Posts

Showing posts from December, 2025

ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கடத்திவரப்பட்ட 75 கிலோ கஞ்சா பறிமுதல்- இருவரை கைது செய்து போலீசார் விசாரணை.

Image
ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திர தமிழக எல்லையில் உள்ள பரதராமி சோதனை சாவடியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்,போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அதில் 75 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது இதனையடுத்து 75 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (35)மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (44) ஆகிய இருவரையும் கைது செய்தனர்  மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது தெரியவந்தது இதனையடுத்து இருவரையும் கைது செய்த பரதராமி போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைனில் சவுண்ட் சர்வீஸ் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக முகநூல் மூலம் (Facebook) அறிமுமமாகி ரூபாய் 1,42,000/- பணத்தை மோசடி செய்த நபர் கைது.!

Image
  தூத்துக்குடியில் ஆன்லைனில் சவுண்ட் சர்வீஸ் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக முகநூல் மூலம் (Facebook) அறிமுமமாகி ரூபாய் 1,42,000/- பணத்தை மோசடி செய்த நபரை கைது செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வரும் ஒருவருக்கு முகநூல் மூலம் அறிமுகமாகிய மர்ம நபர் ஒருவர் தன்னிடம் குறைந்த விலையில் ஆம்ப்ளிபையர் மற்றும் ஸ்பீக்கர்கள் (Amplifier and Speaker) விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளார். அதை நம்பி மேற்படி நபர் UPI பண பரிவர்த்தனைகளின் மூலம் ரூபாய் 1,42,000/- பணத்தை அனுப்பி உள்ளார். பின்னர் மேற்படி நபருக்கு சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் வராததையடுத்து தான் மோசடி செய்யப்பட்டது குறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற...

தூத்துக்குடி பத்திாிகையாளர்களுக்கு மாணிய விலையில் வீட்டுமணை வழங்க வேண்டும். மாநகராட்சி கூட்டத்தில் வக்கீல் மந்திரமூர்த்தி கோாிக்கை.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி சாதாரன மாதந்திர கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையா் ப்ரியங்கா துணை மேயா் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசுகையில்:- "மழையிலும் ,வெயிலிலும் மக்களுக்காக உழைக்கும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மானிய விலை  வீட்டு மனை பட்டா கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த கால அதிமுக ஆட்சியில் இடம் ஒதுக்கப்பட்டது பின்பு ஆட்சி மாற்றம் காரணமாக நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலையில் இந்த விளம்பர மாடல் திமுக அரசு பதவியேற்றிலிருந்து முதலமைச்சர்ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் அமைச்சர்கள் கீதாஜீவன் அனிதாராதாகிருஷ்ணன் தூத்துக்குடி எம். பி கனிமொழி என பல்வேறு தரப்பினாிடம் மனு அளித்துள்ளனர்.  மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இதே மாநகராட்சி கூட்டத்தில் இது குறித்து பேசும்போது விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்த நிலையில்  தற்போது வரை எ...

தூத்துக்குடி :சாலைகளில் மாடு திரிந்தால் இனி மாநகராட்சிக்கு சொந்தம் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வருகிறது - மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

Image
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் அனைத்து பணிகளும் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்தில் மழை நீர் 16 17 2 ஆகிய 3 வாா்டுகளில் தவிர மற்ற இடங்களில் எங்கும் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு வழித்தடம் கழிவு நீர் பம்பிங் மூலம் வௌியேற்றப்பட்டுள்ளன.  பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது முத்துநகர் கடற்கரை பூங்கா. ரோச் பூங்கா. ராஜாஜி பூங்கா எம்ஜிஆர் பூங்கா ஆகிய பூங்காக்கள் பொங்கலுக்கு மறுநாள் பொதுமக்கள் கருநாளன்று பொழுதுபோக்கும் வகையில் பூங்காவிற்கு வருவார்கள் அதன் அடிப்படையில் பூங்கா பராமரிக்கும் பணிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல பூங்காக்களில் நடைபயிற்சியின் போது உடற்பயிற்சி செய்யும் வகையில் பல பணிகள் நடைபெற்று வருகிறது.  டூவிபுரம் சங்கர நாராயணன் பூங்கா உள்ளே நீர் தேக்க தொ...

