Posts

169 தொகுதிகளில் அதிமுக போட்டி.. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் - முழு விவரம்

Image
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் யாருக்கு எந்த தொகுதி என்பதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. சென்னையில் இன்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அப்போது நைனார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் உடனிருந்தனர். கட்சிகள் போட்டியிடும் விவரம்:   பாஜக (27 தொகுதிகள்) மயிலாப்பூர் தளி முடக்குறிச்சி உதகமண்டலம் அவிநாசி திருப்பூர் தெற்கு கோவை வடக்கு கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை திருப்பத்தூர் மதுரை தெற்கு சாத்தூர் திருச்செந்தூர் வாசுதேவநல்லூர் ராதாபுரம் நாகர்கோவில் விளவங்கோடு ஆவடி திருவண்ணாமலை தஞ்சாவூர் திருவாரூர் அறந்தாங்கி மானாமதுரை ராமநாதபுரம் குளச்சல் பத்மநாபபுரம் ராசிபுரம் (தனி) பாமக (18 தொகுதிகள்) சேலம் மேற்கு தர்மபுரி பென்னாகரம...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு- ஏப்ரல் 9ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்!

Image
  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேருக்கும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பு

"அதிமுக ஆட்சியில் முடங்கி கிடந்த தமிழகத்தை நம்பா் ஓன் மாநிலமாக மாற்றியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் " - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Image
  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1ம்கேட் காந்தி சிலைப்பகுதியில் நடைபெற்ற மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு மாநகர் திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி காங்கிரஸ் முரளிதரன் கம்யூனிஸ்ட் தனலட்சுமி முத்து விசிக விமல் வங்காளியாா் மதிமுக முருகபூபதி இ.யூ.மு.லீ மும்தாஜ், சமக அற்புதராஜ், மநீம் ஜவஹா் தேமுதிக வல்லரசு துரை தஅக மங்களராஜ் பாண்டியன், மமக யூசப், தமுமுக சேக்முகைதீன்அலி, எஸ்டிபிஐ மைதீன்கணி, வட்டச்செயலாளர் சாமிநாதன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா் வரவேற்புரையாற்றினாா்.  வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:-   2021ல் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற காலம் கொரானா காலக்கட்டம் அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் வீட்டுக்குள் முடங்கி இருங்கள் என்று கூறி அனைத்து தொழில் வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு முடக்கி போட்டிருந்தாா்கள். அதையெல்லாம் மீட்டெடுக்கும் வகையில் ஆக்ஜிஸன் தட்டுபாடு அதை ரயில்கள் மூலம் வரவைத்து அங்கிருந்து ஓவ்வொ...

"தமிழகத்தில் தற்போது நடைபெற இருப்பதும் ஓரு போா் தான் அதில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்" - நல்லகண்ணு படத்திறப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை

Image
தூத்துக்குடி மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு படத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை செயற்குழு உறுப்பினர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஐஎன்டியுசி ராஜு, சிஐடியு ரசல், ஏஐடியுசி லோகநாதன், தொமுச சுசி ரவீந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஏபிசிவி. சண்முகம் ஏற்ப்புரை வழங்கினார்.  மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு படத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் திறந்து வைத்து பேசுகையில் நல்லகண்ணு ஐயா படத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன். அவா் மறைந்த போது நான் சென்னைக்கு சென்று அவருக்கு நோில் அஞ்சலி செலுத்தினேன். ஏனென்றால் நமது மாவட்டத்தை சார்ந்தவர் என்பது மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், எதிர்கால இந்தியாவை உருவாக்கக்கூடிய இளைஞர்களும் பின்பற்ற வேண்டிய ஒரு தலைவர்.  அவருடைய சமூக செயல்பாடு, இந்திய விடுதலை போராட்ட களங்கள், பல்லாண்டு சிறைக் கொடுமை, சித்திரவதைகள் என தனது இளமைக் காலம் முழுவதும் நாட்டுக்க...

தூத்துக்குடி : பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக சர்வ சாதாரணமாக நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள்- காவல்துறை நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை.!

