Posts

Showing posts from July, 2024

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 126 மனுக்களில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி

Image
 தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 126 மனுக்களில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி      தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெஎஸ்நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். இணை ஆணையர் ராஜாராம் துணை மேயா் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்்றினார்.       மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஊராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் படி குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் பகுதியில் நடத்தப்பட்டு இன்று நான்காவது மண்டலமாக இங்கு நடைபெறுகிறது. ஏற்கனவே ...

தொடர்ந்து உயரும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம். விவசாயிகள் மகிழ்ச்சி.

Image
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே,பவானிசாகர்அணைஉள்ளது.இந்த அணை ஆசியாவிலேயே 2 வது மிகப்பெரிய மண் அணை ஆகும். மேலும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணை யில் இருந்து, வெளியேற்றப்படும் நீர், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2. 47 இலட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களும் பயன் பட்டு வருகின்றன. இங்கு முறையே,. அரக்கன் கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால், கீழ் பவானி வாய்க்கால் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  இந்த அணைக்கு பவானி ஆறு மூலம் வரும்  நீர், பில்லூர் அணையில் சேமிக்கப்பட்டு, உபரிநீர் இந்த அணை க்கு வரும். மேலும் மேயாறு மூலமும் நீர்வரத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பவானி சாகர் அணை நீர்ப் பிடிப்பு பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களான,கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக பவானி சாகர்அணைக்கு,நீர்வரத்துதொடர்ந்து அதிகரித்தவண்ணம்உள்ளது. பவானி சாகர்அணையின்முழகொள்ளளவான 105 அடியை எட்டும் தருவாயில், கடந்த சில நாட்களாக,பில்லூர்அணை தனது முழுக்  கொள்ளளவை எட்டி...

ஆர்.எஸ்.எஸ் குருபூஜை விழாவில் நேதாஜி இந்து மக்கள் இயக்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு

Image
சூலூர் பள்ளபாளையத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் குருபூஜை விழா பள்ளபாளையம் சுவாமி விவேகானந்தர் பள்ளியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் புல்லட்.சேகரின் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் எம்.பி பாலா கோவை மாநகர மாவட்ட இளைஞரணி தலைவர் ஐயப்பன் மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகேஸ்வரன் கோவை தெற்கு மாவட்டத்தின் அமைப்பாளர் அருண் கோவை தெற்கு மாவட்டத்தின் இளைஞரணி செயலாளர் டி.சுதாகர் பாப்பம்பட்டி ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகளுடன் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு தேசப்பணி செய்வதே முதல் தொண்டு, தேசமே தெய்வம் என்று நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது

தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

Image
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (28.07.2024) 10.30 மணி அளவில் கொரட்டூரில் இனிதே நடைபெற்றது. இதில் மாநிலத்தலைவர்  கே.பாஸ்கரன் மற்றும் மாநில பொதுச்செயலார் கோவிந்தராஜன் மற்றும் மாநில பொருளாளர் செய்யது உசேன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாசிச பா.ஜ.க அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாசிச பா.ஜ.க அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்பாட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் ஹெலன்டேவிட்சன் அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், முன்னிலையில் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள்,அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதநிதிகள்,வார்டு உறுப்பினர்கள், கிளை கழக நிர்வாகிகள்,கழக மூத்த முன்னோடிகள், வாக்கு சாவடி முகவர்கள், பாக முகவர்கள், கழகத் தோழர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், என அனைவரும் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசை...

நீலகிரி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாஸ்டர்.மாதன் மறைவுக்கு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் இரங்கல் அறிக்கை

Image
நீலகிரி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாஸ்டர்.மாதன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்  படுகர் சமூகத்தினர் உயர்வுக்கும்  நீலகிரி தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டவர்  எளிதில் அணுக முடிந்தவர் இனிமையாக பேசுபவர்  கொடுக்கும் புகார் மனுக்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி அதை முறையாக செயல்படுத்தியவர்  முன்மாதிரியான அரசியல் செயல்பாட்டாளர்  1998 பிப்ரவரி 14 பிற்பகல் கோவை ஆர்.எஸ் புரத்தில் குண்டு வெடித்த போது நானும் மாஸ்டரும் கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளரை சந்தித்துக் கொண்டிருந்தோம்  செய்தி கேட்டவுடன் ஓடோடி வந்து இடத்தை பார்வையிட்டு ஏர்போர்ட்டுக்கு வந்த பாரதப் பெருந்தலைவர் ஐயா அத்வானி அவர்களை சந்தித்து உண்மைகளை விளக்கினோம்  நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளராக அப்போது இருந்த நான் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் குண்டுவெடிப்பில் பலியான அறுவரின் உடலை எடுத்து வந்து அடக்கம் செய்ய உதவினேன் அப்பொழுதுதான் நான் பயங்கரவாதிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டு ஆறுவாரம் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த கதை வேறு  அப்போது எனக...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கார் விபத்தில், ஈரோட்டை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு . இரண்டு பேர் படுகாயம் .

