Posts

Showing posts from September, 2024

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார் - மேயர் ஜெகன் பெரியசாமி கண்டிப்பு

Image
  தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார் - மேயர் ஜெகன் பெரியசாமி கண்டிப்பு தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. கோவில்களில் நடைபெறும் தசரா நிகழ்ச்சிகள் நடந்து நிறைவு பெறும் போது மழை தீவிரம் அடையும். அதற்கு முன்னதாக நாம் செய்ய வேண்டிய கட்டமைப்பு பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். 60 வார்டுகளிலும் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் நல்ல விழிப்புணர்வோடு இருந்து தங்களது பகுதியில் மழை பெய்தால் எந்த பகுதியில் மழைநீர் தேங்கும் அதை எப்படியெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை முழுமையாக ஆய்வு செய்து எனக்கு உடனுக்குடன் தகவல் தர வேண்டும்.  நானும், ஆணையரும் ஏற்கனவே பல்வேறு பகுதிகளை களஆய்வு செய்துள்ளோம். இருந்தாலும் உங்களுடைய ஒத்துழைப்பும் அவசியம் என்பதை கருதி இதை தெரிவிக்கிறேன். பல முன்னெச்சரி...

தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பாக மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் அறிக்கை

Image
தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பாக மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் அறிக்கை  தமிழகத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் துணை முதலமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு இந்த பதவியில் இருக்கும் போது நேர்மையாக ஊழலற்ற நிர்வாகத்தையும் கிராம கோவில்களுக்கு உரிய பூஜைகளை செய்வதற்கு பூஜாரிகளுக்கு மாத மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊக்கதொகை வழங்க வேண்டுமென்றும் சிதிலமடைந்த கிராம கோவில்களை புணரமைக்க 5 லட்ச ரூபாய் வழங்க ஆவண செய்து தமிழகத்தின் ஆணி வேரான கிராம பண்பாட்டினை காத்திட முக்கிய நடவடிக்கை எடுத்து தமிழ் பண்பாட்டினை காத்திட முன்னோடியாகவும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு தனது அறிக்கையில் கேட்டு கொண்டுள்ளார்

உதயநிதி துணை முதல்வர் வரவேற்போம் வாழ்த்துவோம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அறிக்கை

Image
உதயநிதி துணை முதல்வர் வரவேற்போம், வாழ்த்துவோம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்  தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பது உறுதியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இருந்தபொழுது முரசொலியின் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் உதயநிதி வசம் ஒப்படைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். என்றைக்கு அப்பொறுப்பு கிடைத்தது அன்று முதல் உதயநிதி முழுமையாக கட்சிப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே வந்துள்ளார். மேலும் பத்திரிக்கை துறையில் பொறுப்பேற்கின்ற பொழுது அனைத்துத் துறை சார்ந்த வரலாறுகளும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் இயல்பாகவே அவருக்கு கிடைத்துவிடும். அதேபோல அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் தனது உதிரத்திலும் ஒவ்வொரு அணுவிலும் கூட அரசியல் பிரிக்க முடியாததாகவே இருக்கும் என்பதும் உறுதி. அவர் கலைஞானம் பெற்றதால் தான் நடிப்புத் துறையிலும் சிறப்புடன் பணியாற்ற முடிந்தது. அந்த வகையில் பாரம்பரியமிக்க திராவிட குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் அன்றாடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு மாபெரும் இயக்கத்தின், தலைவரின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்ணுறுகின்ற காரணத்தினால் ...

சத்தியமங்கலம் கொமாரபாளையம் ஊராட்சியில், தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு பேரணி.

Image
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கம்( ஊரகம்) பகுதி- 2, தூய்மையே சேவை இயக்கம் - 2024, திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவக்குமார் தலைமை தாங்கினார், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உமாசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் வகாப், ராதாமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர் கள்:- சுகுமார் வடிவேலு,சாவித்திரி ரங்கராஜ், வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு, மற்றும் கல்லூரி துறை தலைவர் கள், பேராசிரியர்கள்,திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர், கல்லூரி யில் பயிலும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர்கள் ஆங்காங்கே உள்ள குப்பைகளை சேகரித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்படைத்தனர், ப...

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்

Image
  தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெஎஸ்நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார். தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்றினார். பிறப்பு இறப்பு சான்றிதழ் முகவாி மாற்றம் புதியகுடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு கட்டிட அனுமதி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மனுக்களை பெற்றுக்கொண்ட பின் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் அவரது உத்தரவிற்கிணங்க மழை நீர் தேங்கிய பகுதியில் புதிய கால்வாய் பணிகள் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் படி குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் பகுதியில் நடத்தப்பட்டு இந்த மண...