Image
  தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பேருந்து நிற்க்கக்கூடிய கவுண்டர்களில் தனியார் கார்கள் மற்றும் பைக்குகள் சர்வ சாதாரணமாக நிறுத்தப்படுவதால் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும்  இடையூறாக உள்ளது என பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தூத்துக்குடியின் மிக முக்கிய பேருந்து  நிலையமாக நகரின் மையப் பகுதியில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து கன்னியாகுமரி, நாகர் கோவில், தென்காசி, உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அரசு பஸ்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள்.  இந்தநிலையில் பேருந்து  நிலையத்துக்குள் பைக், கார், ஆட்டோக்கள் கட்டுப்பாடின்றி வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்துக்குள் உள்ள கடைகளின் முன்புறமும் பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பேருந்துகளை குறிப்பிட்ட கவுண்டர்களில் நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் வாலிபர்கள் சிலர் பைக...

தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கையால் அதிரும் தூத்துக்குடி - பெண் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு.!

Image
தேர்தல் நாள் மே.23, தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. இதன்பிறகு தேர்தல் பறக்கும் படையின் பணிகளும் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் அரசியல் தலைவர்கள் படம், கொடி, சின்னம் போன்ற அரசியல் சார்ந்து வாகனங்களில் ஒட்டி இருப்பதை அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. நடவடிக்கையின் படி, அமைச்சர் கீதா ஜீவன் படம் ஒட்டி வந்த ஆட்டோவை வழிமறித்து கிழிக்கும் படி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  ஆட்டோ ஓட்டுநருக்கு உத்தரவிட்டு, கீதா ஜீவன் படமும் அகற்றப்பட்டது. இது தூத்துக்குடியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த வேளையில்,  தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிக் காரில் கட்சிக் கொடிகளைக் கட்டியிருந்ததோடு, கட்சித் துண்டையும் அணிந்து வந்த பாஜக பிரமுகர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கையால்  அதிகாரிகளுடன் ஏற்பட்ட  கடுமையான வாக்குவாதத்தால்  தூத்துக்குடி தொகுதிக்குள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக பாஜக பிரமுகர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடந...

லாரி மீது ஆட்டோ மோதி விபத்து - ஒருவர் பலி,10 பேர் படுகாயம்

Image
  தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே, முத்துநகர் கடற்கரைக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த 11 பேர் பயணித்த ஆட்டோ, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சோழபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ண லீலா (38) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பவதாரணி (11), பாக்கியலட்சுமி (17), ராஜா வர்ஷினி (14), மகாலட்சுமி (19), சுபாஷிணி (21), மகாலட்சுமி (47), சீதாலட்சுமி (19), ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் (32), கார்த்திக் (20), ஸ்டீபன் ராஜ் (19) ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துறைமுகத்திலிருந்து மரத்தடிகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை கவனிக்காமல் ஆட்டோ மோதியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக திரும்பிய குடும்பத்தில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படு...

பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை - தூத்துக்குடி சுங்கச்சாவடி மேலாளர் கைது!

Image
  தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த மேலாளர் அவதேஷ் சிங் கைது செய்யப்பட்டார். வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள பெண்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரை விசாரித்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவதேஷ் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.

"தமிழக அரசின் வளா்ச்சி திட்டங்களுக்கு ஓன்றிய அரசு தடையாக உள்ளது, எடப்பாடியும் போராடுவதற்கு முன் வருவதில்லை" அமைச்சா் கீதாஜீவன் தோ்தல் பயண கலந்துரையாடலில் குற்றச்சாட்டு.!

Image
தூத்துக்குடி :தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தல் களம் 5 அணிகள் மற்றும் அணி சேராமல் பலரும் தோ்தலை சந்திக்கவுள்ள நிலையில் தனியாா் தொலைகாட்சி நிறுவனம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தோ்தல் பயணம் மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற பொதுமக்கள் கலந்து கொண்ட பிரச்சார விவாதத்தில் திமுக அதிமுக நாம் தமிழா்கட்சி கலந்து கொண்ட நிகழ்வில் அதிமுக நாதக கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும்  வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதலமைச்சாின் 784 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சாலை கால்வாய் அங்கன்வாடி மையம் புதிய ரேஷன் கடைகள் 13 நகா்நல ஆரம்ப சுகாதார அலுவலகங்கள் பல இடங்களில் புதிய மின்மாற்றிகள் 200 க்கும் மேற்பட்டவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ெதாடா்ந்து வளா்ச்சிக்கான பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது. என்று பேசினாா். தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சேகா் பேசுகையில் தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப...