Image
ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில், நேற்றிரவு சுமார் 8.45 மணி அளவில், சத்தியமங்கலத்தில் இருந்து ஹசனூர் சென்ற, கல்லூரி மாணவர்கள் சென்ற சொகுசு காரும், தக்காளி பாரம் ஏற்றி வந்த மினி வேனும் நேருக்கு நேராக மோதி, விபத்திற்குள்ளானது.இதில் சம்பவ இடத்திலேயே மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.  சத்தியமங்கலத்தில் உள்ள, தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ படித்து முடித்த, ஈரோட்டைச்சேர்ந்த முகில் நிவாஸ், அவரது தம்பி ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது நண்பர் கள் ஆதி சீனிவாசன், தர்மேஷ், ரோஹித் ஆகிய ஐந்து மாணவர்கள் ஆசனூர் செல்வதற்காக, சத்திய மங்கலத்தில் இருந்து, நேற்று இரவு சென்றனர். காரை முகில் நிவாஸ் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, சத்தியமங்கலம் வடவள்ளி கிராமம் அருகே, கல்லூரி மாணவர் கள் சென்ற கார்,  அதி வேகமாக சென்று, தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றி, அந்தியூர் செல்ல வந்த மினி சரக்கு வேன் மீது மோதியதில்,விபத்து ஏற்ப்பட்டது. இதில்,காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி, கல்லூரி மாணவர் கள் முகில் நிவாஸ், தர்மேஷ், ரோகித் ஆகிய மூன்று மாணவர்கள், தலையில் பலத்த அடிபட்ட நிலையில், சம...

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியை தூய்மைப்படுத்தி தண்ணீர் திறந்து விட சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் கோரிக்கை

Image
*ஆடிப்பெருக்கை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியை தூய்மைப்படுத்தி தண்ணீர் திறந்து விட சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் கோரிக்கை!*   ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி வருகின்றோம். இந்நாளில் தொடங்கும் செயல் எதுவும் பல்கிப் பெருகும் என்பதால் இதற்கு ஆடிப்பெருக்கு என்று பெயர். ஆடிப்பெருக்கு நாளில் விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது தமிழர் மரபில் நீடித்திருக்கும் வழக்கம். இதன் அடிப்படையில் விவசாயத்துக்கு ஆதாரமான ஆறு, குளம், நீர்நிலைகள் போன்றவற்றைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் நாள் ஆடிப்பெருக்காகும். ஆடிப் பெருக்கு என்றதும் எல்லோருக்கும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரிக்கரையில் செய்யப்படும் வழிபாடுகளே நினைவுக்கு வரும். ஆனால் இவ்வாண்டு காவிரியில் தண்ணீர் இல்லாததால் காவேரி வறண்டு கிடக்கிறது. காவிரிக்கரையில் உள்ளவர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் வழிபட முடியாத சூழல் இருந்த பொழுதிலும் தற்பொழுது கேரளா மற்றும் கர்நாடகத்தில் அதிக மழை பெய்வதால் ஓரளவிற்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அனைவராலும் கொண்டாடப்படவேண்டிய அற்புதமான திருநாளான ஆடிப...

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முதல் முதலாக மாதிரி நிதிநிலை அறிக்கை தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு

Image
புதுச்சேரி மாநிலத்தில் 62 ஆண்டு கால சட்டமன்ற வரலாற்றில்   புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முதல் முதலாக மாதிரி நிதிநிலை அறிக்கை தொடர்பான  பத்திரிக்கையாளர் சந்திப்பு சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் மற்றும் பொதுச்செயலாளர் எ. மு. ராஜன் முன்னிலையில்  கழகத்தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் ஆகியோரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.  கடந்த 62 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தை காங்கிரஸ், , திமுக கம்யூனிஸ்ட் கூட்டணி, திமுக, அதிமுக, என்.ஆர்  காங்கிரஸ், பாஜக,  காங்கிரஸ்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி புரிந்துள்ளன. இத்தனை ஆண்டுகளாக மாநில வளர்ச்சியை மட்டுமே முன் வைத்து முழுக்க முழுக்க அரசியல் கலப்பில்லாத பொருளாதார ரீதியான நிதிநிலை அறிக்கையை எந்த ஆட்சியாளர்களும் கட்சிகளும் வழங்கவில்லை. அதன் காரணமாக புதுச்சேரி மாநிலம் தொடக்க காலத்தில் இருந்ததைவிட பொருளாதார ரீதியாகப்  பின்னுக்குத் தள்ளப்பட்டு சீரழிந்து வருகிறது.  கடந்த 13 ஆண்டுகளில் ஒரு ஆண்டைத்  தவிர  எந்தக் காரணமும் இல்லாமல் முழு பட்ஜெட் வழங்காமல் இடைக்கால பட்ஜெட...

சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பாக கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டது

Image
கார்கில்போர் வெற்றிதினம்  சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பாக கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டது. போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் திருவுருவப் படத்திற்கு  கல்லூரி செயலர் பேராசிரியர் சாரம்மா சாமுவேல்,முதல்வர் டாக்டர் சிவக்குமார், துணை முதல்வர் டாக்டர் ஐயப்பதாஸ், பேராசிரியர்கள், தேசிய மாணவர்படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் தேசிய மாணவர்ப் படை மாணவர்களால் வரையப்பட்ட கார்கில் போர் குறித்த  ஓவியம் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியை கல்லூரி தேசிய மாணவர்ப் படை அலுவலர் கேப்டன் டாக்டர் தீபக் ரிஷாந்த் ஒருங்கிணைத்து நடத்தினார்.

மயிலாடுதுறை புதுத்தெரு நல்லத்துகுடி தார் சாலை மண் சாலையானதால் மக்களுக்கு பெரும் அவதி விரைந்து சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

Image
மயிலாடுதுறை புதுத்தெரு நல்லத்துகுடி தார் சாலை மண் சாலையானதால் மக்களுக்கு பெரும் அவதி! விரைந்து சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை  மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட ஐந்தாம் நம்பர் புதுத்தெரு சாலை பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இச்சாலையை கடந்து தான் மயிலாடுதுறை நகரத்திற்கு நல்லத்துகுடி, கோடங்குடி, செருதியூர், கடக்கம், எலுமிச்சம்பாத்தி உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்வோரும், விவசாய பெருங்குடி மக்களும் சென்று வர வேண்டும். கடந்த பல மாதங்களாகவே இச்சாலை தார்சாலையா மண்சாலையா என்று கண்டறிய முடியாத அளவிற்கு முழுமையாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இச்சாலைக்கு அருகில் தான் திருமண மண்டபங்கள் அமைந்துள்ளன. விசேஷ நாட்களில் பெருமளவு மக்கள் இப்பகுதிக்கு வந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கின்றார்கள். அந்நேரங்களில் இச்சாலையைக் கடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. மேலும் முக்கியமான வங்கித்துறை தலைமை அலுவலகம், புது சுகாதாரத் துறை மாவட்ட அலுவலகம் இ...

சூலூரில் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிசத் ஒன்றிய செயற்குழு

Image
சூலூரில் தமிழ்நாடு விசுவ ஹிந்து  பரிசத் ஒன்றிய செயற்குழு கூட்டம் 24-7-2024 ஆம் தேதி மாலை 7 மணிக்கு பெருமாள் கோவில் திடலில் மாவட்ட இணை செயலாளர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்புரை  மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் கலந்துகொண்டார் செயற்குழுவில் நாகராஜ் மாவட்ட இணை செயலாளர், கிருஷ்ணமாச்சாரி மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர்,  காளிமுத்து நகர இணைச் செயலாளர்,  பிரகாஷ் ஒன்றிய இணைச் செயலாளர், முருகன்  பூசாரி பேரவை பொறுப்பாளர் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1)செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நிறைவு விழாவான விஜர்ஜன விழாவிற்கு விஸ்வ ஹிந்து பரிசத் மாநில தலைவர் ஆர்.ஆர் கோபால்ஜியை அழைப்பது 2)சூலூரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒண்டிப்புதூரிலிருந்து சூலூர் ஏரோ வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் 3)கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உண்டான நிதியை இந்த பாராளுமன்ற கூட்ட தொடரிலேயே ஒதுக்க வேண்டும்  4)தமிழகத்தில் உள்ள இந்து கோவிலுக்கு தமிழக அரசு அதிகமாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்த...

உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் மாற்று கட்சி நண்பர்கள் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையவேண்டும் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் அழைப்பு

Image
உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் மாற்று கட்சி நண்பர்கள் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையவேண்டும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் அழைப்பு புதுச்சேரி தற்போது மக்களுக்காக பணியாற்றும் நல்ல தலைவர்களை இழந்து வெற்றிடமாக, , தலையில்லாமல் உயிரற்ற உடலாக காட்சியளிக்கிறது. நல்ல தலைவருக்காக புதுச்சேரி மக்கள் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் . மக்கள் ஏக்கத்தை பூர்த்தி செய்யக்கூடிய ஒரே தகுதி புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மட்டும் தான் உள்ளது. புதுவையில் தற்போதய மோசமான அரசியல் நிலை நீடித்தால் புதுச்சேரி மக்களையும் , வருங்கால சந்ததியினரையும் யார் காப்பாற்றுவது.  அதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம். இது மற்ற கட்சிகளை போல் தலைமையிடத்தில் அனுமதி பெற காத்து கிடக்கவோ , தவறான கூட்டணியை ஏற்படுத்தி மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடும் கட்சி அல்ல. மக்கள் நலனுக்காக , வருங்கால சந்ததியினரை காப்பாற்றுவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கீழூர் கிராமத்தில் உருவாக்கப்பட்டது தான் புதுச்சேரி மாநில...