தூத்துக்குடியில் வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு : 2 பேர் கைது!

Image
  தூத்துக்குடியில் வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்  மசியன் மகன்  ராஜேந்திரன் (33), ராம் கோபிசந்த் மகன் ஹேமந்த் (20) ஆகிய இருவரும் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 1வது தெருவில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வருகின்றனர்.  நேற்று வேலை முடிந்து இரவு 7 மணி அளவில் அதே தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது பைக்கில் வந்த 2 பேர் அவர்களை வழிமறித்துள்ளனர். அதில் ஒருவரை கல்லால் தாக்கி  அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த ராஜேந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.  இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தூத்துக்குடி வடக்கு சங்கரபேரியைச் சேர்ந்த  கோட்டை கருப்பசாமி மகன் தண்டேஸ்வரன் (26),  தேவர் காலனி 4வது தெருவைச் சேர்ந்த  செல்லத்துரை மகன் மாணிக்கராஜா (24) ஆகிய 2பேரையும் க...

ஆட்டோ ஓட்டுநர் போட்ட வாட்ஸ்அப் பதிவு : ஒரு மணி நேரத்தில் களத்திற்கு வந்த தூத்துக்குடி மேயர்.!-

Image
  தூத்துக்குடி குரூஸ்புரம் ஆட்டோ ஓட்டுநர்  "தாய் கணேசன்" என்பவர் வாட்சப் மூலமாக மேயர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோளை பனிவுடன் முன்வைத்தார்... வேண்டுகோளாவது.. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட குரூஸ்புரம் பக்கிள் ஓடை 4ம் பாலம் அருகில் உள்ள *"5 வழிச்சாலை சங்கமிக்கும்  மைய பகுதியில்  உயர் மின் கோபுர ஹைமாஸ்க் விளக்கு"* ஒன்றை அமைத்து தரக்கோரி பொதுமக்களின் சார்பாக அன்புடன் ஓர் வேண்டுகோளை முன் வைத்திருந்தார்.  இந்த கோரிக்கை வைக்கப்பட்ட 1 மணி நேரத்தில் அந்த பகுதி வார்டு திமுக பிரமுகர் திரு. டேனியல் அவர்களுடன்  களத்திற்கு நேரடியாக வந்தார் மாண்புமிகு தூத்துக்குடி  மேயர் ஜெகன் பெரியசாமி. கோரிக்கை வைக்கப்பட்ட இடத்தை இரவு நேரம் என்று கூட பாராமல் அதை முழுமையாக  பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதன் பின்பு கோரிக்கை வைத்த ஆட்டோ ஓட்டுநரிடம் உங்களால் முன் மொழியப்பட்ட  மக்கள் கோரிக்கை உடணடியாக நிறைவேற்றப்படும், உங்களது வேண்டுகோளின் படி  உயர் மின் கோபுர ஹைமாஸ்க் விளக்கு நீங்கள் கேட்டுக் கொண்ட இடத்தில் அமைத்து தருவதாக உத்தரவாதம் வழங்கினார். அவரது உத்திரவாதமும், வ...

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி ஆக சிலம்பரசன் நியமனம்- தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி யாக இருந்த மதன், எஸ்.பி. யாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர துணை கமிஷனராகவும் நியமனம்.!

