Posts

Showing posts from November, 2023

நம்பியூர் அருகே திட்டமலை பகுதியில் ஜீப் கவிழ்ந்து விபத்து. ஓட்டுநர் உயிரிழந்தார் 7 கல்லூரி மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

Image
நம்பியூர் அருகே திட்டமலை பகுதியில் ஜீப் கவிழ்ந்து விபத்து.  ஓட்டுநர் உயிரிழந்தார்  7 கல்லூரி மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள திட்டமலை அருகே அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.  தற்போது கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.  கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவடைந்து கல்லூரி மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்து நடந்து சென்று கொண்டிருந்தனர்.  அப்போது நம்பியூரில் இருந்து ஒரு ஜீப் பொலிரோ வாகனம் அவ்வழியாக வந்துள்ளது.  அப்போது காரை நிறுத்திய ஓட்டுனர் ரங்கசாமி நடந்து சென்ற மாணவர்களிடம் காரில் ஏறுமாறும் நான் குன்னத்தூர் தான் செல்கிறேன் கெட்டிச் செவியூர் பகுதியில் இறக்கிவிட்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.  இதனை அடுத்து அந்த ஜீப்பில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஏறி சென்றுள்ளனர்.  இதனை அடுத்து கார் திட்டமலை முருகன் கோவில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் ஜீப் ஓட்டுநர் ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதில் ...

தூத்துக்குடியில் ரூ 45 கோடி மதிப்பீட்டில், 43.கி.மீ. நீளத்திற்கு புதிதாக மழை நீர் வடிகால் - மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு.!

Image
  தூத்துக்குடியில் ரூ 45 கோடி மதிப்பீட்டில், 43.கி.மீ. நீளத்திற்கு புதிதாக மழை நீர் வடிகால் - மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு.! தேசிய நெடுஞ்சாலை மூலமாக திருச்செந்தூர் சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட இருப்பதால் வடிகால் பணிகள் மாற்றம். மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு.

தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல் - டிசம்பர் 4-ம் தேதி வரை மிக கனமழை தொடரும்!

Image
தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல் - டிசம்பர் 4-ம் தேதி வரை மிக கனமழை தொடரும்! டிசம்பர் 4-ம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடல்பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. அது தமிழ்நாட்டில் கரையைக் கடக்குமா என்பது போகப் போகத்தான் கூற முடியும்.  அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 4-ம் தேதி வரை கனமழை தொடரும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்  

திருப்பூரில் 70 வயது மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை...பணம் நகைக்காக வீட்டில் குடியிருந்த நபரே கொலை செய்ததால் பரபரப்பு

Image
  திருப்பூரில் 70 வயது மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை... பணம் நகைக்காக வீட்டில் குடியிருந்த நபரே கொலை செய்ததால் பரபரப்பு  திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மண்ணரை பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணியம்மாள்.  70  வயதான இவர் கணவனை இழந்தநிலையில்  வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். மேலும் மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருமானம் மூலம் தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.  இவரது வீட்டில் செந்தில்குமார் (40) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் மணியம்மாவிடம் அதிகமான பணம் இருப்பதாகவும், அதனை கொள்ளை அடிக்கலாம் என்று செந்தில்குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னுடன் பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மதுரையைச் சேர்ந்த போத்திராஜன், சதீஷ், ஆகியோரை அழைத்து வந்துள்ளார். மூவரும் சேர்ந்து நேற்று இரவு மூதாட்டி மணியம்மாளை கழுத்தை  நெரித்து கொலை செய்து உள்ளனர். மேலும் அவரது வீட்டில் இருந்த ரூ. 2000 பணம், 3 கிராம் நகை மற்றும் செல்போனை திருடி சென்றுள்ளனர். சிசிடிவி கட்சியில் பதிவான ஆதாரங்களை வைத்து திருப்பூர் வடக்க...

சத்திநகரபகுதி,திமுகமூத்தமுன்னோடி களுக்குபொற்கிளி வழங்கி, திமுகமாவட்டசெயலாளர் கெளரவிப்பு.

Image
 ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட கழக திமுகசார்பில்,சமீபத்தில்திராவிடமுன் னேற்றகழகமூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிமற்றும்பணமுடிப்புவழங்கும் நிகழ்ச்சி,திமுகஇளைஞரணி செய லாளரும்,தமிழ்நாடு அரசுஇளைஞர் நலன் மற்றும்விளையாட்டுமேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இத ன் ஒருபகுதியாக, பொற்கிளி பெறாமல் விடுபட்ட, சத்தியமங்கலம் நகரப் பகுதி திமுக மூத்த முன்னோ டிகளுக்கு, திராவிட முன்னேற்ற கழக ஈரோடு வடக்கு மாவட்ட கழக செய லாளர் என். நல்லசிவம், பொற்கிள யும், பண முடிப்பையும் நேரில் வழங் கி கெளரவித்தார். . சத்திநகரதிமு கழக செயலாளரும், சத்திநகர்மன்ற தலைவியுமான, ஆர்.ஜானகிராமசாமி முன்னிலை யில், நடைபெற்றநுஇந்நிகழ்ச்சி யில் ,திமுக சத்தி நகர பொருளாளர் பொன் னுச்சாமி, நகர் மன்றத் துணை தலை வர் நடராஜ், 13 வது வார்டு திமுகழக செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்விபொன் னுச்சாமி மற்றும் நகர திமுக நிர்வாகி கள் நீலமலை செழியன் கார்த்தி கே யன், மாவட்ட பிரதிநிதி போஜில்ஹக், இளைஞரணி அமைப்பாளர் ஸ்ரீராம் வேலுச்சாமி உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