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா: ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி அறிவிப்பு

Image
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா: ஆகஸ்ட் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி அறிவிப்பு தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2024 திங்கட்கிழமை  தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்  தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரம் தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2024 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 10.08.2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.  

தூத்துக்குடி: சைபர் குற்றத்தால் பறிபோன ரூ.76 லட்சம் பணம் மற்றும் காணாமல்போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்பு - எஸ்பி பாராட்டு!

Image
 தூத்துக்குடி: சைபர் குற்றத்தால் பறிபோன ரூ.76 லட்சம் பணம் மற்றும் காணாமல்போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்பு - எஸ்பி பாராட்டு! தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பணம் ரூ.76 லட்சம் மற்றும் காணாமல்போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இணையவழி மோசடியில் பணத்தை இழந்தவர்கள் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னிகிருஷ்ணன்  மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர்கள்  சுதாகர்,  அச்சுதன்,  அபிராமி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தனர். அதன் விளைவாக தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய பல்வேறு வழக்குகளில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்...

தேசியத்தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம் சௌத்திரி தேவர் அவர்களுக்கு நேதாஜி இந்து மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Image
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை தேசியத்தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த தயாரிப்பாளர்  மரியாதைக்குரிய ஏ.எம் சௌத்திரி தேவர் அவர்களை நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.பி பாலா மற்றும் என்.ராஜேஷ் கவுண்டர் காமாட்சிபுரம் தர்மா பாலசுப்பிரமணியம்ஆகியோர் சந்தித்து பொன்னாடை போர்த்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் தேசியத்தலைவர் திரை காவியம் வெற்றி அடையவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் ஏ.எம் சௌத்திரி தேவர் அவர்களின் பயணம் இனிதே வெற்றி அடைய நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி துரை மாடன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

Image
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி துரை மாடன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்*  கிருஷ்ணகிரி மாவட்டம், திருவண்ணாமலை முதன்மைச் சாலை, ஜெகதேவி தண்ணீர் பள்ளம், துரை மாடன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி ஆசிரியர் சுவேதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மற்றும் தலைமை உரையாக பள்ளி தாளாளர் ம.சத்தியமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.  சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது பெற்ற எம்.பன்னீர்செல்வம் மற்றும் பள்ளி நிறுவனர் து.மணி கலந்து கொண்டு மாணவர்களுக்கிடயே காமராசர் வாழ்க்கை வரலாறு மற்றும் கல்வி வளர்ச்சியை பற்றியும் மாணவி, மாணவர்களுக்கு விளக்கமாக உரையாற்றினார்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி கவிதை போட்டி பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் சிறப்பு விருந்தினர் எம்.பன்னீர்செல்வம் அவர்களால் வழங்கப்பட்டது.  பள்ளி நிர்வாக இயக்குனர் சிந்து வாழ்த்துரை வழங்கினார் .  பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆசிரியர் அகில...

காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா சூலூர் காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில் கொண்டாட்டம்

Image
பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா சூலூர் காமராஜர் நற்பணி மன்றத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது  கலங்கள் பகுதியில் உள்ள ஆர்த்தி பாத்திரக்கடையில் பெருந்தலைவரின் புகைப்படம் திறக்கப்பட்டது பின்னர் குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சூலூர் சிஎஸ்ஐ பள்ளி ரங்கநாதபுரம் விஎல்பி பள்ளி ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் வழங்கி வளர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டது விழாவில் தமிழக வணிகர்களின் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் எம்.ஆர்.எம் ராஜசேகர்  பொதுச் செயலாளர் மதன்ராஜ்  பொருளாளர் ராஜேந்திரன் கொள்கை பரப்புச் செயலாளர் சரத் சத்தி சூலூர்  வியாபாரிகள் சங்க செயலாளர்  உமரிகணேஷ் மற்றும் காமராஜர் நற்பணி  மன்ற நிர்வாகிகள் நெல்லை தர்மராஜ் செல்வகுமார் மல்லிகை ராஜா தாமோதரன் சுயம்பு  பார்த்திபன் தங்கவேல் குமரவேல் சேசாஸ்திரி ராஜா திருமணி முருகன் ராமன் சுந்தர் தனசூர்யா கணேசன் ராமகிருஷ்ணன் பாலன் மற்றும் ஏராளமான  நிர்வாகிகளும் பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டு சி றப்பித்தனர்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம். பர்கூர் சட்டமன்ற தொகுதியில் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Image
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம். பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , பர்கூர் பேரூர், சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் கல்விக் கண் திறந்து,காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்தநாள் விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் , பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன். அவர்கள் கலந்து கொண்டு திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. இவ்விழாவில் உடன் சுமை தூக்குவோர் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ, செல்வங்கள், மாநில ,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள்,அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு பிறந்தநாள் விழாவினை சிறப்பித்தார்கள்.

காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

Image
கர்மவீரர் காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக கோவை மாவட்ட தலைவர் த. நெடுமாறன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மாநில செயலாளர் தியாகராஜன், மாநில பொறியாளர் அணி தலைவர் வரதராஜன் , சிங்கை தொகுதி தலைவர் தனபால் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

சூலூர் பகுதியில் அனைத்து வியாபாரிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா

Image
சூலூர் பகுதியில் அனைத்து வியாபாரிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா   சென்னை மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சராக 9 ஆண்டு காலம் முதல்வராக இருந்து தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் முன்னெடுத்த காங்கிரஸ் தலைவராக பணி ஆற்றிய காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் புதிய பேருந்து நிலையம் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட வளைவில் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நெல்லை காசி எட்வின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்ணம்பாளையம் காங்கிரஸ் கட்சி தலைவர் சத்தியமூர்த்தி, சூலூர் பேரூராட்சி உறுப்பினர் மணிமேகலை, ராஜம் பேக்கரி அல்போன்ஸ், திருப்பதி ஸ்டோர் பாலசுப்ரமணியம், இரட்டை பாதை சிவபெருமாள், உட்பட சூலூர் பகுதியில் உள்ள வியாபாரிகள், பள்ளிமாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்னதானம் சர்வ கட்சியினர் பங்கேற்ப்பு

Image
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிங்காநல்லூர் சர்க்கிள் உட்பட்ட 54 வது வார்டு நீலிக்ணோம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது இதில் எச்எம்எஸ் தொழிற்சங்க தலைவர் ராஜாமணி 54 வது வார்டு கவுன்சிலர் பாக்கியம் தனபால் 55 வது வார்டு கவுன்சிலர் அன்பு (எ) தர்மராஜ் கொங்குநாடுமக்கள் தேசிய கட்சி  மாவட்ட செயலாளர் தனபால் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார் சிங்காநல்லூர் சர்க்கிள் தலைவர் ஷேக் முகமது  மாநகர மாவட்ட செயலாளர் துரைசாமி திமுக இணைச்செயலாளர் ராஜேஷ்குமார் விடுதலை சிறுத்தை கட்சி  சிங்கை தொகுதி செயலாளர் ஆதிசங்கர் மக்கள் நீதி மையம் சிங்காநல்லூர் தொகுதி தலைவர் ரகுநந்தன் ஈஸ்வரன் (எ) துரைசாமி (திமுக) சிங்காநல்லூர் தொகுதி இளைஞர்கள் காங்கிரஸ் தலைவர் தீபக் நடராஜன்    54 வது வார்டு காங்கிரஸ் கட்சியின்  தலைவர் சுப்பிரமணி  55 வது வார்டு தலைவர் வெங்கடேஷ்  நடிகர் கிருஷ்ணன் சுப்பையன் பஞ்சாலை பார் தேவன்  எத்தில்ராஜ் அருணகிரி டெய்லர் சுந்தரம் மு...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோவை கிழக்கு மாநகர மாவட்டம் சார்பாக காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா

Image
கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாள் விழா கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  கோவை கிழக்கு மாநகர மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் தனபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி சௌரிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் மாநகர பொருளாளர் மகேஷ்குமார் மாநகர துணைச் செயலாளர் மகேந்திரவர்மன் தீரன் தொழிற்சங்க பேரவை மாநில துணைத் தலைவர் அய்யாசாமி தீரன் தொழிற்சங்க பேரவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி மகளிர் அணி தலைவி சூரியகலா மகளிர் அணி செயலாளர்  கிருஷ்ணவேணி சவுரிபாளையம் பகுதி  தலைவர் ஆறுமுகம்  விஸ்வநாதன் பிஎம்எஸ் முத்து ஸ்ரீராம் குமார் கனகம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 21 அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
 #தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 21 அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 2018 ஸ்டைர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம்   விசாரணையை மீண்டும் துவக்கக் கோரிய வழக்கில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 21 அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   நீதிபதி செந்தில்குமார் பிறப்பித்த உத்தரவில் : அதிகாரிகளின் மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி, 2 வாரங்களுக்குள் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் புதுவை துணை நிலை ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு

Image
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் புதுவை துணை நிலை ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக மாநில நிர்வாகிகள் அதன் தலைவர் பேராசிரியர்  மு.ராமதாஸ் தலைமையில், சேர்மன் ஆர். எல் வெங்கட்டராமன், பொதுச்செயலாளர் எ.மு. ராஜன் , பொருளாளர் செல்வக்குமாரி, மகளிர் அணி தலைவி விமலா பெரியாண்டி ஆகியோர் புதுவை மாநில துணை நிலை ஆளுநர்  சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து ,  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கி அதில் குறிப்பிட்டுள்ள பல்வேறு விஷயங்கள் பற்றிக் கலந்து  பேசினர்.  அதில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு நிர்வாகக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், புதுவை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், கிரிஷி விஞ்ஞான கேந்திரா  ஊழியர்கள் 153 பேருக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், ப...

