Posts

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியுடன் அதிகாரி கூட்டு : பொய் வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது? - நடந்தது என்ன.?

Image
  சென்னை பரங்கிமலை இன்ஸ்பெக்டர் முகமது புகாரி (43). கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், வண் ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷேர் புரோக்கர் அகில்குமார் என்பவரை ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி ஏற்கனவே ரூ.40 லட்சம் வாங்கியதாகவும், மேலும் ரூ.5 லட்சம் தரும்படி தற்போது மிரட்டியதாகவும் கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து சில நேர்மையான போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, 'அகில்குமார் ஷேர் மார்க்கெட்டில் இருப்பதாக கூறப்பட்டாலும், அவர் 2ம் நம்பர் தொழிலும் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்ட வக்கீல் மொட்டை கிருஷ்ணன் என்பவரது செல்போனில் தொடர்ந்து அகில் குமார் பேசி வந்துள்ளார். மேலும் மொட்டை கிருஷ்ணனுக்கு, சிம்கார்டும் அவர்தான் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் அவரை போலீசார் அப்போது விசாரணை நடத்தி அனுப்பியுள்ளனர். அகில்குமாரை, ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கின் ...

“விளையாட்டை கையில் எடு… போதையை கைவிடு!” -தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி – செயின்ட் சேவியர்ஸ் அணி முதலிடம்.!

Image
தூத்துக்குடி: இளம் தலைமுறையினரை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில், தூத்துக்குடி நகர உட்கோட்டம் வடக்கு காவல் நிலையம் சார்பில் “விளையாட்டை கையில் எடு – போதைப்பொருளை கைவிடு” என்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடைபெற்றது. வடக்கு காவல் நிலையம் அருகிலுள்ள கைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்ட் சேவியர்ஸ், சென்ட் தாமஸ், கால்டுவெல் பள்ளி, லசால் பள்ளி அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சென்ட் சேவியர்ஸ் பள்ளி அணி முதலிடத்தையும், லசால் பள்ளி அணி இரண்டாமிடத்தையும், கால்டுவெல் பள்ளி அணி மூன்றாமிடத்தையும், சென்ட் தாமஸ் பள்ளி அணி நான்காமிடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆர். சுனில் நற்சான்றிதழ் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். மேலும், மாணவர்கள் போதைப்பொருளைத் தவிர்த்து விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் தாளமுத்துநகர் காவல்நிலைய ஆய்வாளர், மத்திய பாகம் காவல்நிலைய ஆய்வாளர், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்த...

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்..!

Image
  தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய அரசு முயல்வதாகக் குற்றம் சாட்டி மாநில காங்கிரஸ் தலைவா் மாணிக்க தாகூா் எம்.பி உத்தரவிற்கிணங்க காங்கிரஸ் கட்சியினர் பழைய மாநகராட்சி முன்பிலிருந்து மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சகாயராஜ் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, கைகளில் கருப்பு பலூன் ஏந்தியபடி அமைதி ஊர்வலம் சென்றனர். பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்வதாக கூறும் மத்திய அரசு, வட மாநிலங்களான உத்தரபிரதேசம், குஜராத் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தென் இந்தியாவில் பா.ஜ., அல்லாத மாநிலங்களில் தொகுதிகளை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்று இறுதியாக 1ம் கேட் காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ்,  மண்டல தலைவர்கள் ...

5 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு காயல் அப்பாஸ் கண்டனம்.!