“10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்று கூறினால், கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஜனைகளை என்னவென்று சொல்லுவீர்கள்?” - குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

Image
 “10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்று கூறினால், கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஜனைகளை என்னவென்று சொல்லுவீர்கள்?” - குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி பள்ளிவாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு. மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைக்கான இஸ்லாமிய அழைப்பை ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கக் கோரிய பொதுநல வழக்கை (பிஐஎல்) குஜராத் உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் மற்றும் நீதிபதி அனிருத்தா பி.மேயி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை "முற்றிலும் தவறான கருத்து" என்று குறிப்பிட்டது. பஜ்ரங் தள் தலைவர் சக்திசிங் ஜலாவின் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், "பள்ளி வாசல்களில் தொழுகைக்கு அழைக்கும்  ஒலிபெருக்கிகள் மூலம் "ஒலி மாசுபாடு" ஏற்படுகிறது, இது பொது மக்களின், குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது மேலும் பல சிரமங்களை ஏற்படுத்துகிறது இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தார். மனுவை விசாரி...

வீட்டுக்குள் புகுந்து 3 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள் - அதிராம்பட்டினத்தில் கொடூரம்.!!

Image
 வீட்டுக்குள் புகுந்து 3 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள் - அதிராம்பட்டினத்தில் கொடூரம்.!! தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த  3  வயது குழந்தையை 3 தெரு நாய்கள் நவம்பர் 27ம் தேதி திங்கட்கிழமை  கடித்து குதறிய நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.  குழந்தை பயத்தில் கத்தி கூச்சலிட்டதை கேட்டு வந்த தாய், தெரு நாய்களை விரட்டி, படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். தெருநாய்கள் வெறிபிடித்து சாலைகளில் வருவோர் போவோரை கடித்து குதறும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.சமீபத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் சென்னையில் 30 க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிராம்பட்டினம் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலையில் இங்கு நடைபெற்ற  நகர சபைக் கூட்டத்தில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அதி...

உத்தரகாசி சுரங்க இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு... கடைசி நேரத்தில் கைகொடுத்த ‘எலி துளை’ வித்தகர்கள்!

Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. சார்தாம் என்று சொல்லக்கூடிய கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன்பெற ‘மாஸ்டர் பிளான்” திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.  இதில் உத்தரகாசி பகுதியில் உள்ள இரண்டரை கி.மீ., நீளத்துக்கு பிரம்மாண்ட மலைச்சுரங்கப் பணி நடந்து வந்தது. கடந்த 12 ம் தேதி இந்த மலைச்சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுரங்கத்தில் 200 மீட்டர் தூரம் இடிபாடுகள் சுரங்கப்பாதையை மூடின. அதற்கும் உள்ளாக 400 மீட்டர் அளவுக்கு இருந்த காலி இட பகுதியில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.  இவர்கள் அனைவருமே பல்வேறு வெளிமாநில தொழிலாளர்கள் ஆவர். இவர்களை மீட்கும் சவாலான பணிகள் கடந்த 17 நாட்களாக நடந்து வந்தது. பணியில் சிறு பிசகு ஏற்பட்டாலும் 41 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் தேசிய மற்றும் உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு படையினர் பணிகளை மேற்கொண்டனர். முதலில் பக்கவாட்டில் சிறு அளவில் துளையிடப்பட்டு உள...

திருப்பூரில் 3 மாதத்தில் 12 ஆயிரம் பேரை கடித்து குதறிய தெருநாய்கள்... ’கடி’ தாங்காமல் தவிக்கும் திருப்பூர் மக்கள்

Image
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 12 ஆயிரம் பேரை தெருநாய்கள் கடித்து குதறியதில் காயம்பட்டு திருப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உள்ளனர்.  திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தெருநாய்கள் அதிகரித்து காணப்படுகின்றன. வீதிகள் தோறும் மிரட்டும் தெருநாய்களால் மக்கள் படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். சில இடங்களில் நாய்கள் கடித்து குதறியதில் பெரும் காயமடைபவர்களும் இருக்கிறார்கள். கடந்த 3 ந்தேதி ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த 2 வயது சிறுமியை 6க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. இதில் காயமடைந்த அந்த சிறுமி சிகிச்சைக்கு பின் மீண்டிருக்கிறார்.   இப்படி தொடரும் தெருநாய்க்கடியால், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில், தெருக்களில் நடந்து செல்லவே மக்களிடம் அச்சம் நிலவுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தெருநாய்களால் மிகவும் பயந்துகொண்டே செல்லும் நிலை உள்ளது. காலையில் வாக்கிங் செல்பவர்கள் முதல் இரவு தாமதமாக வீட்டிற்கு செ...

திருவாரூரில் வெண்டிலேட்டரில் சிகிச்சையில் இருந்த பெண் மின்வெட்டுகாரணமாக உயிரிழக்க வில்லை... அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

Image
 திருவாரூரில் வெண்டிலேட்டரில் சிகிச்சை இருந்த பெண் பவர் கட் காரணமாக உயிரிழக்க வில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுத்துள்ளார். குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் 2 லட்சமாவது பயனாளியை  அமைச்சர் மா.சுப்பிரமனியன் நேரில் சந்தித்து  பழக்கூடைகளை வழங்கி நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து புதிய காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு புதிய காபீட்டு அட்டைகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:-  சாலை விபத்தில் சிக்கிய நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் வழங்கப்பட்டு அவர்களுக்கு இன்னுயிர் காக்கப்பட்டு வந்தது. அதன்படி இன்று 2 லட்சமாவது பயனாளிகள் இன்று பயன் பெற்றுள்ளனர். 2021 டிசம்பர் மாதம் முதல்வர் தொடங்கி வைத்த நிலையில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை விபத்திற்குள்ளானவர்களை மீட்பதே பெரிய பணியாக இருந்தது. ஆனால் தற்போது வ...