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் ஏற்பட்டுள்ள பள்ளம் விரைந்து சீரமைக்க சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கோரிக்கை

Image
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் முதியவர்கள் பெண்கள் பலர் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றார்கள். பேருந்துகள் கூட பள்ளத்திற்காக வளைந்து வளைந்து செல்வதை காண முடிகின்றது. இப்படிப்பட்ட சிறுசிறு பிரச்சனைகளை கூட சமூக வலைத்தளங்கள் மட்டும் செய்தி ஊடகங்களில் வெளிப்படுத்திய பிறகு தான் சீரமைப்பு செய்வது என்பது ஏற்புடையதல்ல. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இப்பகுதிகளுக்கு வருவதே இல்லையா? அரசு வழங்கும் ஏசி கார்களின் பவனி வருவதால் அவர்களின் கண்களில் இப்படிப்பட்ட பள்ளங்கள் மற்றும் சிறு சிறு பிரச்சனைகள் கூட தெரியவில்லை என்று நினைக்கின்றேன். ஆகவேதான் பலதரப்பட்ட மக்களும் நம்மிடம் எடுத்துரைக்கும் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மயிலாடுதுறைமாவட்ட ஆட்சியர் மட்டும் விவேகமுடன் பணியாற்றுகின்ற பொழுது மற்ற அனைத்து துறை அலுவலர்களும் இப்படிப்பட்ட விவேகத்தைப் பெற வேண்டும், மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். மக்களின் தேவைகளை அறிந்து உணர்ந்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, கண் துஞ்சாது கடமையாற்றி வரும் மாண்புமிகு தமிழ...

ஏனாம் தொகுதியில் சுகாதார சீர்கேட்டால் விஷ காய்ச்சல் பரவி குழந்தைகள் பாதிப்பு அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க. ஆர்.எல்.வி பேரவை மாநில பொது செயலாளர் ஏனாம் அரதாதி போசியா வலியுறுத்தல்

Image
ஏனாம் தொகுதியில் சுகாதார சீர்கேட்டால் விஷ காய்ச்சல்  பரவி குழந்தைகள் பாதிப்பு  அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும்.   ஆர்.எல்.வி பேரவை மாநில பொது செயலாளர் ஏனாம்  அரதாதி போசியா வலியுறுத்தல்  ஏனாம் தொகுதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர் வாரப்படாமல் , சுத்தம் செய்யப்படாமல் அங்காங்கே கழிவு நீர்  தேங்கி நிற்கிறது. இதனால் ஊர் முழுக்க கொசுத்தொல்லை அதிகமாகி காலரா டைபாய்டு போன்ற விஷ காய்ச்சல் பரவி வருகிறது. இதில் அதிகமாக பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவ மனைகளில் போதிய டாக்டர் வசதி இல்லாமல் , விஷ ஜூரத்தினால் பாதிக்கப்பட்ட  குழந்தைகள் சிகிச்சைக்காக நிரம்பி வழிகின்றனர். ஏனாமில் சரியான மருத்துவ வசதி இல்லாததால் , ஏனாமில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நோயாளிகள் அலைக்கழிக்க படுகின்றனர். இது புதுச்சேரிக்கு அவமானம் இல்லையா, கால்வாய் அடைப்புகளினால் எதிர்வரும் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழியில்லாமல் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்க கூடிய சூழ்நில...

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு பெஞ்ச் டெஸ்க்குகள் வழங்கும் நிகழ்ச்சி

Image
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 12 அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், மாணவ,மாணவியர்களுக்கு பள்ளியில் அமர்வதற்க்காக பெஞ்ச்,டெஸ்க்குகளை( Bench ,Desk), பர்கூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.22,92,000 மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்., அவர்கள் கலந்து கொண்டு தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். உடன் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள்,மாநில ,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், பெஞ்ச்,டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை - கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி

Image
 தூத்துக்குடியில் வின்பாஸ்ட்  மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை - கட்டுமான பணிகளுக்கு  தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி  முதல் கட்டமாக 1119.67  கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.  தமிழ்நாட்டின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் எலக்ட்ரிக் கார் (Electric Vehicle - EV) தொழிற்சாலையின் களப்பணிகள் கடந்த மாதம் துவங்கப்பட்டது. வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்த ஆலையை நிறுவும் பணிகள் மந்தமாகத் துவங்கினாலும், தற்போது வேகமெடுத்துள்ளது. தமிழ்நாடு அரசுடன் கடந்த ஆண்டு வின்ஃபாஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது ஆலைக்கான கட்டுமான பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலை சுமார் 380 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு 1,50,000 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 3,000 முதல் 3,500 வரையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான ஹப் ஆக மாற...