Image
  தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு சேர்த்து மொத்தம் 70 பேருக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.. சிபிசிஐடி ஐஜியாக இருந்த அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாகவும், தெற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, பதவி உயர்வு பெற்று ஆவடி போலீஸ் கமிஷனராகவும், மும்பை, சிபிஐயில் ஐஜியாக உள்ள தீபக் எம்.தோமர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவிலும், மேற்கு மண்டல ஐஜியாக இருந்த செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று, டிஜிபி அலுவலக தலைமையிட கூடுதல் டிஜிபியாகவும்,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த அனிசா உசைன், பதவி உயர்வு பெற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், காவல்துறை நவீனமயமாக்கல் ஐஜியாக இருந்த நஜ்மல் ஹோடா பதவி உயர்வு பெற்று, கமாண்டோ படை ஏடிஜிபியாகவும்,  தலைமையிட ஐஜியாக இருந்த மகேந்திர குமார் ரத்தோடு, போலீஸ் நலன் ஏடிஜிபியாகவும், ஆவடி போலீஸ் கமிஷனராக இருந்த ஏடிஜிபி சங்கர், சிறைத்த...

விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.!

Image
  தூத்துக்குடியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி விளையாட்டு வீரர்களுக்கு, டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 30.12.2025 அன்று ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி ஊரகப்பகுதி விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கியதை முன்னிட்டு, தூத்துக்குடி தருவை மைதானம் உள்அரங்கில் நடைபெற்ற விழாவில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், கோவில்பட்டி,  திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள், ஆத்தூர், சாயர்புரம், தென் திருப்பேரை, நாசரேத் பேரூராட்சி ஊரக பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட், வாலிபால், ஃபுட்பால், இறகு பந்து, கேரம், ஸ்கிப்பிங், சிலம்பம், சதுரங்கம், எரிபந்து, ஜிம்னாஸ்டிக், வெயிட் லிப்ட்டிங் உள்ளிட...

தூத்துக்குடி பிரஸ் கிளப் காலண்டர், டைரி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்களிடம் வழங்கப்பட்டது.!

Image
  தூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் 2026ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் மற்றும் புத்தாண்டையொட்டி இனிப்பு, காரம், பேனா, குங்குமசிமிழ்  ஆகிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜீ, துணை தலைவர்  சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன் ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலையில் கௌரவ ஆலோசகர் அருண் உறுப்பினர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்து அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டும். தொடர்ந்து உறுப்பினர்களின் நலன் காக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் மாரிராஜா, கண்ணன், முத்துராமன், ராஜன், உறுப்பினர்கள் ரவி, அருள்ராஜ், கற்பகநாதன், பாலகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூகநலன் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் ஆகியோரிடம் ப...

கோவில் விழாவில் போலீசை கத்தியால் குத்த பாய்ந்த வாலிபர்.. பரபரப்பு வீடியோ

Image
 திருப்பூர்: வைகுண்ட ஏகாதசி விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலரை வாலிபர் கத்தியால் குத்த பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து காலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசல் வழியாக சென்று வருகின்றனர். இதனால் அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வந்த நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். மேலும் அவர் தகாத வார்த்தைகளால் அனைவரையும் திட்ட ஆரம்பித்து பிரச்சினை செய்து கொண்டு வந்தார். இதனால் அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ராமகிருஷ்ணன் அந்த வாலிபரிடம் விசாரித்ததில் கோபமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலரை தாக்க முயன்றார். தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு காவலரை குத்தூவதற்காக பாய்ந்து செல்லும் அந்த வாலிபரைக் கண்டு சாமிதரிசனம் செய்ய நின்ற பக்தர்கள், குழந்தைகள் அதிர்ச்சியில் ஓடினர்.  மேலும் அதிர்ச்சியடைந்த காவலர் ராமகிருஷ்ணன் தனது பெல...

தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 383 வழக்குகளுக்கு தீர்ப்பு.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 383 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 383 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1 கோடியே 18 இலட்சத்து 89 ஆயிரத்து 478 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 383 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கவும், புகார்களுக்கு தீர்வு காணவும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகின்றது.  இந்த ஆணையம் ஒரு சிவில் கோர்ட்டுக்கு இணையான அதிகாரங்களைக் கொண்டுள்ளது. பொருளிலுள்ள குறைபாடுகளை நீக்குதல், குறைபாடுடைய பொருள்களுக்கு பதிலாக புதிய பொருள்களை வழங்க உத்திரவிடுதல், நுகர்வோர் செலுத்திய தொகையை வட்டியுடன் திருப்பி அளிக்க உத்திரவிடுதல், உளைச்சல் மற்றும் அலைச்சலுக்குரிய இழப்பீடு வழங்க உத்திரவிடுதல் போன்றவை இந்த ஆணையத்தின் முக்கிய அதிகாரங்களாகும்.  தூத்துக்குடி மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீ...