*முதல்வர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவு நினைவாகின்றது!* சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி பாராட்டு!*

Image
*முதல்வர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கனவு நினைவாகின்றது!*    *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி பாராட்டு!*         தமிழ்நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை வாய்ப்புகள் இன்றி பல ஆண்டுகளாக தவித்து வந்த  நிலையில் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் கடந்த  2021ல் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் மேற்கொண்டு வருகிறார். அரசுத் துறையில் முறையாக அறிவிப்புகள் செய்யப்பட்டு தேர்வுகள் நடத்தியும், நேரடியாகவும் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் பல்வேறு துறைகளில் நிரப்பப்படுவதை தொடர்ந்து பார்த்து வரும் நாம், தற்பொழுது தனியார் துறையிலும் குறிப்பாக கடந்த ஆண்டு 2022 நவம்பர் 28ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலை  ஓராண்டில் அதே நாளில்  தனது உற்பத்தியை துவக்கிடும் சாதனை நற்செய்தியை அனைத்து ஊடகங்களிலும் நாளேடுகளிலும் பா...

சூலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மூன்று வேளையும் இலவச உணவு சூலூர் நகர திமுக சார்பில் ஏற்பாடு

Image
கோவை சூலூரில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46-வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு   சூலூர் நகர திமுக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 51 நாட்களாக மதிய உணவு வழங்கப்பட்டு  வருகிறது. இன்று  முதல் 54-வது நாளாக காலை,மதியம்,இரவு என மூன்று வேளைகளும் உணவு வழங்கப்படும் என்ற நல்ல செய்தியை தெரிவித்தனர் இதற்கு சூலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் நன்றியை தெரிவித்தனர்

சத்தியமங்கலம் கொமாரபாளையம் ஊராட்சியில்6.60 இலட்சம்மதிப்பீட்டில் தார்சாலைஅமைக்க பூமிபூஜை..

Image
கொமாரபாளையம்ஊராட்சிக்குட்பட்ட   ஏகே.எஸ்நகர்,விநாயகர்கோவில்பின் புறம்செல்லும்மண்சாலையைமகாத்மாகாந்திதேசியஊரகவேலை வாய் ப்புதிட்டத்தின்கீழ்ரூபாய் 6 லட்சத்து 60 ஆயிரம்மதிப்பீட்டில்காங்கிரிட் சாலை யாகதரம்உயர்த்தி பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு கொமாரபாளையம்ஊராட்சிமன்ற தலைவர்எஸ்.எம்.சரவணன் தலைமை தாங்கிபூமி பூஜையை துவக்கி வைத் தார் உடன் துணைத் தலைவர் ரமேஷ், வார்டுஉறுப்பினர்கள்சுகுமார்வடிவேலு,வளர்ச்சிகுழுஉறுப்பினர்ராசு,ஊரா ட்சிசெயலாளர்குமார்,மற்றும் பொது மக்கள்திரளாககலந்துகொண்டு,சிறப் பித்தனர்,நீண்டநாட்களாகமண்சாலை யாகஇருந்த சாலையை கான்கிரீட் சா லையாகமாற்றமுயற்சிமேற்க்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன்அவர்களுக்குபொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மலேசியா செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!- டிச.1 முதல் அமல்.!

Image
 மலேசியா செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!- டிச.1 முதல் அமல்.! டிசம்பர் 1-ம் தேதி முதல் மலேசியா செல்லும் இந்தியா, சீன நாட்டினருக்கு விசா அவசியமில்லை என்று அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். தனது மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் பேசிய அன்வர் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், இது எவ்வளவு காலம் நடைமுறையில் இருக்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 9.16 மில்லியன் சுற்றுலா பயணிகள் மலேசியாவுக்கு வந்துள்ளனர். இவர்களில், சீனாவில் இருந்து 4,98,540 பேர் மற்றும் 2,83,885 பேர் இந்தியாவில் இருந்தும் சென்றிருக்கிறார்கள். கொரோனா தொற்றுக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டை பொறுத்தவரையில், சீனாவில் இருந்து 1.5 மில்லியன் மற்றும் இந்தியாவில் இருந்து 3,54,486 பேர் மலேசியா பயணித்துள்ளனர். முன்னதாக, மலேசியாவின் அண்டை நாடான தாய்லாந்து அதன் மந்தமான பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுலாவை பெருக்கவும் இந்த ஆண்டில் விசா ஃப்ரீ நடைமுறையைச் செயல்படுத்தியது. இந்த விசா ஃப்ரீ நாடுகளில் சீனாவும் இந்தியாவும் அடக்கம். அதே முறையை மலேசிய...

தூத்துக்குடியில் நாளை (28-ந்தேதி) மின் தடை அறிவிப்பு.!

Image
 தூத்துக்குடியில் நாளை (28-ந்தேதி) மின் தடை அறிவிப்பு.! தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 28.11.2023 செவ்வாய்க்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மடத்தூர், மடத்துர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர்,சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர்,, சின்னமணி நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள் அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்திநாதபுரம்,, சங்கர் காலனி,, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ் புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜ ரத்தின நகர். பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர் பால்பாண்டி நகர், முத்து நக...

அமைச்சர் கீதாஜீவன் உதவியாளர் மணி (எ) சால்னாமணி ₹50லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.! - காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வழக்கு பதிவு.!