திருப்பூரில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

Image
 திருப்பூர் ஊத்துக்குளி ரோடு அணைக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் குடியிருந்து வருகின்றனர். இதில் ஒரு காம்பவுண்டில் மூன்று தளங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் குடியிருந்து வருகின்றனர் இதில் முதலாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்பக்கமாக பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் வராண்டாவில் ஒரு பெண்ணும் படுக்கை அறையில் அவரது கணவர் மற்றும் மகள் என மூன்று பேரும் உடல் உப்பிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர்.  உயிரிழந்து  நான்கு நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் துர்நாற்றம் வீசிய நிலையில் பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் நாக சுரேஷ் (35) அவரது மனைவி விஜி( 29) இவர் அணைக்காடு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.  இந்நிலையில் ...

கொள்ளிடம் ஆதனூர் தடுப்பணை பணிகள் நிறைவு முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பாராட்டு

Image
கொள்ளிடம் ஆதனூர் தடுப்பணை பணிகள் நிறைவு முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பாராட்டு  மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமு கழக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளருமான ஜெக வீரபாண்டியன் முன்னாள் எம்எல்ஏ கொள்ளிடம் ஆதனூர் தடுப்பணை கட்டி நிறைவுற்ற பணிகளை பார்வையிட்டு சுமார் 390 கோடி மதிப்பீட்டிலான பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித்துறை நீர்வள செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகளை பாராட்டினார். விரைவில் கொள்ளிடம் ஆதனூர் தடுப்பணை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. நம்முடைய காவிரியில் வருகின்ற தண்ணீர் கொள்ளிடத்தில் வந்து கடலில் வீணாக கலப்பதை பெருமளவிற்கு இத்தடுப்பணை தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் இதர வாய்க்கால்கள் கால்வாய்கள் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு சென்றடையவும் நல்வழி பிறந்துள்ளது. இந்த தடுப்பணை அமைய பல்வேறு கட்டங்களில் அரசின் கவனத்தை ஈர்த்த அனைத்து தரப்பு இயக்க, கட்சிகளின் நண்பர்களுக்கு நன்றியினை தமிழ்நாட்டின் அனைத்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சார்பில்...

சத்தியமங்கலம் பகுதியில், நாளை மின்தடை .

Image
தமிழ்நாடு மின்சார வாரியம், சத்தி மின்  கோட்டத்தை சேர்ந்த பெரிய கொடிவேரி பெரும்பள்ளம், வரதம் பாளையம் மற்றும் மாக்கினாம் கோம்பை ஆகிய துணை மின் நிலையங்களில், நாளை செவ்வாய் கிழமை  மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை கீழ்க் காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின் வாரிய கோட்ட பொறியாளர் சண்முக சுந்தரராஜ் தெரிவித்து உள்ளார். மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்,  பெரிய கொடிவேரி துணை மின்நிலையம் - கொடிவேரி, சின்னட்டிபாளையம், கொமராபாளையம், மலையடிபுதூர், ஆலத்துக்கோம்பை,டி.ஜி.புதூர்,ஏழுர், கொண்டப்பநாய்க்கன்பாளையம். பெரும்பள்ளம் துணை மின் நிலையம் -கெம்பநாயக்கன்பாளையம், ஏ.ஜி .புதூர், சின்னக்குளம், கொண்டப்ப நாயக்கன்பாளையம், தாசரி பாளை யம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடக நல்லி, அத்தியூர். வரதம்பாளையம் துணை மின் நிலையம்.-வடக்குபேட்டை, புளியங் கோம்பை, சந்தை கடை, மணிக் கூண்டு, கடைவீதி, பெரியகுளம், பாசக்குட்டை, வரதம்பாளையம், J.J.நகர், கோம்புபள்ளம், கோட்டு வீரம் பாளையம், கொங்குநகர். மாக்கினாம்கோம்பை துண...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில், 24வது பட்டமளிப்பு விழா.

