன்றி அமைக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். இச்சாலையின் அவசியம் மிகவும் முக்கியமானதாக உள்ளதால் பல மாதங்களாக இப்பள்ளங்கள் மூடப்படாததால் கேட்பாரற்ற நிலையிலும் உள்ளதால் மக்களின் நலன் கருதி உடனடியாக இச்சாலையை மேம்படுத்திடவும் பள்ளங்களை உடனடியாக மூட...

இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை புரோசான் மால் சார்பாக மாரத்தான் போட்டி

Image
இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை புரோசான் மால் சார்பாக மாரத்தான் போட்டி.. வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள இதில்,சினிமா பிரபலங்கள் உட்பட ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக புரோசோன் நிர்வாகத்தினர் தகவல்… கோவை சத்தி சாலையில் உள்ள சரவணம்பட்டி அருகே புரோஜோன் மால் சார்பாக கோ க்ரீன் மாரத்தான் (GO Green Marathon) தொடர் ஓட்ட நிகழ்வு வருகின்ற ஜூன் 30-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற உள்ள, இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் டி-ஷர்ட் அறிமுக விழா புரோஜோன் மாலில் நடைபெற்றது. இதில் புரோசோன் மால் நிர்வாக அதிகாரிகள் விஜய் பாட்டியா,பாபு,பிரிங்ஸ்டன் நாதன்,முஷம்மல்,சுபத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தான் டி ஷர்ட்டை அறிமுகம் செய்து வைத்து பேசினர்.ஜூலை 30ந்தேதி நடைபெற உள்ள,போட்டயை கோவை மாநகர காவல்திறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைப்பதாக கூறிய அவர், மாரத்தான் போட்டியில் பல்வேறு திரை பிரபலங்கள்,முக்கியஸ்தர்கள் என ...

சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு துவக்க விழா

Image
சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் 16வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 105 வது வட்டம் சார்பாக கொடி ஏற்றி பெயர் பலகை திறந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட நகர ஒன்றிய மற்றும் தொகுதி நிர்வாகிகள்  தலைமை தாங்கி நிகழ்ச்சியை நடத்தினர்  105வது வட்ட தலைவர் சாகுல் ஹமீது முன்னிலையில் வட்ட நிர்வாகிகள் படைசூழ பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இனிப்புகள் பெற்று கொண்டு சிறப்பித்தனர்

புதுவை கவிஞர் குமார் ஆர்.எல் வெங்கட்டராமன் அவர்களிடம் ஆசி பெற்றார்

Image
புதுவை கவிஞர் குமார் ஆர்.எல் வெங்கட்டராமன் அவர்களிடம் ஆசி பெற்றார்.  உதவு இதயம் பேரியக்கத்தின் நிறுவனரும் , புதுவை கவிஞர் குமார் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி ஆர்.எல்.வி ஜனநாயக பேரவையின் நிறுவனத்தலைவர் ஆர். எல் வெங்கட்டராமன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். உடன் ஆர்.எல். வி பேரவையின் பொதுச்செயலாளர்கள் மாஸ்கோ , அறம் நிஷா , பொருளாளர் கோமதி , மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் பிரகாஷ் , துணைத்தலைவர் சீனுவாசன் , விக்னேஷ் , ரவிகுமார், லூர்து, கலைச்செல்வன் , செயலாளர் சத்தியமூர்த்தி மணவெளி பிரியா, பசும்பொன் பார்வதி , நெல்லித்தோப்பு ஐயனார் , ஜீவா , முருகன் , சௌந்தர்யா ஐயனார் , பட்ச்சயப்பன் மாஸ்டர் மணிகண்டன் சோபியா , பத்துள்ளா , கீர்த்தி,.ஆகியோர் உடன் இருந்தனர்.

கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநில பயிற்சி முகாம்

Image
கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநில பயிற்சி முகாம்23-06-2024 தேதி ராமேஸ்வரம் கோசாமி மடம் 2ல்  காலை 10 மணிக்கு  நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான வேதாந்தம் ஆசியுடன் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம்  தலைமையில் தொடங்கியது. வரவேற்புரை  ராமசுப்பு மாநில இணை பொதுச் செயலாளர் வி.ஹெச் பி வாழ்த்துரை கோவை சைவசித்தாந்த முனைவர் கோமளவல்லி சென்னை மாநில இணைப் பொது செயலாளர் வழக்கறிஞர் கணேசன்  கோவை மாநிலஇணை பொது செயலாளர் வழக்கறிர் விஜயகுமார் மதுரை  மாநில இணைப்பொது செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் மேலும் முகாமின் பயிற்சியாளர் ஆச்சாரியார் பக்ஷி சிவம் அவர்கள் ஆசிரியுரை வழங்கியவர் கோவை ஸ்ரீ ராஜ தேவேந்திர ஸ்வாமிகள் இந்திரேஸ்வர மடாலயம் ராமேஸ்வரம்  பாபா சுவாமி ராமேஸ்வரம் விவேகானந்தா  குடில் ஸ்ரீமத் ப்ரணவனந்த மகராஜ் சுவாமிகள் ஆகியோரும் சிறப்புரை கிராம கோவில் பூசாரி அரங்கவலரும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர் கோபால் நன்றியுரை  சரவணன் ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் பயிற்சி முகாம் நூற்றுக்கு மேற்பட்டோர்கள் 15 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொன்டு கோவில்களில் பூஜை செய்வது சம...

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிப்போம் மதுவிலக்கை அமல்படுத்துவோம் சமூகஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

Image
*#கள்ளச்சாராயத்தை #முற்றிலும்ஒழிப்போம்!* *#மதுவிலக்கை#அமல்படுத்துவோம்! #சமூகஆர்வலர் #அ.#அப்பர்சுந்தரம்   கள்ள சாராயம் குடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் 50ஐ தாண்டும் நிலையில், கடந்த ஆண்டு மரக்காணத்தில் 15 பேர் மரணம் அடைந்ததையும் யாரும் மறக்க முடியாது. அரசு மதுபான கடையான டாஸ்மாக்கில் விலை அதிகமாக இருப்பதால்தான் கள்ளச்சாராயத்தை பலர் குடிக்கின்றார்கள் என்னும் வேதனைக்குரிய செய்தி இப்படிப்பட்ட அதிக எண்ணிக்கையிலான சாவுகளின் பொழுது வெளிப்படுகின்றது. இதனை அனைவரும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒற்றைக் குரலில் ஓங்கி எழுப்பினாலும் போராடினாலும் தடுத்து நிறுத்த முடியாமல் போவதற்கான உள்ள காரணத்தை ஆழமாக ஆராய வேண்டிய தருணத்தில் நாம் தற்போது இருக்கின்றோம். இவ்விஷயத்தில் அரசு, பொதுமக்கள், காவல்துறை இணைந்து சரியான முடிவு எடுக்க வேண்டும். மதுவிலக்கு முழுமையாக அமுல்படுத்த முழுமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சாமானிய மனிதனின் உழைப்பும் உடலும் மது குடிப்பதால் வீணாவதை மீண்டும் மீண்டும் எழுத்து வடிவில் கொடுக்காமல், அனைவரும் ஒருங்கிணைந்த செயல்வடிவம் கொடுக்கும...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஜாதியோடு அனைத்து மத அடையாளங்களும் நீக்கப்பட வேண்டும் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

Image
தமிழகத்தில் *பள்ளி, கல்லூரிகளில் ஜாதியோடு அனைத்து மத அடையாளங்களும் நீக்கப்பட வேண்டும்!* *சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் வேண்டுகோள் !*   தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஜாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவினை தமிழக அரசு கடந்த ஆண்டு அமைத்து அதன் பரிந்துரை அறிக்கை தற்பொழுது பெறப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். பள்ளிப் பெயர்களில் உள்ள ஜாதிய அடையாளங்கள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்றும், பெரும்பான்மை ஜாதி உள்ள பகுதிகளில், அதே ஜாதியைச் சார்ந்த அதிகாரிகளையும் ஆசிரியர்களை அப்பகுதிகளில் நியமிக்க கூடாது என்றும், வருகை பதிவேட்டிலும் ஆசிரியர்கள், மாணவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஜாதியை குறிப்பிட்டு எக்காரணம் கொண்டும் கருத்துக்களை கூறக்கூடாது என்றும், மாணவர்களின் கைகளில் ஜாதிய வண்ணக் கயிறுகள், அடையாள மோதிரங்கள் அணிவதை தடை செய்ய வேண்டும் என்றும், குறிப்பி டப்பட்டிருப்பதை அனைவரும் வரவேற்போம். அதேசமயம் நெற்றியில்...

சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதி துணைமின் நிலையங்களில் மின்பராமரிப்பு பணி. நாளை மின்தடை.

Image
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மின்   கோட்ட எல்லைக்குட்பட்ட பெரிய கொடிவேரி, பெரும்பள்ளம்,    வரதம்பாளையம், மாக்கினாங் கோம்பை,  தொப்பம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில்,மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்  பட இருப்பதால், கீழ்கண்ட பகுதி களில நாளை 20ம் தேதி வியாழக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மின் வினியோகம் இருக்காது என இருக்காது என சத்தி மின்வாரிய கோட்ட பொறியாளர் சண்முக  சுந்தரராஜ் தெரிவித்து உள்ளார். மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்  - பெரிய கொடிவேரி துணை மின் நிலைய பகுதிகள். கொடிவேரி, சின்னட்டிபாளையம். டி.ஜி.புதூர் கொமாரபாளையம்,ஆலத்துகோம்பை மலையடிபுதூர், ஏழர்,  பெரும்பள்ளம் துணை மின் நிலைய பகுதிகள். கொண்டப்ப நாய்க்கன் பாளையம், ஏ.ஜி புதூர், தாசரி பாளையம், செல்லிபாளையம், கே.என் பாளையம் ,கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், அத்தியூர், காடகநல்லி,  வரதம்பாளையம் துணை மின் நிலைய பகுதிகள். சத்தி  வடக்கு பேட்டை, புளியங்கோம்பை, மணிக்கூண்டு, சத்தி கடைவீதி, பெரியகுளம், பாசக்குட்டை, வரதம்பாளையம் ஜெ.ஜெ.நகர். கோட்டுவீரம்பாளையம்கொ...

சத்தியமங்கலம் புங்கம்பள்ளி , பெரிய கள்ளிப்பட்டி துணைமின் நிலையங்களில், பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை..

Image
 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மின் கோட்ட எல்லைக்குட்பட்ட, புங்கம்பள்ளி,  பெரியகள்ளிபட்டி ஆகிய / இரு துணைமின் நிலையங் களில், மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட இருப்பதால், கீழ்கண்ட பகுதிகளில், இன்று 19. ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,மின் வினியோகம் இருக்காது என சத்தி மின்வாரிய கோட்டப் பொறியாளர் சண்முகசுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் -புங்கம்பள்ளி, தேசிபாளையம் விண்ணப் பள்ளி, சுங்கக்காரன்பாளையம் ,சணார்பதி, தொட்டிபாளையம்,குரும்பபாளையம். அய்யம்பாளையம், சித்தன்குட்டை, ஜெ.ஜெ.நகர், பெரிய கள்ளிப்பட்டி, மல்லியம்பட்டி, பருசாபாளையம்.

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா

Image
 புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கழகத்தின் தலைவர் மு. ராமதாஸ் தலைமையில் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் நடைபெற்றது.   புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்  கழக நிர்வாகக் குழுவில் காலியாக இருந்த பல பொறுப்புக்களுக்கு பின்வரும் நபர்கள் கட்சித் தலைவரால் நிர்வாகக் குழுவின் ஒப்புதலோடு சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்ட விழா ஹோட்டல் சர்குரு வில் நடை பெற்றது.  அறிமுக விழாவில் மாநில துணைத் தலைவர்களாக   J நித்தியானந்தம், M ஆனந்த்,,  செயலாளர்களாக  N ரவிக்குமார்,  டாக்டர் ஜான்  K பிலிப்ஸ் , டாக்டர் K மோகனசுந்தரம்,   N சிவக்குமரன்,  இணைச் செயலாளராக  GD இளங்கோவன், துணைச் செயலாளர்களாக   N வேதராமன்,   K ராதாகிருஷ்ணன்,   M சித்தானந்தம்,   C கஜேந்திர பாஸ்கர்,,    M.. கலியபெருமாள்,   J  சுப்பிரமணியன்,  K ரகுபதி உதவிச் செயலாளர்களாக   R...

ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது

Image
  கோபி,வேட்டைக்காரன் கோவில், "வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும்" ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், மொடச்சூர் கிராமம்,வேட்டைக்காரன் கோயில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாகாளியம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் புனர் தார்னா ஜீர்ணோர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா  நடைபெற்றது.விழாவானது கடந்த 13ஆம் தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை,மகா கணபதி ஹோமம்,நவகிரக ஹோமம்,  கோ பூஜை, தன பூஜையுடன் தொடங்கி,14ஆம் தேதி மாலை வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம்,முதல் கால யாக பூஜை நடந்தது,  அதனையடுத்து 15 ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜை ,விசேஷ சந்தி, வேதிகார்ச்சனை, மண்டப அர்ச்சனை,அரிசி கூடை சீர் வரிசை எடுத்து வருதல், சுவாமிகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இன்றுவரை ஞாயிறு 16 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை நாடி சந்தானம், பூர்ணாகுதி, மஹா தீபாராதனை நடைபெற்றது,அதனைத் தொடர்ந்து காலை 7.40 க்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு காலை 8 மணிக்கு விமான கலசங்களுக்கு க...

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள பள்ளங்களை மூட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

Image
*மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள பள்ளங்களை மூட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!* மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மருத்துவ உதவிக்காக வருகிறார்கள். மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு உரிய தீர்வு காணவும், எம்ஆர்ஐ ஸ்கேன் உட்பட பல்வேறு மருத்துவ சிகிச்சை வசதிகளை மேற்கொள்வதற்காகவும் வருகின்றவர்கள் மருத்துவமனை சாலையை கடந்து தான் வர வேண்டி இருக்கின்றது.மேலும் மக்கள் நடமாட்டம் இருப்பதால் ஆங்காங்கே ஸ்பீடு பிரேக்கர்கள் எனப்படும் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றையும் தாண்டியும் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அச்சாலையைக் கடக்கும் அனைத்து வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றன. இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. மயிலாடுதுறை தொகுதியின் வடக்கு பகுதியை முழுமையாக இணைக்க கூடிய இச்சாலை பள்ளங்கள் இன்றி அமைக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். சுமார் 45 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனையில் 7 மாடியில் கட்டடங்கள் எழுப்புவதற்காக பல்வேறு லாரிகளில் கட்டிட பொருட்கள...

தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி அவர்கள் தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் சந்திப்பு நிகழ்வு

Image
  தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி அவர்கள் தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  மக்கள் சந்திப்பு நிகழ்வு 12/06/2024 புதன் மாலை 6 மணியளவில் நடைபெற்றது.  அதில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக  அகமது இக்பால் தமுமுக  சார்பாக கலந்து கொண்டார் மற்றும் சுலைமான், முன்னாள் மாநகர தமுமுக, மமக தலைவர் அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆவனங்கள் இன்றி இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்புள்ள இஞ்சி பறிமுதல் - சுங்கத்துறையினர் நடவடிக்கை.!

Image
 ஆவனங்கள் இன்றி இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்புள்ள இஞ்சி பறிமுதல் - சுங்கத்துறையினர் நடவடிக்கை.! தூத்துக்குடி கடற்கரையில் இருந்து ஒரு கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நின்றிருந்த படகில் சோதனையிட்ட சுங்கத்துறையினர், 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2,460 கிலோ இஞ்சியை கைப்பற்றினர். இலங்கைக்கு கடத்த முயற்சித்த மூவரிடம் விசாரணை நடக்கிறது. இலங்கையில்  வரலாறு காணாத அளவுக்கு இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதால் தமிழகத்திலிருந்து இஞ்சி கடத்தல் அதிகரித்துள்ளதாக இஞ்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோ உலர் இஞ்சியின் விலை இலங்கை ரூபாய் 3000 த்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ850 ஆகும் தற்போதைய சூழநிலையில், இலங்கையில் இஞ்சி தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால் விலை அதிகாரித்து உள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Image
இந்தியத் தேர்தலில் மூன்றாவது முறையாக வென்று பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார் நரேந்திரமோடி 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், மல்லநாயக்கனூர், ஆதிமல்லம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா-