Image
 அமைச்சர் கீதாஜீவன் உதவியாளர் மணி (எ) சால்னாமணி ₹50லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.! - காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வழக்கு பதிவு.! சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் மணி என்ற சால்னா மணி என்பவர் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி மணல் கொள்ளை மற்றும் நில மோசடி செய்து ரூ 50 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் புகார் எழுப்பிய நிலையில்,  தற்போது அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் மணி என்ற சால்னா மணி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

*வங்கக் கடலில் புயல் சின்னம்: 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு*

Image
*வங்கக் கடலில் நாளை புயல் சின்னம்: 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு* வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.27) புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 6 நாள்கள் தொடா்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.27) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் நவ.29-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிறு முதல் வெள்ளிக்கிழமை (நவ.26-டிச.1) வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூ...

அரியப்பம்பாளையம் பேரூர்திமுகசார்பில் நீட்விலக்குநம்இலக்கு. கையெழுத்து இயக்கம்.

Image
 சத்தியமங்கள்அரியப்பம்பாளையம்பேரூர்திமுகசார்பில் *நீட்விலக்கு நம் இலக்கு*என்ற கையெழுத்து இயக்கத் தைபேரூர் திமுக செயலாளர்வழக்கறி ஞர்ஏ.எஸ்.செந்தில்நாதன்துவக்கிவைத்தார்.சத்திஅரசு மகளிர்மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பேரூர் திமுக இளைஞரணியினர்கையெழுத்துபெறறனர் நிகழ்ச்சியில்,100க்கு மேற்பட்ட மாணவிகள்நீட்தேர்வைஎதிர்த்துகை யெழுத்துபோட்டனர்இந்தநிகழ்ச்சியில் இளையரணிஅமைப்பாளர் பிரசா ந்த்,,து.அமைப்பாளர்கள் பிரபு,சதீஷ்,  மாவட்டபிரதிநிதிகள்துரைசாமி, மாணிக்கம்,மாவட்ட அமைப்பு சார ஒட் டுனர் அணி து.அமைப்பாளர் கந்த சாமி வார்டு செயலாளர்கள், தங்க வேல், வேலுசாமி,சங்கர்,மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் ஒன்றியம் வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் காசோலை அதிகாரம் ரத்து சிறப்பு அதிகாரி நியமனம் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

Image
கோவை மாவட்டம்  சர்க்கார் சாமகுளம் ஒன்றியம் வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் காசோலை அதிகாரம் ரத்து சிறப்பு அதிகாரி நியமனம் மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை  கோவை மாவட்டம் சர்க்கார்சாமக்குளம் ஒன்றியம் வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் கவிதா துணைத்தலைவராக இருப்பவர் வி.ராஜன் இந்த ஊராட்சியில் 9 உறுப்பினர்கள் உள்ளனர் இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கவிதா தலைவராக இருப்பதால் அவருக்கும் துணைத் தலைவருக்கும் கருத்து வேற்றுமை காரணமாக ஊராட்சியில் அடிப்படை வசதிகள் பொது சுகாதாரம் தார் சாலை வசதி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர் இதில் துணைத் தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டு விதிகளை மீறி குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தல் தனக்கு சாதகமாக உள்ள வார்டு உறுப்பினர்களுக்கு மட்டும் பணிகளை மேற்கொள் செய்வது தலைவரின் ஆலோசனை கேட்காமல் தன்னிச்சையாக ஊராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது இதனால் ஊராட்சி பணிகளில் முழுமையாக செயல்பட முடியாமல் துணைத் தலைவர் தடுத்து...

குத்தாலம் தாலுகாவில் நத்தம் நிலங்களை இணையத்தில் ஏற்றுவதில் உள்ள குறைபாடுகளை நீக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை !*

Image
*குத்தாலம் தாலுகாவில் நத்தம் நிலங்களை இணையத்தில் ஏற்றுவதில் உள்ள குறைபாடுகளை நீக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை !* மயிலாடுதுறை மாவட்டத்தில் நத்தம் பட்டா மாறுதல் இணையத்தில் பதிவேற்றம் செய்து விரைவில் தமிழ் நாட்டில் முன்மாதிரி மாவட்டமாக மயிலாடுதுறை திகழப்போகிறது என்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம். இருந்த பொழுதிலும் நத்தம் நிலங்களை இணையத்தில் பதிவேற்றுவதில் நிறைய குளறுபடிகளுடன் ஆன்லைன் பதிவு செய்வது வேதனையை தருகிறது.நிறைய உட்பிரிவுகள் இடம்பெறவில்லை.பட்டா உரிமையாளர்கள் பெயர்களில் குளறுபடிகள் உள்ளது. தமிழ்நாடு அரசு 2023மே4ம் தேதி வெளியிட்ட எண்; 221என்னும் அரசாணையின்படி இந்த நல்ல திட்டங்களை செவ்வனே செய்தால் மட்டுமே பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குத்தாலம் தாலுகாவில் 56 கிராமங்கள் மற்றும் குத்தாலம் பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 32,952 வீடுகளில் வசிக்கும், மக்கள் தொகை 1,31,948 ஆகும். சுமார் 75.02 சதவிகிதம் பேர் படிப்பறிவு பெற்ற இக்குத்தாலம் தாலுக்காவில், நத்தம் காலி மனைகளை குறைகளோடு இணையத்தில் பதிவேற்றம் செய்து வருவதாக தகவல்கள் வருகி...