Image
தூத்துக்குடி 5 ஆயிரம் குடும்பங்களை 21 நாளில் வெளியேற்ற துடிக்கும் தவெக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது திருப்பத்துர் மாவட்டம் ஆம்பூர் பாலாற்று கரையோர குடியிருப்புகளில் 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் நாற்பது ஐந்து ஆண்டுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். திடீரென நகராட்சியிலிருந்து வந்து அனுமதியற்ற ஆக்கிரமிப்பு பொதுநிலம் ஆகவே 21 நாளில் அப்பகுதி மக்களின் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என ஓட்டிய நோட்டீஸால் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை காலி செய்வதற்கு முன் மாற்று இடங்கள் அல்லது வீடுகள் கொடுக்க பட்டிருக்கிறதா இல்லை ? மேலும். எந்தவித மாற்று ஏற்பாடு செய்யாமல் மக்களின் குடியிருப்புகளை காலி செய்ய வைப்பதனால் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக மாறி விடும். என்பதை தவெக அரசு மிகவும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே பொது மக்களின் நலனை கருதி அப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை காலி செய்ய வைப்பத...

சுற்றுசூழல் பாதுக்காப்பை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்ட உபியை சோ்்்ந்த இளைஞருக்கு தூத்துக்குடி துளசி சோசியல் டிரஸ்ட் சாா்பில் வரவேற்பு.!

Image
தூத்துக்குடி சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அயன்பர்னர்ஜி என்ற இளைஞர் நாடு முழுவதும் 7 ஆயிரம் கி.மீ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் இதுவரை 165 நாட்களில் சுமார் 4 ஆயிரம் கி.மீ வரை நடைபயணம் மேற்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தவருக்கு துளசி சோசியல் டிரஸ்ட் சாா்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்பு துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலெட்சுமி முன்னிலையில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஆர்கானிக் முருங்கைவிதை வழங்கப்பட்டு சுற்றுசூழல் பற்றி எடுத்துரைத்தார்.

தூத்துக்குடியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

Image
  தூத்துக்குடி போதை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி பள்ளித் தலைமை ஆசிரியை மெர்லின் பாக்கியவதி தலைமையில் பள்ளி மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி திரையில் ஒளிபரப்பப்பட்டு, மாணவிகள் அனைவரும் இணைந்து போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். போதைப்பொருளின் தீமைகள் குறித்து மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதை இல்லா சமூகத்தை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தூத்துக்குடி கல்லூாியில் போதை பொருள் ஓழிப்பு உறுதிமொழி.

Image
  தூத்துக்குடி கல்லூரிக்கல்வி ஆணையர் கல்லூரிக்கல்வி இயக்கம் ஆணைக்கிணங்க வ.உ.சிதம்பரம் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக் குழு, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை இராணுவம், மற்றும் கடற்படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்கும்  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போதைப்பொருள் தடுப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வம் தொகுத்து வழங்கினார்  கல்லூரி முதல்வர் வீரபாகு போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க சுமார் 850 மாணவ மாணவியர்கள் மற்றும் 60 பேராசிரியர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள். கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போதைப்பொருள் தடுப்புக் குழு உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், தேசிய மாணவர் படை இராணுவம், மற்றும் கடற...

நள்ளிரவில் வாகனம் மோதி சரிந்த கோபுர மின் கம்பம் - ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவல் ஆய்வாளரால் விபத்து தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் தகவல்.!

  தூத்துக்குடி குரூஸ்புரம் பக்கிள் ஓடை 4ம் பாலம் பகுதியில்  அமைந்துள்ள 5 வழிச்சாலையில் ஏற்பட்டு இருந்த இருளை போக்கி தரும்படி அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாய் கணேசன் என்பவர் பதிவு செய்த சமூகவலைதள பதிவை பார்த்த மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக சம்பவ இடத்திற்கு உரிய அதிகாரிகளுடன் நேரில் வருகை தந்து ஆய்வு செய்ததன் பெயரில் "இந்த இடத்தில் இந்த உயர் கோபுர மின் விளக்கு" அதிரடிய அமைக்கப்பட்ட தாக பொதுமக்கள் தகவல் கொடுக்கின்றனர்.  மேலும் இந்த இடத்தில் அமைக்கப்பட்ட கோபுர மின்விளக்கு இப்பகுதியில் நிலவி வந்த இருளை போக்கி பொதுமக்களின் பயத்தையும் நீக்கியது. இந்நிலையில் நேற்று  நள்ளிரவு இந்த மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் கோபுர மின் கம்பத்தின் கீழ் பகுதி முறிந்து சரிந்துள்ளது. கம்பம் சரிந்ததால் மின்சார இணைப்புக்காக பயன்படுத்தப்பட்டு இருந்த சர்வீஸ் லைன் அத்து சாலையின் நடுவே கிடந்தது. நள்ளிரவில் கம்பம் சரிந்ததால் வெளிச்சம் துண்டிக்கப்பட்டது. அந்த நேரம் அந்த வழியே இரவு நேர ரோந்து பணிக்காக வந்து கொண்டு இருந்த வடபாகம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் நடந்த சம்பவத்தை பார்த்...