மாநகராட்சியின் 60 அடி சாலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் மரணக் குழி - மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

Image
  தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் (9வது வார்டு) 60 அடி சாலையும், கிருஷ்னராஜபுரம் மெயின் சாலையும் சந்திக்கும் நான்கு வழித்தடத்தில் வாகன போக்குவரத்து மிகுதியான பகுதியாக உள்ளது. மேலும் இந்த புதக்குழிக்கு  அருகாமையில் நர்சரி & பிரைமரி பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் இருப்பதால் போக்குவரத்து நெறுக்கடியும் இச்சாலையில்  கூடுதலாகவே இருக்கிறது. இந்நிலையில் நான்கு வழிச்சாலைகள் சங்கமிக்கும் இவ்விடத்தில் மழைநீர் வடிகால் சேனலும், பாதாள சாக்கடை கால்வாய் சேனலும் முழுமையாக உடைந்து 6 மாதத்தை கட்ந்துவிட்டது. இது இன்றைய நாளில் மரணக் குழியாகவும் மாறிவிட்டது.  எனவே இந்த சாலையை பயன்படுத்தி வரும் வாகன ஓட்டிகளும் வழி போக்கர்களும் மரணபயத்திலையே கடந்து செல்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இது பகல் நேரத்தை காட்டிலும் இரவு நேரத்தில் "பலி பீடமாகவே தான் தெரியவருகிறது".   இது சம்பந்தமாக,  மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு இத்தகவலை பொதுமக்கள் சார்பாக  கொண்டு சென்ற பின்னரும் நட...

ஆட்டோவில் ஒட்டி இருந்த அமைச்சர் கீதா ஜீவன் படம் நீக்கம் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!

Image
  தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தொடர்பான கொடிகள், சின்னங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்களை பொது இடங்களிலும், வாகனங்களிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி தூத்துக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வந்த பரிசோதனையின் போது அந்த வழியே வந்த ஒரு ஆட்டோவில் அரசியல் கட்சி சார்ந்த  தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன் படம் ஒட்டப்பட்டிருந்தது.  அதை தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினர் ஆட்டோவில் ஒட்டப்பட்டு இருந்த படத்தை அகற்றினர். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், எந்தவொரு வாகனங்களிலும் அரசியல் கட்சி சின்னங்கள் அல்லது தலைவர்களின் படங்களை பயன்படுத்தக்கூடாது ...

காதலனா? தாயா? - காவல்நிலையத்தில் நடந்த பாசப்போராட்டம்.!

Image
  குரும்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டுத் தஞ்சமடைந்த காதல் ஜோடியைப் பிரிக்க முடியாமல், பெண்ணின் தாய் கண்ணீர் விட்டு நடத்திய பாசப் போராட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே நாலுமாவடியைச் சேர்ந்த குட்டிமுத்து அர்ஜுன் (19) மற்றும் ஏரல் பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா (21) ஆகிய இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கீர்த்திகா, நேற்று அங்கிருந்து தப்பி வந்து குரும்பூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தாயின் கண்ணீரை துடைக்க மறுத்த காதல்.. தகவல் அறிந்து நிலையத்திற்கு வந்த பெண்ணின் தாயார், மகளைத் தன்னுடன் வருமாறு கண்ணீர் மல்கக் கெஞ்சினார். பாசப் போராட்டம் நடத்தியும் பலனில்லாத நிலையில், கீர்த்திகா தனது காதலனுடன் செல்வதிலேயே உறுதியாக இருந்தார். கீர்த்திகா மேஜர் என்பதால், அவரது விருப்பத்தின் பேரில் போலீசார் அவரை காதலனுடன் காவல்நிலையத்தில் அனுப்பி வைத்தனர். இச்சம...

நெல்லை இட்டமொழி அருகே நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்து, இரண்டு மின்மாற்றிகளை திருடிச் சென்ற மர்ம கும்பல்.!