கோவை சூலூரில் மாணவர் மீது ராகிங் கொடுமை போலீசார் அதிரடி வழக்கு பதிவு

Image
கோவையில் மீண்டும் தலை தூக்கும் ராகிங்... கோவை சூலூர் ஆர். வி. எஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவர் அகிலேஷ் இவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து தாக்கியுள்ளனர் பாதிக்கப்பட்ட மாணவர் அகிலேஷ் சூலூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சீனியர் மாணவர்களான முத்துக்குமார் கோகுல் மற்றும் டீ கடை ஊழியர் ஆகிய மூன்று பேர் மீது சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

கஞ்சாவைத்திருந்த தாகஇலங்கைதமிழர் முகாமைசேர்ந்தவர் கைது .பவானிசாகர் போலீசார்வழக்கு பதிவு.

Image
 இலங்கைதமிழர்மறுவாழ்வுமுகாமை சேர்ந்தமுனீஸ் என்பவரின்மகன்ஜெய தீபன்(வயது 35).இவரதுவீட்டில்சட்ட வி ரோதமாகவிற்பனைக்குகஞ்சாபதுக்கி வைத்துஇருப்பதாகபவானிசாகர்போலீசாருக்குகிடைத்தரகசியதகவலின் பேரில்,ஜெயதீபன்வீட்டில்,காவல்ஆய் வாளர்பிரபாகரன்தலைமையில்,பவானிசாகர்போலீசார்இன்றுஅதிரடியாக சோதனையிட்டபோது,சுமார்750கிராம் கஞ்சாவைத்திருந்ததுகண்டறியப்பட் டு,ஜெயதீபனை காவல் நிலையம் அழைத்துவந்துபோலீசார்விசாரணை செய்தனர். பின்னர்ஜெயதீபன்மீது வழக்குபதிவுசெய்து,நீதிமன்றகாவ லுக்கு உட்படுத்த உள்ளனர்.

நீதிமன்றத்தை அணுகி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களுக்கு தடை பெற வேண்டும்...மனித நேய மக்கள் கட்சி முடிவு

Image
 வரும் காலங்களில் நீதிமன்றத்தை அணுகி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களுக்கு தடை பெற வேண்டும்  என்ற கோரிக்கையை  மனித நேய மக்கள் கட்சி சார்பில் வைக்கப்படுவதாக தாம்பரத்தில் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது பேட்டி சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் வரும் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கருதி வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தலைமையில் மக்கள் திறள் ஆர்பாட்டம் நடைபெற உள்ளதால் அதற்கான மாவட்ட  செயற்குழு கூட்டம் தாம்பரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் துணை பொது செயலாளர் யாக்குப் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி தீர்மானங்கள் நிறைவேற்றினர், பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது  வாரனாசி மற்றும் மதுரா பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு பிரச்சனை ஆக்ககூடிய வேலையில்  இந்த நாட்டில் இருக்கக...

நங்கநல்லூரில் பள்ளி சுற்றுச்சுவர் மீது மரம் விழுந்து விபத்து... மின் கம்பம் சேதம்.

Image
 நங்கநல்லூரில் பள்ளி சுற்றுச்சுவர் மீது மரம் விழுந்து விபத்து. மின் கம்பம் சேதம்.  சென்னை நங்கநல்லூர், ஜெயகோபால் கரோடியா பள்ளியின் சுற்றுச் சுவர் மீது பெரிய மரம் ஒன்று கன மழையின் காரணமாக முறிந்து விழுந்தது.  இதில் பள்ளியில் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. அதே போல் மரம் விழுந்த காரணத்தால் அருகில் இருந்த மின் கம்பம் முறிந்து விழுந்தது.  தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், மற்றும் மின் வாரிய ஊழியர்கள் பணியை மேற்கொண்டனர்  மாநகராட்சி ஊழியர்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்திற்கு வழிவகை செய்தனர். மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மரம் முறிந்து விழுந்ததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

சென்னை பட்ரோட்டில் ரூ.500 கோடி நிலம் மீட்பு

Image
 பட்ரோட்டில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பு. பல்லாவரம் தாசில்தார் நடவடிக்கை. சென்னை கிண்டி அடுத்த பட்ரோட்டில் 500 கோடி மதிப்பிலான 1.5 ஏக்கர், இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடு கட்டி பயன்படுத்தி வந்துள்ளனர்.  இந்நிலையில் இந்த இடம் போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றியதாக தெரியவந்ததன் பேரில் செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின் பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் இன்று இடிக்கும் பணி துவங்கியது. வீட்டில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தபட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இடம் மீட்கப்பட்டது.  இதே போல் இதற்கு அருகில் எஸ்.பி.ஐ.வங்கி, வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அந்த இடத்திற்கு 7 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின் அந்த இடம் மீட்கப்படும் என்வும் அதன் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தார்.

புதியவாக்காளர் சேர்த்தல்மற்றும் திருத்தம் சிறப்புமுகாம்.

Image
இன்றுசனிக்கிழமை25.11.2023 நாளை ஞாயிற்றுக்கிழமை 26.11.2023அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்கா ளர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.தேவையான ஆவண ங்கள்முகவரிசான்றுபாஸ்போர்ட்கேஸ் பில்,தண்ணீர்வரி ரசீது, ரேசன் அட்டை வங்கி கணக்கு புத்தகம்.ஆதார் கார்டு வயதுசான்று,பிறப்பு சான்று.பான்கார் டு.ஓட்டுநர் உரிமம் கிசான்கார்டு மேற் கண்டஆவணங்களில்3ல்ஒவ்வொன்றிலும்ஏதாவதுஒருஜெராக்ஸ்கொண்டு செல்லவும். 18வயதுநிரம்பிய இளம் வாக்காளர்கள்மற்றும்முகவரிமாற்றம் இறந்துபோன வாக்காளர் பெயர் நீக் கம, மற்றும் பிழைதிருத்தல், நீக்கம் ஆகிய பணிகள் இச்சிறப்பு முகாம் மையங்களில்நடைபெறுகிறது.ஆதார் அவசியமானது.