Image
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், உக்கரம் கிராமம், மல்லநாயக்கனூர ஸ்ரீஆதிமல்லம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 29-ம் தேதி முளைப்பாரி போடுதலுடன்  துவங்கியது. கடந்த 7ம் தேதி வெள்ளிக்கிழமை, ஊர் பெரியோர்கள் மற்றும் பொது மக்கள், புண்ணிய நதி யாம் பவானி ஆற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 8-ம் தேதி அன்று (சனிக்கிழமை)மதியம்1மணியளவில்,ஊர் பெரியவர்களால், ஸ்ரீ ஆதி மல்லம்மாள் கோவில் கிணற்றில் இருந்து, புண்ணிய தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  பின்னர் சுவாமி எடுத்து தானியத்தில் வைத்து,கம்பளத்தார்வம்சமுன்னோர் கள் செய்த வழிபாட்டு முறையில், சாமி வழிபாடு நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்வாக,  இன்று காலை 4 மணி முதல் 6 மணிக்குள்,  ஸ்ரீ ஆதிமல்லம்மாள்  கோவில் கும்பாபிஷேக விழா, நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற ஆதிகால தொட்டிய நாயக்கர் சமுதாய வழிபாட்டு முறையில், கோபுர கலசங்களுக்கு, சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டு, புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேக விழா,  சீரும் சிறப்பு மாக நடைபெற்றது.  அப்போது பக்தர்கள் பக்தி பரவச...

இரவு மணக்கோலத்தில் கேசுவலாக போட்டோ ஷூட்... காலையில் திருமணத்தை நிறுத்தி களேபரம்... கல்யாண மண்டபத்தை கதிகலங்க செய்த மணப்பெண்

Image
திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு மாதம் முன்பு கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஷீலா என்பருடன் நிச்சயம் செய்யப்பட்டது. இரண்டு மாதமாக இருவரும் போனில் பேசி பழகி வந்துள்ளனர். திருமணத்துக்காக மண்டபம் பேசி, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தது. மணப்பெண்ணும், மணமகளும் பரஸ்பரம் பேசிக்கொண்டு இருந்ததால், இரு குடும்பத்தாரும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளனர்.  இன்று காலை திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்த நிலையில், இருவீட்டாரும் நேற்றே மண்டபத்துக்குக்கும் வந்து இருக்கிறார்கள். மணமகனும், மணமகளும் மிக மகிழ்ச்சியாக போட்டோஷூட்டும் நடத்தினர்.  விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில், கல்யாணகளை கட்டி உற்சாகம் பொங்கிய திருமண மண்டபம், மணப்பெண் செய்த செயலால் இன்று காலை சோகமயமாக மாறிவிட்டது.  முகூர்த்த நேரம் நெருங்கிய வேளையில், மணமகன் தாலிகட்டுவதற்கு வந்தபோது, தடாலடியாக மணமகனை தள்ளிவிட்டு, தாலியை பிடுங்கி வீசி திருமணத்தை நிறுத்தினா...

தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - ரூ 904 கோடியில் அமைக்க டெண்டர் கோரியது சிப்காட் நிறுவனம்.!

Image
 தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - ரூ 904 கோடியில் அமைக்க டெண்டர் கோரியது சிப்காட் நிறுவனம்.! தூத்துக்குடியில் முதல் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராம பகுதியில் ரூ.904 கோடியில் டெண்டர் அமைக்க கோரியது சிப்காட் நிறுவனம்; நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்க டெண்டர் மழை பொய்த்த காலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு கடந்த வருடம் அறிவித்திருந்த நிலையில் டெண்டர் அரிவிப்பு வெளியீடு

வேகத்தடைக்கு வெள்ளையடிக்கும் பணிக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி

Image
*வேகத்தடைக்கு வெள்ளையடிக்கும் பணிக்கு நன்றி!*   *அ.அப்பர்சுந்தரம்*            நமது கோரிக்கையை ஏற்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  சாலையில் உள்ள வேகத்தடை வெண்மை நிறம் அடிக்கும் பணி தற்பொழுது  நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்பீட் பிரேக்கர் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். உடனடியாக அங்கு இருந்த குளிச்சார் ஊராட்சி பகுதியைச் சார்ந்தவர் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் ஸ்பீடு பிரேக்கருக்கு வெள்ளை நிறம் அடிக்க வேண்டும் என்றும் என்னிடம் தொலைபேசியில்கோரிக்கை வைத்தார். அதனை நெடுஞ்சாலைத் துறையினரிடம் தெரிவித்திருந்தோம். அதனை அடுத்து கோரிக்கை வைத்த உடனேயே வேகத்தடைக்கு வெள்ளை அடிக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருவது மிகவும் பாராட்டுக்குரியதாகும். இனியாவது பொதுமக்கள் வேகத்தடைகளை பார்த்து பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முடிவுக்கு வருகிறது மக்களவைத் தேர்தல் நடைமுறைகள்: நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு.!

Image
 முடிவுக்கு வருகிறது மக்களவைத் தேர்தல் நடைமுறைகள்: நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு.! மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்று நள்ளிரவுடன் (வியாழக்கிழமை) விலக்கிக் கொள்ளப்படுகிறது. இந்தியாவின் 18-வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியானது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக கடந்த ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி: ஆட்சியர் தகவல்

Image
 தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி: ஆட்சியர் தகவல் தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஐந்தாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி வருகின்ற 10.06.2024 முதல் 30.06.2024 வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  "தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்; தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 1,12,000 கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 10.06.2024 முதல் 30.06.2024 வரை 21 நாட்கள் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. கோமாரி நோயானது வைரஸ் என்னும் நச்சுக்கிருமியினால் ஏற்படுகிறது.  நோய் பாதித்த கால்நடைகளில் வாய் மற்றும் கால் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதிக காய்ச்சலுடன் காணப்படும். இந்நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைவதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்நோயை முற்றிலும் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். தடுப்பூசி பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்க...

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு மையத்தில் குழப்பம்.!? -ஆட்சியர் விளக்கம்

Image
 தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு மையத்தில் குழப்பம்.!? -ஆட்சியர் விளக்கம் இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி IV-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வுகளை தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வட்டங்களில் அமைந்துள்ள 200 தேர்வு மையங்களில் மொத்தம் 58,373 விண்ணப்பதாரர்கள் 09.06.2024 அன்று முற்பகல் 09.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு எழுதவுள்ளனர். தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து அவரவருக்குரிய தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களின் முழு விவரங்களுடன், தேர்வு மையத்தின் பெயரும், முகவரியும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.  இதில், சாத்தான்குளம் வட்டத்தில் S.S.N. Government Model Higher secondary School (சு.சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி) ல் அமைந்துள்ள தேர்வு மையத்தின் எண். 009 தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் மட்டும் 1-83 Ave Maria Park Pannamparai Junction Satankulam (TK), Thoothukudi District என தவறுதலாக பதிவாகி உள்...

தூத்துக்குடி :விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது - 300 கிராம் கஞ்சா மற்றும் கத்தி பறிமுதல்.!

Image
தூத்துக்குடி :விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது - 300 கிராம் கஞ்சா மற்றும் கத்தி பறிமுதல்.! தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர்  முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (05.06.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பூபல்ராயர்புரம் மீன் மார்க்கெட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததனர்,  அப்போது அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த சையது சர்தார் மகன் ருக்மேன் ஹக்கீம் (29) மற்றும் தூத்துக்குடி ...

நாளை நடைபெற இருந்த "செட்" தேர்வு ஒத்திவைப்பு.! - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

Image
 நாளை நடைபெற இருந்த "செட்" தேர்வு ஒத்திவைப்பு.! - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு நாளை நடைபெற இருந்த உதவி பேராசிரியர்களுக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு ஒத்திவைப்பு தொழில்நுட்ப காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய இருவர் கைது - ரூபாய் 2,50,000/- மதிப்புள்ள 67 கிராம் தங்க நகைகள் மீட்பு.!