Image
நெல்லை இட்டமொழி அருகே நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்து, இரண்டு மின்மாற்றிகளை மர்ம கும்பல் துணிகரமாகத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகத் தோட்டங்களில் மின் இணைப்பைத் துண்டித்து விட்டு மின்கம்பிகளை மட்டும் மர்ம நபர்கள் திருடிச் செல்வது இங்கு  வழக்கமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இட்டமொழியில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு, இரண்டு மின்மாற்றிகளையே (Transformers) மர்மகும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது என்பது நவீன முறையிலான மொகா திருட்டாகவே பார்க்கப்படுகிறது. இட்டமொழி பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின் விநியோகம் செய்வதற்காக இலங்கையாடி குளம் மற்றும் ஒத்தவீடு வேலாயுதபுரம் காட்டுப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்மாற்றிகள் நிறுவப்பட்டிருந்தன. சம்பவத்தன்று இரவு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர். பின்னர், மின்மாற்றிகளைக் கயிறு கட்டி கீழே இறக்கி, வாகனத்தில் ஏற்றித் திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் தோட்டங்களுக்குச் சென்ற விவசாயிகள், மின் விநியோகம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த...

விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு திடீர் உடல்நலக்குறைவு.!

Image
விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 10-ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மாயமானார். மறுநாள் காலை அங்குள்ள காட்டுப்பகுதியில் காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு அருகில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு மோட்டார் சைக்கிளைப் போலீசார் கைப்பற்றினர். அதன் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது, அது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருடப்பட்டது எனத் தெரிந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள க...

தூத்துக்குடி தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சரா? மேயரா பரபரப்பாகும் தூத்துக்குடி அரசியல்..!

Image
  தூத்துக்குடி திமுக  என்றாலே மாற்றமில்லாத ஆளுமைவாதிகள் நிரம்பிய தொகுதியாகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனி பெரும்பான்மையான  மெஜாரிட்டி அரசியல் பிரமுகராக கீதா ஜீவன் தான் தூத்துக்குடி தொகுதி முழுவதும் ஜொலிக்கிறார்‌. 1989ல் அண்ணாச்சி பெரியசாமி  தொடங்கி வைத்த குடும்ப அரசியல், பொது வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் துணையாகி நிற்கிறது. இந்த அரசியல் சூழ்நிலையில் கீதா ஜீவனை எதிர்த்து களம் காண கட்சிக்குள் யாருமே விரும்பாத‌ சூழ்நிலையில், கீதா ஜீவனே தொகுதிக்குள் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார். கீதா ஜீவனை எதிர்த்து "எதிர் நீச்சல்" போடும் வேட்பாளராக எம்.பி  கனிமொழியின் தீவிர ஆதரவாளர் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியை தொகுதிக்குள் அடையாளப்படுத்திக் கொள்ள‌ நான்கு திசைகளிலும் களப்பணி நடந்தேறியுள்ளது. இதன்படி அக்கா தம்பி என்ற உறவு முறைகளையும் மீறி  தனி மனித அரசியலுக்குள் ஏற்பட்ட மோதல்  ஒரே கட்சிக்குள் இருவேறு கொள்கைவாதியாக செயல்படத் தொடங்கினார்கள். அதன்படி மாநகர பகுதிக்குள் நடந்துவரும் அரசு பணிகளை காலையில் மேயர் பார்வையிட்டால...

தூத்துக்குடி: சிசிடிவி மூலம் அம்பலமான இளம் சிறார்களின் திருட்டு.! -நடவடிக்கை எடுக்குமா காவல்துறை.?