சீனாவில் குழந்தைகளுக்கு பரவும் H9N2 புதிய வகை பறவை காய்ச்சல்.! - அவசரநிலைக்கு இந்தியா தயார்நிலையில் உள்ளதா.?

Image
 சீனாவில் குழந்தைகளுக்கு பரவும் H9N2 புதிய வகை பறவை காய்ச்சல்.! - அவசரநிலைக்கு இந்தியா தயார்நிலையில் உள்ளதா.? சீனா கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு பின் எதிர்கொள்ளும் முதல் குளிர்காலம் என்பதால் அங்கு மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். அக்டோபர் மாதம் முதல், கடந்த சில மாதங்களாக சீனாவில் புது வகையான எச்9என்2 வகை காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளில் பலருக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையமும் இதனை கடந்த 13ம் தேதி ஒப்பு கொண்டது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் சீனாவிடம் நேரடியாக விளக்கம் கேட்டுள்ளது.சீனாவில் குழந்தைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், எச்9என்2 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பினால் ஏற்படும் பொது சுகாதார அவசரநிலைக்கு இந்தியா தயார்நிலையில் உள்ளதா என்பது பற்றி பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆலோசனை நடத்தியது. அப்போது சீனாவில் குழந்தைகளுக்கு பரவும் எச்9என்2, சுவாச நோய்களின் பாதிப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் சுகாதார அவசரநிலைக்கு நாடு தயார்நிலையில் இருப்பதாகவும்...

மனநலம் பாதிக்கப்பட்ட பின் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை

Image
  ஈரோடு கணபதி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உத்தண்டிபாளையம் சண்முகம் மனைவி சாந்தி (வயது 48) இவர் கடந்த இரண்டு மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்துள்ளார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைக்கு சென்ற பிறகு இவர் வீட்டில் தனியாக இருந்தார் வீட்டின் முன்பு உள்ள குளியல் அறையில் கதவை உள்பக்கமாக தாள் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்றி தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சாந்தி தீப்பிடித்து எரிந்து போன நிலையில் இறந்து போய் உள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு மலையம்பாளையம் காவல் அதிகாரிகள் மன்சூர் அலி மற்றும் பரமசிவம் சென்று விசாரணை செய்து வருகிறார்கள்.

அரசுப்பள்ளி தலைமையாசிரியர் போக்சோவில் கைது - பள்ளியில் படித்த 390 மாணவிகளில் 142 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!

Image
 அரசுப்பள்ளி தலைமையாசிரியர் போக்சோவில் கைது - பள்ளியில் படித்த 390 மாணவிகளில் 142 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.! அரியானா மாநிலம் சண்டிகர் அடுத்த ஜிண்டில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் கர்தார் சிங்(56), அந்தப் பள்ளியில் படித்து வந்த 390 மாணவிகளில் 142 மாணவிகளுக்கு பாலியல் கொடுமை  செய்ததாக மாணவிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சில மாதங்களாக பள்ளி தலைமையாசிரியரின் பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வந்தநிலையில், சில மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்து கூறினர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட எல்லா மாணவிகளும் ஒருங்கிணைத்து அவர்களிடம் தலைமையாசிரியரால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து கேட்டறிந்தனர். மாணவிகள் கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் மாணவிகள் சார்பில் குடியரசு தலைவர், பிரதமர், தேசிய குழந்தைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு புகார் அளித்தனர். அதையடுத்து இவ்விகாரம் குறித்து விசாரிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட துணை ஆணையர் முகமது இம்ரான் ராசா கூறுகையில், ‘பாலியல் புகாரில்...

ஏய் இது வித்தியாசமா இருக்குய்யா..!! -விமானத்தை லஞ்சமாக வாங்கி வாடகைக்கு விட்ட மத்திய அரசு உயரதிகாரி.!

Image
 ஏய் இது வித்தியாசமா இருக்குய்யா..!! -விமானத்தை லஞ்சமாக வாங்கி வாடகைக்கு விட்ட மத்திய அரசு உயரதிகாரி.! லஞ்சப் பணத்துக்கு பதிலாக பயிற்சி விமானங்களை மிக குறைந்த விலைக்கு அந்த நிறுவனங்களில் இருந்து வாங்கி, பின்னர் அவற்றை பயிற்சி நிறுவனங்களுக்கே வாடகைக்கு விட்ட சிவில் விமான போக்குவரத்து துறை உயர் அதிகாரி கேப்டன் அனில் கில் தற்காலிக பணி நீக்கம். கேப்டன் அனில் கில் ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறையின் ஏரோ ஸ்போர்ட்ஸ் இயக்குநரகத்தில் தலைமை இயக்குநராக பணிபுரிந்து வந்தார்.  இதனுடன், சில விமான நிறுவனங்கள் ஆதாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், அமைச்சகம் முழு வழக்கிலும் ஊழல் இருப்பதைக் கண்டறிந்தது, பின்னர் இந்த விவகாரம் சிபிஐ மற்றும் ED க்கு சென்றது. இறுதியாக கேப்டன் அனில் கில்லை அமைச்சகம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவத்தில் கேப்டன் அனில் கில் தவிர, மற்றவர்கள் கண்கானிப்பில் உள்ளனர். குற்றச்சாட்டுகளின் தன்மையைப் பொறுத்தவரை, AAIG விமான விபத்துகள் விசாரணைக் குழுவைச் சேர்ந்தவர்களும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. கிடைத்த தகவலின்படி, ...