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள, பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில், 24-வது பட்டமளிப்பு விழா, கல்லூரியின் சேர்மன், டாக்டர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், ஜோகோ கார்ப்பரேசன் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர்  பத்மஸ்ரீ,ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டு, பட்டமளிப்பு விழா விழா பேரூரை நிகழ்த்தியும், பட்டம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில், இக்கல்லூரியில், உணவு தொழிற் நுட்ப துறையில் பி.இ. பொறியியல் படிப்பில், கலைமாமணி மற்றும் முருகேசன் தம்பதியினரின், புதல்வியான செல்வி. எம். ஷஞ்சு, அண்ணா பல்கலைக்கழக அளவிலான தேர்வில், உணவு தொழில்நுட்ப துறையில் தங்க பதக்கம் பெற்றதை அடுத்து, பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு மாணவி ஷஞ்சுவிற்கு, தங்க பதக்கத்தை அணிவித்து,பட்டம் வழங்கி கெளரவித்தார்.  அப்போது விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி பேராசிரியர்கள்,துறை தலைவர்கள் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள்,மாணவ,மாணவியர்கள் கரவொலி எழுப்பி, மாணவி எம். ஷஞ்சுவிற்க...

திருப்பூரில் தமிழ்நாடு இந்து சேவா சங் மற்றும் இந்து பரிவார் கூட்டமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

Image
திருப்பூரில் தமிழ்நாடு இந்து சேவா சங் மற்றும் இந்து பரிவார் கூட்டமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு  பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோயில் இடத்தில் மாற்று மதத்தை சேர்ந்த நபருக்கு செருப்பு கடை வைப்பதற்கு அனுமதி வழங்கிய இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையரை பணி நீக்கம் செய்ய சொல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு பல்லடம் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது ஆனால் பல்லடம் காவல்துறை அனுமதி மறுத்தது அதனை தொடர்ந்து தமிழ்நாடு இந்து சேவா சங் மற்றும் இந்து பரிவார் கூட்டமைப்பினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாக சந்தித்து நியாயமான கோரிக்கைக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்

நண்பனின் இரு குழந்தைகளை கொலை செய்த வாலிபர்... நரபலியா? போலீஸ் விசாரணை!

Image
 குடியாத்தம் அருகே நண்பணின் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து கொலை செய்த பட்டதாரி பில்டிங் காண்ட்ராக்டர் கைது- இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை - 2 சிறுவர்களை கொலை செய்து நரபலி கொடுத்தார்களா என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடி ஏரிபட்டி  கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டரான வசந்த்குமார் என்பவரும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் வடிவேல் நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யோகராஜ் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கட்டிட கான்ட்ராக்டர் வசந்த்குமார் என்பவருக்கு கடந்த அண்டு திருமணமான நிலையில்  மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வசந்தகுமார் மாதனூர் பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளியான நண்பர் யோகராஜ் வீட்டிற்கு சென்று யோகராஜ் மனைவியிடம் பேசிவிட்டு கடைக்கு சிறுவர்களை அழைத்து செல்வதாக கூறி அவர்களின் இரண்டு  பிள்ளைகள் யோகித் (5 வயது) தர்ஷன் (4 வயது) இருசக்கர ...

பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தபால் துறை மற்றும் சூலூர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி இணைந்து சிறப்பு ஆதார் முகாம்

Image
பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தபால் துறை மற்றும் சூலூர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி இணைந்து சிறப்பு ஆதார் முகாம் செப்டம்பர் 18,19 ஆகிய இரண்டு நாட்கள் சூலூர் ராஜவல்லி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து சென்றனர் இந்நிகழ்ச்சியில் , மண்டல் தலைவர் ரவிக்குமார், மண்டல் துணைத் தலைவர் பிரஷாந்த், நகர பொறுப்பாளர் அசோக், காங்கேயம் பாளையம் பழனிச்சாமி, ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர், கலங்கல் விக்னேஷ்,மகளிர் அணி நந்தினி, ஆன்மீக மேம்பாட்டு பிரிவு தலைவர் சத்தியநாராயணன்,இளைஞர் அணி தலைவர் ஹரிஷ்,கௌதம்,அஸ்வின்,முகிலன்,பிரவீன், மனோ ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது

Image
பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் சூலூர் வடக்கு மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது சக்தி கேந்திர பொறுப்பாளரும் ஒன்றிய துணைத் தலைவருமான வெள்ளிங்கிரி தலைமையில் சின்ன பண்ணாடி ராமமூர்த்தி, இளந்தாரி பண்ணாடி சிவராஜ் ஆகியோர் முன்னிலையிலும்  மண்டல் தலைவர் ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி,நகர பொறுப்பாளர் அசோக், தொழில் பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் மகேஷ், கலங்கல் விக்னேஷ், ஓபிசி அணி தலைவர் சசிதரன், மகளிர் அணி தலைவி நந்தினி, சாய்பாபா சக்திவேல், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், செல்வராஜ், தனசேகர், ஜாக்கிஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் அரசு தொடர்பு துறை தலைவர் மாரிமுத்து, தனலட்சுமி, கிளை தலைவர்கள் மாசிலாமணி, பூங்கொடி மற்றும் லோகு,பிரகாஷ் அம்பேத்கர், மதன்குமார், முகுந்தன், மணிபாரதி ஆகியோர் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்