பல்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் "களமாடு பல்திறன் போட்டிகளில்” வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடங்கள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் சார்பில், மாவட்ட சமூக நீதி விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக நடத்தப்பட்ட ”களமாடு பல்திறன் போட்டிகளில்" வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களிடம் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் விடுதி மாணவர்களின் படைப்பு கலை மற்றும் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் காணும் நோக்கத்துடன், தந்தை பெரியாரின் பிறந்த நாளான (17.09.2025) "சமூகநீதி தினம்" மற்றும் "களமாடு மற்றும் கலை கொண்டாட்டம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 2025-ல் தூத்துக்குடி சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி, அரசு சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி, அரசு சமூகநீதி நாகம்பட்டி அரசு சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி, ...

அனுமதியின்றி டிஜே பார்ட்டி ஏற்பாடு செய்தால் நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி ஏற்பாடு செய்தால் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  வருகின்ற 31.12.2025 அன்று இரவு புத்தாண்டு தின கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதியின்றி யாராவது DJ பார்ட்டிகளை ஏற்பாடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் 2026ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான வியாழக்கிழமை அன்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் பொது இடங்களில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து "பைக் ரேஸ்" செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்குகள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் "வீலிங்" செய்வதும், அஜாக்கிரதையாகவும்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அல்லது கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விருப்ப மனு.!

Image
  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அல்லது கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரி வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் நேற்று (29.12.2025) திங்கட்கிழமை பிற்பகல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகையிடம் விருப்ப மனு அளித்தார்.  நிகழ்வின் போது வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட துணைத் தலைவர் நீலகண்டன், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஜெகந்நாத ரெட்டி, கே.வி.குப்பம் கிழக்கு வட்டார தலைவர் லோகிதாஸ், கே.வி.குப்பம் கிழக்கு வட்டார முன்னாள் தலைவர் விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் 48 பேருக்கு ஆட்டுக்குட்டி வழங்கினார்.!

Image
  தூத்துக்குடி : திமுக மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான பி.டி.செல்வக்குமார் 48 பேருக்கு ஆட்டுக்குட்டிகளையும், அரிசி பைகளையும் வழங்கினார்.  எதிர்வரும் காலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும். உங்களுக்காக எப்போதும் நாடும் நாட்டு மக்களும் முக்கியம் என்று கருதி பணியாற்றி வரும் முதலமைச்சர் தளபதியாரின் வழியில், துணை முதலமைச்சராக பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த ஆட்டுக்குட்டிகளும் அரசி பைகளும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. எப்போதும் மக்கள் நலன் முக்கியம் என்று பணியாற்றும் திமுகவிற்கு உங்கள் ஆதரவு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  நெல்லை கிழக்கு திமுக பொறியாளர் அணி செயலாளர் ஜோசப் சந்திரன் வக்கீல் பாலகிருஷ்ணன் மற்றும் ஏசுதாசன், டி.ராஜேந்தர் நற்பணி மன்ற நிர்வாகி சிம்பு கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களை வரவேற்க தயார் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்கள் - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.!

