Posts

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.

Image
இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 73. இதனை தொடர்ந்து திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தம் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உறவினர்கள் திரையுலகினர், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூன் 28) பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கலில் “திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாதா கோவில் முன்பு நடைபெறும் பணிகள் - மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு.!

Image
  தூத்துக்குடி பணிமய மாதா ஆலய திருவிழா அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது அதனை முன்னிட்டு திரேஸ்புரம் முதல் பணிமயமாதா ஆலயம் வரை ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு வருகிறது இந்த பணி விரைவாக நல்லமுறையில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மாதா கோவில் முன்பு நடைபெறுகின்ற பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிகளை பார்வையிட்டார் அப்போது அங்கு இருந்த ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் அடுத்த மாதம் மாதா கோவில் திருவிழா ஆரம்பமாகிறது அதற்குள் விரைவாக பணியை முடிக்க வேண்டும் தரமான முறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் மேலும் பேவர் பிளாக் கல் பதிக்கும் விபரங்களையும் கேட்டறிந்தார் பணிகள் முடிந்த பிறகு மேடு பள்ளம் இருக்கக் கூடாது காலி இடத்தில் இருக்கும் மணல்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் மாதா கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இருக்கக் கூடாது என்று ஒப்பந்ததாரரிடம் கூறினார். மேலும் ஒப்பந்ததாரரிடம் அளவு எடுக்கும் டேப்பை கொண்டு வரச் சொல்லி மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது படி நீளம் அகலம் அமைக்...

தூத்துக்குடி மாவட்ட பொது தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு.!

Image
தூத்துக்குடி மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் 8வது ஆண்டு பேரவைக்கூட்டம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ரவிதாகூர் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட நிர்வாகி கந்தசாமி கொடியேற்றினாா். மாவட்ட நிர்வாகி தஸ்லீஸ் வரவேற்புரையாறினார்.  முனிஸ்வரன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார் பேரவை கூட்டத்தை சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து துவக்கி வைத்தார் மாவட்டச்செயலாளர் பெருமாள் வேலை அறிக்கை முன் வைத்தார். மாவட்ட பொருளாளர் சுப்புலட்சுமி வரவு செலவுஅறிக்கை முன் வைத்தார். பேரவையை நிறைவு செய்து சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் பேசினார். உப்பு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணவாளன் வாழ்த்தி பேசினார். கூட்டத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தை முறையாக செயல்படுத்கோரியும். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை உடல் உழைப்பு தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு கல்வி உதவி நிதி உயர்த்தி வழங்குதும், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியம் மூலம் இலவச வீடு, வீடு கட்ட நிதி, திருமண நிதி ரூ20000.  விபத்து மரணம் 5லட்சம், இயற்கை மரணம் 2 லட்சம். கட்டுமானம் நலவாரியம் போல் உயர்த்தி வழங்கிடு, தீபாவள...

"கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்" -பிஜேபி நயினாா் நாகேந்திரன் கேள்வி.?

Image
தூத்துக்குடி கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது   கர்நாடகாவை சேர்ந்தவர் வெங்கட நாராயணா. இவர் ஜனநாயகன் படத்தில் தயாரிப்பாளர். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தமிழகத்தின் முதல்வர் விஜய் வெங்கட் நாராயணன் என்பவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாகி, கர்நாடக முதல்வர் சிவக்குமாரின் நெருங்கிய நண்பர் இவரை தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது எந்த விதத்தில் நியாயம்? இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.  கர்நாடகாவில் ஏற்கனவே மேகதாது பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது, தென்பெண்ணை ஆறு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது இந்த சூழ்நிலையில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இவர் இருந்தால் தமிழகத்திற்கு எப்படி நீதி கிடைக்கும் இது பாஜகவின் குற்றச்சாட்டு. தவெக நிர்வாகிகள் நேற்று மட்டும் ந...

"ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருப்பதே தவெகவின் நிலைப்பாடு கூட்டணிக் கட்சிகள் விரைவில் புரிந்து கொள்வார்கள்" கனிமொழி எம்.பி பேட்டி.!