முட்டம் பாலம் மணல்மேட்டிற்கு இடையே கிடப்பில் போடப்பட்ட 2 கி.மீ இணைப்புச் சாலையை விரைவில் அமைத்திட நிதி ஒதுக்கிட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை

Image
*முட்டம் பாலம் மணல்மேட்டிற்கு இடையே கிடப்பில் போடப்பட்ட 2 கி.மீ இணைப்புச் சாலையை விரைவில் அமைத்திட நிதி ஒதுக்கிட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை!*  கடலூர் மாவட்டத்தின் கடைகோடி தாலுகாவான காட்டுமன்னார்கோவில் தென் மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களை இணைக்கும் பிரதான பகுதியாக உள்ளது.காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆறு உள்ளதால் பக்கத்து மாவட்டமான மயிலாடுதுறை தஞ்சை, நாகை மாவட்டத்திற்கு 50 கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது. இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு வியாபாரம், தொழில் பாதிக்கப்பட்டு வந்தது. நீண்ட கால கோரிக்கைக்குப் பின் கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அன்றைய அமைச்சராக இருந்த எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பெரு முயற்சி எடுத்து கொள்ளிடம் ஆற்றில் குறுக்கே முட்டம் பாலம் கட்ட நபார்டு வங்கி உதவியுடன் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முட்டம் - முடிகண்டநல்லூர் இடையேயான பாலத்திற்கு கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி பூமி பூஜை போடப்பட்டு மார்ச் 6ம் தேதி பாலம் கட்டுமானப் பணி துவங்கியது. இரண்டரை ஆண்டுகளில் பணிக...

2026-ல் எடப்பாடியார் முதல்வராகி நல்லாட்சி தருவார்... முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன் - செ.ம.வேலுச்சாமி பேச்சு

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக, கொங்குநகர் பகுதி கழகம், 20-வது வார்டு எஸ்.வி.காலனியில்  பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்  நடைபெற்றது.  கழகத் தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் துணைசபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன்,  கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான.செ.ம.வேலுச்சாமி, கழக மகளிர் அணி துணைச் செயலாளர் நூர்ஜகான்,  கூடலூர் ராமமூர்த்தி ஆகியோர்  சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கழக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளருமான கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.  20 வது வட்டக்கழக செயலாளர் எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.   கொங்குநகர் பகுதி கழக செயலாளர்பி.கே.முத்து  வரவேற்புரையாற்றினார். கழகத் தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன...

இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதி சால்வை அணிவித்து வாழ்த்து

Image
தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த கழக இளைஞரணிச் செயலாளர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கினங்க கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பிரகாஷ் எம்பி ஆகியோர் வழிகாட்டுதலில் கோவை தெற்கு மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திகேயன் ஆலோசனையின் பேரில் கோவை சூலூர் தெற்கு ஒன்றியம் பட்டணம் ஊராட்சியில் 11 பூத்தில் முதல் கட்டமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திமுக இளைஞரணியில் இணைத்து கொண்டதையடுத்து நிறைவு பெற்ற இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் படிவத்தை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதியிடம் தெற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் செல்வக்குமார், பொதுக்குழு உறுபினர் ரகு, துரைராஜ் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் முன்னிலையில் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை பணியை விரைவாக முடிக்க உறுதுணையாக இருந்த பாகமுகவர்கள் வார்டு செயலாளர்கள் கிளைசெயலாளர் நாகராஜ், ர...

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர்

Image
  தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் : மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர்   தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.  தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரம் தோறும் பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை வகித்து, மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம்

Image
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம் அரியாங்குப்பத்தில் நடைபெற்றது உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த கோரி அரசை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் படி முதல் கட்ட ஆர்ப்பாட்டம் உழவர்கரை நகராட்சி எதிரில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தின் எதிரில் வீராம்பட்டினம் செல்லும் சந்திப்பில் மெயின் ரோட்டில் உள்ள பிரம்மன் கோயில் அருகில் நடைபெற்றது. அரியாங்குப்பம் பைபாஸ் சிக்னல் அருகில் கழக கொடியேற்று விழா நடைப்பெற்றது மாநில செயலாளர் சிவகுமாரன் தலைமையில் கழகத்தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டதில் இணைப்பு உரையை மாநில பொருளாளர் முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி வழங்கி விழிப்புணர்வுக் கோஷங்கள் எழுப்பினார் . ஆர்ப்பாட்டதை மாநில இணை செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் கலியப்பெருமாள், உதவி செயலாளர் இதய வேந்தன், மாநில மீனவர...