Image
  தூத்துக்குடி :பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கலுக்கு முந்தைய நாள் போகி, தை பொங்கல், அடுத்து மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல். பெண்களுக்காக கொண்டாடப்படும் பண்டிகை தான் காணும் பொங்கல். பொதுவாக காணும் பொங்கல் பண்டிகையானது கடற்கரை, ஆறு போன்ற நீர் நிலைகளை மற்றும் சுற்றுலாத்தளங்களை சார்ந்தும் இருக்கிறது. காணும் பொங்கல் அன்று வீட்டில் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றுகூடி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காணும் பொங்கல் என்றாலே குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு அவரவர்களுக்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவது வாடிக்கையாகும். காணும் பொங்கலை முன்னிட்டு தென்மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களிலும், தாமிரபரணி கரையோரங்களிலும், பூங்காக்களிலும், கடற்கரையிலும் பொதுமக்கள் திரண்டு உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடியை பொருத்தவரையில், வடக்கு கடற்கரை சாலையில் உள்ள முத்துநகர் கடற்கரை, முயல்தீவு கடற்கரை, புதிய துறைமுக கடற்கரை, ரோச் பூங்கா...

வேலூர் மாவட்டம்: பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி.!

Image
  வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, மற்றும் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட பொறியாளர்,மாநகர நல அலுவலர் அறிவுறுத்தல் பேரிலும் வார்டு 14, 15 மெயின் ரோடுகளில்  வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில்  "பிளாஸ்டிக்கை ஒழிப்போம்,மஞ்சப்பையை கையில் எடுப்போம்" என பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் வரக்கூடிய நோய்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் பொதுமக்களும் மாநகராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டனர். இப்பேரணியில் துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் அனிமேட்டர்கள் என பலர் உடன் இருந்தனர். வேலூர் மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன்

"தவெக நிர்வாகி அஜிதாவிடம் விஜய் பேசி இருக்கலாம்.. அதை செய்யாதவர் எப்படி தலைவனாக இருக்க முடியும்?" _ தூத்துக்குடியில் பாஜக நிர்வாகி சரத்குமார் பரபரப்பு பேட்டி.

Image
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து எத்தனை இடத்தில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப் போகிறோம் என்று தெரிந்த பின்பு முடிவெடுக்கப்படும். மேலும், நான் நிற்பதை விட என்னுடன் பயணித்தவர்கள் நின்றால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன் என்று தெரிவித்த போது, நடிகர் விஜயின் தவெக பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.. தவெக வை நான் அரசியல் கட்சியாக பார்க்கவில்லை தேர்தலையே சந்திக்காத விஜய் தற்போது தேர்தலை சந்திக்க உள்ளார். முதலில் போட்டி போட வேண்டும் என்ன நிலைப்பாடு, கொள்கை, கோட்பாடு என்பதை தெரிவிக்காமல் தனி நபர் தாக்குதலை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்.. அரசியல் கட்சியாக நான் தவெக வை  பார்க்கவில்லை. தேர்தலை சந்தித்தப் பின்பு ...

குடியாத்தத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம்.

Image
  வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாரத் ரத்னா பொன்மனச் செம்மல் டாக்டர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் 38ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நகர கழக செயலாளர்  ஜே கே என் பழனி  தலைமையில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா ஆர் மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எல்.எஸ் வனராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி, மாயா பாஸ்கர், நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து அலங்கரித்து வைக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்துடன் ஊர்வலமாக சென்று காமராஜர் பாலம் அருகில் உள்ள  புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா  பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.  நிகழ்ச்சியில் கழக நிர்வா...