நடிகை குஷ்பு மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

Image
 நடிகை குஷ்பு மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!  தலித் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுப்படுத்தி பேசியதால், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக நிர்வாகி கார்த்திக் புகார்!

சத்தியமங்கலத்தில் இன்றுசனிக்கிழமை மின்தடை.

Image
ஈரோடுமாவட்டம்சத்தியமங்கலம்செண்பகபுதூர்துணைமின்நிலையத்தில் நாளை 25ம் தேதி சனிக்கிழமைமின் பராமரிப்புபணிகள்நடைபெறுவதால் , காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைகீழ்க்கண்டபகுதிகளில்மின்விநி யோகம்இருக்காதுஎனசத்தியமங்கலம்மின்கோட்டபொறியாளர்சண்முக சுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.    மின்சாரம்தடைபடும்பகுதிகள்.சத்திய மங்கலம்.,காந்திநகர்,ரங்கசமுத்திரம், சத்திபஸ் நிலையம்,வி.ஐ.பிநகர், உக் காம் கோணமூலை,செண்பகபுதூர், , அரியப்பம்பாளையம்இண்டியம்பளை யம்சின்னாரிபாளையம்சுண்டாக்காம் பாாளையம்சிக்கரசம்பாளையம்கெஞ் னூர்அய்யன்சாலைதாண்டாம்பாளை யம்.

பெண்களை குறிவைத்து துரத்தி துரத்தி படம் எடுத்த செய்தியாளர் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

Image
 பெண்களை குறிவைத்து துரத்தி துரத்தி படம் எடுத்த செய்தியாளர் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.! இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.. 20.11.2023 அன்று 0015 மணியளவில், நந்தனத்தில் (J1 சைதாப்பேட்டை கா.நி.) அமைந்துள்ள Big Bull Lounge என்ற தனியார் மதுக்கூடத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்த பின்னர் சென்ற ஐந்திற்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மேற்படி மதுக்கூடத்தில் பிரச்சனை செய்துள்ளனர். அச்சமயம், பெண்கள் உட்பட சில வாடிக்கையாளர்கள் அம்மதுக்கூடத்தில் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதி போட்டி ஒளிபரப்பை பார்த்துக்கொண்டிருந்தனர். மேற்படி பிரச்சனை குறித்து தகவல் தெரிந்ததையடுத்து, சுதர்சன் (நிருபர், நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சி) மற்றும் சிலருடன் அங்கு வந்துள்ளார். அவர்கள் அப்பிரச்சனையை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்தபோது, சில அடையாளம் தெரியாத நபர்கள் மதுக்கூடத்திலிருந்து வெளியே வந்த பெண்கள் குறித்து தவறான, இழிவான மற்றும் ஆபாசமான வார்த்தைகளை கூறியுள்ளனர். அப்பிரச்சனையை பல்வேறு தொலைக்காட்ச...

உயர் பொறுப்பில் இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Image
 உயர் பொறுப்பில் இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு முன்னாள் டி.ஜி.பி.யும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஆன நட்ராஜ் சமீபத்தில் வாட்ஸ்அப் குழுக்களில் முதலமைச்சர் மற்றும் அரசு குறித்து போலி செய்திகளை பரப்பியது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது

குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பு - காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த உதவிஆய்வாளர் உட்பட 13 போலீசார் பணியிட மாற்றம்.

Image
 குட்கா விற்பனையாளர்களுடன்  தொடர்பு -  காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த உதவிஆய்வாளர்  உட்பட 13 போலீசார் பணியிட மாற்றம். கடந்த 21ஆம் தேதி குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு வைக்கப்பட்டனர். 26 பேரில் 13 போலீசார் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம். ஆவடி காவல் ஆணையர் பரிந்துரையின் பேரில் டிஜிபி அலுவலகம் உத்தரவு.

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Image
 தமிழகத்தில் மாலை 4 மணி வரை 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், புதுக்கோட்டை, நீலகிரி, நெல்லை ஆகிய 24 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம் .

Image
 அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளை யம் ஊராட்சியில் பிரதம மந்திரி மக் கள் ஆரோக்கிய திட்ட காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம்,திருப்பூர்மாவட் டம்,  அவினாசி தாலுகா அளவிலான வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட் பட்ட காசி கவுண்டன்புதூர், வேலாயுத ம்பாளையம், ஆட்டையம்பாளையம், பெரிய கருணைபாளையம்,ஆகியபகு திகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒரு ங்கிணைந்த ஆயுஷ்மான் பாரத்& பிர தம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ரூ.5 லட்சம் காப்பீடூ அட்டை பதிவுசெய் யும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேலாயுதம்பாளையம் ஊராட்சிமன்றதலைவர்வி.சாந்தி வேலுச்சாமி கலந்துகொண்டு சிறப் பித்தார்.இதில்பொதுமக்கள் கலந்து கொண்டு  குடும்ப அட்டை,ஆதார் அட் டை ஆதாரில் பதிவு செய்த மொபைல் எண் கொண்ட மொபைல் போன் உட ன் நேரில் வந்து பதிவு செய்து பயன் பெற்றனர். பதிவு செய்வதற்கான கட் டணம் இன்றிஇலவசமாக பதிவு செய் ய ப்பட்டது. இக்காப்பீடு அட்டை பதிவு செய்த நிமிடத்திலிருந்துபயன்படுத்தி க்கொள்ளலாம். இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு பதிவு பெற் ற தனியார் மருத்துவமனைகளும் இக் காப்பீடு அட்டையை பயன்படுத்தி கொள்ள...