சத்தியமங்கலம் கே.என். பாளையம் பேரூராட்சியில், பேரறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்தநாள் விழா.

Image
 ஈரோடு வடக்கு மாவட்டம், சத்தி வடக்கு ஒன்றியம், கே.என்.பாளையம் பேரூர் திமுக சார்பில், திமுக பவள விழா மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா,  கே.என்.பாளையம் பேரூர் கழக செயலாளரும்,கே என் பாளையம், பேரூராட்சி மன்ற தலைவருமான, கே ரவிச்சந்திரன் தலைமையில் நடை பெற்றது. விழாவில், தி.மு.கழக மூத்த முன்னோடிகள், அவைத் தலைவர் நாராயணன், பேரூராட்சி துணை தலைவர் சந்திரன்,குமாரசாமி, ரமேஷ் மாரிமுத்து, சக்திவேல்,  மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர் கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் பேரூராட்சியில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா.

Image
ஈரோடு வடக்கு மாவட்டம், அரியப்பம் பாளையம் பேரூர் திமுக சார்பில், திமுக பவளவிழா மற்றும் பேரறிஞர் அண்ணா  பிறந்தநாள் விழா, திமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.இதில் தி.மு.கழக மூத்த முன்னோடி,அரியப்பம்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்.ஈஸ்வரமூர்த்தி கொடியேற்றினார்.அதனை தொடர்ந்து, பேரூர் தி.மு.கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ். செந்தில்நாதன் பவளவிழா மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாப் பேரூரையாற்றினார். இந் நிகழ்வில், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.கழக மூத்த முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இல்லந்தோரும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதி தலைமையில் நடைபெற்றது

Image
தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த கழக இளைஞரணிச் செயலாளர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கினங்க கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேஷன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பிரகாஷ் எம்பி ஆகியோர் வழிகாட்டுதலில் கோவை தெற்கு மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திகேயன் ஆலோசனையின் பேரில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  தெற்கு ஒன்றியம் கலங்கல் ஊராட்சி கிளை பாகம் எண் 210 க்கு உட்பட்ட பகுதியில் இல்லந்தோரும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இருகூர் உதயபூபதி தலைமையில் நடைபெற்றது சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலங்கல் ஊராட்சி கலங்கல் கிளை செயலாளர் சிவக்குமார் ,மகளிரணி வளர்மதி,பாகமுகவர்கள் சுப்பிரமணி இளைஞரணி மேகநாதன்,கலங்கல் இளைஞரணி பிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

சத்தியமங்கலம், அருள்மிகு. பண்ணாரிஅம்மன் திருக்கோவிலில், பக்தர்கள் 92,51,568 ரூபாய் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி நேர்த்திக்கடன்.

Image
 ஈரோடு மாவட்டம்.சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் திருககோவிலில், மாதம் தோறும் உண்டியல்கள் திறக்க பட்டு, காணிக்கை எண்ணப்படும். அதன்படி,நேற்றுகோவில்வளாகத்தில் உள்ள20உண்டியல்கள்திறக்கப்பட்டு,  அருள்மிகு, பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில்,ஆய்வாளர் சிவமணி மற்றும் கோவில் பரம்பரை   அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல்,அமுதா, பூங்கொடி, கண்காணிப்பாளர்கள்  பால சுந்தரி, சங்கர் ஆகியோர் முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. திருக்கோவில்.உண்டியலில், ரூபாய் 92,51,568 ரொக்கமாகவும், 342 கிராம் தங்கம், 875 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.இந்தஉண்டியல்எண்ணும் பணியில், சத்தியமங்கலம் வெற்றி நர்சிங் கல்லூரி மாணவிகள், மற்றும் பக்தர்கள்,தன்னார்வலர்கள்,கோவில் அலுவலகப்பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -

Image
  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில்,  ஈரோடு மாவட்டத்தில், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்,  கிராம உதவியாளர்களை இரவு காவல் பணி, அலுவலகப் பணி, ரெக்கார்ட் ரூம் பணி, மக்களுடன் முதல்வர் மனுக்களை கணினியில்  முடிவு செய்வது உள்ளிட்ட பணிகளில், கிராம உதவியாளர்களை  கட்டாயப் படுத்துவதை கண்டித்தும்,  டிஜிட்டல் கிராப் சர்வே பணி, ஆர்.எஸ்.ஆர் கணினியில் சரி பார்ப்பது போன்ற பணிகளுக்கும்  கிராம உதவியாளர் களை கட்டாயமாக பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை   வலியுறுத்தி மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம், சங்க தலைவர் பெரியசாமி, சங்க செயலாளர் கனகா, பொருளாளர் ராசாத்தி  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  பணி செய்ய கட்டாயப்.படுத்தும் போது, பணிக்கு வராத கிராம உதவியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும் என மிரட்டி, நவீன கொத்தடிமைகளாக நடத்துவதை கண்டித்தும், ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர் .இது போன்ற செயல்கள் கிராம உதவியாளர்கள் மத்தியில் மிகப்பெ...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தேசிய பொதுச்செயலாளர், சீதாராம் யெச்சூரி காலமானர்.

Image
சுவாச தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்.,12) காலமானார். அவருக்கு வயது 72. கடந்த சில நாட்களாக, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. அவரை பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. சுவாசக் கருவிகளின் உதவியுடன் அவர் சுவாசித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் நிவேதா.எம்.முருகன் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் வாழ்த்து

Image
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் நிவேதா.எம்.முருகன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் அவர்களுக்கு மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ  ஜெகவீரபாண்டியன் சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள். சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தொழிலாளர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெகமுருகன் மாவட்ட நிர்வாகி அல்போன்சா பாஸ்கர் ஆகியோரும் உடன் வாழ்த்தினார்கள்.

கோவை சூலூர் பகுதியில் வீர இந்து சேவா சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம்

Image
கோவை சூலூர் பகுதியில் வீர இந்து சேவா சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எட்டு விநாயகர் சிலைகள் வைத்து சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி வடக்கு மண்டல தலைவர் ரவிக்குமார்,சூலூர் நகரத் தலைவர் அசோக் , ஆன்மீக பிரிவுத் தலைவர் சத்தியநாராயணன், தேச பக்தர் பழனிச்சாமி , கண்ணம்பாளையம் பொறுப்பாளர் மணி, மற்றும் வீர இந்து சேவா மாநில தலைவர் கிருஷ்ணகுமார், வீர இந்து சேவா ஆன்மீக பிரிவுத் தலைவர் ஸ்ரீ ல ஸ்ரீ வடிவேல் சாமிகள், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்செல்வம்,கோவை மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் கோவை மாவட்ட செயலாளர் மாதவராஜ் ,கோவை மாவட்ட ஆன்மீக பிரிவுத் தலைவர் கிருஷ்ணசாமி (எ) ஜாக்கிசான்,கோவை மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி, கண்ணம்பாளையம் தலைவர் குணா, கண்ணம்பாளையம் செயலாளர் மணி ஆகியோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது முடிவில் சூலூர் மற்றும் கண்ணம்பாளையம் பகுதிகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்று நொய்யல் ஆற்றில் விஜர்ஜனம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறப்பாக ஒத்துழைப்பு அளித்த சூலூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கும்,மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து காவல் ...

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழிகாட்டி தலைவர்களில் ஒருவரான செல்லான் நாயக்கர் பிறந்த நாள் விழா

Image
செல்லான் நாயக்கர் பிறந்தநாள் விழா   புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழிகாட்டி தலைவர்களில் ஒருவரான திருமிகு. செல்லான் நாயக்கர் பிறந்த நாள் விழா 9.9.24 திங்கள்கிழமை காலை 10.30 மணி அளவில் தட்டஞ்சாவடி வி.வி. பி நகர் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சியில் மாநில தலைவர் ராமதாஸ் கழக சேர்மன் ஆர். எல் வெங்கட்டராமன் மற்றும் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், அணித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.   அவரின் வரலாறு நினைவு கூறப்பட்டது அவர் காட்டிய வழியில் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் தொடர்ந்து பயணிக்கும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

கோவை சூலூரில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விசர்ஜன பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது

Image
கோவை மாவட்டம் சூலூரில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விசர்ஜன பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது  ஊர்வலத்தை சூலூர் எம்எல்ஏ கந்தசாமி காவி கொடியசைத்து துவக்கி வைத்தார் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்கினார் கணேஷ் மாநகர் மாவட்ட இணை செயலாளர் தலைமை தாங்கினார் சிதம்பரம் பிஜேபி மாவட்ட செயலாளர், சிவகுரு மாநில கொள்கை இறப்புச் செயலாளர் வாழ்த்துரை வழங்கினர் பிரசாந்த் குமார் மாநகர மாவட்ட செயலாளர் வரவேற்புரை ஆற்றினார் மாநகர மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்த் வாழ்த்துரை வழங்கினர் வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணை பொது செயலாளர் சிறப்புரை ஆற்றினார் விழாவில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால் கலந்து கொண்டு பேசியதாவது:  சத்ரபதி சிவாஜி காலத்திலேயே இந்து ஒற்றுமைக்காக விநாயகர் உற்சவம் தொடங்கி வைக்கப் பட்டது. அதற்கு பின் இந்த விழா அந்நிய படையெடுப்புகளால் தடைபட்டது. பின்னர் அது பாலகங்காதர திலகரால் 1899ம் ஆண்டு தொடங்கப் பட்டு, 130 ஆண்டுகளாக பாரத தேசம் முழுவதும் மட்டுமல்லாமல், உலகத்தில் எங்கெல்லாம் இந்துக்கள் வசிக்கிறார்க...