தூத்துக்குடியில் கொடிகட்டி பறக்கும் போலி லாட்டரி விற்பனை : தினசரி பல கோடி ரூபாய் மோசடி – 2 பேர் கைது.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம், அனல் மின் நிலையம், உப்பளங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை குறிவைத்து, சமீப காலமாக ஒரு கும்பல் போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு தினசரி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் போலியான ஈ-மெயில் ஐடி, வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி, நிஜமான லாட்டரி வியாபாரம் போல காட்டி, ஒவ்வொரு தொழிலாளரிடமிருந்தும் அதுவும் குறிப்பாக தினக்கூலிகளிடம்  தினசரி ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலித்து வந்ததாக போலீசாருக்கு பல்வேறு வழிகளில் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் மற்றும் நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில், தூத்துக்குடி தென்பாகம், மத்திய பாகம், வடபாகம், தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம், சிப்காட் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில், தாளமுத்துநகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி சந்திப்பு பகுதியில் போலி லாட்டரி விற்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்களை தென்மண்டல காவல்துறை தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்களை தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள 8 காவல் வாகனங்கள் மற்றும் ஒரு நெடுஞ்சாலை ரோந்து வாகனம் என 9 காவல்துறை வாகனங்களுக்கு புதிதாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆயுதப்படையில் கைதி வழிக்காவல், நீதிமன்ற பணி மற்றும் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படும் 8 காவல்துறை வாகனங்களில் மெமரி வசதி(Inbuild memery) மற்றும் இரவு நேரங்களிலும் துல்லியமாக வீடியோ பதிவு செய்யும் வசதியுடைய சிசிடிவி கேமராவும், அதேபோன்று தூத்துக்குடி நகர நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் ANPR (Automatic Number Plate Recognition) வசதியுடைய சிசிடிவி கேமரா மற்றும் Verifocal Lense கேமரா எனப்படும் துல்லியமாக Zoom செய்யும் கேமரா உட்பட 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றை நேரடியாக ரோந்து காவல் வாகனத்தில் இருந்து கண்காணிக்கும் கண்காணிப்பு திரையும் (Moniter) அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆயுதப்படை வாகன...

பெண்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் (Pink Tax) இளஞ்சிவப்பு வரி.! - இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும்.!

Image
  "பிங்க் வரி" பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது சரியாக என்ன? பெண்களை இலக்காகக் கொண்ட பொருட்கள் ஆண்களை இலக்காகக் கொண்ட பொருட்களை விட அதிகமாக விலை நிர்ணயம் செய்வதே இளஞ்சிவப்பு வரி என்று பொருள். இது அரசாங்கத்திற்கு நீங்கள் செலுத்தும் அதிகாரப்பூர்வ வரி அல்லது அது போன்ற எதுவும் இல்லை. மாறாக, பெண்கள் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றை வாங்குவதால் அவர்கள் பெரும்பாலும் எதிர்கொள்ளும் கூடுதல் கட்டணம் போன்றது. இதன் பொருள், ஆண்கள் குறைந்த விலைக்கு வாங்கும் அதே தயாரிப்புக்கு பெண்கள் அதிக பணம் கொடுத்து வாங்குகின்றார்கள் என்பதுதான் இளஞ்சிவப்பு வரி உண்மையானதா? இளஞ்சிவப்பு வரி உண்மையானது அல்ல. பெண்கள் தயாரிப்புகள் மீது அரசாங்கங்கள் இளஞ்சிவப்பு வரியை அமல்படுத்துவதில்லை. ஆண்களுக்கு விற்பனை செய்யப்படும் ஒத்த தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு சந்தைப்படுத்தப்படும் பொருட்களுக்கு சில நிறுவனங்கள் வசூலிக்கும் கூடுதல் விலையை விவரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது இளஞ்சிவப்பு (பெண்) தயாரிப்புகளுக்கு நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்கும்போது, ​​கூடுதல் வருவாய் அரசாங...

தூத்துக்குடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட விருப்ப மனு.!

Image
  தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட நிர்வாகிகள் பலர் விருப்ப மனு அளித்துள்ளனர் இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பில்லா விக்னேஷ் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் ஆலோசனையின் படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை கழக மகளிர் அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்  வளர்மதிடம் வழங்கினார்.  உடன் கழக அமைப்புச் செயலாளர்கள் பி ஜி ராஜேந்திரன் சுதா பரமசிவம் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம் கழக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்கள் சொக்கலிங்கம் சகாயராஜ் ஆகியோர் இருந்தனர்.