குடிபோதையில் வாகனம் இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது. வாகனம் பறிமுதல்

Image
சத்தியமங்கலம்காவல்நிலையஎல் லையில்,பவானிஆற்றுக்குதெற்கு பகுதியில் குற்ற தடுப்பு நடவடிக்கை யாக,250 சிசிடிவி கேமராக்கள்பொருத் தும்பணிபொதுமக்கள்,வணிகபெருமக்களமற்றும்கல்விநிறுவனங்கள்ஆகி யோர்களின் பங்களிப்பில் நடை பெற் றுவருகிறது.தற்போதுசுமார்130 சிசி டிவிகேமராக்களின்மூலம்அன்றாடும் நடைபெறும்நிகழ்வுகள்இதற்காகபிர த்யேகமாக,சத்தியமங்கலம்பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசி டிவி கேமராகண்காணிப்புஅறையில்,இர ண்டுதலைமைகாவலர்கள்பொறுப்பி  ல்அமர்த்தப்பட்டு24 மணிநேரமும்கண் காணிப்பில்ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில்,நேற்றுசத்தியமங்கலம்காவல்நிலையஎல்லையில்,கோவைரோட்டில் செண்பகப்புதூர்அருகே பெருந்துறையைச்சேர்ந்தடேவிட்என் பவர்தனதுஇருசக்கரவாகனத்தில்வந் தபோது,அப்போதுஅதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த 407வேன் ஒன்றுஅவர்மீது மோதியதில் ஜோசப் தூக்கிவீசப்பட்டு,காயம்அடைந்தநநிலையில்,அவர்மீதுமோதிய407வாகன த்தின் ஓட்டுநர்வாகனத்தைநிறுத்தா மல்சத்தியமங்கலத்தைநோக்கிவேக மாகவந்துவிட்டார்.  இதை நேரில்பார்த்தவிடுதலைசிறுத் தைகள்கட்சியின்சத்தியமங்கலம் ஒன் றிய செயலாளர் பொன் தம்பி ராஜன் என்பவர் சத்தியமங்கலம் காவல்ஆய் வாளர...

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு உறுதி மொழி

Image
  ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் இந்திய அரசமைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு நம்பியூர் வட்டாட்சியர் மாலதி அவர்கள் தலைமையில் எடுக்கப்பட்டது இதில் துரை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு   உறுதிமொழி ஏற்றனர்

சாயக்கழிவு நீர் கலப்பால் திருப்பூரில் நுரையாய் பொங்கும் நொய்யல் ஆற்று நீர்!

Image
திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளைத்தை பயன்படுத்தி சுத்திகரிக்காத சாயக்கழிவு நீரை ஆற்றில் திறந்து விடுவதால் நுரை பொங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  நொய்யல் ஆறு கோவைக்கு மேற்கே உற்பத்தியாகி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 165 கி.மீ., தூரம் பயணித்து காவிரியில் கலக்கக் கூடிய ஆறு ஆகும். இந்த ஆறு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சாக்கடை நீர் கழிவுகளாலும், திருப்பூரின் சாயக்கழிவு நீராலும் மாசடைந்து போனது. பல்வேறு நீதிமன்ற முயற்சிகளுக்கு ஆற்றில் சாயக்கழிவு கலப்பது தடுக்கப்பட்டது.  இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. புது வெள்ளம் பெருகி நொய்யல் ஆற்றில் வழிந்தோடுகிறது. திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை பகுதியில் இந்த மழை வெள்ளமானது ஆர்ப்பரித்து பொங்குகிறது. நல்லம்மன் கோவில் தண்ணீரில் மூழ்கி வருகிறது. கோவிலுக்கு செல்லக் கூடிய சிறு பாலம் துண்டிக்கப்பட்டு கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ...

கால்நடை சிறப்பு முகாம்

Image
 ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சியில்  சுள்ளிகரடு கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இம் முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் உதவி இயக்குனர் விஷ்ணுகாந்தன் கால்நடை உதவி மருத்துவர்கள் மருத்துவர் பா பிரகாசம் மற்றும் மருத்துவர் மணிவண்ணன் கால்நடை ஆய்வாளர் சக்திவேல் முருகன் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஈஸ்வரி வார்டு உறுப்பினர் ரேவதி  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

பாண்டிச்சேரிஉள் துறைஅமைச்சர் நமச்சிவாயம் பண்ணாரிஅம்மன்கோவிலில் சாமிதரிசனம்..

Image
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்தபண்ணாரியில்பிரசித்திபெற்றபண்ணாரி மாரியம்மன்திருக்கோவி ல் உள்ளதுஇங்குநாள்தமிழகம்மற்றும் கர்நாடக மாநிலத்தில்இருந்துஆயிரக் கணக்கானபக்தர்கள்பண்ணாரிவந்து பண்ணாரிஅம்மனைதரிசித்துநேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். இன்று அருள்மிகுபண்ணாரிஅம்மன்திருக் கோவிலுக்கு பாண்டிச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆறுமுகம் நமச் சிவாயம் குடும்பத்துடன்வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாககோவிலுக்குவருகைதந்தஅமைச்சருக்கு,திருக்கோவில்நிர்வாகம்சார்பில் கோவில் அலுவலர்கள் மாலை அணிவித்து,வரவேற்றனர்., பின்னர்அம்மன்தரிசனம்செய்தபின் கோவிலைசுற்றி காண்பித்து, திருக் கோயில் பிரசாதங்கள்வழங்கினர்.