  நேற்று முன்தினம் (18/03/2026) பக்கிள் ஓடை 4ம் பாலம் இசக்கியம்மன் கோவில் சிமெண்ட் சாலை பகுதிகளில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட இளம் சிறார்களின் குற்றச்சம்பவம் அங்குள்ள சி.சி. டிவி காட்சிகளின் வழியாக அம்பலமாகி இருப்பதால், இளம் சிறார்களின் திருட்டு சம்பவத்தால் இப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகி வருகிறது.  அதாவது, பக்கிள் ஓடை 4ம் பாலம் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ள சாலையின் கரையேற இல்லங்களில் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த "பைக், ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களில் அத்துமீறி உடைத்தெறிந்து, வாகனத்தில் இருக்கின்றவைகளை அள்ளி எடுத்துச் செல்கின்றனர். திருடப்பட்டதில் தேவைப்படாதவைகளை பக்கிள் ஓடைக்குள் கண்மூடித்தனமாக  எரிந்து விட்டுச் செல்கின்றனர். மேலும் வாகனங்களில் திருட படக்கூடியது பணம், மொபைல், டூல்ஸ் செட், பேட்டரி, பெட்ரோல், வன்டி சாவி, கார் செட் மற்றும் ஸ்பீக்கர் உள்ப்பட அவர்களிடம் கிடைப்பதை அள்ளி எடுத்துச் செல்கின்றனர். தட்டிக் கேட்பவர்களை ஆயுதம் கொண்டு தாக்கவும் இந்த கும்பல் முயற்சிக்கின்றனர்.  ஆகவே பக்கிள் ஓடை புறவழிச்சாலையில் காவல்துறையின் ரோந்து பணிகளை தீவிரபடுத...

விளாத்திகுளம் மாணவி படுகொலை: டிஜிட்டல் & அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஒருவர் கைது என்று எஸ்பி மதன் விளக்கம்.

Image
  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தெரிவித்துள்ளார். கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் தமிழகத்தையும் நாட்டையும் அதிர்ச்சியடையச் செய்தது. குற்றவாளி கைது செய்ய தாமதமாகியுள்ளது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கேள்விகள் எழுந்த நிலையில், இன்று (19.03.2026) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்பி விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்... குளத்தூர் காவல் நிலைய குற்ற எண் 118 இன் 11ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வழக்கு புலன் விசாரணையில் உள்ளது பாதிக்கப்பட்ட சிறுமி வயது 18 வயதுக்கு குறைவாக உள்ளது சிறுமி என்பதால் அது குறித்து விசாரணை செய்ய பத்...

மாணவி கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிக்கிய 2 கொலை, 3 பாலியல் வன்கொடுமை, 33 வழக்குகள் கொண்ட குற்றவாளி.!

Image
  விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், கடந்த 11-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாகத் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடிக்கக் காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு, வேடநத்தம் கிராமத்தில் வீடு வீடாகவும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்குரிய 5 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற இளைஞரை கைது செய்துள்ளதாக கா...

மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலி.. உள்நாட்டு பின்னலாடைக்கு 7 சதவிகித விலை உயர்வு.

  மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலி  உள்நாட்டு பின்னலாடைக்கு 7 சதவிகித விலை உயர்வு.   திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதானமாக இருந்து வருகிறது.  திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆயத்த பின்னலாடைகள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்படுகிறது. ஏற்றுமதிக்கு இணையாக உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, பஞ்சு விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பின்னலாடை ரகங்கள் 7 சதவீதம் விலை உயர்த்தப்படுவதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில், சர்வதேச அளவில் ஈரான் - இஸ்ரேல் போரால் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் பின்னலாடை உற்பத்திக்கு  பிரதான மூலப்பொருளான நூலின் விலை உயர்வோடு, தற்போது ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படும் எலாஸ்டிக் , பாலிபேக்  மற்றும் பேக்கிங் செய்யப் பயன்படும் பாலிபேக் உள்ளிட்ட இதர பொ...

"முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகம் நிதானத்தில்தான் பேசுகிறாறா ? நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" - தூத்துக்குடி முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் அறிக்கை.!

Image
முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகம் எம்.பி நிதானத்தில்தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் நிதானத்தோடு இருந்திருந்தால் இது போன்ற கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார் நயனதாராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சார்ந்த முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் பிரபல நடிகை நயன்தாராவின் கண்ணியத்திற்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கின்ற வகையில் கருத்து கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சினிமா துறையில் பிரபல நடிகை மட்டுமல்ல திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற நயன்தாராவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசுவது எந்த வகையில் நியாயம்? அதிமுகவின் முதல்வராக, பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவும்  சினிமா துறையில் இருந்து வந்தவர் தான் என்பதை சி.வி சண்முகம் மறந்துவிட்டார்  போல் தெரிகிறது. சிவி சண்முகம் நிதான...