Image
  தூத்துக்குடி விமானநிலைய வளாகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சட்டப்பேரவை என்பது ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக இருக்க வேண்டும். அதைவிட்டு, தனிநபர்களையோ தலைவர்களையோ இழிவுபடுத்தக்கூடிய இடமாகவோ, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய இடமாகவோ அது மாறிவிடக் கூடாது. அனைவருக்கும் மரியாதை அளிக்கக்கூடிய இடமாக அது இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்பவை எல்லாருடைய வாழ்க்கையிலும் சகஜமான ஒன்னு அதையெல்லாம், ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது என்பது சரியாக இருக்காது என்பதை உணர்ந்த இடமாக அது இருக்க வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்.  அந்த எதிர்பார்ப்பு, அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலிருந்தாவது நிறைவேற வேண்டும். மத்திய அரசுடன் தவெக அரசு இணக்கமாக இருக்கும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "தவெக எப்போதும் ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் எடுத்து வருகிறது. கூட்டணியில் இருக்கக்கூடிய மற்ற கட்சிகளும்...

"தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள்" கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை

Image
எனது கணவரின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி  தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள் கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார். தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்த நிஷாந்த் கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்த போது கப்பலில் வைத்து உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார். இதனையடுத்து நிஷாந்த் மனைவிக்கு ஆறுதல் கூறுவதற்கு கனிமொழி எம்.பி நிஷாந்த் வீட்டிற்கு சென்று நிஷாந்த் மனைவிக்கு ஆறுதல் கூறினார் அப்போது நிஷாந்த் மனைவி எனது கணவரின் உடலை கொண்டு வருவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி என கூறினார். தமிழக அரசு எனக்கு தற்காலிக பணியாளர் பணி தான் வழங்கியுள்ளது நீங்கள் எனக்கு நிரந்தர பணி பெற்றுத் தர வேண்டும் உங்களால் முடியும் என நிஷாந்த் மனைவி கனிமொழி எம்பியிடம் கூறினார் அதுபோல எனது கணவரின் மரணத்திற்கான இன்சூரன்ஸ் தொகை இதுவரை வரவில்லை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அதற்கு கனிமொழி எம்பி கண்டிப்பாக நிரந்தர பணி பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் அது போல...

தூத்துக்குடி பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Image
தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான சுபாஷினி கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டுமென்று மாணவர்களிடம் அன்பாக வலியுறுத்தினார்கள். நீதிஅரசர் சிறப்புரைக்கு பின்பு தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சூசைநாதர் மதுவிலக்கு இயக்கத்தின் முன்னாள் இயக்குநர் ஜெயந்தன் டி கிரேஸ் உரையாற்றுகையில், மாணவர்கள் போதைப் பொருட்களிலிருந்து விலகி, நன்னெறி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக ஊடகப்போதை, மதுப்போதை, மற்றும் வாழ்வை அடிமைப்படுத்தும் பல்வேறு போதைப் பழக்கத்திலிருந்து வெளிவந்து அறநெறியான வாழ்க்கையை நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். நிகழ்ச்சிகளை பள்ளியின் தாளாளர் பிரமிளா பிரான்சிஸ், முதல்வர் விஜய்அன் மற்றும் அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பு செய்திருந்தாா்கள்.

தூத்துக்குடி கல்லூாியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Image
   தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் தலைமையில் கல்லூரியின்  அலுவக கண்காணிப்பாளர் மருதப்பெருமாள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ - மாணவிகள் அனைவரும்  தன்னிலை மறக்க செய்து தன்மானத்தை இழக்க செய்து வாழ்வை நாசமாக்கும் போதை பொருட்களை தவிர்ப்போம் என மாணவ சமுதாயம் எடுத்துள்ள உறுதிமொழியை ஒவ்வொருவரும் கடைப்பிடித்திட வேண்டும் போதையில்லா தமிழ்நாடு அமைய வேண்டும் என்று போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை  எடுத்து கொண்டனா்.