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை டாக்டர் நியமிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

Image
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை டாக்டர் நியமிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை                  மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரந்தரமாக அறுவை சிகிச்சை டாக்டர் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் மிகவும் அவதியுற்று வருகிறார்கள். ஆகவே அவசிய அவசரமாக தேவைப்படும் அறுவை சிகிச்சை மருத்துவரை உடனடியாக நியமிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்ர  அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை அனுப்பி உள்ளார்.  மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகராக அமைந்துள்ள மயிலாடுதுறையில் மாவட்ட மருத்துவமனையாக கருதப்படும் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. குறிப்பாக எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 45 கோடி மதிப்பிலான ஏழு மாடி கட்டிடம் வாணலாவ எழுந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம், பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம்,  தரங்கம்பாடி, செம்பனார் கோவில், மணல்...

கோபியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

Image
தமிழ்நாடு முதலமைச்சர்  இரண்டாம் கட்டமாக, தர்மபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சவண்டப்பூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை திருப்பூர் எம்.பி.சுப்பராயன் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம்,திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம்,ஒன்றிய செயலாளர்கள் கோரக்காட்டூர் ரவிச்சந்திரன், எஸ்.ஏ.முருகன், எம்.சிவபாலன்.ஊராட்சி மன்ற தலைவர்கள் சுரேஸ்குமார்,(சவண்டப்பூர்), கிருபா (பாரியூர்), சரஸ்வதி ராஜசேகர் (அம்மாபாளையம்), பூபதி, (பெருந்தலைவர்)குருசாமி (மேவாணி) ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். நிகழ்வில் பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர், அதில் பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் பணமோசடி என்பது ஒரு குற்றத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வழி. மருந்து பரிவர்த்தனை அல்லது பயமுறுத்தும் நிதியுதவி,குற்றத்தின் பணமானது கசப்பானதாகக் கருதப்படுகிறது, மேலும் அது சுத்தமாகத் தோற்றமளிக்க "சலவை" செ...

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு

Image
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் 7/7/2024 ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. கழகத்தின் தலைவர்  பேராசிரியர் மு. ராமதாஸ் அவர்கள் தலைமையில் சேர்மன் ஆர். எல் வெங்கட்டராமன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொது செயலாளர் எ. மு. ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக கழகம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் , எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணி குறித்து செயல்பட வேண்டிய எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசித்து தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில துணை தலைவர்கள் நித்தியானந்தம் ,  ஆனந்தன், மாநில செயலாளர் ரவிகுமார், மாநில இணை செயலாளர்கள்  பூ. பெருமாள் , முருகன், இளங்கோவன், துணை செயலாளர்கள் கலியபெருமாள் , கஜேந்திர பாஸ்கர் , வேதராமன் , சித்தானந்தம் , ரகுபதி, சோமசுந்தரம் , இதய வேந்தன், கலிவரதன் , உதவி செயலாளர் ஆண்டாள், மகளிர் அணி தலைவி விமலா பெரியாண்டி ஆகியோர் கலந்து கொண...

தனியார் பள்ளி மீது அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

Image
தனியார் பள்ளி மீது அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர் அதில் கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியில் ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. மேற்படி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA) ஆரம்பிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் ஒன்று கூடி பல முறை கேட்டும் அதனை நிறைவேற்றவில்லை. மேற்படி பிரச்சனை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களது தலைமையில் நடத்தப்படும் நுகர்வேர் காலாண்டுக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் அநேக பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் முறையாக செயல்படுத்துவதில்லை என நுகர்வோர் அமைப்புக்களால் தொடர்ந்து புகார் அளித்து வந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் வழிகாட்டல்படி மாணவர்களிடம் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளி நிரவாகம் தன்னிச்சையாக முடிவு செய்து முறைகேடாக கல்விக் கட்டணம் வசூலித்து வருகின்றனர். மேலும் மேற்படி பள்ளியில் மாணவ மாணவியர்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்...

தூத்துக்குடி : ஏற்றுமதி நிறுவன மேலாளரிடம் கண்டெய்னர்கள் புக்கிங் செய்து பல லட்சம் பண மோசடி - கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் கைது!