Image
 வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய இருவர் கைது - ரூபாய் 2,50,000/- மதிப்புள்ள 67 கிராம் தங்க நகைகள் மீட்பு.!  தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படுக்கப்பத்து அழகம்மன்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் இசக்கிராஜா (59) என்பவர் கடந்த 02.06.2024 அன்று காலை தனது மனைவியுடன் நாசரேத்தில் ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த இசக்கிராஜாவின் தந்தை இசக்கி வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அன்று மதியம் திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர்கள் வீட்டில் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 69 கிராம் தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இசக்கிராஜா அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கென்னடி மேற்பார்வையில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் டேவிட் தலைமையிலான சாத்தான்குளம்  உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்...

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி வெற்றி முகம் - அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து*

Image
 *தூத்துக்குடியில் கனிமொழி எம்பி வெற்றி முகம் - அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து* தூத்துக்குடியில் கனிமொழி எம்பி வெற்றி முகம் - அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து* தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தற்போது வரை சுமார் 2.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கு சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.தத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தற்போது வரை சுமார் 2.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில் தூத்...

நிறைவு நிலையில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி சீரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி பாராட்டு

Image
நிறைவு நிலையில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி சீரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி பாராட்டு!   மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் தெற்கு புறத்தில் கிழக்குப் பகுதியில் கடந்த மேமாத மத்தியில் பெய்த மழையினால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. உடனடியாக கோரிக்கையை வைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதம் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு பொதுப்பணி துறையின் சார்பில் புணரமைக்குமாறு உத்தரவிட்டார். அதனை எடுத்து பணிகள் துவக்கப்பட்டு தற்பொழுது நிறைவேறும் நிலையில் உள்ளது. கட்டிட தொழிலாளர்கள் அப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு வரும் தற்போதைய காட்சிகளே இவையாகும். விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி அவர்களுக்கும் பொதுப்பணித்துறையினருக்கும் பத்திரிக்கை செய்தி ஊடகத்துறையினருக்கும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் 18வது ஆண்டு விழா

Image
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் 18வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக சென்னை பாடியில் அன்னை கல்யாண மாளிகையில் நடைபெற்றது.மாநில தலைவர் K.பாஸ்கரன் தலைமையில் மற்றும் மாநில செயலாளர் MV.கோவிந்தராஜன் முன்னிலையில் நடைபெற்றது இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும்  மாநில நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

நம்பியூரில் இடி, மின்னல் அதிர்வில் வீடு சேதம்

Image
  நம்பியூரில் இடி, மின்னல் அதிர்வில் வீடு சேதம் ஈரோடு மாவட்டம்,நம்பியூர் அடுத்த மலையப்பாளையம் வேமாண்டம்பாளையம் பொலவபாளையம் எம்மாம்பூண்டி மூனாம்பாள்ளி ஆகிய பகுதிகளில் 1 மணி நேரமாக கொட்டி தீர்க்கும் கனமழை  நம்பியூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நாச்சிபாளையம், மாரியம்மன் கோயில் வீதியை சார்ந்த சென்னியப்பன் வீட்டில் இடி விழுந்ததால் டிவி பிரிட்ஜ் வாஷிங்மிஷின் ஆகியவை சேதம், டிவி  பார்த்துக்கொண்டிருந்த சிறுமி  இடி விழுந்ததில் காது கேட்டக்கவில்லை எனக்கூறியதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், காற்று பலமாக வீசுவதாலும் மரங்கள் வேரோடு சாய்ந்து வருகிறது.

திமுக மாநில விவசாய அணி சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நிறைவு விழா