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் பல்வேறு வகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பொதுமக்கள் நலன் கருதி தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகாாிகளுடன் இணைந்து செயல்படுத்தி அதை முறையாக நடைபெறுகிறதா என்று சூழற்சிமுறையில் பாா்வையிட்டு நல்லமுறையில் செய்திட வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா். இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு சம்பந்தமூா்த்தி தெருவில் நடைபெற்று வரும் குடிநீர்் குழாய் சீரமைத்தல் பணி எட்டையாபுரம் ரோடு ஹவுசிங்போா்டு பகுதியில் உள்ள ஆா்எஸ்பிஆர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் அளவினையும் கேடிசிநகா் ஹவுசிங் போா்டு தெற்கு காமராஜா் நகா் கொத்தனா் காலணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நீாின் அளவை பாா்வையிட்டு டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்கா பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் அளவினையும் வௌியேறும் நீரின் அளவினையும் பாா்வையிட்டு எட்டையாபுரம் ரோடு இரயில்வே பாலத்தில் கீழே உள்ள பகுதிகள் மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது பாா்வையிட்டு மில்லா்புரம் பகுதியில் பாதாளசாக்கடை கழிவ...

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பேக், வாட்டர் பாட்டில் வழங்கிய காவல் ஆய்வாளர் வேல்ராஜ்.!

Image
  பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சிறப்பாக படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு காவல் ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் இரட்சண்யபுரம் நவராஜ்,  மூலமாக கல்வி உபகரணங்கள் (பேக், வாட்டர் பாட்டில்) வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தூத்துக்குடி வடக்கு  காவல் நிலைய  ஆய்வாளர் வேல்ராஜ் முயற்சித்து வருகிறார்.  பல்வேறு பள்ளிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு அதன்படி செயல்படுத்தியும் வருகிறார். இந்த முயற்சியில் முதல் கட்டமாக தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபம் எதிரில் உள்ள மேலூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கல்விபயிலும் மாணவ மாணவியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா ஆனந்தி தலைமையில்  மாணக்கர்களை அவர்களது  வகுப்பறையில் நேரடியாக சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆய்வாளரின் கேள்விக்கு பயமின்றி மாணவ மாணவியர்கள் தைரியமாக  பதில் அளித்தது சுவாரஸ்யமாக அமைந்தது. பார்ப்பவர்களை வியப்பிலும் ஆழ்த்தியது. மேலும் போக்குவரத்து விதிமுறை உள்ப்பட தலைகவசம் அணிவதன் அவசியம் வரை...

பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியது மத்திய அரசு.!

Image
ஜூலை 1 முதல் 36 பக்கங்கள் கொண்ட சாதாரன பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1500 லிருந்து ரூ.2500 ஆக அதிகரிப்பு 60 பக்கங்கள் கொண்ட  பாஸ்போர்ட்டின் கட்டணம் ரூ. 2,000 லிருந்து ரூ.3,500 ஆக அதிகரிப்பு அவசரத் தேவைக்கான `தட்கல்'  பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிப்பு 60 பக்கங்கள் கொண்ட `தட்கல்' பாஸ்போர்ட் கட்டணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரிப்பு அனைத்து கட்டண உயர்வும் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது

தூத்துக்குடி கடற்கரை தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு மேயர் ஜெகன் பொியசாமி அடிப்படை பணிகளை ஆய்வு செய்தாா்.!

Image
  தூத்துக்குடி கடற்கரை சாலை வடபாகம் காவல் நிலைய வளாகத்திற்கு உள்ளே இருக்கும் தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா வருகிற வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெற இருக்கிற இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள் மூன்று நாள் நடைபெறும் திருவிழாவில் பொதுமக்கள் அமர்ந்து திருவிழாவை கண்டுகளிக்கும் வகையில் ஆலய நிர்வாகத்தினர் கோவில் வளாக பகுதியில் உள்ள முள் செடி. மணல் திட்டு குப்பைகள் தேங்கியுள்ளது அதனை அப்புறப்படுத்தி தரவேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியிடம் கோரிக்கை வைத்தனர் அப்போது நிர்வாகத்தினரிடம் கண்டிப்பாக செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல ஆலயத்திற்கு சென்றார் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தாா்.  உடனடியாக மாநகராட்சி ஜேசிபி இயந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டது அதுபோல தூய்மை பணியாளர்களும் வரவழைக்கப்பட்டனா்.  உடனடியாக ஆலய வ...