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து அதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளார்- அமைச்சர் முத்துச்சாமி பேச்சு

Image
அமெரிக்கா சென்றுள்ள முதல்வர்  ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து அதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளார்- அமைச்சர் முத்துச்சாமி பேச்சு... மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான மாபெரும் வங்கி கடன்கள்  வழங்கும் முகாமை  மதுரையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் குழுக்களுக்கு ரூ. 2,735 கோடி கடன் வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் குழுக்களுக்கான கடன் வழங்கும் முகாமில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் உள்ள 1727 மகளிர் சுய உதவி  குழுக்களுக்கு சுமார் ரூ.96.47 கோடி கடன்களை வழங்கினார். அதனை தொடர்ந்து மகளிர் குழுக்களுக்கு அதிகளவு கடன் வழங்கிய வங்கி நிர்வாகத்தினருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி கூறும் போது ,கோவை மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.96.47 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஒருங்கிணைத்து பணியாற்றிய ஆட்சியர் உள்ளிட்ட அதிகா...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஸ்ரீவெற்றி நர்சிங் கல்லூரியில், பட்டமளிப்பு விழா.

Image
 சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரியில்,  பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், சத்தியமங்கலம் நகர மன்ற தலைவர் .ஜானகி ராமசாமி, டாக்டர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர். பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், சத்தி அனைத்து வணி கர் சங்க தலைவர் ஜவகர், கல்லூரி தாளாளர்செல்லப்பன்,கண்ணம்மாள், மற்றும் ரகுபதி, லோகு , பிரேமா ஶ்ரீதர், சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர். விழாவில், கல்லூரி ஆசிரியைகள், திவ்யா,நந்தினி, பிரியா, சத்யா மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். விழா நிறைவில், கல்லூரி இயக்குனர்  க. செ. ஶ்ரீதர் நன்றி உரையாற்றினார்.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் கூட தனியார் பள்ளிகள் செயல்படுவதை கண்டித்து தமிழ்நாடு இந்து சேவா சங்கம் மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் புகார் மனு

Image
திருப்பூர் மாவட்டத்தில்  தொடர்ச்சியாக விதி மீறல்களில்  ஈடுபட்டு அரசு விடுமுறை நாட்களில் கூட  தனியார் பள்ளிகள் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த  வலியுறுத்தி  தமிழ்நாடு இந்து சேவா சங் மாநில இளைஞரணி தலைவர் நேதாஜி போர் படை அமைப்பாளர் சி.எஸ்.ஆனந்தராஜ் இந்து பரிவார் கூட்டமைப்பு முக்கிய பொறுப்பாளர்கள் இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று முறையிட்டு அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக செயலாளரிடம் தனியார் பள்ளிகளின் மனிதாபமற்ற செயலால் குழந்தைகள் அரசு விடுமுறை நாட்களில் கூட பள்ளிக்கு செல்ல வேண்டிய ஒரு அவல நிலையை குறித்து மனுவாக அவரிடம் வழங்கப்பட்டது உடனடியாக தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள் .மேலும் தனியார் பள்ளிகள் சட்டத்தை மீறும் பட்சத்தில் சட்டத்துக்கு உட்பட்டு மேற்கண்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து இருக்கின்றனர்.