தூத்துக்குடி குரூஸ்புரம் கோபுர மின்விளக்கு கம்பத்தின் மீது நள்ளிரவில் வாகனம் மோதியதால் "சாய்கோபுரமாக" மாறிய மின் கம்பம் - நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை.!

Image
தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக குரூஸ்புரம் 5 வழிச்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த கோபுர மின்விளக்கு கம்பத்தின் மீது நள்ளிரவில் வாகனம் மோதியதால் "சாய்கோபுரமாக" மாறி நிற்கிறது.இது ஒரு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்க கூடிய அளவில் மெயின் சாலையில் கேட்பாரற்று கிடக்கிறது.  மின்சாரம் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருப்பதால் உயிர் பாதுகாப்பு அவசியமாகிறது. ஆ தலால் இதை சரி செய்யக்கூடிய முன்னெடுப்பை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் செய்யுமாறு அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கும், மின்சார வாரியத்திற்க்கும் இதை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்காக இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் பணி செய்வது எங்களது கடமை" -இரு சக்கர வாகனத்தில் உலா வந்து ஆய்வு செய்த மேயா் ஜெகன் பொியசாமி

Image
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் அரசியல் பாரபட்சமின்றி தேவையான கட்டமைப்பு பணிகள் முழுமையாக ஏற்கனவே நடைபெற்றுள்ளது. ஒரு சில பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு கோடைகால பருவமழை சற்று குறைவு ஏற்பட்டதால் மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. வல்லநாடு ஆற்றுப்படுகையில் குடிதண்ணீாின் அளவு கடுமையாக குறைந்துள்ளது. இருந்த போதிலும் மாநகராட்சி பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது ஆனால் பல பகுதிகளுக்கு குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் ஒரு புறம் போராட்டம் மற்றொருபுறம் பாதி அளவுக்கு குடிநீர் வருகிறது மீதி பாதியளவு குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வரவில்லை என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு கேவிகே நகர். மகிழ்ச்சிபுரம். பக்கிள் ஓடை ஒட்டிய அண்ணாநகர் பகுதி மற்றும் நான்காம் ரயில்வே கேட் பகுதிகளில் குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாம...

பொதுமக்கள் தண்ணீர் கேட்டால் சைகை மூலம் மிரட்டல் - அதிகாரி மீது மாநகராட்சி ஆணையரிடம் புகார்.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் சுந்தர்நகர், சுந்தரம் நகர், ஜேஎஸ் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் நான்கு நாட்களாகியும் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்கச் சென்ற பெண்களை தனது கை செய்கையின் மூலமாக இழிவாக பேசியும், தனது அரசு அதிகாரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்கிற விதமாக கைகளை முறுக்கிக் கொண்டு மீண்டும் தான் செய்த தவறை உணராமல் பெண்களிடமும் மரியாதை குறைவாக நடந்த தூத்துக்குடி தெற்கு மண்டல மாநகராட்சி இளநிலை பொறியாளர் செல்வம் மீது துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்க மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவை சந்தித்து தமிழர் விடியல் கட்சி சந்தனராஜ் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர்  அசன், தமிழ் புலிகள் கட்சி மண்டல செயலாளர் தாஸ் ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.  அப்போது ஆணையா் ப்ரியங்கா பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையோடும், குறிப்பாக பொதுமக்களுடைய பிரச்சனைகளுக்காக அரசு அதிகாரிகளிடம் முறையிடும் போது அவர்களுடைய மக்கள் பிரச்சினை நிறைவேறும் விதமாக மிகவும் கண்ணியமாக நாங்கள் கொடுத்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்றா...

தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டியில் விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 2027ம் கல்வி ஆண்டிற்கான தூத்துக்குடி நகா்புற அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அதில் தூத்துக்குடி விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வாலிபால், தடகள போட்டி நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எாிதல் ஓட்டப்பந்தயம் பல்வேறு பிாிவுகளில் வெற்றி பெற்றனர்.  இந்நிலையில் வெற்றி சான்றிதழ் பெற்ற ஜெருஷா, ஜாக்குலின்சாராள் மதனா, காவியா, காருண்யா, போல்வால்ட், பாலதா்ஷினி திவ்யதா்ஷினி, லக்ஷனா, மேலும் தூத்துக்குடி மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் மாநில அளவிலான கபில்கிளப் மதுரையில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் 2ம் இடமும் காமராஜா் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கபாடி போட்டியில் 4ம் இடமும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின்சாா்பில் பாராட்டும் தமிழ்வழிக்கல்வியில் 10ம் வகுப்பு பொதுத்தோ்வில் முதலிடம் பிடித்த மாணவி அபிநயாவிற்கு இந்திய வியாபாாிகள் சங்கம் சாா்பில் பாிசுத்தொகையும் பாராட்டுகளும் தொிவிக்கப்பட்டது இதையடுத்து பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவிகளுக்கும் உடற்கல்வி இயக்குநா் ஆசிாியா்கள் ஆகியோருக்கும் பள்ளி தாளாளா் சுதன்கீலா் பள்ளி தலை...

"வியாபாாிகள் சங்க உறுப்பினா்கள் மாநகராட்சி நிா்வாகத்திற்கு ஓத்துழைப்பாா்கள் " - விருது வழங்கும் விழாவில் நிா்வாகிகள் தகவல்

Image
தூத்துக்குடி வஉசி சந்தை ஐக்கிய வியாபாாிகள் சங்க மகாசபை கூட்டம் அலுவலகத்தில் தலைவா் அன்புராஜ் தலைமையில் செயலாளர் செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளா் மரகதராஜ் வரவேற்புரையாற்றினாா். கூட்டத்தில் சங்க ஆண்டு அறிக்கை வரவு செலவு ஓத்துக்கொள்ளப்பட்டு சங்க வளா்ச்சிக்குாிய பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல ஆலோசனைகள் நடைபெற்றதில் தலைவா் அன்புராஜ் செயலாளர் செந்தில்குமாா் பொருளாளா் மரகதராஜ் ஆகியோா் பேசுகையில் வளா்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வகையில் போக்குவரத்து நெருக்கடிகள் நிறைந்து வருவதால் மாநகராட்சி சாா்பில் எல்லாப்பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறியப்பட்டு பல அமைப்புகளின் புகாா்களின் போிலும் அகற்றி வருகின்றனா். அதன்படி நமது சந்தை பகுதிகளிலும் இருக்கின்ற சில ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாாிகள் கேட்டுக்கொண்டுள்ளனா். அதன்படி முழு ஒத்துழைப்பு வழங்கி முழுமையாக துணை புாிந்து நம் தொழிலுக்கு நாமே பாதுகாப்பு என்ற அடிப்படையில் செயல்படு வோம் என்று பேசினாா்கள். பின்னா் சங்கத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினா்களுக்கு உழைப்பின் சிகரம் விருதும் உறுப்...

தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சனை கண்டு கொள்ளாத அமைச்சர் ஸ்ரீநாத் - தொகுதி மக்கள் கடும் அதிருப்தி.!