Image
  திமுக மாநில விவசாய அணி சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நிறைவு விழா 1 லட்சம்பொதுமக்கள் பயனடைந்தனர் என மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி தகவல் ஈரோடு மாவட்டம், கோபி ல. கள்ளிப்பட்டி பிரிவில் மாநில விவசாய அணி திமுக சார்பில்  கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்த நாள் விழா மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி தலைமையில் நடைபெற்றது.கடந்த மாதம் 5ம் தேதி அன்று கோடை வெயில் காலத்தில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க  தலைமைக் கழகத்தில் வேண்டுகோளுக்கிணங்க நீர்மோர், வெள்ளரி, நுங்கு, ஈர துண்டு ஆகியவற்றை இலவசமாக வழங்கி அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். அதனை தொடர்ந்து நேற்றுடன் ஒரு மாத காலம் நிறைவு பெறுகிறது.இந்த ஒரு மாத காலத்தில் 13ஆயிரம் லிட்டர் தயிர் பயன்படுத்த பட்டு 1லட்சம் பேர்களுக்கு மேல் பயனடைந்தனர்.இந்த நிகழ்வு பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது.அதனை யொட்டி பொதுமக்கள் மற்றும் திமுக மாநில, மாவட்ட, பேரூர், ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கும் விவசாய அணி சார்பாகவும...

தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை கொங்கு மண்டல பொதுக்குழு

Image
தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை கொங்கு மண்டல பொதுக்குழு பெருமாநல்லூர் பர்வத வர்த்தினி மஹாலில் தொடங்கியது. தலைமை செல்வம் திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர், வரவேற்புரை மணியன் பூஜாரி பேரவை ஈரோடு மாவட்ட இணை அமைப்பாளர், ஆசியுரை ஸ்ரீ ராஜ தேவேந்திர சுவாமிகள் இந்திரேஸ்வரா மடாலயம் கோவை சிறப்புரை சோமசுந்தரம் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணைப் பொதுச் செயலாளர் இந்நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கியவர்கள் அத்திக்கடவு சுப்பிரமணியம் சிவமந்திர சுவாமிகள் திருப்பூர் மாவட்ட செயல் தலைவர் குமரவேல் பூசாரி பேரவை மண்டல அமைப்பாளர் நரசிம்மன் கிருஷ்ணகிரி கோட்ட செயலாளர் மஞ்சுநாத் கிருஷ்ணகிரி கோட்டத் தலைவர் லாலா மணிகண்டன் கோவை கோட்ட கொள்கை பரப்பு செயலாளர் கோபால் பூஜாரி பேரவை கோவை கோட்ட இனை அமைப்பாளர் ரங்கசாமி மாவட்ட இணை அமைப்பாளர் சிவ மகேந்திரன் பூஜாரி பேரவை மாநில செயலாளர் கோவிந்தராஜ் பூஜாரி பேரவை கோவை கோட்ட என அமைப்பாளர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஸ்ரீராம் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவ...

அறம் சமூக சேவை அமைப்பு நிறுவனத்தலைவர் அறம் நிஷா மக்களவை சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று பேர் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் ஆர்.எல்.வி பேரவையில் இணைந்தனர்

Image
அறம் சமூக சேவை அமைப்பு நிறுவனத்தலைவர் அறம் நிஷா மக்களவை சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று பேர் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் ஆர் எல் வி பேரவையில் இணைந்தனர்.  புதுச்சேரியை சேர்ந்த பிரபல சமூக சேவகியும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பிரபலமான அறம் நிஷா மற்றும் மக்களவை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஏனாம் தொகுதியை சேர்ந்த போசியா அராதாதி , கராஜர் நகர் தொகுதியை சேர்ந்த கலா சங்கர் மற்றும் மணவெளி தொகுதியை சேர்ந்த முருகன் ஆகிய நான்கு பேரும் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் மாஸ்கோ மற்றும் மாநில பொருளாளர் கோமதி தலைமையில் ஆர்.எல்.வி பேரவை  நிறுவன தலைவர் ஆர்.எல் வெங்கட்டராமன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அவரது முன்னிலையில்  ஆர்.எல்.வி பேரவையில் இணைய விருப்பம் தெரிவித்து   ஆர்.எல்.வி  பேரவையில் இணைந்தனர்.  பிரபலங்கள் இணைந்த நிகழ்ச்சி :அறம் நிஷா புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் அறம் சமூக சேவை அமைப்பின் நிறுவனத்தலைவர் அறம் நிஷா . இந்த அமைப்பின் மூலம் ஆதரவற்றோர், குடும்பத்தில் வறுமையில் இருப்பவர்கள், தெருவோரம் ஆதரவற்ற நிலையில் சாப்பாடு இல்லாமல் ...