ஓட்டப்பிடாரம் ஜம்புலிங்கபுரம் புதுப்பச்சோி பகுதியில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம் - திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

Image
  தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி வைத்ததை யொட்டி அதனடிப்படையில் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஜம்புலிங்கபுரம் புதுப்பச்சோி பூத் எண் 33 34 ஆகிய இரு இடங்களில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” எனும் மக்கள் சந்திப்பு மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.  ஆலோசனை வழங்கி பேசுகையில்:- "ஊராட்சிபகுதிக்குட்பட்ட அனைத்து வாக்காளா்கள் பெயரும் பட்டியலில் முழுமையாக இடம் பெற வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்ட பின் அதில் பெயா் எதுவும் விடுபட்டிருந்தால் பின்னா் நடைபெறும் சோ்க்கையில் முழுமையாக சோ்த்திட வேண்டும். தமிழக முதலமைச்சரின் கரத்...

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் வாழ்த்து.!

Image
  தூத்துக்குடி தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கத்தின் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தலைமையில், கலெக்டர் இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். சந்திப்பின் போது, சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களின் பணிநலன், பாதுகாப்பு மற்றும் சேவை தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊர்தி ஓட்டுநர்களின் பங்கு முக்கியமானது என்பது குறித்து எடுத்துரைத்தனர். மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன், அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் பொறுப்புடனும் ஒழுக்கத்துடனும் சேவை செய்து வருவதை பாராட்டினர். எதிர்காலத்தில் சங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த மரியாதை சந்திப்பு நல்லிணக்கமான சூழலில் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மா...

"முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் சாதனைகளை எல்லோாிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும்"- வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு.!

Image
  தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி வைத்ததை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பூபால்ராயர்புரம் பகுதியில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் திமுக நிர்வாகிகளுடன் சந்திப்பு உரையாடல் நடைபெற்றது. அப்போது அந்த வார்டுக்கு அடிப்படை வசதிகள் என்ன தேவை என்ன செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில்:- தமிழக முதலமைச்சரின் கரத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்த வேண்டும் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய பொது மக்களை சந்தித்து மக்களுக்கு செய்துள்ள திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும். மகளிர் உரிமைத் தொகை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்து விடுபட்ட மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு கப்பல் கட்டுதளம் தூத்துக்குடியில் வருகிறது ஒன்று அரசு சார்பிலும் மற்றொன்று தனியார் சார்பிலும் அமைக்கப்பட உள்ளது அதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாக...

நெல்லை: பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

Image
  திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி இரட்டை மலை அருகே பொருநை அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 13.2 ஏக்கர் பரப்பளவில், 55 ஆயிரம் சதுர அடியில் ரூ.56 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சிகத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முடிவுற்றுள்ளன. அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அப்போது பொருநை நதிக்கரை ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதன்முதலாக நெற்கதிர் குறியீடுடன் கிடைத்த பொருளை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசாக அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.  பொருநை அருங்காட்சியகம் திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூா் காட்சிக்கூடம்-2, சிவகளை காட்சிக்கூடம்-1, கொற்கை காட்சிக்கூடம்-2, நிா்வாக கட்டடம்-1 உள்பட மொத்தம் 7 தொகுதிகளாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பூங்காக்கள், பல்வேறு வசதிகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.62 கோடியில் பொருநை அருங்காட்சியகம்...

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு.!

Image
  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் வாகைக்குளம் வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அதனை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, தூத்துக்குடி எம்பி கனிமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட்ஜான், ஆணையர் ப்ரியங்கா, அமைச்சர்கள் நேரு, ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி. வில்சன், எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ரூபி மனோகரன், ராஜா, தமிழரசி, அப்துல் வஹாப், தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி, திருநெல்வேலி மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் துணை மேயர்கள் ராஜ், ஜெனிட்டா, முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், தங்கவேலு, முன்னாள் ...

களை கட்டும் தேர்தல்: அதிமுகவில் விருப்பனு வழங்குவதில் போட்டோ போட்டி.!