Image
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் ஸ்ரீநாத் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் பிரச்சனை ஏற்பட்டது, பைப் லைன் உடைப்பு மற்றும் மெயின் வாழ்வு உடைப்பு உள்ளிட்டவைகளால் குடிநீர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு தாமதம் ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடிய அமைச்சா் ஸ்ரீநாத் கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடியில் தான் இருந்தார் ஆனால் ஒரு நாள் கூட குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடமும் அல்லது மாநகராட்சி அதிகாரிகளிடமும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவில்லை மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரும் வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீரில்லாமல் உள்ளது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அமைச்சர் ஸ்ரீநாத் வல்லநாடு ஆற்று படுகைக்கு சென்று பார்க்கவில்லை. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தான் தூத்துக்குடி மாநகராட்சி உள்ளது தூத்துக்குடி சட்டமன்ற உ...

"மீனவர் தடைக்கால நிவாரணம் 20,000 ஏன் அறிவிக்கவில்லை" ? - தவெக அரசுக்கு மீனவர்கள் கேள்வி.

Image
  தூத்துக்குடி மீனவ பெண்கள் புரட்சிப் பட இயக்கத்தைச் சேர்ந்த டிலைட்டா ரவி கலெக்டா் அலுவலகத்தில் கூறுகையில்:- "தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது மீனவர்களின் தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணம் 8000 லிருந்து 20000 ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் கடந்த வாரம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் மீனவர்கள் தடைக்கால நிவாரணத் தொகை எந்த விதமான அறிவிப்பும் நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை, தமிழக முதல்வரும் அதற்கு எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை.  தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்த மீனவர்கள் தடைக்கால நிவாரணம் 20 ஆயிரம் ரூபாயை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மீனவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது தமிழக அரசு அறிவிக்கவில்லை என்றால் மீனவர்கள் ஒன்று திரண்டு தமிழக அரசுக்கு எதிராக போராட வேண்டிய சூழ்நிலை வரும்" என்று மீனவ பெண்கள் புரட்சிப் பட இயக்கத்தைச் சேர்ந்த டிலைட்டா ரவி கூறியுள்ளார்.

"சினிமாவில் நடித்த விஜய் இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறாா். சிாிப்பதும் அழுவதும் எங்கே என்று தொியாத அளவிற்க்கு அமைச்சா்கள் தவெக எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனா்" - தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி உதயகுமாா் கடும் தாக்கு

Image
தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை ஆலோசனை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில ஜெ பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆா்.பி உதயகுமாா் தலைமை வகித்தனா். வடக்கு தெற்கு மாவட்ட ஜெ பேரவை நிா்வாகிகள் மணிகண்டன் மாாியப்பன் சுந்தா் கண்ணன் சுரேஷ்பாபு முத்துராமலிங்கம் மனுவேல்ராஜ், அமிா்தா மகேந்திரன் முரசொலி மாறன் செல்வராஜ் முத்துச்சாமி கிருபானந்த முருகன் கருப்பசாமி நாகேந்திரன், மாாிமுத்து பாண்டியன் பிரதீப் காளிதாஸ் ரத்தினசபாபதி அந்தோணி சேவியா் மாாியப்பன் சோமசுந்தரம் அமலதாசன் ஜீவா பாண்டியன் வில்சன் பாபு ஐயப்பன் செண்பகராஜ் பொன்னுத்துரை வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டசெயலாளா்கள் விஜயகுமாா் வரதராஜ பெருமாள் ஆகியோா் வரவேற்புரையாற்றினாா்கள்.  முன்னாள் அமைச்சா் ஆா்பி உதயகுமாா் பேசுகையில் தோ்தலுக்கு பின்பு நடைபெறுகின்ற ஓரு முக்கியமான கூட்டம் அதிமுக வெற்றிக்கு ஓராண்டுகளுக்கு முன்பே தமிழகம் முழுவதும் எடப்பாடியாா் பிரச்சாரம் மேற்கொண்டு பூத்கமிட்டியை அமைத்து களப்பனியாற்றினோம் நான் நான்கு தோ்தலை சந்தித்து 3 முறை வெற்றி பெற்று அமைச்சராகவும் பணியாற்றியுள்...