அமைச்சா் ஸ்ரீநாத்க்கு நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் கண்டனம்.!

Image
  தூத்துக்குடி நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சாா்பில் தமிழக முதல்வா் விஜய் மற்றும் அமைச்சா் ஸ்ரீநாத்திடம் நாங்கள் கேட்டது கப்பல் மாலுமிகள் சட்டத்தில் உள்ள படி உரிய இழப்பீடு மற்றும் கடந்த காலங்களில் தமிழக அரசுகளால் வழங்கப்பட்டு வந்த மாநில அரசுப் பணிகளில் பாதிக்கப்பட்டவர்க்கு நிரந்தரப் பணி. ஆனால் நீங்கள் தந்திருப்பதாகச் சொல்லி எங்களை ஏமாற்றி விளம்பரப்படுத்தி இருப்பதோ தற்காலிக ஒப்பந்த பணி ஆணை இந்த அரசுக்கு மீனவர்களிடம் அவப்பெயரை ஏற்படுத்த விரும்பும் சில அதிகாரிகள் மாலுமி நிஷாந்த் குடும்பத்திற்குத் துரோகம் செய்து இதைச் செய்ய விரும்புவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தயவு செய்து மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கின்றோம். கடலோடிகள் மரணத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள். மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நீங்கள் கடலோடி மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் நீங்கள் தூத்துக்குடி கப்பல் மாலுமி நிசாந்த் குடும்பத்துக்கு வழங்கிய தற்காலிக ஒப்பந்த பணி ஆணையைத் திரும்பப் பெற்று தம்பி நிஷாந்தின் மனைவிக்கு  மாவட்ட வருவாய்த் துறையிலோ அல்லது மீனவர் துறையிலோ நிரந்தரப் பணி ஆணையை உடனடியாக வழங்குங்கள் என்ற...

தூத்துக்குடி மாநகராட்சியில் பங்குதாரா்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Image
  தூத்துக்குடி மாநகராட்சியை பசுமையுடன் எழில்மிகு நகரமாக உருவாக்கவும்,  நகரின் வாழ்வியல் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு முத்து நகரின் பசுமைப் பயணம் என்ற திட்டத்தின் கீழ் பங்குதாரர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி  மைய அலுவலகத்தில் வைத்து ஆணையாளர் ப்ாியங்கா தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் வ உ சி துறைமுக சபை பொறுப்புக் கழகம், மாவட்ட வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பெருந்திரளான பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ப்ாியங்கா பேசுகையில் தூத்துக்குடி நகரம் மக்கள் தொகை போக்குவரத்து தொழில்துறை என பல்வேறு வகைகளில் வளர்ந்து வருவதால் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள ஏதுவாகவும், வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது இத்திட்டத்தின் மூலம் நம் நகருக்கான தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், பராமரிப்பு மற்றும் தொடர் கண்காண...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை மேயர் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தாா்.

Image
தூத்துக்குடி மாநகராட்சியில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் பழுது ஏற்பட்டால் அதனை பராமரிப்பதற்கு ஏற்கனவே இருந்த வாகனம் பழுதடைந்து விட்டது இந்நிலையில் மாநகராட்சி சார்பில் 10 லட்சம் மதிப்பில் புதியதாக தெரு விளக்கு பராமரிப்பு வாகனம் வாங்கப்பட்டுள்ளது அந்த வாகனத்தை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார். அந்த வாகனத்தை இயக்குமாறு பணியாளருக்கு உத்தரவிட்டார்.  அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த தெரு விளக்கு பராமரிப்புக்கான கிரேன் எவ்வளவு உயரம் உயர்த்த முடியும் நான்கு பக்கமும் சுற்ற முடியுமா என்று கேட்டார் அதற்கு பணியாளர் சுமார் 40 முதல் 50 அடி வரை உயரம் வரும் நான்கு பக்கமும் எந்த திசைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று பணியாளர் கூறினார் வாகனத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் பாதுகாப்பான முறையில் நின்று தெரு விளக்குகளை பழுது பார்க்க வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ரவீந்திரன். சுரேஷ்குமார். கவுன்சிலா் கனகராஜ் போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி...