Image
  தேர்தல் களை கட்டும் அதிமுகவில் விருப்பனு வழங்குவதில் போட்டோ போட்டி நடக்கிறது. கடந்த தேர்தலில் வெற்றித் தொகுதியான தூத்துக்குடியை கூட்டணி கட்சிக்கு தாரைவார்த்தால் தொகுதிக்குள் அதிமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீட்சி பெற ஓர் புதிய வழித்தடத்தில் நிர்வாகிகளை முன்னெடுத்துள்ளது எடப்பாடி தலைமையிலான அதிமுக.  அதன்படி 2026 தேர்தல் பேச்சுவார்த்தை  தொடங்கிய போது, கட்சிக்குள் சி.தா. செல்லப்பாண்டியன் பெயரை மட்டுமே உச்சரித்து வந்த நிலையில், இன்றைய நாள் வரையிலான விருப்ப மனுவில் செல்லப்பாண்டியன் உள்ப்பட அந்தோணி கிரேஷி, ஜெபா ஹென்றி, ஆனந்தராஜ், மணிகண்டன், சுதாகர், வழக்கறிஞர் பிரபு என்று தற்போது ஒரு பட்டாளமே தூத்துக்குடியில் போட்டி களத்திற்கு வந்ததை அதிமுக தலைமை மட்டுமல்ல, எதிரணி திமுகவுமே எதிர்பார்த்திருக்க இயலாது.  இது குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில்:- "தேர்தலில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். "திமுகவை போல இவருக்கு தான் சீட்டு என்று, அதிமுகவில் அன்றும் சொல்ல முடியாது, இன்றும் சொல்ல இயலாது". அந்த அளவுக்கு கட்டமைக்கப்...

தூத்துக்குடி கல்லூரியில் ரேபிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

Image
  தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து  தெருநாய்கள், ஒரு சமூகப் பொறுப்பு, ரேபிஸ் இறப்புகளை ஒழித்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.  நிகழ்ச்சியில் கால்நடை பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல், ஆலோசகர் டாக்டர் தீபன், கால்நடை ஆலோசகர் பாவ்ஸ் ட்ரீட் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.  தெரு நாய்களின் பொதுவான நடத்தை, ஆக்ரோஷமாக  நடந்து கொள்ளக் காரணமான அம்சங்கள் மற்றும் தெரு நாய்களுடன் நேரிடும் சந்திப்புகளால் ஏற்படும் கடுமையான உடல் நல அபாயங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், தெருநாய்களுடன் பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான முறையில் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினர்.  ரேபிஸ் என்பது பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நாயின் கடி அல்லது கீறல் மூலம் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் அது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்றும் டாக்டர் தீபன் விளக்கினார். தெருநாய்களைக் கையாளும் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள்...

தூத்துக்குடி மாநில அளவிலான மூத்தோர்களுக்கான தடகளப் போட்டிக்கு செல்லும் வீரா் வீராங்கனைகளை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனா்.

Image
  தூத்துக்குடி மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பாக காரைக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான மூத்தோர்களுக்கான தடகளப் போட்டிக்கு தூத்துக்குடி மாவட்ட மூத்தோர் தடகள வீரர் மற்றும் வீராங்கனைகளை வெற்றி வாய்ப்பை பெற்று வருமாறு வாழ்த்துக்களை கூறி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் நிறுவனத் தலைவர் அசோகன் கொடி அசைத்து வீரர்களை வழி அனுப்பி வைத்தார். மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் செயலாளர் குப்புசாமி பாராட்டினார்.  மாநில அளவிலான தடகளப் போட்டிற்கு 110க்கும் மேல் அதிகமான வீரர் வீராங்கனைகளை கொண்ட மாவட்டம் நமது தூத்துக்குடி மாவட்டம் என்ற சிறப்பை பெற்றதற்கு, மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் பாயஸ் பாய், செயலாளர் குப்புசாமி, பொருளாளர் மெர்சி பத்மாவதி, உப தலைவர்கள்  முனியசாமி முரளி, ராகவனந்தம், ஸ்டீபன் தியாகராஜன், ரங்கநாதன், இணைச் செயலாளர் ஏஞ்சலின் கோயில் ராஜ், ஆனந்தராஜ், மாரிச்சாமி, லாரன்ஸ், ராபர்ட் சன் கென்னடி மற்றும் உறுப்பினர்கள்   வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.