"தமிழக முதல்வர் விஜய் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை" - தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பேட்டி.!

Image
தூத்துக்குடி தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆகஸ்ட் 3ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி சுமதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு கடந்த 3ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர், உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கியதையடுத்து 4ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். மேலும் சட்டசபை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தினமும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவு பிறப்பித்தார்.  இந்நிலையில் வௌ்ளியன்று சட்டசபை தினம் என்பதால் அவருக்கு கையெழுத்திட விலக்கு அளிக்கப்பட்ட ந...

தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது 2025- 26ம் ஆண்டு வரையிலான, அதாவது 31.3-2026 வரையிலான காலத்திற்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத வரி விதிப்பு தாரர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அக்கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா உத்திரவின்படி, கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அறிவுரையின்படி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 24,29,38,39,41, ஆகிய வார்டுகளுக்குட்பட்ட வடக்குரதவீதி, சந்தை ரோடு மீனாட்சிபுரம் மேற்கு, பாளையங்கோட்டை ரோடு, மற்றும் குரூஸ்புரம் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்சம் 2025 26ம் ஆண்டு முதல் அதிகபட்சம் 2022-23ம் ஆண்டிலிருந்து சொத்துவரி நிலுவை தொகை ரூ.6000 இலிருந்து 95 ஆயிரம் வரை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்டது. குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களுக்கான சொத்து வரி  நிலுவையினை  3 நாட்களுக்குள் செலுத்தாவிடில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  என...

"முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தவெக அன்று எதிா்ப்பு இன்று ஆதரவு, உப்பு தொழிலை அழிக்க இரண்டு கையால் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்"- நாடா்கள் கூட்டமைப்பு கடும் தாக்கு

Image
தூத்துக்குடி போல்பேட்டை 60 அடி சாலையில் உள்ள சான்றோர் குல கூட்டமைப்பு அலுவலகத்தில் வைத்து நாடார் அனைத்து அமைப்புகளின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வழக்கறிஞர் சிலுவை தலைமை தாங்கினார் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ் முன்னிலை வகித்தார் மற்றும் பல்வேறு நாடார் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  அதன் பிறகு செய்தியாளர்களிடம் அற்புதராஜ் கூறுகையில் நாம் சாப்பிடுகின்ற உணவுக்கு உப்பு தான் முக்கியம் உப்புக்கு நன்றி தான் மறு பெயர் உப்பிட்டவரை உள்ளளவு நிலை என்பார்கள் அதுபோல உப்பு உற்பத்தியில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டம் தூத்துக்குடி தான் இங்கு உள்ள முள்ளக்காடு. பொட்டல் காடு. புல்லாவழி. கோவங்காடு பழையகாயல் கோவளம் ஆகிய கிராமத்தில் உள்ள உப்பளங்களை அழித்துவிட்டு அந்த தொழிலில் உள்ள ஐம்பதாயிரம் பேர் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் ஜெனிவா நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது கடந்த திமுக ஆட்சியில் அதற்கான முயற்சி மேற்கொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. அப்போதைய அமைச்சர் கீ...

தூத்துக்குடியில் ஆசிரியர்கள் சங்கமம் 4.0-கருத்தரங்கு நடைபெற்றது.

Image
  தூத்துக்குடி நெல்லை, திருச்சி, தஞ்சை  மாவட்ட வாசிப்பை நேசிப்போம் புலனக்குழு ஆசிரியர்களின் சங்கமம் 4.0 நிகழ்ச்சி நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவகுமார் தலைமையில் ஆசிரியர்கள் கற்பித்தலில் புதுமைகள் வாசிப்பு நம்முள் ஏற்படுத்திய மாற்றங்கள் நேர்மறைப் பள்ளிச் சூழலும் ஆசிரியர்களின் பணிக் கலாச்சாரமும் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.  நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டன. எழுத்தாளர்கள் தங்கத்துரையரசி, கலகல வகுப்பறை சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.