Image
 தூத்துக்குடி : ஏற்றுமதி நிறுவன மேலாளரிடம் கண்டெய்னர்கள் புக்கிங் செய்து பல லட்சம்  பண மோசடி - கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் கைது! தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (49) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேற்படி ஏற்றுமதி  நிறுவனம் உணவு பொருட்களை கண்டெய்னர்கள் மூலம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்துவரும் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து மேற்படி மணிகண்டனிடம் கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சர்தார் என்பவரது மகன்கள் ரகில் (26),  ரபிக் சர்தார் (38) மற்றும் சர்தாரின் மனைவி பாசுரோஸ்னாரா (55) ஆகியோர் தாங்கள் நடத்தி வரும் ஆர்.ஆர்.பி ஷிப்பிங் லைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கண்டெய்னர்களை புக்கிங் செய்தால் மார்க்கெட் ரேட்டை விட கம்மியாக மார்ஜின் செய்து தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியதன் பேரில் மேற்படி மணிகண்டன் ரஷ்யாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வெள்ளரிக்காய் ஏற்றுமதி செய்வதற்கு 16 கண்டெய்னர்களை...

கோவை சூலூரில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த கோடீஸ்வரர் கைது

Image
கோவையில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த கோடீஸ்வரர் கைது  கோவை:-ஜூலை-09 கோவை மாவட்டம் சூலூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோய் வந்தன குறிப்பாக சூலூர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையின் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள் அடிக்கடி திருடுபய் வந்தன இது தொடர்பாக பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டு வாகன திருடர்களை போலீசார் தேடி வந்தனர் இதே போல பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மருத்துவமனை பீளமேடு பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை பகுதிகளிலும் மருத்துவமனைக்கு வரும் வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் வருவது மாவட்ட காவல் துறையினர் கவனத்திற்கு வந்துள்ளது அதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் மேற்பார்வையில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் இரண்டு தனிப்படையில் அமைக்கப்பட்டு திருடர்களை பிடிக்க கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார் அதன் பெயரில் தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு மேலாக சூலூரில் உள்ள பிரபல மருத்துவமனையின் முன்பாக போலீசார் இரவு பகலாக திருடனின் வரவு...

கோவை சூலூரில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் கைது

Image
கோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் கைது கோவை;-ஜூலை- 09 கோவை மாவட்டம் சூலூரில் கர்நாடகாவில் இருந்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் காருடன் கைது செய்துள்ளனர்.கோவை மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிரமாக சோதனை செய்து புகையிலைப் பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையுடன் விற்பனை செய்யும் நபர்களையும் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று காலை சூலூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நீலாம்பூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட சொகுசு காரை நிறுத்த சைகை காண்பித்தனர்.இருந்தும் கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.அந்த காரை துரத்திச் சென்று அவினாசி சாலையில் மடக்கிப் பிடித்த போலீசார் காரில் இருந்து நபரை பிடித்து விசாரணை நடத்தி காரை சோதனையிட்ட...

மக்களாட்சி தகுதியை இழந்த ரங்கசாமி தலைமையிலான அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கோரிக்கை

Image
 அனைத்து துறைகளிலும் தோல்வியுற்று மக்களாட்சி தகுதியை இழந்த ரங்கசாமி தலைமையிலான அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ செய்யவேண்டும்  புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கோரிக்கை. புதுவையில் ரங்கசாமி தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரட்டை என்ஜின் ஆட்சி, இரண்டு தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இது  மக்களாட்சி தகுதியை ரங்கசாமி தலைமையிலான அரசு இழந்துள்ளதையே காட்டுகிறது.  முதல்வர் ரங்கசாமி தலைமையில் பஞ்சபாண்டவர்களை போல் இருக்கின்ற அமைச்சர்கள் மக்களை பஞ்சத்தில் வீழ்த்தி இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். மின் கட்டண உயர்வு, தவறான  புதிய கல்விக்கொள்கை, போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத கஞ்சா விற்பனை,  பொதுப்பணி துறையை ஜப்தி செய்ய கூடிய நிலை,  உழவர்கரை தொகுதியில் விஷ வாயு தாக்கி மூன்று பெண்கள் பலியான விவகாரம் , காரைக்கால் விவசாயிகள் பிரச்சினை , சந்தனமரம் கடத்தல் விவகாரம் , ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சந்திர பிரியங்காவிற்கு  பிறகு தனி அமைச்சர் ...

கோவில்பட்டியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்த கணினி மைய உரிமையாளர் கைது

Image
 *கோவில்பட்டியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்த கணினி மைய உரிமையாளர் கைது* கோவில்பட்டி இனாம் மணியாச்சி மேம்பாலம் அருகே மில்கேட்  சாலையில் மேலக்காலனியை சேர்ந்த மகேஸ்வரன் (59) என்பவருக்கு சொந்தமான துளசி கம்ப்யூட்டர்ஸ் என்ற பெயரில் கணினி மையம் நடத்தி வந்துள்ளார். அங்கீகாரம் இல்லாமல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையின் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஜூன் 29 ம் தேதி துளசி கணினி மையத்தில் திடீரென சோதனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, ​அங்கீகாரம் இல்லாமல் தனிப்பட்ட பயனர் ஐ.டி., யில் பதிவு செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நான்கு ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மகேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்து, கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.