ஆறு மணி நேரம் காக்க வைத்து சந்திக்க வந்தவர்களை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய அமைச்சர் கீர்த்தனா.

Image
  தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைக்க கடந்த அரசு நடவடிக்கை எடுத்தது இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு முள்ளக்காடு. பழைய காயல். புல்லாவெளி உள்ளிட்ட நான்கு கிராமத்தில் உள்ள சுமார் 2000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சென்று பார்வையிட்டு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறினார் ஆனால் ஒரு மாத காலமாகியும் இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லாத சூழ்நிலையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை உப்பு உற்பத்தியாளர்கள் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சந்தித்து தங்களுடைய பகுதியில் கப்பல் கட்டு தலம் அமைக்கப்பட்டால் 15,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் வேறு இடத்தில் கப்பல் கட்டுதளத்தை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள் நான் நேரில் வந்து பார்வையிட வருகிறேன் என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா உப்பு உற்பத்தியாளர்களிடம் கூறி இரு...

பொட்டலூரனி கிராமத்தில் 772 வது நாளாக மீன் கம்பெனி அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொட்டலூரனி கிராமத்தில் உள்ள மூன்று மீன் கம்பெனிகளை மூட வேண்டும் இந்த கம்பெனியால் கிராம மக்கள் குடி இருக்க முடியவில்லை சுகாதாரம் இல்லை துர்நாற்றம் வீசுகிறது என்று கூறி பொட்டலூரனி கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்று 772 வது நாளாக போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கிராம மக்கள் பரபரப்பாக போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும்  போடப்பட்டுள்ளது தமிழக முதலமைச்சர் விஜய் பரந்தூர் மக்களுக்கு நீதி வழங்கியது போல பொட்டலூரணி கிராம மக்களுக்கும் நீதி வழங்குங்கள் என்று மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.  இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதன்ராஜா அமைச்சரானதும் கண்டிப்பாக பொட்டலூரணி கிராமத்தில் உள்ள மீன் கழிவுகளை மூடப்படும் என்று கூறினார் கிராமத்துக்கு வருவதாகவும் கூறினார் ஆனால் நேரில் இதுவரை வரவில்லை ஆனால் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்...

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்

Image
  தூத்துக்குடி தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பதிலுரைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் மீதான மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு மற்றும் பாலியல் குற்றங்கள் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஆதாரங்களுடன் முன்வைத்து நியாயமான கேள்விகளை எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் விஜய் உரிய பதிலளிப்பார் என்றே எதிர்பார்த்தோம். ஆனால், முதலமைச்சருக்கான மாண்புகளை மறந்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் பிதற்றல்களை மட்டுமே முதலமைச்சர் விஜய் சபையில் முன்வைத்துள்ளார். மாநிலத்தில் ஒரே மாதத்தில் 150 பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்குப் பதில் சொல்ல முடியாத முதலமைச்சர், திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். பாஜகவுடன் இணக்கமாக இருந்துகொண்டு, திமுகவை மட்டும் குறிவைத...

அம்மோனியா கசிந்து 11 பேர் பலி - செயின்ட் பீட்டர் அண்ட் பால் நிறுவனத்தை மூட பரிந்துரை.!

Image
அம்மோனியா வாயு கசிந்து 11 பேர் பலியான செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு பரிந்துரை கடந்த ஜூன் 21ம் தேதி திருவள்ளூர் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தில் அம்மோனியா கசிந்தது அம்மோனியா வாயுவை சுவாசித்த சுமார் 11பேர் தற்போது வரை உயிரிழப்பு - சுமார் 63 பேர் மருத்துவமனையில் சிகிச்சை விபத்தை தொடர்ந்து செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு குழு ஆய்வு நடத்தியது ஆய்வை தொடர்ந்து சமர்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு நிறுவனத்தை மூட பரிந்துரை

சாலை அமைத்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு என புகார்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு.!

Image
  திருவண்ணாமலையில் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையின் 7 குழுக்கள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தென்மாத்தூரில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் ஆழ்வார் பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 13 இடங்களில் DVAC சோதனை நடைபெற்ற நிலையில் சாலை அமைத்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு என எழுந்த புகார் தொடர்பாக எ. வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.