கோவை சூலூர் ஒன்றிய தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மூன்று நாள் நிகழ்ச்சிகள்

Image
கோவை சூலூர் ஒன்றிய தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சூலூர் பள்ளபாளையம் பாரதிபுரம் இருகூர் பட்டணம் கண்ணம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் 3 அடி முதல் 9 அடி வரை 35 சிலைகள் காலை 5 மணி முதல் சிலைகள் பிரதிஸ்டை செய்யப்பட்டு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிகளில் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் மாநகர் மாவட்ட இணைச் செயலாளர் கணேஷ் மாநகர் மாவட்ட இணைச் செயலாளர் நாகராஜ் இளைஞர் அணி மாவட்ட இணை அமைப்பாளர் கிருஷ்ணமாச்சாரி பிஜேபி மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஒன்றிய இணைச் செயலாளர் லீலா கிருஷ்ணன் ஒன்றிய துணைத் தலைவர் கருப்புசாமி ஒன்றிய செயலாளர் மோகன் இணை செயலாளர் ஹரி பிரசாத் உட்பட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பின்பு ஜமாப் இசை நிகழ்ச்சியும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடந்தது அன்னதானமும் நடைபெற்றது  முதல் மூன்று நாட்களுக்கு அருள்மிகு விநாயகருக்கு சிறப்பு பூஜையும் ஆராதனையும் பொது மக்களுக்கு ஆன்மீக போட்டிகளும் முருகன் பாடல் விநாயகர் பாடல் சிவன் பாடல் ஒப்புவித்தல் நிகழ்ச்சியும் சீரும் ச...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில், காவல்துறையினர் கொடி அணிவகுப்பு .

Image
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராம பகுதிகள் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில், இந்து முன்னணி மற்றும்பல்வேறுசமூகஅமைப்புகளின் சார்பில்,ஆங்காங்கேவிநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடை பெற உள்ளது. இதனையொட்டி, சத்தியமங்கலம் உட்கோட்ட  காவல் துறை சார்பில், சத்தியமங்கலத்தில், சத்தியமங்கலம் டி.எஸ்.பி.எம்.எஸ். சரவணன் தலைமையில், காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும்,பொதுமக்களிடையே அச்சத்தை போக்கும் வகையில், காவல் கொடி அணிவகுப்பு நடை பெற்றது.  காவல் கொடிஅணிவகுப்பில், புஞ்சை புளியம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், பவானிசாகர் காவல் ஆய்வாளர் அன்னம், சத்திய மங்கலம் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் குருசாமி, மகளிர் காவல் ஆய்வாளர் ஹேமா உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், காவல் அதிரடி படையினர் மற்றும் உட்கோட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.   கொடி அணி வகுப்பு ஊர்வலம்,  சத்தியமங்கலம் காவல் நிலையம் துவங்க...

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர்,தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை

Image
கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலை வைத்து வழிபடுமாறு அமைப்புகள் மற்றும் பொது மக்களை கேட்டு கொண்டுள்ளார் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகளால் நிறுவப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் கீழ்கண்ட இடங்களில் விசர்ஜனம் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.முத்தண்ணன்குளம் 2. பவானி ஆறு (சிறுமுகை, பழத்தோட்டம், எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி). 3.அம்பராம்பாளையம் ஆறு (ஆனைமலை, காளிப்பக் கவுண்டன்புதூர் மற்றும் மயிலாடுதுறை). 4. நொய்யல் ஆறு (ராவுத்தூர் பிரிவு). 5. ஆச்சான் குளம், நீலாம்பூர். 6. உப்பாறு (ஆனைமலை முக்கோணம் அருகில்). 7. நடுமலை ஆறு, வால்பாறை. 8. சாடிவயல். 9. வாளையார் அணை. 10. குறிச்சி குளம். 11. குனியமுத்தூர் குளம். 12. சிங்காநல்லூர் குளத்தேரி. 13. வெள்ளக்கிணறு குளம். 14. நாகராஜபுரம் ...

தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் கண்டன அறிக்கை

Image
தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் கண்டன அறிக்கை தமிழக அரசே காவல்துறையே நடவடிக்கை எடு நடவடிக்கை எடு தாழம்பூர்ஆலயத்தை திறக்க நடவடிக்கை எடு 30 ஆண்டு காலமாக பொதுமக்கள் வழிபாடு செய்து வந்த ஆலயம் மற்றும் அரசாங்கத்தால் போடப்பட்டுள்ள வீராணம் குடிநீர் குழாய் மேல் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தை உரிமை கொண்டாடும் தனியார் கம்பெனிக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக அடோா் வெல்டிங் கம்பெனிக்கு ஆதரவாக பேசி எட்டு மாத காலமாக காவல் துறையால் பூட்டி கிடக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மேல் கோட்டையூர் நெல்லிக்குப்பம் சந்திப்பில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் பொது மக்கள் வழிபாடு செய்ய நடவடிக்கைஎடு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு செங்கல்பட்டு செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்   ஒன்று கூடுவோம்  காலை 8 மணி அளவில் எங்களுடன்  மாடம்பாக்கம் செந்தில் மாநில தலைவர் ஜெய் சிவசேனா, இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின்  மாநில தலைவர். வின...